என் மலர்tooltip icon

    சமையல்

    சமையலை எளிமையாகவும், சுவையாகவும் செய்ய உதவும் டிப்ஸ்கள் சில...
    X

    சமையலை எளிமையாகவும், சுவையாகவும் செய்ய உதவும் டிப்ஸ்கள் சில...

    • சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
    • தக்காளி விலை அதிகமாக இருக்கும்போது சூப், குழம்பு தயார் செய்ய தக்காளி சாஸ் பயன்படுத்தலாம்.

    ரவா தோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்யவும். தோசை சிவந்து மொறுமொறுவென்று இருக்கும்.

    தேங்காய் பர்பி கிளறும்போது பழுத்த மாம்பழம் ஒன்றை தோல் சீவி துருவி கலந்து விட்டால் சுவையான கலர்புல் பர்பியாக இருக்கும்.

    தேயிலையை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் சர்க்கரை, தேங்காய் துருவல் போட்டு பருகினால் சுவையாக இருக்கும்.

    இட்லி மாவு கொஞ்சமாக இருந்தால் ரவையை வறுத்து மாவுடன் கலந்து சிறிது நேரம் ஊற வைத்த பிறகு தோசை வார்த்தால் மொறுமொறுவென்று இருக்கும்.

    பால் பாயாசம் செய்யும் போது இரண்டு பச்சை வாழைப் பழத்தை நன்கு பிசைந்து போடவும். சுவை கூடும். மணமாகவும் இருக்கும்.

    ரவையை டால்டா விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வைத்து பிறகு சர்க்கரைப்பாகு வைத்து கேசரி கிளறினால் ருசி அதிகரிப்பதுடன் டால்டாவும் குறைவாக செலவாகும்.

    வடை தட்டும்போது உள்ளே ஒரு பன்னீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுத்தால் வித்தியாசமான, ருசியான வடை தயார்.

    சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

    பீட்ரூட்டின் தோலை நகத்தினால் கீறிப் பார்த்தால் உள்ளே நல்ல ரோஸ் நிறத்தில் இருந்தால் அது இனிப்பான காயாகும்.

    வற்றல் செய்யும் கூழில் சிறிதளவு வடிகஞ்சியையும் சேர்த்து கொள்ளுங்கள். இப்படி செய்தால் வற்றல் மாவாக கரையும்.

    பஜ்ஜியில் அதிக காரம் வேண்டாம் என்று விருப்பப்பட்டால் உப்பையும், ஓமத்தையும் சேர்த்து அரைத்து பஜ்ஜி செய்யலாம். சுவையாக இருக்கும்.

    தேங்காய் பர்பி செய்கிறீர்களா? வேர்க்கடலையின் சிவப்புத் தோலை நீக்கி, இரண்டாக உடைத்து நெய்யில் பொரித்து போட்டு செய்யுங்கள். கூடுதல் சுவை கிடைக்கும்.

    தக்காளி விலை அதிகமாக இருக்கும்போது சூப், குழம்பு தயார் செய்ய தக்காளி சாஸ் பயன்படுத்தலாம். ருசியாக இருக்கும்.

    குழம்பில் மஞ்சள் பொடி அதிகமாகி விட்டால் வருந்த வேண்டாம். சுத்தமான ஒரு வெள்ளைத் துணியை குழம்பில் போடுங்கள். அதிகமான மஞ்சள் பொடி உறிஞ்சப்படும்.

    முறுக்கு, தட்டை, தேன்குழல் நமத்து போகாமல் இருக்க வேண்டுமானால், மாவு பிசையும்போது வெந்நீர் ஊற்றி பிசைய வேண்டும்.

    காய்ந்த மிளகாயை நீளவாக்கில் வெட்டி, அதனுடைய விதைகள் சிவக்கும் அளவுக்கு எண்ணெய்யில் வறுத்த பின்னர் துவையலோ, பொடியோ செய்தால் மணமும் ருசியும் தூக்கலாக இருக்கும்.

    Next Story
    ×