என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் ஊறுகாய்"

    • அயலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
    • இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.

    ஊறுகாய் என்றால் மாங்காய், எலுமிச்சை மட்டும் இல்லை. சில வகை மீன்களை பதப்படுத்தி ஊறுகாய் தயார் செய்து உண்ணும் வழக்கம் தமிழர்களிடையே இருந்தது. குறிப்பாக, இந்தியன் மேக்க ரல் பிஷ் எனப்படும் அயலை மீனை ஊறுகாய் செய்து உண்ணும் வழக்கம் உண்டு. இந்த அயலை மீன் ஊறுகாய் மிகவும் ருசியான ஒன்று. மேலும் அதிக நாட்கள் கெட்டுப் போகாது.

    அயலை மீனை வறுத்து, மிளகாய்தூள், வெந்தயம், கடுகு சேர்த்து வினிகரில் ஊறவைத்து, நல்லெண்ணெயில் பேக் செய்து ஊறுகாய் போல் மாற்றுவார்கள். இதனை அவ்வப்போது உணவுடன் சேர்த்து உட்கொள்ளும் போது குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகரித்துகுடலில் உணவை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்கும், கெட்ட கொழுப்பை குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.

    பொதுவாக அயலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அயலை மீனில் சுமார் 205-305 கலோரிகள், 18-19 கிராம் புரதம், 13-25 கிராம் கொழுப்பு, பொட்டாசியம் 314 மி.கி., மெக்னீசியம் 76 மி.கி., செலினியம் 44 மி.கி., சோடியம் 90 மி.கி. என்ற அளவில் உள்ளன. வைட்டமின் பி 12, நியாசின், பாஸ்பரஸ் போன்றவையும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்தும்.

    இது நோய் எதிர்ப்பு சக்தி, மூட்டு வலி, மனச்சோர்வு, ரத்த சோகை, நீரிழிவு போன்றவற்றுக்கு உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மீனுக்கு கானாங்கெளுத்தி என்ற ஒரு பெயரும் உண்டு. வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து உண்ணும் ட்யூனா மீனுக்கு இணையான சத்துக்கள் இந்த அயலை மீனில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • ஊறுகாய் வகைகளில் இருந்து சற்று மாறுபாடான சுவையுடையது.
    • மீன் மலிவாக கிடைக்கும் நேரங்களில் தயாரித்து வைத்துகொள்ளலாம்.

    மீன் ஊறுகாய் மற்ற ஊறுகாய் வகைகளில் இருந்து சற்று மாறுபாடான சுவையுடையது. மீன் மலிவாக கிடைக்கும் சமயங்களில் தயாரித்து வைத்துகொள்ளலாம். நேரம் கிடைக்கும்போது செய்து வைத்துகொண்டால் தேவைப்படும்போது உபயோகித்துகொள்ளலாம். ஆனால் மற்ற ஊறுகாய் போன்று அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. மீன் ஊறுகாய் மாறுபட்ட சுவையுடன் இருப்பதால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.

    கேரளா கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ளவர்களால் அதிகமாக செய்யப்படும் ஒரு சுவையான ஊறுகாய் இந்த மீன் ஊறுகாய். சுவையாக இருப்பதால் தற்போது அனைவரும் சமைக்கும் உணவு பட்டியலிலும் வந்துவிட்டது நீங்களும் ஒரு முறை சமைத்து பாருங்கள் இதன் சுவை உங்களுக்கும் பிடித்த வகையில் நிச்சயம் இருக்கும். இதே போன்று இறால் ஊறுகாயும் மிகவும் சுவையானது. இப்போது மீன் ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மீன் - 1/2 கிலோ (முள் இல்லாத மீன்)

    மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 4ஸ்பூன்

    வெந்தயப்பொடி - 1ஸ்பூன்

    பூண்டு - ௧ (நறுக்கியது)

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    வினிகர் - 1/2 கப்

    உப்பு - தேவையான அளவு

    கடுகு - ஒரு ஸ்பூன்

    கறிவேப்பில்லை - சிறிது

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஊறுகாய் செய்வதற்கு தேவையான மீன்களை எடுத்து சுத்தம் செய்து சதுர வடிவில் வெட்டி வைக்க வேண்டு. பின்னர் இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்து வைத்துள்ள மீன்களுக்கு மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக மீன்களுக்கு மேல் படும்படி கலந்து விட வேண்டும்.

    இதனைத் தொடர்ந்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உப்பு கலந்து வைத்திருக்கும் மீன்களை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகிய பொருட்களை போட்டு நன்றாக கிளர வேண்டும். பின்னர் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள மீன்களையும் சேர்க்க வேண்டும்.

    சரியாக 5 நிமிடங்கள் மீனை வேக விட்டு அரை கப் வினிகர் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க வைத்து விட்டு இறக்கினால் சுவையான மீன் ஊறுகாய் தயார்.

    பின்னர் ஆறியதும் ஊறுகாயை காற்று போகாத பாட்டிலில் போட்டு அடைத்து வைத்து தேவையான போது எடுத்து பரிமாறலாம்.

    ×