search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fish"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்
    • நவீன மீன் அங்காடியில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலமாக புரட்டாசி என்பதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதி பெரிய மார்க்கெட்டில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது.

    அதன் வெளிப்பகுதியான நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் மீன்கள் இறக்கப்பட்டு காலை நேரத்தில் ஏலம் விடப்படும். சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி நேரு வீதியில் நடந்து வந்த மீன் ஏலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு கடந்த மாதம் 12-ந் தேதி மாற்றப்பட்டது.

    அது முதல் மீன் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நவீன மீன் அங்காடியில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலமாக புரட்டாசி என்பதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடவில்லை. இதனால் நவீன மீன் அங்காடியில் மீன் வரத்து குறைவாக இருந்தது.

    புரட்டாசி மாதம் நேற்றுடன் முடிந்தது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடியில் மீன் வரத்து அதிகமாக இருந்தது. ஏராளமான வியா பாரிகள் குவிந்து மீன்களை வாங்கி சென்றனர். கொடுவா, சங்கரா, வாளை, வஞ்சிரம், வவ்வா, இறால், கனவா போன்ற மீன் வகைகள் அதிகளவில் வந்திருந்தது.

    அதே வேளையில் நவீன மீன் அங்காடி அசுத்தமான சூழலில் காணப்படுகிறது. மீன் கழிவு நீர் வெளியேற வாய்ப்பு இல்லாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருக்கிறது.நவீன மீன் அங்காடியின் ஐஸ் பிளான்ட்டில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக மீன் வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை அமோகமாக இருக்கும்.
    • புரட்டாசி மாதம் என்பதால் தற்போது அனைத்து கடைகளும் கூட்டம் குறைவாக வெறிச்சோடி காணப்படுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பருவமழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்கிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் திண்டுக்கல்லுக்கு கடல்மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இருந்தபோதும் புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

    வழக்கமாக புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால் தற்போது அனைத்து கடைகளும் கூட்டம் குறைவாக வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும் மீன்கள் விலையும் பாதியாக குறைந்துள்ளது. ரூ.400-க்கு விற்ற நகரமீன்கள் ரூ.250-க்கு விற்கப்பட்டது. இதேபோல் விளாமீன் ரூ.250-க்கும், ரூ.1000-க்கு விற்ற வஞ்சரம் ரூ.600-க்கும் விற்பனையானது. இறால் ரூ.450, புளூ நண்டு ரூ.450 என்ற விலையில் விற்பனையானது. மீன்கள் விலை குறைந்ததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மற்ற குழந்தைகளை போல் தனது குழந்தையும் புத்திசாலியாக இருக்க வேண்டும்.
    • குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சில உணவுகள் இருக்கின்றன.

    இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு பெற்றோரும் விரும்பும் ஒரே விஷயம் மற்ற குழந்தைகளை போல் தனது குழந்தையும் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று தான். அதற்காக பல வழிகளை கையாளுவதும் உண்டு. ஆனால், உடலுக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுக்காமல் என்ன செய்தாலும் பலனில்லை. அதாவது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க சில உணவுகள் இருக்கின்றன. அவற்றை அவர்களுக்கு சரிவர கொடுத்துவந்தாலே குழந்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமான இருப்பார்கள். குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க....

    பால்

    புரோட்டீன், வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்த பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் மிகவும் அவசியமானது. குழந்தைகள் தினமும் ஒரு கிளாஸ் பால் குடிக்கும்போது, அவர்களின் எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு நல்ல பல் ஆரோக்கியம் இருக்கும், பலவீனமான ஈறுகள் மற்றும் பல் சிதைவு அபாயமும் குறையும். அதேபோல், தயிரிலும் துத்தநாகம், பி 12 மற்றும் செலினியம் போன்ற மூளை வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மீன்

    ஞாபக சக்தி அதிகரிப்பதில் முக்கியமான உணவுப்பொருளாக மீன் மற்றும் பிற கடல் உணவுகள் விளங்குகின்றன. காரணம், இவற்றில் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் புரோட்டீன், துத்தநாகம், இரும்பு, கோலின், அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. அந்தவகையில், நண்டு, இறால், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி மீன் போன்றவற்றை சமைத்துக் கொடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை கொடுக்கலாம். இருப்பினும், பாதரசம் அதிகம் உள்ள டுனா மற்றும் வாள்மீன் போன்ற மீன்களை தவிர்க்கவும். மீன் உண்பவர்களுக்கு சாம்பல் சத்து அதிகம் இருப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    முட்டை

    முட்டையின் நன்மைகளை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால், நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. அவை குழந்தைகளின் ஞாபக சக்தியை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல், குழந்தையை நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும் "செரடோனின்" என்ற மகிழ்ச்சி ஹார்மோன் உருவாக்கத்திற்கு முட்டை உதவுகிறது. எனவே தினமும் ஒரு முட்டையாவது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.

    நட்ஸ்:

    வால்நட் மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் வைட்டமின் இ, துத்தநாகம், ஃபோலேட், டிஹெச்ஏ, இரும்பு மற்றும் புரதம் அதிகளவு காணப்படுகிறது. இவை குழந்தையின் மூளைக்கு எரிபொருளை அளித்து, நினைவாற்றலை மேம்படுத்தவும், குழந்தைகளின் மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், இவை மூளையில் வரக்கூடிய அல்சைமர் என்ற நோய் குழந்தைகளை தாக்காமல் பார்த்துக் கொள்கிறது. எனவே, தினமும் 5 அல்லது 6 பாதாம் அல்லது ஒரு வால்நட் பருப்பையாவது சாப்பிட கொடுக்க வேண்டும்.

    ஆரஞ்சு பழம்:

    ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிரம்பி உள்ளது, இது ஆரோக்கியமானது. மூளைக்கு இன்றியமையாதது. ஆரஞ்சு பழங்களை உட்கொள்வதால் குழந்தைகளின் செயல்திறன், ஞாபக சக்தி அதிகரிக்கிறது. எனவே, ஒருநாள் விட்டு ஒரு நாள் முழு ஆரஞ்சு பழத்தை சாப்பிட கொடுக்கலாம். சிறுகுழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதில் இருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு கொடுக்க மறந்துவிடாதீர்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார்.
    • தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கலிபோர்னியா:

    மீன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என சொல்வார்கள். ஆனால் அதனை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார். அவரது பெயர் லாரா பராசாஸ் (வயது 40) அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது. கை விரல்கள் கறுப்பாக மாறியது. பாதங்கள் மற்றும் கீழ் உதடு கறுப்பானது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அவர் கோமா நிலைக்கு சென்றார். சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. மேலும் கை, கால்களும் முற்றிலும் செயல் இழந்ததால் உயிருக்கு போராடி வருவதாக லாரா பராசாஸ் தோழி மெசினா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பாக்டீரியாக்கள் காணப்படும். இந்த உணவுகளை முறையாக தயார் செய்து சாப்பிடாவிட்டால் உடலுக்கு தொந்தரவு கொடுக்கும்.

    சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை சரியாக வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடம்.
    • ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள்.

    உலக அளவில் அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது. ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின் மதிப்பீடுகளின்படி ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள். அங்கு வசிக்கும் ௧௪௫௦ பேரில் ஒருவர் 100 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார் என்பதை அந்நாட்டு சுகாதார அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

    ஜப்பானியர்கள்தான் உலகிலேயே கட்டுக்கோப்பான உடல்வாகுவுடன் கூடிய ஆரோக்கியமான மக்களாக அறியப்படுகிறார்கள். அதன் பின்னணி ரகசியம் என்ன தெரியுமா? உடற்பயிற்சியும், உணவுப்பழக்கமும்தான். மற்ற நாட்டவர்களிடம் இருந்து வேறுபடும். அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும், அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும் பழக்கவழக்கங்கள் பற்றியும் பார்ப்போம்.

    கடல் உணவுகளும், இறைச்சி வகைகளும் ஜப்பானியர்களின் உணவு பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதே அளவுக்கு காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் பூமிக்கு அடியில் விளையும் வேர் காய்கறிகள்தான் அவர்களின் தேர்வாக இருக்கிறது. காய்கறிகள் மீதான அவர்களின் நாட்டம் ஆரோக்கியத்தை பேணுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    கராத்தே, டேக் வாண்டோ, ஜூடோ, அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளின் பிறப்பிடமாக ஜப்பான் அறியப்படுகிறது. அந்த கலைகளின் முக்கியத்துவத்தை ஜப்பானியர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுகிறார்கள். தற்காப்பு கலை வடிவில் மூதாதையர்கள் கடைப்பிடித்த உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்றுகிறார்கள்.

    உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். ஜப்பானில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டேக் வாண்டோ பயிற்சி பெற்றுள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அளவுக்கு அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.

    ஜப்பானியர்கள் 5 வகையான உணவு தயாரிக்கும் முறைகளை பின்பற்றுகிறார்கள். முதல் முறைக்கு 'நமோ' என்று பெயர். அதற்கு பச்சையாக உண்பது என்று பொருள். சில காய்கறிகள், உணவு பதார்த்தங்களை பச்சையாக சாப்பிடும் வழக்கத்தை தொடர்கிறார்கள். இரண்டாவது முறை 'நிரு' எனப்படுகிறது. இது உணவு பொருட்களை துல்லியமாக சமைக்கும் சமையல் கலையாகும்.

    உணவை சரியான பதத்தில் வேகவைத்து சுவையை கூட்டுகிறார்கள். அடுத்து, வறுத்தல் முறையை 'யாகு' என்று குறிப்பிடுகிறார்கள். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றியோ அல்லது சிறு தீயில் நேரடியாக உணவு பொருட்களை வறுத்தெடுத்தோ ருசிக்கிறார்கள். நான்காவது முறையான 'மூசு' நீராவி மூலம் சமைக்கும் செயல்முறையை கொண்டது.

    ஐந்தாவது முறைக்கு 'அஜெரு' என்று பெயர். இது அதிக வெப்பநிலையில் உணவு பொருட்களை வறுத்தெடுக்கும் முறையாகும். இந்த உணவுப்பழக்கங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுடல் அழகை பேண வழிவகை செய்கின்றன.

    ஜப்பானியர்கள் கிரீன் டீ பருகும் பழக்கத்தை தவறாமல் பின்பற்றுகிறார்கள். காலையிலும், மதிய உணவுக்கு, முன்னும் பின்னும் அவர்களின் விருப்பமான பானமாக இது பரிமாறப்படுகிறது.

    ஜப்பானியர்கள் தங்கள் உணவில் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை தவறாமல் சேர்த்துக்கொள்கிறார்கள். அவை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மீன் வளர்ச்சி கழகம் சார்பில் பவானிசாகர் அணை நீர் தேக்கத்தில் 2.90 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன
    • இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்ப ட்டு ள்ளதா கவும் மீன் வளர்ச்சி கழக அதி காரிகள் தெரிவித்து ள்ளனர்.

    சத்தியமங்கலம்,

    பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மின் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் நன்கு வளர்ந்த பின் பிடிக்கப்பட்டு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் விற்பனை நிலை யங்களில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் ஆழியாறு மேலாளர் சுகுமார் தலைமை யில் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன் குஞ்சுகள் விடும் பணி நடைபெற்றது.

    மின் துறை சார்பில் வளர்க்கப்பட்ட கட்லா இனத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 70 ஆயிரம் மீன் குஞ்சுகளும், ரோகு இனத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மீன் குஞ்சுகளும் என மொத்தம் 2.90 லட்சம் மீன் குஞ்சுகள் பவானிசாகர் அணியின் நீர்த்தேக்க பகுதியில் விடப்பட்டது. தற்போது விடப்பட்ட மீன் குஞ்சுகள் 60 நாட்களில் நன்கு வளர்ந்த உடன் மீனவ ர்கள் மூலம் பிடி க்கப்பட்டு விற்ப னைக்கு அனுப்பி வைக்க ப்படும் எனவும், ஆண்டொ ன்றுக்கு பவானி சாகர் அணையில் 39 லட்சம் மீன் குஞ்சுகள் விட ப்படுவ தாகவு ம் தற்போது இந்த ஆண்டு இதுவரை 5 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்ப ட்டு ள்ளதா கவும் மீன் வளர்ச்சி கழக அதி காரிகள் தெரிவித்து ள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நவீன மீன் அங்காடியில் மொத்த மீன்களை ஏலம் விட மீனவர்கள் ஒப்புக் கொண்டனர்.
    • இதையடுத்து அந்த இடத்தில் மணலை கொட்டி தற்காலிக பாதுகாப்பு ஏற்பாட்டை போலீசார் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதி பெரிய மார்க்கெட் உள்ளே மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது.

    அதன் வெளிப்பகுதியான நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் மீன்கள் காலை நேரத்தில் ஏலம் விடப்பட்டது. இதற்கு தடை விதித்தாலும் தொடர்ந்து ஏலம் விடப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் கடும் நெரிசல் நிலவியது.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நேரு வீதி-காந்தி வீதியில் நடைபெறும் மீன்கள் ஏலத்தை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து மொத்த மீன் வியாபாரம் செய்யும் மீனவர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி  முதல் நவீன மீன் அங்காடியில் மொத்த மீன்களை ஏலம் விட மீனவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    நேற்று குறைந்தஅளவே மீன்கள் நவீன மீன் அங்காடிக்கு வந்தன.இந்த நிலையில் இன்று மாநில எல்லைகளில் மீன் கொண்டுவந்த வாகனங்கள் நவீன மீன் அங்காடிக்கு திருப்பி விடப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட வேன்களில் கடலூர், நாகை, காசிமேடு போன்ற பகுதிகளில் இருந்து மீன், இறால், கனவா போன்ற மீன்கள் அதிகளவில் வந்தன.

    10 வண்டிக்கே போதிய இடவசதியின்றி வியா பாரிகளும் மீனவர்களும் சிரமம் அடைந்தனர். நவீன அங்காடியின் கட்டிடம் பெரிய அளவில் சரியான திட்டமிடல் இன்றி கட்டப்பட்டுள்ளதாக புகார் கூறிய மீனவர்கள், மீன் கொண்டு வரும் வேன், மீன் வாங்க வரும் வியாபாரிகளின் ஆட்டோ, பொது மக்களின் வண்டிகளை நிறுத்த இட வசதியில்லை என தெரிவித்தனர்.அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நவீன மீன் அங்காடியில் இன்று காலை அதிகளவில் மீனவ பெண்கள் மீன்களை வாங்கி பிரித்து எடுத்து கொண்டிருந்தனர்.

    அப்போது 5 பெண்களுக்கு திடீரென மின்சாரம் தாக்கியது. இதனால் அவர்கள் அலறி ஓடினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு சோதனை செய்தனர்.

    அங்கிருந்த மின் பெட்டியின் ஒயர் வெளியே தெரியும்படி இருந்தது. இதில் ஐஸ் தண்ணீர் பட்டவுடன் புகை மற்றும் நெருப்பு கிளம்பி மின்கசிவு ஏற்பட்டு மீனவ பெண்களை மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்தில் மணலை கொட்டி தற்காலிக பாதுகாப்பு ஏற்பாட்டை போலீசார் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேரு வீதியில் போலீசார் குவிப்பு
    • இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்ற போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதியில் பெரிய மார்க்கெட் உள்ளே மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. அதன் வெளிப்பகுதியான நேரு வீதி - காந்தி வீதி சந்திப் பில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் மீன்கள் காலை நேரத்தில் ஏலம் விடப்படுகிறது.

    இதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஆனாலும், தொடர்ந்து ஏலம் விடப்பட்டு வந்தது. இந்தநிலையில், இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில தொடரப்பட்ட வழக்கில், நேரு வீதி யில் நடைபெறும் மீன்கள் ஏலத்தை. இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்ற போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனையொட்டி, நேரு வீதியில் மொத்த மீன் வியாபாரம் செய்யும் குருசுக்குப்பம், வைத் திக்குப்பம், வம்பா கீரப்பாளையம் மீனவர்களுடன் சீனீயர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைத்யன்யா பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அதில், இன்றுமுதல் நவீன மீன் அங்காடியில் மொத்த மீன்களை ஏலம் விட மீனவர்கள் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, நேரு வீதியில் மீன்களை ஏலம் விட வருபவர்களை தடுக்க,  2 மணி முதலே நேரு வீதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மேலும், எல்லைப்பகுதிகளில் மீன் கொண்டு செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. மீன் கொண்டு செல்பவர்கள் நேரு வீதிக்கு செல்லாமல் நவீன மீன் அங்காடிக்கு திருப்பி விடப்பட்டனர்.

    பெரும்பாலும் அதிகாலையிலேயே நேரு வீதியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மீன்கள் ஏலத்திற்கு வரும். ஆனால் நவீன மீன் அங்காடியில் இன்று ஏலத்திற்கு 5 வாகனங்கள் மட்டுமே வந்திருந்தது. அதிலும், 3 வாகனம் வழக்கமாக அங்கு வரும் வாகனங்கள் என கூறப்பட்டது.

    இருப்பினும் நாளை முதல் முழுமையான ஏலம் நவீன மீன் அங்காடி வளாகத்தில் நடத்த மீனவர்கள் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆவணி ஞாயிறு ஏராளமான பக்தர்கள் விரதம் இருப்பார்கள் என்பதால் விற்பனை மந்தமாக உள்ளது.
    • கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் புஷ்பவனம் ,கோடியக்கரை, உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசை ப்படகுகளில் மீனவர்க ள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசை படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன்வர்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு கரை திரும்பினர். மீன்களை வாங்குவதற்கு மீன்பிரியர்கள், மீன் வியாபாரிகள் அதிகா லையிலேயே ஆயிரக்க ணக்கானோர் நாகை துறைமுகத்தில் திரண்டனர். ஒரு சில விசை படகுகளில் அதிக அளவில் கனவா மீன்களும் ஏற்றுமதிக்காக இறால் நண்டுகள் என கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் கூட, ஆவணி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் என்பதாலும், மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஏராளமான பெண்கள் விரதம் இருப்பார்கள் என்பதாலும் விற்பனை மந்தமாக இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    வஞ்சரம் 1 கிலோ ரூ 550-600, வௌவால் 1 கிலோ ரூ1000-1050, பாறை 1 கிலோ ரூ 350-400, சீலா 1 கிலோ ரூ300-350, விள மீன் 1 கிலோ ரூ 250-300, சங்கரா 1 கிலோ ரூ 200-250, நெத்திலி 1 கிலோ ரூ 100-120க்கு விற்பனை யானது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் விலை சற்று குறைந்து ள்ளதால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தற்பொழுது வேளாங்க ண்ணி ஆண்டு திருவிழா நடைபெற்று வருவதால் அங்கு வந்துள்ள பக்தர்களும், மீன் வாங்க அக்கரைப்பேட்டையில் உள்ள மீன் பிடித்து துறைமுகத்திற்கு வந்துள்ளதால் மீன்பிடி துறைமுகம் மக்கள் கூட்டத்தால் கலைகட்டி உள்ளது. கேரளாவில் தடைக்காலம் முடிந்ததால் உள்ளூர் வியாபாரிகளே தற்பொழுது அதிக அளவில் கூடியுள்ளனர்.வழக்கமாக 6.30 மணிக்கு எல்லாம் ஞாயிற்றுக்கிழமை ஏலம் முடியும் நிலையில் இன்று 9 மணி வரை நீடித்தது என மீனவர்கள் தெரிவித்து ள்ளனர். ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது மீனவர்கள் 4 லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாகவும் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் விற்பனை இல்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அபூர்வ வகை கூரல் மீன் சிக்கியது.
    • ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்துக் கொண்டு நேற்று கரை திரும்பினர். அப்போது மீனவர் ஒருவர் வலையில் சுமார் 20 கிலோ எடை கொண்ட கூரல் மீன் சிக்கியது. இதையடுத்து கரையில் காத்திருந்த வியாபாரிகள் அந்த மீனை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர். இந்த மீன் ஒரு கிலோ ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை போகும். இந்த மீன் உணவுக்காக இவ்வளவு விலை போவதில்லை. மாறாக இந்த மீனின் வயிற்றில் உள்ள நெட்டிக்காக விலை அதிகமாக உள்ளது. இந்த நெட்டியானது மருத்துவத்துறையில் முக்கிய பங்கு வகிப்பதால் அதிக விலைக்கு போகிறது. இந்த வகையான கூரல் மீன் அதிகமாக சிக்குவதில்லை. தற்போது மீனவர் ஒருவர் வலையில் இந்த மீன் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் மீனவர்கள் வலையில் அதிகளவு திருக்கை மீன்கள் சிக்கியது. இதையடுத்து அந்த மீன்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து மீனவர்கள் விற்பனை செய்தனர். இந்த திருக்கை மீன்கள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print