என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fish"

    • விரால் மீனில் நிறைய சுண்ணாம்புச்சத்து உள்ளது.
    • குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.

    கடல் மீன்களைவிட சில நன்னீர் மீன்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதில், விரால் மீனும் ஒன்று.

    இது புரதம் நிறைந்த மீன் வகை ஆகும். உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. குறிப்பாக நீரிழிவு பாதிப்பு இருப்பவர்கள் விரால் மீன் உணவுகளை அவ்வப்போது உண்டு வருவது நல்லது என்று கூறப்படுகிறது.

    விரால் மீன் இறைச்சியில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். கர்ப்பிணிகள் விரால் மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் கண் பார்வை திறன், மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றும், குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்த உதவும் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த மீனில் நிறைய சுண்ணாம்புச்சத்து உள்ளது. இதனால், எலும்புகளை வலுவாக்கி, மூட்டு வலி, கால் வலி போன்ற பாதிப்புகளை தணிக்கிறது. இது தவிர, கண் பார்வை கோளாறுகளை தடுக்கும். மூளை செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்கவும், தசை வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்பப்படுகிறது.

    விரால் மீன் பொதுவாக பாதுகாப்பான உணவாக கருதப்பட்டாலும், அதிக அளவு உட்கொள்ளும்போது சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதனை தேவைக்கு அதிகமாக சாப்பிடும்போது வயிற்று வாயு அல்லது செரிமான கோளாறுகள் ஏற்படலாம். இருப்பினும் இது விரால் மீனுக்கு மட்டுமல்லாமல் மற்ற அனைத்து மீன்களுக்கும் பொருந்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் சரியாக வேக வைக்காத விரால் மீன் உணவை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாக்டீரியா தொற்று ஏற்படலாம்.

    • அயலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
    • இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.

    ஊறுகாய் என்றால் மாங்காய், எலுமிச்சை மட்டும் இல்லை. சில வகை மீன்களை பதப்படுத்தி ஊறுகாய் தயார் செய்து உண்ணும் வழக்கம் தமிழர்களிடையே இருந்தது. குறிப்பாக, இந்தியன் மேக்க ரல் பிஷ் எனப்படும் அயலை மீனை ஊறுகாய் செய்து உண்ணும் வழக்கம் உண்டு. இந்த அயலை மீன் ஊறுகாய் மிகவும் ருசியான ஒன்று. மேலும் அதிக நாட்கள் கெட்டுப் போகாது.

    அயலை மீனை வறுத்து, மிளகாய்தூள், வெந்தயம், கடுகு சேர்த்து வினிகரில் ஊறவைத்து, நல்லெண்ணெயில் பேக் செய்து ஊறுகாய் போல் மாற்றுவார்கள். இதனை அவ்வப்போது உணவுடன் சேர்த்து உட்கொள்ளும் போது குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகரித்துகுடலில் உணவை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்கும், கெட்ட கொழுப்பை குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும்.

    பொதுவாக அயலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அயலை மீனில் சுமார் 205-305 கலோரிகள், 18-19 கிராம் புரதம், 13-25 கிராம் கொழுப்பு, பொட்டாசியம் 314 மி.கி., மெக்னீசியம் 76 மி.கி., செலினியம் 44 மி.கி., சோடியம் 90 மி.கி. என்ற அளவில் உள்ளன. வைட்டமின் பி 12, நியாசின், பாஸ்பரஸ் போன்றவையும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்தும்.

    இது நோய் எதிர்ப்பு சக்தி, மூட்டு வலி, மனச்சோர்வு, ரத்த சோகை, நீரிழிவு போன்றவற்றுக்கு உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மீனுக்கு கானாங்கெளுத்தி என்ற ஒரு பெயரும் உண்டு. வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து உண்ணும் ட்யூனா மீனுக்கு இணையான சத்துக்கள் இந்த அயலை மீனில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • ப்ளூஃபின் டுனா மீனின் தனித்துவமான சுவையால் இதனை வாங்க கடும் போட்டி நிலவுகிறது.
    • அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதால் இந்த மீன் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள டோயோசு சந்தையில் 243 கிலோ எடையுள்ள ப்ளூஃபின் டுனா மீன் ரூ.28 கோடிக்கு ஏலம் போனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    ப்ளூஃபின் டுனா மீனின் தனித்துவமான சுவையால் இதனை வாங்க கடும் போட்டி நிலவுகிறது. புத்தாண்டில் கிடைக்கும் முதல் மீன் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எனவும் நம்பப்படுவதால் இந்த மீன் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது. இதுவரை இவ்வளவு பெரிய தொகைக்கு எந்த மீனும் ஏலம் போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    புளூஃபின் டுனா நீண்ட ஆயுளுக்கும் பெயர் பெற்றது. சுமார் 40 வருடங்கள் வாழும் இந்த மீன் கடலின் ஆழத்திற்கு சென்று வேட்டையாடக்கூடியது. மிகப்பெரிய இந்த மீன் அரிதாகவே கிடைக்கிறது. மனித உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை இந்த மீன் வழங்குகிறது. அதனால் இந்த மீன் கோடிகளில் விலை போகிறது.


    • ஓமா கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட புளுபின் டுனா மீன் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
    • 243 கிலோ எடை கொண்ட டுனா மீனை ஏலம் விட்டதும் போட்டிபோட்டு மக்கள் வாங்க முயன்றனர்.

    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டோயோசு மீன் சந்தை செயல்படுகிறது. ஓமா கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட புளுபின் டுனா மீன் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மீன் அதன் தனித்துவமான சுவைக்கு பெயர்போனது. இதனை வாங்குவதற்கு எப்போதும் கடுமையான போட்டி நிலவும்.

    அதன்படி புத்தாண்டை முன்னிட்டு இந்த சந்தையில் ஏலம் நடைபெற்றது. அப்போது 243 கிலோ எடை கொண்ட டுனா மீனை ஏலம் விட்டதும் போட்டிபோட்டு மக்கள் வாங்க முயன்றனர். இதன்முடிவில் அந்த மீன் சுமார் ரூ.28 கோடிக்கு விற்பனையானது. இதனை சுஷி ஜான்மாய் என்ற ஓட்டலின் உரிமையாளரான கியோஷி கிமுரா வாங்கினார். இதன்மூலம் கடந்த புத்தாண்டின் சாதனையான ரூ.11 கோடி இந்த முறை முறியடிக்கப்பட்டது.

    • வாழ்நாள் முழுவதும் தண்ணீரிலேயே இளமைப் பருவத் தோற்றத்துடன்.
    • ஆக்சோலோட்ல்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மற்ற உயிரினங்களை விட 1000 மடங்கு குறைவு.

    இயற்கை அன்னை படைத்துள்ள சில விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க விலங்குகள் இந்த உலகில் வாழ்கின்றன. ஒவ்வொரு விலங்குகளும் தப்பிப்பிழைப்பதற்காகத் தங்களுக்குள் தனித்துவமான திறன்களைக் கொண்டுள்ளன.

    இதில், ஆக்சோலோட்ல் (Axolotl) எனப்படும் ஒரு தனித்துவமான நீர்வாழ் உயிரி குறித்து இங்கு பார்க்கலாம்.

    ஆக்சோலோட்ல் (Axolotl) எனப்படும் இது மெக்சிகோவில் காணப்படும் ஒரு வகை நீர்வாழ் உயிரி (Salamander). ஆக்சோலோட்ல் என்றால் என்றும் இளமை என்று அர்த்தமாம். இந்த உயிரிக்கு 'மீளுருவாக்கம்' (Regeneration) செய்யும் அதீத ஆற்றல் உண்டு. தனது கை, கால், வால் மட்டுமல்லாமல், இதயம் மற்றும் மூளையின் சில பகுதிகள் சேதமடைந்தால் கூட அதனை மீண்டும் வளர்த்துக்கொள்ளும் திறன் கொண்டது.

    இது உருமாற்றம் அடைந்து நிலத்திற்கு வராமல், வாழ்நாள் முழுவதும் தண்ணீரிலேயே இளமைப் பருவத் தோற்றத்துடன் (Neoteny) வாழ்கிறது.

    ஆக்சோலோட்ல்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மற்ற உயிரினங்களை விட 1000 மடங்கு குறைவு. இவற்றின் செல்கள் சேதமடைந்தால், அவை புற்றுநோயாக மாறாமல், மீண்டும் புதிய உறுப்புகளாக வளரும் தன்மையைக் கொண்டுள்ளன.

    ஒரு ஆக்சோலோட்லின் உடல் உறுப்பை மற்றொன்றுக்கு மாற்றினால், அது எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

    செதில்கள் (Gills) மூலம், நுரையீரல் மூலம் மற்றும் தோல் வழியாக என இவற்றுக்கு மூன்று விதமான சுவாச முறைகள் உள்ளன.

    மனிதர்களுக்குக் காயம் ஏற்பட்டால், அந்த இடத்தில் தழும்பு (Scar) உண்டாகும். ஆனால், ஆக்சோலோட்ல்களுக்கு எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும், அந்த இடம் பழையபடி தழும்பே இல்லாமல் முழுமையாகக் குணமாகும்.

    அதனால, அறுவை சிகிச்சைக்குப் பிறகு மனித உடலில் தழும்புகள் ஏற்படாமல் காயங்களை எப்படிக் குணப்படுத்துவது என்பதை ஆராய இவை உதவுகின்றன.

    இதனால் தான், ஆக்சோலோட்ல் (Axolotl) மருத்துவ உலகின் அதிசயம் என்று கூறப்படுகிறது.

    • வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்ட மீன் சமையல்!
    • செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும்.

    செட்டிநாடு சமையல் தனித்துவமான நறுமணமும், காரசாரமான சுவையும் கொண்ட உணவுகளுக்குப் பெயர் போனது. அந்த சிறப்பு மிக்க பட்டியலில், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் ஒரு தனி இடத்தைப் பிடிக்கிறது. இது வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்டு, பூண்டின் தனித்துவமான சுவையையும், அற்புதமான வாசனையையும் தாங்கி நிற்பதால், இதனைச் சுவைப்பவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். சாதத்துக்குத் துணையாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ பரிமாற ஏற்ற இந்த உணவு, சுவை மிகுந்தது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும்கூட. இந்த ரெசிபியை நமக்கு செய்துகாட்டுகிறார் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சதீஷ் தாமு.


    செய்முறை

    * முள் இல்லாத மீனை 65 மசாலா சேர்த்து நன்றாக ஊற வைத்து பொரித்து எடுத்து வைக்கவும். (பொரித்த மீனை கையால் லேசாக மசிக்கவும்.)

    * ஒரு கனமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    * எண்ணெய் சூடானதும், முதலில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். சோம்பு நல்ல மணம் வந்ததும், கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

    * பிறகு, குண்டு வரமிளகாயை சேர்த்து வறுக்கவும்.

    * அடுத்ததாக, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வரும்வரை வதக்க வேண்டும்.

    * வெங்காயம் வதங்கியதும், நசுக்கி வைத்த பூண்டை போட்டு, அதன் பச்சை வாசனை போகும்வரை நன்றாக வறுக்கவும். இந்த டிஷ்ஷுக்கு பூண்டின் சுவை மிக முக்கியம். நல்ல பிரவுன் கலராகும்வரை பூண்டை வறுக்க வேண்டும்.

    * வதக்கிய பூண்டு மற்றும் வெங்காய கலவையில், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    * அடுப்பை குறைத்து வைத்து, மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், சோம்புத் தூள், சுவைக்காக செட்டிநாடு மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    * இந்த மசாலாக்கள் எண்ணெயிலேயே ஸ்லோ குக் (மெதுவாக வறுக்கப்படுவது) ஆகி, நல்ல மணம் வரும் வரை கிளறவும்.

    * சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.

    * மசாலா வேக, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். மசாலா பச்சை வாசனை நீங்கி, நன்கு குக் ஆனதும் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.

    * மசாலா தயாரானதும், முன்னரே பொரித்து, மசித்து வைத்த மீன் துண்டுகளை அதில் சேர்த்து, மசாலா, மீன் துண்டுகளுடன் நன்றாகக் கலக்கும்படி மெதுவாக புரட்டவும்.

    * இறுதியில், தேங்காய்த் தூளைச் சிறிதளவு தூவி, மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் தயார்.

    * கொத்தமல்லித் தழை, வறுத்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் குண்டு மிளகாய் ஆகியவற்றால் அலங்கரித்துப் பரிமாறவும்.


    ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள மீன் பூண்டு வறுவல்

    ஆரோக்கிய நன்மைகள்

    1. மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.

    2. மீனில் உள்ள வைட்டமின் D மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.

    3. இந்த உணவில் பூண்டு அதிக அளவில் சேர்க்கப்படுவதால், செரிமானத்தை மேம்படுத்துவதுடன், பூண்டில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன.

    4. செட்டிநாடு சமையலில் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், உணவுக்கு நல்ல சுவையையும் தரும்.

    • 'டேஸ்ட் அட்லஸ்' என்பது உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் ஆகும்.
    • உலகின் சிறந்த 100 கடல் உணவுகளின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டது.

    'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் உலகின் சிறந்த 100 கடல் உணவுகளின் பட்டியலை வெளியிட்டது.

    இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நெத்திலி 65 உணவு 81வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளன.

    மேலும், கேரளாவின் கறிமீன் பொளிச்சது 11வது இடத்தையும், மேற்கு வங்கத்தின் சிங்கிரி மலாய் கறி 30வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.

    • வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் நவராத்தி விழா கொண்டாடப்படுகிறது.
    • விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர்.

    நாடு முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி உள்ளது. வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில்,மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் நவராத்திரி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 2ம் தேதி வரை இறைச்சி, மீன், முட்டை விற்கத் தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அரியானா மாநிலம் குருகிராமிலும் இதே போன்ற தடையை விதிக்க வேண்டும் என அப்பகுதியின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது.
    • மழைக்காலங்களில் மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

    துர்கா பூஜையை ஒட்டி, நட்புறவின் அடையாளமாக இந்தியாவுக்கு 1200 மெட்ரிக் டன் ஹில்சா மீன்களை வங்கதேசம் ஏற்றுமதி செய்ய உள்ளது

    வங்கதேசத்தின் தேசிய மீனாக ஹில்சா உள்ளது. மழைக்காலங்களில் இனப்பெருக்க காலத்தில், முட்டையிடுவதற்கு வசதியாக, மேற்கு வங்கத்தில் ஹில்சா மீன் பிடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

    குறிப்பாக அந்நாட்டின் பத்மா ஆற்றில் பிடிபடும் இவ்வகை மீன்கள், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிகளவில் மக்களால் விரும்பி வாங்கப்படும்.

    முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசாங்கம் கடந்த ஆண்டு ஹில்சா மீன்கள் ஏற்றுமதியைத் தடை செய்தது. ஆனால் துர்கா பூஜைக்கு சற்று முன்னதாக மீன்களுக்கான தேவை அதிகமாக இருந்தபோது தடையை வங்கதேச அரசாங்கம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    • தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயார் நிலையில் உள்ளது.
    • 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.

    ராமேசுவரம்:

    தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் நாளை (14-ந்தேதி, திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து தொடங்குகிறது. இதையடுத்து கன்னியாகுமரியில் தொடங்கி, சென்னை வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகள் முழுவதும், 60 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1,550 விசை படகுகளும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இத்தடை காலத்தில் இழுவலை விசைப்படகுகள், தூண்டில் வலை விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது. தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயார் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில 61 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது ஆழ் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களும் கடலுக்குச் சென்ற மீனவர்களும் நாளை இரவு 12 மணிக்குள் கரைக்கு வந்து சேர வேண்டும் என்றும், அதன் பின் 61 நாட்களுக்கு கடலின் மீன் பிடிக்க செல்ல கூடாது என்று மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து இத்தடைகாலங்களில் மீனவர்கள் குடும்பத்திற்கு இதுவரை 6 ஆயிரம் வழங்கி வந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சரால் ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் அனைத்து வகையான மீன்களின் விலையும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

    மீன்பிடி தடை காலம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதில் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்படும். அதேபோல் பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை தொண்டி, சோழியக்குடி, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது. மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள்.

    தடைக்கால சீசனில் ராமநாதபுரம் மாவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரபிக்கடலில் மீன்பிடி தொழிலுக்காக சென்று வருகின்றனர். இதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மீனவர்கள் உறுதி செய்கி றார்கள்.

    அதேபோல் மீன்பிடி தொழில் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தடை காலத்தையொட்டி மாற்றுத் தொழிலை நாடி செல்கிறார்கள். மேலும் மீன்பிடி வர்த்தகம் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

    • மீன் வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படும்
    • கலெக்டர் கவிதா ராமு தகவல்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியமும், பெண் பயனாளிகளுக்கு மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60சதவீதம் மானியமும் கூடிய ஏழு புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் (குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம்) இருத்தல் வேண்டும். மீன்வளர்ப்பு, மீன்குஞ்சு வளர்ப்பிற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருத்தல் வேண்டும். கடந்த 2018-19 முதல் 2020-21 முடிய உள்ள ஆண்டு வரை உள்ள கால கட்டத்தில் மத்தியஃமாநில அரசிடமிருந்து உள்ளீட்டு மானியம் பெற்ற மீன் வளர்ப்பு விவசாயிகள் இம்மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

    மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை வரும் 15-ந் தேதி க்குள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அளிக்குமாறு அல்லது தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    மேலும் அலுவலக முகவரி, மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பிளாட் எண்.1 டவுன் நகரளவு எண்.233ஃ1, அன்னை நகர், நிஜாம் காலனி விஸ்தரிப்பு, புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322 266994, அலைபேசி எண் 93848 24268 ஆகும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • கோடியக்கரை கடற்கரையில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
    • கோடியக்கரை மீனவர்கள், பாம்பன், காசிமேடு பகுதியில் இருந்து சுமார் 5 டன் வாலைமீன்களை இறக்குமதி செய்து செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் கடற்கரையில் குவிந்தனர்.

    இதனால் வழக்கத்திற்கு மாறாக மீன் விலை இரு மடங்காக உயர்ந்தது.

    இருப்பினும் இன்று அசைவம் சமைத்து உண்ண வேண்டும் என்பதால் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலாமீன், ஷீலாமீன், திருக்கைமீன், வாலைமீன், வாவல் மீன், நண்டு, இறால் உள்ளிட்டைவைகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    பொதுமக்கள் தேவை அறிந்து கோடியக்கரை மீனவர்கள் பாம்பன் மற்றும் காசிமேடு பகுதியில் இருந்து சுமார் 5 டன் வாலைமீன்களை இறக்குமதி செய்து கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

    ×