என் மலர்
நீங்கள் தேடியது "Fish prices rise"
- ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.
- குறிப்பிட்ட நாட்களுக்கு மீன்பிடிக்க தடை செய்யப்படுவது வழக்கமாகும்.
சென்னை:
கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். எனவே இந்த கால கட்டங்களில் எந்திரப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகள் வலையில் சிக்கி அழிந்து விடும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக நாள டைவில் தமிழக கடலோர பகுதிகளில் மீன்வளம் குறையும் நிலை ஏற்பட்டு விடும். இதை கருத்தில் கொண்டு தமிழக கடலோர பகுதியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு எந்திரப் படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்வது தடை செய்யப்படுவது வழக்கமாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் எந்திர படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டு செல்லவில்லை.

தங்களது எந்திர படகுகளை மீனவர்கள் தாங்கள் வழக்கமாக நிறுத்தும் பகுதிகளில் பாதுகாப்புடன் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த மீன்பிடி தடை காலம் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
மொத்தம் 61 நாட்களுக்கு தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த 61 நாட்களும் தமிழகம் முழுவதும் மீனவர்கள் எந்திர படகுகளில் மீன் பிடிக்கச் கடலுக்குச் செல்ல அனுமதி கிடையாது.
இது குறித்து சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுக உதவி இயக்குனர் பா.திருநாகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்த ஆண்டு இன்று அதிகாலை முதல் எந்த ஒரு எந்திரப்படகும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் 20 குதிரை சக்திக்கு குறைவான பைபர் படகுகள், கட்டுமரங்களில் மீன்பிடிக்க எவ்வித தடையும் இல்லை.
சென்னை காசிமேடு துறை முகத்தில் மட்டும் சுமார் 1,100 எந்திரப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் மொத் தம் உள்ள 4,500 எந்திரப் படகுகளில் கன்னியாகுமரி முதல் நிரோடி வரையிலான அரபிக் கடலோரப் பகுதிகள் நீங்கலாக 4 ஆயிரம் எந்திரப் படகுகளும் இயங்காது.
இந்தத் தடைக்காலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் சார்பு தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நாட்டுப் படகுகள் ஆந்திர பகுதிக்குச் செல்ல வேண்டாம். தமிழகத்தில் எந்திரப் படகுகளில் மட்டுமே மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் பொருத்தப்பட்ட செயற்கை இழை படகுகள் நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கத் தடையில்லை. ஆனால், ஆந்திர மாநிலத்தில் அனைத்து வகை படகுகளுக்கும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக மீனவர்கள் எந்த வகை படகாக இருந்தாலும் ஆந்திர கடல் பகுதிக்கு சென்று நட வடிக்கைகளுக்கு ஆளாக வேண்டாம். அவ்வாறு தடையை மீறி சென்றால் அதனால் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு படகு உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
அரசின் உத்தரவுகளை மீறி செயல்படும் படகுகளின் மீன் பிடி உரிமமும் ரத்து செய்யப்படும். அதை மீறிக் கடலுக்குச் சென்றால் மீன்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே விதிமுறைகளை மீனவர்கள் மீறிச் செயல்படக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் தொடங்கி இருப்பதால் வழக்கம் போல உணவுக்கு மீன்கள் கிடைக்காது. கடலோரப் பகுதிகளில் சாதாரண படகுகளில் சென்று வலைவீசி பிடிக்கும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வரும்.
இதன் காரணமாக மீன்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். இதையடுத்து மீன்கள் விலை கணிசமான அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற தருவைகுளம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் அனைத்தும் இன்று கரை திரும்பின.
இதைத்தொடர்ந்து தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று தூத்துக்குடி விசைப்படகு மீன் பிடி துறைமுகம் வேம்பார் மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றிலும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 600 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயார் நிலையில் உள்ளது.
- 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.
ராமேசுவரம்:
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் நாளை (14-ந்தேதி, திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து தொடங்குகிறது. இதையடுத்து கன்னியாகுமரியில் தொடங்கி, சென்னை வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகள் முழுவதும், 60 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் வருகிற ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1,550 விசை படகுகளும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இத்தடை காலத்தில் இழுவலை விசைப்படகுகள், தூண்டில் வலை விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது. தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில 61 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்பொழுது ஆழ் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களும் கடலுக்குச் சென்ற மீனவர்களும் நாளை இரவு 12 மணிக்குள் கரைக்கு வந்து சேர வேண்டும் என்றும், அதன் பின் 61 நாட்களுக்கு கடலின் மீன் பிடிக்க செல்ல கூடாது என்று மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இத்தடைகாலங்களில் மீனவர்கள் குடும்பத்திற்கு இதுவரை 6 ஆயிரம் வழங்கி வந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சரால் ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது. மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் அனைத்து வகையான மீன்களின் விலையும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
மீன்பிடி தடை காலம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதில் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்படும். அதேபோல் பாம்பன், மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை தொண்டி, சோழியக்குடி, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது. மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி வைத்து மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள்.
தடைக்கால சீசனில் ராமநாதபுரம் மாவட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரபிக்கடலில் மீன்பிடி தொழிலுக்காக சென்று வருகின்றனர். இதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மீனவர்கள் உறுதி செய்கி றார்கள்.
அதேபோல் மீன்பிடி தொழில் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தடை காலத்தையொட்டி மாற்றுத் தொழிலை நாடி செல்கிறார்கள். மேலும் மீன்பிடி வர்த்தகம் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
- வார நாட்களை விட வார இறுதி நாட்களில் இந்த மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதும். மீனுக்கென அசைவப்பிரியர்கள் அதிகம் உள்ளனர்.
- டேம் மின்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. மீன்கள் விலை அடுத்த 2 வாரங்களில் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை :
கோவை உக்கடம் லாரிபேட்டையில் மொத்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
இங்கு தமிழகத்தில் தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா போன்ற அண்டை மாநிலங்க ளில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு மீன் வியாபா ரிகளும், பொதுமக்களும் வந்து மீன்களை வாங்கிச்செல்கின்றனர்.
வார நாட்களை விட வார இறுதி நாட்களில் இந்த மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதும். மீனுக்கென அசைவப்பிரியர்கள் அதிகம் உள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் கடந்த மாதம் மீன் பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கினர்.
இதனால் மீன் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உக்கடத்திற்கு வரும் மீன்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் கடல் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இருந்த போதும் கேரளாவில் இருந்து டேம் மீன்கள் உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனாலும் கடல் மீன் பிரியர்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, கோவை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் கடல் மீன்கள் விலை வஞ்சிரம் ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்லா ரூ.120-க்கும், ரோகு ரூ.120-க்கும், பெரிய நெத்திலி ரூ.300-க்கும், சிறிய நெத்திலி ரூ.100-க்கும், மத்தி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டேம் மின்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. மீன்கள் விலை அடுத்த 2 வாரங்களில் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.






