என் மலர்
நீங்கள் தேடியது "மீன் விலை உயர்வு"
- ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.
- குறிப்பிட்ட நாட்களுக்கு மீன்பிடிக்க தடை செய்யப்படுவது வழக்கமாகும்.
சென்னை:
கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். எனவே இந்த கால கட்டங்களில் எந்திரப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகள் வலையில் சிக்கி அழிந்து விடும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக நாள டைவில் தமிழக கடலோர பகுதிகளில் மீன்வளம் குறையும் நிலை ஏற்பட்டு விடும். இதை கருத்தில் கொண்டு தமிழக கடலோர பகுதியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு எந்திரப் படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்வது தடை செய்யப்படுவது வழக்கமாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் எந்திர படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டு செல்லவில்லை.

தங்களது எந்திர படகுகளை மீனவர்கள் தாங்கள் வழக்கமாக நிறுத்தும் பகுதிகளில் பாதுகாப்புடன் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த மீன்பிடி தடை காலம் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
மொத்தம் 61 நாட்களுக்கு தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த 61 நாட்களும் தமிழகம் முழுவதும் மீனவர்கள் எந்திர படகுகளில் மீன் பிடிக்கச் கடலுக்குச் செல்ல அனுமதி கிடையாது.
இது குறித்து சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுக உதவி இயக்குனர் பா.திருநாகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்த ஆண்டு இன்று அதிகாலை முதல் எந்த ஒரு எந்திரப்படகும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் 20 குதிரை சக்திக்கு குறைவான பைபர் படகுகள், கட்டுமரங்களில் மீன்பிடிக்க எவ்வித தடையும் இல்லை.
சென்னை காசிமேடு துறை முகத்தில் மட்டும் சுமார் 1,100 எந்திரப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் மொத் தம் உள்ள 4,500 எந்திரப் படகுகளில் கன்னியாகுமரி முதல் நிரோடி வரையிலான அரபிக் கடலோரப் பகுதிகள் நீங்கலாக 4 ஆயிரம் எந்திரப் படகுகளும் இயங்காது.
இந்தத் தடைக்காலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் சார்பு தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நாட்டுப் படகுகள் ஆந்திர பகுதிக்குச் செல்ல வேண்டாம். தமிழகத்தில் எந்திரப் படகுகளில் மட்டுமே மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் பொருத்தப்பட்ட செயற்கை இழை படகுகள் நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கத் தடையில்லை. ஆனால், ஆந்திர மாநிலத்தில் அனைத்து வகை படகுகளுக்கும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக மீனவர்கள் எந்த வகை படகாக இருந்தாலும் ஆந்திர கடல் பகுதிக்கு சென்று நட வடிக்கைகளுக்கு ஆளாக வேண்டாம். அவ்வாறு தடையை மீறி சென்றால் அதனால் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு படகு உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
அரசின் உத்தரவுகளை மீறி செயல்படும் படகுகளின் மீன் பிடி உரிமமும் ரத்து செய்யப்படும். அதை மீறிக் கடலுக்குச் சென்றால் மீன்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே விதிமுறைகளை மீனவர்கள் மீறிச் செயல்படக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் தொடங்கி இருப்பதால் வழக்கம் போல உணவுக்கு மீன்கள் கிடைக்காது. கடலோரப் பகுதிகளில் சாதாரண படகுகளில் சென்று வலைவீசி பிடிக்கும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வரும்.
இதன் காரணமாக மீன்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். இதையடுத்து மீன்கள் விலை கணிசமான அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற தருவைகுளம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் அனைத்தும் இன்று கரை திரும்பின.
இதைத்தொடர்ந்து தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று தூத்துக்குடி விசைப்படகு மீன் பிடி துறைமுகம் வேம்பார் மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றிலும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 600 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
- சாதாரண நாட்களில் ரூ.400 முதல் 600 வரை விற்பனை செய்யப்படும் மீன்கள் இன்று ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டன.
- பெரிய வகை மீன்கள் விற்பனை செய்யும் ஏலகூடத்தில் மீன் விற்பனை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவொற்றியூர்:
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 61 நாட்கள் இந்த மீன்பிடி தடைகாலம் நீடிக்கிறது.
இதைத்தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. சிறியவகை பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். இதனால் குறைந்த அளவு மீன்கள் விற்பனைக்கு வருவதால் அதன் விலை அதிகரித்து உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால் மார்க்கெட் முழுவதும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டது. கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வந்திருந்தன.
சாதாரண நாட்களில் ரூ.400 முதல் 600 வரை விற்பனை செய்யப்படும் மீன்கள் இன்று ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டன. பெரிய வகை மீன்கள் விற்பனை செய்யும் ஏலகூடத்தில் மீன் விற்பனை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
பைபர் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள் விற்பனை செய்யும் இடத்தில் இன்று அதிகாலை முதல் கூட்ட நெரிசலாக காணப்பட்டது விலையையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு தேவையான மீன்களை மீன் பிரியர்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதனால் மீன் விற்பனை களைகட்டியது.
காசிமேடு மார்க்கெட்டில் மீன்விலை (கிலோவில்) வருமாறு:-
சங்கரா-ரூ.500, கொடுவா-ரூ.600, பாறை-ரூ.600, இறால்-ரூ.500, கிழங்கா-ரூ.500, ஷீலா-ரூ.600.
இதேபோல், திருவள்ளூர் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வளர்ப்பு மீன்களான கட்லா மீன், கெண்டை மீன், ஜிலேபி, வளர்ப்பு இறால் உள்ளிட்ட மீன்களின் விற்பனையும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று விற்பனைக்கு வந்திருந்தது. அதனையும் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர்.
- டீசல் விலையேற்றத்தின் காரணமாக குறைந்த அளவு எண்ணிக்கையிலான விசைப்படகுகள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றன.
- மீன்விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அசைவ பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள்.
ராயபுரம்:
காசிமேட்டில் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகும் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை அதிகமாகவே காணப்படுகிறது.
பெரியவிசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் குறைந்த எண்ணிக்கையில் செல்வதால் மீன்வரத்து குறைந்து உள்ளது. வஞ்சிரம், வவ்வால், பாறை, களவான் மயில் கோலா உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் விலை அதிகமாக காணப்பட்டது.
வஞ்சிரம் கிலோ ரூ.1300-க்கும், வவ்வால்-ரூ.1000 வரையும் விற்கப்பட்டது. மீன்விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அசைவ பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள். இதனால் காசிமேடு பகுதியில் வழக்க மான உற்சாகத்துடன் மீன் விற்பனை களை கட்டி உள்ளது.
இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறும்போது, மீன்விலை அதிகமாக உள்ளது. கடுமையான டீசல் விலையேற்றத்தின் காரணமாக குறைந்த அளவு எண்ணிக்கையிலான விசைப்படகுகள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றன.
இதனால் குறைந்த அளவு மீன் வரத்து இருப்பதால் மீன்களின் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. இதே நிலைதான் வரும் நாட்களிலும் நீடிக்கும் என்றார்.
காசிமேடு மார்க்கெட்டில் மீன் விலை(கிலோவில்) வருமாறு:-
வஞ்சிரம்-ரூ.1300
கொடுவா-ரூ. 800
வவ்வால்-ரூ.1000
தேங்காய் பாறை-ரூ.800
மயில் கோலா-ரூ.350
சங்கரா-ரூ.500
பர்லா-ரூ.400
கடம்மா-ரூ.400
நெத்திலி-ரூ. 300
இறால், நண்டு-ரூ.350 முதல் ரூ.500 வரை.
- வார நாட்களை விட வார இறுதி நாட்களில் இந்த மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதும். மீனுக்கென அசைவப்பிரியர்கள் அதிகம் உள்ளனர்.
- டேம் மின்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. மீன்கள் விலை அடுத்த 2 வாரங்களில் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை :
கோவை உக்கடம் லாரிபேட்டையில் மொத்த மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
இங்கு தமிழகத்தில் தூத்துக்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா போன்ற அண்டை மாநிலங்க ளில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு மீன் வியாபா ரிகளும், பொதுமக்களும் வந்து மீன்களை வாங்கிச்செல்கின்றனர்.
வார நாட்களை விட வார இறுதி நாட்களில் இந்த மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதும். மீனுக்கென அசைவப்பிரியர்கள் அதிகம் உள்ளனர். இந்தநிலையில் தமிழகத்தில் கடந்த மாதம் மீன் பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கினர்.
இதனால் மீன் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கேரளாவில் மீன் பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உக்கடத்திற்கு வரும் மீன்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதனால் கடல் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இருந்த போதும் கேரளாவில் இருந்து டேம் மீன்கள் உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனாலும் கடல் மீன் பிரியர்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, கோவை மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் கடல் மீன்கள் விலை வஞ்சிரம் ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்லா ரூ.120-க்கும், ரோகு ரூ.120-க்கும், பெரிய நெத்திலி ரூ.300-க்கும், சிறிய நெத்திலி ரூ.100-க்கும், மத்தி ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டேம் மின்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. மீன்கள் விலை அடுத்த 2 வாரங்களில் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.






