search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "export"

    • உள்நாட்டில், மக்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்வதில் கப்பல் சேவை சிறப்பிடம் பெறுகிறது.
    • கப்பல்கள் மூலம் வாணிபத்தை பெருக்கி நாட்டின் பொருளாதாரம் மேம்பட பாடுபட நாம் உறுதியேற்போம்.

    ஒவ்வொரு ஆண்டும், தேசிய கடல்சார் தினம் ஏப்ரல் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது நாட்டின் கடல்சார் வாணிப துறை. நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பெரிய அளவிலான பொருட்களை எடுத்து செல்வதற்கு கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    உள்நாட்டில், மக்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்வதில் கப்பல் சேவை சிறப்பிடம் பெறுகிறது.

    உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார பரிமாற்றத்தில் தேசிய கடல்சார் துறையின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களுக்குப் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய கடல்சார் தினம் ஏப்ரல் - 5 கொண்டாடப்படுகிறது.





    'சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன்' கம்பெனி லிமிடெட்டின் முதல் கப்பலான எஸ்.எஸ்.லாயல்டியின் முயற்சி இந்தியாவின் வழிசெலுத்தலில் வரலாற்று தருணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    இது வெளிநாடுகளுக்கு தனது பயணத்தைத் தொடங்கியது. குறிப்பாக கடல் வழிகள் முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    1964- ம் ஆண்டு ஏப்ரல் 5- ந் தேதி முதல் தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதில் இந்தியாவின் கடல்சார் துறையின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து விழிப்புணர்வு பரப்பும் நோக்கத்துடன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.



    சுற்றுச்சூழல் மாசு, திருட்டு மற்றும் மாறும் வர்த்தக இயக்கவியல் ஆகியவை இத்துறை எதிர்கொள்ளும் சில சவால்களாகும். இந்தத் தொழிலின் போராட்டங்கள் குறித்து நமது கவனத்தை ஈர்ப்பதும், தீர்வுகளை திறம்பட கண்டறிய நாம் ஒன்றுபட உதவுவதும் இந்த தினத்தின் நோக்கம்.

    கடல்சார் துறையை மேம்படுத்துவதற்காக அதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் இன்று வழங்கப்படுகிறது. இளைய தலைமுறையினர் அதிகளவில் கடல்சார் தொழிலில் ஈடுபட வேண்டும்.

    கப்பல்கள் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதி - இறக்குமதி வாணிபத்தை பெருக்கி நாட்டின் பொருளாதாரம் மேம்பட பாடுபட நாம் அனைவரும் இந்த தினத்தில் உறுதியேற்போம்.

    • மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
    • ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பார்க் உருவானதில் இருந்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சி அபரி மிதமானது.

    பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர், சிறுசேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்காகிவிட்டது.

    மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இப்போது சென்னையின் வெளிவட்ட சாலையின் கிழக்கு பகுதியான மண்ணிவாக்கம், மலையம்பாக்கம் வண்ட லூர் பகுதியிலும் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

    டைடல் பார்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இதற்கு முதற்கட்ட அனுமதியை வழங்கி உள்ளது.

    இதற்கான நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதை சரிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

    இதில் மலையம்பாக்கம் பகுதியில் அமையும் தொழில்நுட்ப பூங்காவுக்கு 5.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2-வது ஐ.டி. பூங்கா மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு ஏக்கருக்கு ரூ.5 கோடி என நிலமதிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    3-வது தொழில்நுட்ப பூங்கா வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு நில மதிப்பு ஏக்கருக்கு ரூ.8.05 கோடி மதிப்பாக உள்ளது.

    இந்த 3 புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை 1½ வருடத்தில் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    இதன்மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மென்பொருள் ஏற்றுமதியில் மேலும் வளர்ச்சி அடைய இது உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சின்ன வெங்காயம் பயிா் செய்து வந்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

    திருப்பூர்:

    மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து அச்சங்கத்தின் மாநில நிறுவன தலைவா் வக்கீல் ஈசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தை நிலவரத்தை அனுசரித்து ஏற்றுமதிக்காக கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் ஏற்றுமதி செய்ய இயலாமல் மிகக் கடுமையான நஷ்டத்தை வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது.

    பெரிய வெங்காயம் என்பது இந்திய அளவிலான பிரச்னை, உலக அளவிலான சந்தையும் கூட. ஆனால் சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கக் கூடியது. தமிழா்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பெரிய வெங்காயத்தோடு ஒப்பீடு செய்து சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு தடைகளை விதித்தும், வரிகளை விதிப்பதும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

    ஏற்றுமதி செய்யப்படும்போது கொடுக்கப்படும் எண் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவற்றிற்கு ஒரே எண்ணாக இருந்து வருகிறது. இதை பிரித்து சின்ன வெங்காயத்திற்கு தனி எண்ணை அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் 40 சதவீத வரி விதிப்பு சின்னவெங்காயம் கிலோவுக்கு 20 ரூபாயை குறைத்துள்ளது. இதனால் சின்ன வெங்காயம் பயிா் செய்து வந்த விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

    எனவே, மத்திய அரசு 40 சதவீத வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும், பெரிய வெங்காயத்தில் இருந்து சின்ன வெங்காயத்தைப் பிரித்து அதற்கு தனியாக ஏற்றுமதி எண் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் நாளை 26ந் தேதியும், குடிமங்கலத்தில் 28-ந் தேதியும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.
    • நீரா பானம் பல்வேறு வைட்டமின்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தினை தலைமை யிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் 1200க்கும் மேற்பட்ட விவசாயிகளை பங்குதாரராக கொண்டு தென்னை மரங்களில் இருந்து நீரா பானத்தினை உற்பத்தி செய்து அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறீர்கள். சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த நீரா பானம், பல்வேறு வைட்டமின்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும். இது இ-காமர்ஸ் முறையிலும் விற்பனை செய்யப்டுகிறது.

    இந்தநிலையில் நீரா பானத்தை அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்து நிர்வாக இயக்குனர் பாலசு ப்ரமணி யம் கூறியிருப்பதாவது :- அமெரிக்காவில் உள்ள தமிழகத்தை சேர்ந்த கதிர்குருசாமி என்பவர் மூலம் ரீஜெண்ட் நார்த் அமெரிக்க நிறுவனம் நீரா பானத்திற்கான ஆர்டரினை கொடுத்துள்ளது இதனால் தற்போது தினசரி 5000 பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் நிலையில், அதனை உயர்த்தி இனி 20 ஆயிரம் பாக்கெட்டுகளாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.30 லட்சம் மதிப்புள்ள நீரா பானம் அமெரிக்காவிற்கு கண்டைனர் மூலம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

    இதன் ஆண்டு விற்பனை ரூ .25 கோடி ரூபாயை எட்டுவதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில் நீரா பானத்தினை 5 கண்டைன ர்களில் அனுப்ப திட்டமிட ப்பட்டுள்ளது. இதன் விற்பனை அதிகரி த்தால் தென்னை விவசாயிக ளின் வாழ்வாதா ரமும் மேலோங்கும் என்றார்.

    • 2022-23ம் நிதியாண்டில் 63.14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
    • ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக பொருளாதார மந்தநிலை நிலவியது.

    திருப்பூர் :

    இந்த நிதியாண்டில் நம் நாட்டின் ஏற்றுமதி 55 சதவீ தம் உயர்ந்துள்ளது என்று இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு(பியோ) தலைவர் சக்திவேல் கூறியுள்ளார். இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக அளவிலான பொருளா தார மந்த நிலையையும் மீறி, இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2022-23ம் நிதியா ண்டில் 63.14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 21-22ல் 41 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை நிலவியது.கடந்த ஆண்டிலிருந்து ஏற்பட்ட பாதிப்பு முழுமையாக தீரவில்லை. தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் போர் சூழல் குறைந்தபாடில்லை. கடந்த, 2021-22ம் நிதி ஆண்டை காட்டிலும் 22-23ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகம், 55 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. வரும், 2030ல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 164 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.

    ஆட்டோமொபைல், இயந்திர ஏற்றுமதி என பல்வேறு துறைகளிலும் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட தமிழ்நாடு ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிப்பது வங்கி கணக்கு செயல்பாடு அவகாசம் 90 நாட்கள் என்பதை 180 நாட்களாக உயர்த்தி கொடுப்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏர்வாடி தர்கா தாயத்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • இந்த தாயத்தை கையில் கட்டி கொண்டால் பில்லி, சூன்யம், பேய், பிசாசு நெருங்க முடியாது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இந்த தர்காவின் மகிமையை அறிந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர். இங்கு சாதி, மதம், இனம் கிடையாது. அனைத்து சமுதாயத்தினர் நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் வருகின்றனர். பிரார்த்தனை செய்கி ன்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.

    இந்த தர்காவில் பாதுஷா நாயகம் அடங்கியுள்ள மண்டபத்தின் ஹாலில் தர்கா ஹக்தார்களால் விற்பனை செய்யப்படும் தாயத்து அபூர்வ சக்தி படைத்தது என பக்தர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக இங்கு பிரார்த்தனைக்கு வரும் பக்தர்கள் தாயத்தை மறக்காமல் வாங்கி செல்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தாயத்து களை வாங்கி அனுப்பி வருகின்றனர். தாயத்தின் மகிமை குறித்து தர்கா நிர்வாக கமிட்டி முன்னாள் தலைவர் துல்கருணை பாட்சா கூறியதாவது:-

    ஆன்மீக சக்தியின் மீது பக்தர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். ஏர்வாடியில் நாள்தோறும் பல்வேறு அதிசயங்கள், அற்புதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. தர்காவிற்கு நேரடியாக வந்தால் இதனை காணலாம். முகமது நபி (ஸல்) கட்டளையை பாதுஷா நாயகம் ஏற்று அல்லாவுக்காக பல்வேறு தியாகங்களை செய்தார்.

    இதன் காரணமாக பாதுஷா நாயகம் அவர்களுக்கு இறைவன் பல்வேறு மகிமைகளை அளித்தார். அந்த மகிமைகள் தான் தற்போது தர்காவில் நடந்து வருகிறது. இந்த தாயத்தில் பாதுஷா நாயகத்தின் பெயர் நாமம் உள்ளது. இதை கையில் கட்டி கொண்டால் பில்லி, சூன்யம், பேய், பிசாசு நெருங்க முடியாது.

    குறிப்பாக கேரள மாநில மக்கள் இதன் மகிமையை நன்கு அறிந்துள்ளனர். இந்த தாயத்து உள்ளே எழுதப்பட்டுள்ள பெயர் நாமம் சிறப்பு ஆலிம்களை கொண்டு எழுதப்பட்டு பாதுஷா நாயகத்தின் சமாதியில் வைத்து முறையாக பிரார்த்தனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தண்ணீர் புகாத வகையில் தாயத்து தயாரிக்கப்படுகிறது.

    ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இதை கட்டிக் கொள்ளலாம். சபரிமலை பம்பையில் உள்ள வாவர் சாகிப் தர்காவிற்கு ஆயிரக் கணக்கில் இங்கிருந்து ஆர்டர் செய்து பெற்று சென்று அங்கு ஏர்வாடி தர்கா தாயத்து விற்பனை செய்கின்றனர். தர்கா கமிட்டி வழியாகவும் வெளிநாடு மற்றும் உள் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எரிசக்தி விலைகளில் கூடுதல் நிவாரணம் வழங்கினால், வா்த்தகத்தில் ஏற்படும் குறையை சரி செய்ய உதவும்.
    • காலவரையறை அனுமதி மற்றும் வரிவிலக்கு மூலம் அவா்களின் முதலீட்டை ஊக்குவிப்பதும் காலத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ளாா்

    திருப்பூர் :

    ஏற்றுமதிக்கு சவாலான சூழ்நிலையில் அதற்கு சாதகமான சூழ்நிலை மீண்டும் உருவாக வாய்ப்புள்ளது என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவா் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக, பெரும்பாலான துறைகளில் சவால்கள் தொடா்கின்றன. ஆனால் ஏற்றுமதிக்கு சாதகமான சூழ்நிலை மீண்டும் உருவாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தற்போதுள்ள பொருளாதார மந்தநிலையானது நாணயங்களின் மதிப்பில் ஏற்படும் அதிக ஏற்ற, இறக்கம் மற்றும் புவிசாா் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக கடுமையான உலக வா்த்தக நிலைமைகளின் பிரதிபலிப்பாகும்.

    உள்நாட்டு சந்தையில் விலை உயா்வைத் தடுக்கும் நோக்கில் பொருள்களின் விலை வீழ்ச்சி மற்றும் சில ஏற்றுமதிகள் மீதான கட்டுப்பாடு ஆகியவை வளா்ச்சியை பாதித்துள்ளன. வர உள்ள பெட் விகிதம் உயா்வையும் நாம் கவனிக்க வேண்டும்.

    30 முக்கிய தயாரிப்புகளில் 15ல் மட்டுமே வளா்ச்சி என்பது கவலையளிக்கிறது. எனவே, உலகப் பொருளாதார வளா்ச்சி மற்றும் புவிசாா் அரசியல் நிலைமை ஆகிய இரண்டும் பெருமளவில் மேம்படாவிட்டால், வரவிருக்கும் மாதங்கள் ஏற்றுமதியில் மிகவும் சவாலானதாக இருக்கும். இருப்பினும், பெட்ரோலியம், கச்சா எண்ணெய், உரம் மற்றும் நிலக்கரி போன்றவற்றின் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக, இறக்குமதியில் சிறிய அதிகரிப்பு உள்ளது. எங்களுக்கு எரிசக்தி விலைகளில் கூடுதல் நிவாரணம் வழங்கினால், வா்த்தகத்தில் ஏற்படும் குறையை சரி செய்ய உதவும்.

    தற்போதைய சூழ்நிலையில் ஏற்றுமதி துறைக்கு போட்டி நிலைமையை சமாளிக்க, பணப்புழக்கத்தை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. ரெப்போ விகிதத்தில் ஏற்றுமதிக் கடன் மறுநிதியளிப்பு வசதியை வங்கிகளுக்கு அளிப்பது குறித்து ரிசா்வ் வங்கி பரிசீலித்து, ஏற்றுமதித் துறைக்கு மறுநிதியளித்து கடன் வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும். வட்டி விகிதங்கள் உயா்ந்திருப்பதால் கரோனாவுக்கு முந்தைய நிலையை விட வட்டி தற்போது அதிகமாக உள்ளது. எனவே கரோனா காலத்துக்கு முன்பு இருந்ததைப் போலவே வட்டி சமன்பாடு திட்டத்தின் கீழ் வட்டி மானியத்தை முறையே அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதி சரக்கு மீதான ஜிஎஸ்டி விலக்கு, வரும் 30ந் தேதியுடன் முடிவடைந்து, குறிப்பாக சரக்குக் கட்டணங்கள் இன்னும் உயர இருப்பதால், சரக்கு மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பாதிக்கும். ஏற்றுமதியாளா்களின் பணப்புழக்க வசதிக்காக, அத்தகைய வரியை பின்னா் திருப்பிச் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்றுமதித் துறையின் கோரிக்கையை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

    சப்ளை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு பிசிஎப்சி காலத்தை 180 நாள்களில் இருந்து 365 நாள்களாக அதிகரிக்க வேண்டும். அட்வான்ஸ் ஆதரசைசேஷன், டியூட்டி ஃப்ரீ இம்போா்ட் ஆதரசைசேஷன், மற்றும் எக்ஸ்போா்ட் ஒரீயண்டட் யூனிட்கள் வைத்திருப்பவா்களுக்கும் இந்த விகிதங்கள் அறிவிக்கப்பட வேண்டும். விவசாய ஏற்றுமதியாளா்களுக்கான புதிய போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் உதவி அறிவிக்க வேண்டும். ரசாயனங்கள், கனிமங்கள் மற்றும் தளவாடபொருள்கள் தொடா்பான அனைத்து ஏற்றுமதிகளுக்கும், சந்தைப்படுத்துதலில், காலவரையறை அனுமதி மற்றும் வரிவிலக்கு மூலம் அவா்களின் முதலீட்டை ஊக்குவிப்பதும் காலத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ளாா். 

    • நாமக்கல் மண்டலத்தில் இருந்து தான் வெளிநாடுகளுக்கு முட்டை அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • கடந்த 2 மாதங்களில் மட்டும் வெளிநாடுகளுக்கு சுமார் 8 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கத் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ, அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து ஆலோசித்தனர்.

    கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு கோழி பண்ணையாளர் சங்க தலைவர் சிங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது,

    8 கோடி முட்டைகள் ஏற்றுமதி

    இந்தியாவில் நாமக்கல் மண்டலத்தில் இருந்து தான் வெளிநாடுகளுக்கு முட்டை அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. துபாய் மஸ்கட், கத்தார், ஆப்பிரிக்கா, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகள் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் வெளிநாடுகளுக்கு சுமார் 8 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. உக்ரைன் போரால் பல நாடுகளில் கோழி தீவன பொருட்களின் விலை உயர்ந்து முட்டை உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளது.

    சர்வதேச தரம்

    வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் வகையில் சர்வதேச தரத்துடன் முட்டை தயாரிக்கும் கோழிப்பண்ணைகள் நாமக்கல் மண்டலத்தில் உருவாகி வருகிறது. இதனால் ஏற்றுமதிக்கு தடையில்லா சான்று பெற்று முட்டையை எளிதாக ஏற்றுமதி செய்ய முடிகிறது.

    முதன்முறையாக

    தற்போது முதன்முறையாக நாமக்கல்லில் இருந்து மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மலேசியா நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் ஆர்டரின் பெயரில் சென்னையில் இருந்து ஏர் கார்கோ விமான மூலம் கடந்த வாரம் 54,000 முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. வரும் வாரங்களில் முட்டை ஏற்றுமதி மலேசியாவுக்கு தொடர்ந்து நடைபெறும். வாரம் 20 கண்டெய்னர் மூலம் ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

    தேவை அதிகரிப்பு

    மலேசியாவில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டாலும் அங்கு முட்டையின் தேவை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி தொடங்கிய பிறகு சிங்கப்பூருக்கும் இங்கே இருந்து ஏற்றுமதி செய்யப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு தொழிற்சாலை 80 சதவீத வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.
    • ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடை பெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று நாகை மாவட்டத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    மீன்வள ஏற்றுமதி மண்டலம்

    நாகப்பட்டினம் மாவ ட்டத்தை மீன்வள ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்க வேண்டும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை ெரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,

    தமிழ்நாடு தொழிற்சாலை 80 சதவீத வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.

    ரெயில் மறியல்

    நீட் தேர்வு, மின் கட்டண கணக்கீடு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் திமுக அரசு நிறைவேற்ற வில்லை. மற்ற மாநிலங்களைப் போல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். நாகை திருவாரூரில் நாளை நடைபெற உள்ள ெரயில் மறியல் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் கலந்து கொள்ளும்.

    ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து இருப்பதாக வேதனை தெரிவித்த அன்புமணி, தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம்.

    ராகுல்காந்தியின் நடைபய ணம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், இந்திய அரசியலில் ராகுல் காந்தி நடைபயணம் பெரிய எதிரொலியை ஏற்படுத்தி பாஜகவிற்கு பின்னடைவை உண்டாக்கும் என்று தனது கருத்தை தெரிவித்தார்.

    • பிபா விளையாட்டுக்காக விளையாட்டு சார்ந்த உடைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
    • திருப்பூரில் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    திருப்பூர் : 

    கத்தார் நாட்டில் பிபா உலகக்கோப்பை- 2022 தொடர் கடந்த 20ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் 8 வெவ்வேறு பிரிவுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன. வளைகுடா நாடுகளில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெறுவது இதுவே முதல்முறை.

    இதன்மூலம் கத்தார் நாட்டின் வர்த்தகம், சுற்றுலா, பொருளாதாரம் எனப் பல்வேறு விஷயங்கள் வளர்ச்சி அடையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், பிபா உலகக்கோப்பை போட்டிக்காக கத்தாருக்கு விளையாட்டு சார் உடைகளை ஏற்றுமதி செய்து திருப்பூர் உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த சாயமிடுதல், பிரின்டிங்க், எம்ராய்டரி, நூல் மில்கள் உள்ளிட்ட உப தொழில்கள்,ஜாப் ஒர்க் நிறுவனங்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    மேலும் தொழிலாளர் கள் சார்ந்து ஏராளமானோர் மறைமுக வேலை யினையும் பலர் பெற்று வருகின்றனர். திருப்பூரில் இருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு 75 சதவீத ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 35 ஆயிரம் கோடி அளவுக்கு அந்நிய செலாவணி ஈட்டித்தரும் நகராக திருப்பூர் உள்ளது.

    ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலில் சர்வதேச அளவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள திருப்பூரில் இருந்து பிபா விளையாட்டுக்காக விளையாட்டு சார்ந்த உடைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் கொச்சின் விமான நிலையம் வாயிலாக கத்தார் தலைநகர் தோஹாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட விளையாட்டு சார்ந்த உடைகள் சுமார் 17 சரக்கு தொகுப்புகள் கொச்சி விமான நிலையம் வாயிலாக கத்தாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருப்பூரை சேர்ந்த ஜவுளி நிறுவனங்கள் நல்ல வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிகிறது.

    இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் வாயிலாக ஆர்டர்களை பெற்று ஏற்றுமதி வழி வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை கைப்பற்றுவதற்கு அரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே திருப்பூர் ஜவுளித் துறையினரின் கோரிக்கையாக உள்ளது.

    • தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள்
    • பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு

    திருப்பூர்,நவ.21-

    இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ஜெர்மனி. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 4 சதவீதம் ஆடைகள் ஜெர்மனிக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. ஜவுளி இறக்குமதி செய்யும் பெரிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஜெர்மனி.

    ஜெர்மனியில் ஜவுளி வர்த்தகர்களும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏற்றுமதி வர்த்தகர்களும் சந்தித்து வர்த்தக வாய்ப்புகளை பறிமாறிக்கொள்ள ஏதுவாக அடிக்கடி வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சந்திப்பு நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் இந்தாண்டு எழுச்சியுடன் நடத்தப்படுகிறது.

    ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில் வர்த்தக சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 27, 28ந் தேதிகளில் ஜெர்மனியில் உள்ள பெர்லினில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா - ஜெர்மனி இடையே ஜவுளித்தொழில் வர்த்தகம் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வர்த்தக அபாரமாக வளர்ச்சி பெற்றுள்ளது.கடந்த 2019 ம் ஆண்டில் 3.09 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்தது. கடந்த 2021ம் ஆண்டில் 3.34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்ததை மேம்படுத்தும் வகையில் ஏ.இ.பி.சி., ஊக்கமளித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இருக்கும் ஜெர்மனியுடன் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பங்கேற்பதன் வாயிலாக புதிய ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க முடியும். வர்த்தகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421 2232634 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படுகிறது.

    எதிர்பாராத வகையில் ஏற்படும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வர்த்தக நாடுகளில் உருவாகும் அசாதாரண சூழல், பஞ்சு -நூல் உற்பத்தியில் மாறுபாடு, பணமதிப்பில் உருவாகும் ஏற்றத்தாழ்வு போன்ற நேரத்தில் தொழிலை பாதுகாக்கும் வகையில் தேவையான திருத்தம் செய்யப்படுகிறது.

    கடந்த 2015ல் உருவாக்கிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2022 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தற்போதைய தொழில் நிலையை பாதுகாக்கும் வகையில் புதிய கொள்கைகள் உருவாக்கப்படுமென தொழில்துறையினர் எதிர்பார்த்தனர்.புதிய அம்சங்களுடன் புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்படும் என தொழில்துறையினர் பெரிதும் எதிர்பார்த்தனர். வெளிநாட்டு வர்த்தகம் 'டாலர்' பணமதிப்பின் அடிப்படையில் நடக்கிறது.

    இந்நடைமுறையை மாற்றம் செய்து இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய வழிவகை செய்வது குறித்தும், தொழில்துறை அமைச்சரகம் தீவிரமாக ஆராய்ந்து வந்தது. விரிவாக ஆலோசனை நடத்திய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரகம் வெளிநாட்டு வர்த்தக கொள்கை புதுப்பிக்கும் முடிவை 6 மாதம் ஒத்திவைத்துள்ளது.

    இதுகுறித்து ஏற்றுமதி வர்த்தகர்கள் கூறுகையில், உக்ரைன் போர் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு நாடுகளில் இயல்பான வர்த்தகம் நடைபெறுவதில்லை. இயல்பு நிலை திரும்ப மேலும் சில நாட்களாகும்.

    ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் முயற்சியும், இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன்காரணமாகவே வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.

    இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் கூறுகையில், பல்வேறு காரணங்களால், வெளிநாட்டு வர்த்தக கொள்கை மறுசீரமைப்பு 6 மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதற்கு முன்னதாக இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் (2023 ஏப்ரல்) இருந்து புதிய திருத்தங்களுடன் வெளிநாட்டு வர்த்தக கொள்கை உருவாக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.

    • வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
    • கோதுமை இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரஷியாவிற்கு பதிலாக இந்தியாவை நம்பி இருக்கிறது.

    துபாய்:

    இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவை மறு ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    ரஷியா-உக்ரைன் போர் தொடங்கியதை தொடர்ந்து, ஐக்கிய அமீரகத்துக்கு ரஷியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வது தடைபட்டது. இந்த நிலையில், கோதுமை இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரஷியாவிற்கு பதிலாக இந்தியாவை நம்பி இருக்கிறது. இந்நிலையில் கடந்த மே 13-ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் தூதரக வழிகளில் இந்திய அரசிடம் கோதுமையை ஏற்றுமதி செய்யுமாறு கோரிக்கையை முன்வைத்தன. இருப்பினும், அத்தகைய கோரிக்கைகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு இன்னும் முடிவு செய்யவில்லை

    இந்நிலையில் மே 13-ஆம் தேதிக்கு முன்னர், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தியாவில் உற்பத்தியாகும் கோதுமையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்நாடு தடை விதித்துள்ளது. அவ்வாறு ஏற்றுமதி செய்ய விரும்பும் அமீரக நாட்டு நிறுவனங்கள், அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. 

    ×