என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமங்கள்"

    • சீனா​வின் தியான்​ஜின் நகரில் வருகிற 31, செப்​டம்​பர் 1 ஆகிய தேதி​களில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் வரு​டாந்​திர உச்சி மாநாடு நடை​பெறவுள்​ளது.
    • தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாங் யி 24-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.

    சீன வெளியுறவு மந்திரி வாங் யி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். அவரை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றனர்.

    பின்னர் சீன வெளியுறவு மந்திரி வாங் யி மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது. அனைத்து வடிவங்களிலும் வரும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது இரு நாடுகளின் முக்கிய முன்னுரிமையாகும். எங்களின் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் இடையே நிலையான கூட்டுறவும், எதிர்கால நல்லுறவும் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு உரம், அரிய வகை கனிமங்கள், சுரங்கபாதை எந்திரங்களை வழங்க சீனா தயாராக இருப்பதாக ஜெய்சங்கரிடம் அவர் உறுதியளித்தார். இது தொடர்பான வினியோகம் மீண்டும் தொடங்கும் என்று வாங் யி தெரிவித்து உள்ளார்.

    கடந்த மாதம் ஜெய்சங்கர் சீனாவுக்கு சென்ற போது உரம், அரியவகை கனிமங்கள் வினியோகம் தொடர்பான பிரச்சனையை வாங்யி-யிடம் எழுப்பியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர் தற்போது இந்த உறுதியை அளித்து உள்ளார்.

    தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அவரிடம் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

    சீன வெளியுறவு மந்திரி வாங் யி இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    சீனாவின் தியான்ஜின் நகரில் வருகிற 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் சீனா செல்வார் என எதிர்பாார்க்கப்படும் நிலையில், மோடி-வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்திய-சீனா எல்லை விவகாரங்கள் தொடா்பான 23-வது சுற்று பேச்சுவாா்த்தை சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. இதில் அஜித் தோவல் பங்கேற்றார். இதைத்தொடா்ந்து, தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாங் யி 24-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.

    • 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது.
    • சீனா சண்டையிட விரும்பவில்லை, ஆனால் சண்டையிட பயப்படவில்லை

    அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் வலுத்து வரும் சூழலில் சீனா இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

    நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

    பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான 'உலகின் அரிய மண் தாது'க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. தனது உற்பத்திக்கு அமெரிக்கா சீனாவையே அதிகம் சார்ந்துள்ளது.

    இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் உருவாகி உள்ளது. 

    மேலும் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது. மேலும் விமானம் தொடர்பான எந்த கருவிகளையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டாம் எனவும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சீன இறக்குமதிக்கான வரியை ஏற்கனவே விதித்த 145 சதவீதத்தில் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அரசுக் குறிப்பில், "சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளின் விளைவாக அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இப்போது 245% வரை வரி விதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக "சீனா சண்டையிட விரும்பவில்லை, ஆனால் சண்டையிட பயப்படவில்லை" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பொருட்களை தயாரிக்க தேவியான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட பலவேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.

    இதற்கு மற்ற நாடுகள் பணிந்த நிலையில் வல்லரசான சீனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருவரும் மாற்றி மாற்றி வரியை உயர்த்தி வருகின்றனர். சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியும், அமெரிக்க பொருட்கள் மீது சீனா 125 சதவீத வரியும் விதிப்பதாக அறிவித்தன.

    இந்நிலையில் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி உள்ளது.

    இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே கார்கள் முதல் மிசைல்கள் வரை தயாரிக்க தேவியான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நியூ யார்க் டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது.

    சீனா வகுத்து வரும் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் ராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைப்படும் என்று கூறப்படுகிறது.

    பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான 'உலகின் அரிய மண் தாது'க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்த சீனா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது. அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.
    • குமரியில் ஒரே மாதத்தில் 109 வாகனங்கள் பறிமுதல் ரூ.42 லட்சம் அபராதம் வசூல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் விதிமுறை மீறி கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.

    31-ந்தேதி வரை தனி தாசில்தார்கள் தலைமை யிலான 7 சிறப்பு குழுவினரால் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை மேற் கொள்ளப்பட்டது. மொத்தம் 273 வாகனங்களை சோதனை செய்ததில் 29 கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக கனிமங்கள் ஏற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதால் அவை கைப்பற்றப்பட்டு நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் இருந்து அபராத நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.

    கனிமவளத்துறை துணை இயக்குநர் தலைமையிலான மதுரை மண்டல பறக்கும் படையினர் மே 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கனிமங்கள் ஏற்றி சென்ற 195 வாகனங்களை சோதனை செய்ததில் 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்களி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுத்து சென்ற 9 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு தொடர்புடைய நபர்கள் மீது தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக கனிமங்கள் எடுத்து சென்ற 27 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அந்த வகையில் மாவட் டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் காவல் துறை வாயிலாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.10 லட்சத்து 47 ஆயிரத்து 710-ம், மதுரை மண்டல பறக்கும் படை வாயிலாக 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.17 லட்சத்து 41 ஆயிரம், தனி தாசில்தார்கள் தலைமையிலான சிறப்பு குழு வாயிலாக 29 வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.14 லட்சத்து 17 ஆயிரம் என்று மொத்தம் ரூ.42 லட்சத்து 5 ஆயிரத்து 710 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    • டிரைவர் வாகனம் ஓட்டும்போது அயர்ந்து தூங்கியதால் விபத்து நடைபெற்றது.
    • இரவு பகலாக குவாரிகள் இயங்குவதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    கடையம்:

    அம்பை, தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவருமான ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கனிம வளங்கள்

    கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு 24 மணி நேரமும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு, பகலாக தூங்காமல் கனரக வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி தென் மாவட்டங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் களக்காட்டில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    இதேபோன்று தென்காசி மாவட்டம் திரவியநகர் அருகே டிரைவர் வாகனம் ஓட்டும்போது அயர்ந்து தூங்கியதால் அங்கேயும் ஒரு விபத்து நடைபெற்றது.

    இது போன்று குற்றா லத்தில் பள்ளி செல்லும் சிறுவன் மீது வாகனம் ஏற்றி விபத்துக் குள்ளானதால் அந்த சிறுவன் நடக்க முடியாத நிலையில் இருக்கிறான். அதேபோன்று இலஞ்சியிலும் ஒரு வாகன விபத்தும் நடைபெற்றது.

    இது போன்று தொழிலாளர் நல சட்டங்களுக்கு விரோதமாக இரவு, பகல் கனிம வளங்களை கொண்டு செல்லலாம் என்று உத்தரவிட்டிருப்பது சாலையில் செல்லும் பாத சாரிகளுக்கும், வாகனத்தில் செல்பவர்களுக்கும் இந்த வாகனங்களால் விபத்து ஏற்படுகிற ஒரு சூழ்நிலை இருக்கின்றது.

    திரும்ப பெற வேண்டும்

    இரவு பகலாக குவாரிகள் இயங்குவதால் அங்கே நிலச்சரிவு ஏற்படுகிற ஒரு வாய்ப்பு இருக்கிறது.

    எனவே தொழிலாளர் நல சட்டத்திற்கு விரோதமாக இரவு- பகலாக குவாரிகள் இயங்குவதை பொது மக்களின் நலன் கருதி உடனடியாக அதை அரசு திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு
    • மேற்படி விதிமுறைகள் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மோட்டார் வாகன சட்டம் துணை விதி (1) விதி 370 தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டவிதி 1989-ன் படி போக்குவரத்து ஆணையர் ஒப்புதல் பெறப்பட்டுள்ள தன் அடிப்படையில் எல்லையோர மாவட்டங்க ளான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து கனிமங்கள் ஏற்றி வரும் 10 சக்கரங்களுக்கு (28,000 கிலோ) மேற்பட்ட கனரக வாகனங்கள் குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் 10 சக்கரங்களுக்குட்பட்ட கனரக வாகனங்களில் கனிமங்கள் கொண்டு வரும் வாகனங்கள் கீழ்கண்ட வழித்தடத்தில் மட்டுமே சென்றுவர அனுமதிக்கப்படு கிறது. ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், துவரங்காடு, களியங்காடு வழியாக கேரள மாநிலம் செல்வதற்கு (அல்லது) வெள்ளமடம், காவல்கிணறு, ஆரல்வாய்மொழி, தோவாளை, அப்டா மார்க்கெட், புத்தேரி, இறச்சகுளம், களியங்காடு செல்வதற்கு அனுமதிக்கப்ப டுகிறது. மேற்படி விதிமுறைகள் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதிக எடை கொண்ட வாகனங்களின் போக்குவரத்தால் சாலைகள் பாதிப்படைவதையும், பொதுமக்கள் நலன்கருதியும் இந்த விதிமுறைகள் நடைமுறை படுத்தப்படுகி றது. இந்த விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாறை துகள்கள் பயிர்கள் மீது படிந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
    • கல்குவாரியால் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி, வறட்சி நிலைக்கு சென்று விட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள குறிச்சாம்பட்டி கரையாளனூர் கிராமத்தில் கிணற்று பாசனங்கள் மூலம் விவசாய பணிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் ராட்சத எந்திரம் மூலம் கல் அரவை மேற்கொள்ளப்படுவதாகவும், அதனால் அங்கிருந்து வரும் பாறை துகள்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும், பயிர்கள் மீதும் படிந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஏமையா, திரவியம் உள்ளிட்ட விவசாயிகள் கூறும் போது, கல் அரவை பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து வரும் பாறை துகள்கள் எங்களது பயிர்கள் மீது படிந்து அவற்றை கருக செய்கிறது. இதுகுறித்து நாங்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. மேலும் இந்த கல்குவாரியால் வேளாண்மைக்கு பயன்படுத்தி வரும் எங்கள் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி, வறட்சி நிலைக்கு சென்று விட்டது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த கல்குவாரியால் கரையாளனூர் பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×