என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinese foreign minister"

    • சீனா​வின் தியான்​ஜின் நகரில் வருகிற 31, செப்​டம்​பர் 1 ஆகிய தேதி​களில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் வரு​டாந்​திர உச்சி மாநாடு நடை​பெறவுள்​ளது.
    • தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாங் யி 24-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.

    சீன வெளியுறவு மந்திரி வாங் யி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். அவரை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றனர்.

    பின்னர் சீன வெளியுறவு மந்திரி வாங் யி மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறக்கூடாது. அனைத்து வடிவங்களிலும் வரும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்பது இரு நாடுகளின் முக்கிய முன்னுரிமையாகும். எங்களின் பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் இடையே நிலையான கூட்டுறவும், எதிர்கால நல்லுறவும் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு உரம், அரிய வகை கனிமங்கள், சுரங்கபாதை எந்திரங்களை வழங்க சீனா தயாராக இருப்பதாக ஜெய்சங்கரிடம் அவர் உறுதியளித்தார். இது தொடர்பான வினியோகம் மீண்டும் தொடங்கும் என்று வாங் யி தெரிவித்து உள்ளார்.

    கடந்த மாதம் ஜெய்சங்கர் சீனாவுக்கு சென்ற போது உரம், அரியவகை கனிமங்கள் வினியோகம் தொடர்பான பிரச்சனையை வாங்யி-யிடம் எழுப்பியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர் தற்போது இந்த உறுதியை அளித்து உள்ளார்.

    தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அவரிடம் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

    சீன வெளியுறவு மந்திரி வாங் யி இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    சீனாவின் தியான்ஜின் நகரில் வருகிற 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் சீனா செல்வார் என எதிர்பாார்க்கப்படும் நிலையில், மோடி-வாங் யி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்திய-சீனா எல்லை விவகாரங்கள் தொடா்பான 23-வது சுற்று பேச்சுவாா்த்தை சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. இதில் அஜித் தோவல் பங்கேற்றார். இதைத்தொடா்ந்து, தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வாங் யி 24-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார்.
    • சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை ஆகியோரை சந்திக்க உள்ளார்.

    புதுடெல்லி:

    சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மத்திய மந்திரிகள் ஜெய்சங்கர், ராஜ்நாத் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. அங்கு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதினை ஆகியோரை சந்திக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், சீன வெளியுறவு மந்திரி வாங் யீ அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

    அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைச் சந்தித்து எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சு நடத்துகிறார். பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் அவர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிக்கிமின் நாது லா கணவாய், உத்தராகண்டின் லிபுலெ கணவாய், இமாசல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக வர்த்தம் தொடர்பாக சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • போர் நிறுத்தம் குறித்து பேச முன் வருவதாக அறிவித்தது
    • இறையாண்மையை காக்கும் உரிமை ஓவ்வொரு நாட்டிற்கும் உள்ளது என தெரிவித்தார்

    இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேலை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஆதரிக்கின்றன. பாலஸ்தீன பொதுமக்களுக்காக ஹமாஸ் போராடுவதாக கூறி ஈரான், கத்தார், ஜோர்டான், ஏமன் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.

    இப்பிரச்சனையில் நீண்ட நாட்களாக எந்த கருத்தும் கூறாமலிருந்து வந்தது சீனா. பிறகு கடந்த வாரம் "உடனடி போர் நிறுத்தம் தேவை" என வலியுறுத்தியது. மேலும், எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகளுடன் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து பேச முன் வருவதாகவும் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினரை குறித்து கண்டனமோ, ஆதரவோ அதன் அறிக்கையில் இடம் பெறவில்லை.

    தங்களை ஆதரிக்காத சீனாவின் நிலைப்பாட்டை இஸ்ரேல் விமர்சித்தது. சீனா சரியான முடிவை எடுக்கும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்து வந்தது.

    இதற்கிடையே, நாளை மறுநாள், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வேங் யி (Wang Yi), 3 நாள் நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லவிருக்கிறார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நலிவடைந்ததால், சீனாவிற்கு பெருமளவு வர்த்தக இழப்பு ஏற்பட்டது. அது மட்டுமின்றி தற்போது அதிநவீன தொழில்நுட்ப துறையில் சீனாவின் வளர்ச்சிக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்து வருவதால், சீனா, அமெரிக்காவுடன் சுமூக உறவுக்கு முயன்று வருகிறது.

    இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்க் யி, "சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு ஒவ்வொரு நாடும் தன் சுயபாதுகாப்பிற்காகவும் இறையாண்மையை காக்கவும் எந்த நடவடிக்கை எடுக்கவும் முழு உரிமை உள்ளது" என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹனிடம் (Eli Cohen) தான் தொலைபேசியில் தெரிவித்துள்ளதாக அறிவித்தார்.

    சீனாவின் ஆரம்ப நிலைப்பாட்டுடன் தற்போதைய இந்த கருத்தை ஒப்பிடும் அரசியல் விமர்சகர்கள், இது பெருமளவு இஸ்ரேல் ஆதரவு நிலையென்றும், இதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×