search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனா"

    • குழந்தையின் பின்புறம் வால் இருக்கும் வீடியோவை மருத்துவர் லி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்
    • குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தனர்

    சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10 செ.மீ அளவில் வால் இருந்ததால் மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

    Tethered Spinal Cord என சொல்லப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் எனவும், இதில் எவ்வித அசைவும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    குழந்தையின் பின்புறம் வால் இருக்கும் வீடியோவை மருத்துவர் லி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

    குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்து உள்ளதால், அறுவை சிகிக்சை செய்து வாலை அகற்றினால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும், எனவே வாலை நீக்க முடியாது என மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

    இதற்கு முன்னதாக, கயானா நாட்டில், கடந்த வருடம் ஜூன் மாதம் பிறந்த ஒரு குழந்தைக்கு வால் இருந்துள்ளது. பிறந்து 10 நாட்களே ஆன அந்த குழந்தையின் வாலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறப்பு ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில் அந்த கப்பலை உருவாக்க பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் உதவியுள்ளது.
    • சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்தியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கடற்படையில் முதல் உளவு கப்பல் சேர்க்கப்படுகிறது. இதற்காக பாகிஸ்தானுக்கு சீனா உதவிகளை வழங்கியுள்ளது.

    பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீ நீளமுள்ள இந்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணிப்பது, உளவுத் துறையின் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ளும் திறனை கொண்டதாகும்.

    சிறப்பு ஆராய்ச்சி கப்பல் என்ற பெயரில் அந்த கப்பலை உருவாக்க பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் உதவியுள்ளது.


    நவீன வசதிகள் கொண்ட இதுபோன்ற, கப்பல்களை அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய ஒரு சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. தற்போது பாகிஸ்தானுக்கு அந்த கப்பலை சீனா வழங்கி உள்ளது.

    ஏற்கனவே சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்தியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில் மாலத்தீவுக்கு சீனாவின் உளவுக்கப்பல் வந்து சென்றுள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல் சுற்றி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு கப்பலை வழங்கி சீனா உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உலகின் நீளமான இரட்டை சுரங்கப்பாதையும் அடங்கும்.
    • இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் நிலைமையை சீர்குலைக்கும்.

    பீஜிங்:

    இந்தியாவின் அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே பிரதமர் மோடி கடந்த 9-ந்தேதி அருணாசலபிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் உலகின் நீளமான இரட்டை சுரங்கப்பாதையும் அடங்கும். இந்த நிலையில் பிரதமர் மோடியின் அருணாசலபிரதேச பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங்வென் பின் கூறியதாவது:-

    சாங்னான் பகுதி (அருணாசல பிரதேசத்தை குறிப்பிடுகிறது) சீனப் பகுதி. அதை இந்தியா, அருணாசலப்பிரதேசம் என்று அழைப்பதை சீன அரசு ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை, அதை உறுதியாக எதிர்க்கிறது. அப்பகுதியை தன்னிச்சையாக மேம்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை.

    இந்தியாவின் நடவடிக்கைகள் எல்லைப் பிரச்சினையை சிக்கலாக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் நிலைமையை சீர்குலைக்கும். சீனா-இந்திய எல்லையின் கிழக்குப் பகுதிக்கு மோடியின் வருகையை சீனா கடுமையாகக் கண்டிக்கிறது. அதை உறுதியாக எதிர்க்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பலர் தீ மற்றும் புகை மூட்டதில் சிக்கி கொண்டனர்.
    • மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    சீனாவின் கிழக்கில் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

    வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். ஆனால் பலர் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி கொண்டனர்.

    இந்த தீ விபத்தில் 15 பேர் பலியானார்கள். 44 பேர் காயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது என தெரிய வந்தது.

    • ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு.
    • வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

    சீனாவுக்கு அலுவல் பூர்வ பயணம் மேற்கொள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. வங்காளதேசத்தில் புதிய அரசு அமைந்துள்ளதை அடுத்து, அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    "நாங்கள் பயணத்திற்கு ஏற்ற வகையில், சரியான நேரத்தை தேர்வு செய்கிறோம்," என்று வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி ஹசன் மஹ்மூத் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

    பிரதமரின் பீஜிங் சுற்றுப் பயணத்திற்கு ஏற்ற நேரம் ஒதுக்கி, பயணத்திற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னதாக 2019-ம் ஆண்டு அலுவல்பூர்வ பயணமாக சீனா சென்றிருந்தார்.

    • 2011ல் சுனாமி தாக்குதலால்புகுஷிமா அணு உலை நிலையத்தில் கடல்நீர் புகுந்தது
    • ஜப்பானை மையமாக கொண்ட SK-II, சீனாவில் விற்பனை செய்து வருகிறது

    2020 கோவிட் பெருந்தொற்று காலத்தில் மந்தமடைய தொடங்கிய உலக பொருளாதாரம், சில வருடங்கள் சீரடைந்து, மீண்டும் நலிவடைய தொடங்கி விட்டது.

    உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் சீன பொருளாதாரமும் இதற்கு தப்பவில்லை. விலைவாசி அதிகரிப்பால் அந்நாட்டில் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதையும், தம்பதிகள் குழந்தைகள் பெற்று கொள்வதையும் தள்ளி போடுகினறனர் எனும் தகவல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    2011ல் பெரும் சுனாமி தாக்குதலால் ஜப்பானில் புகுஷிமா அணு உலை நிலையம் பாதிப்புக்குள்ளானது.

    இதனையடுத்து அங்கிருந்து கதிரியக்க பாதிப்பிற்கு உள்ளான நீரை, கடலில் வெளியேற்ற ஜப்பான் முடிவு செய்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி நீரை வெளியேற்றுவதாக ஜப்பான் கூறியது.


    2023 ஆகஸ்ட் மாதம், சீனாவின் எதிர்ப்பை புறக்கணித்து ஜப்பான் நீரை கடலில் வெளியேற்றியது.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சீனா, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவு வகைகளுக்கு தடை விதித்தது.

    ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் பல பொருட்களை சீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பயன்படுத்த மறுக்கின்றனர்.

    உலகின் முன்னணி பன்னாட்டு நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் அமெரிக்காவின் பிராக்டர் அண்ட் கேம்பிள் (Procter & Gamble).

    ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும், அதன் துணை நிறுவனம், எஸ்கே-II (SK-II).

    எஸ்கே-II, சீனா உட்பட பல உலக நாடுகளில், உயர்ரக தோல் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்கிறது.

    இந்நிலையில், சீனாவில் இதன் விற்பனை கடுமையாக சரிந்து விட்டது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2023 அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் வரையிலான விற்பனை 34 சதவீதம் சரிந்து விட்டது.

    பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் வரும் ஆண்டிற்கான நிகர லாபம் குறைவாகவே இருக்கும் என தெரிகின்றது.

    வரும் மாதங்களில் "ஜப்பான் புறக்கணிப்பு" தொடர்ந்தால், உலக பொருளாதாரம் மேலும் மந்தமடையலாம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    • பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • 12,426 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    சீனா மற்றும் கிர்கிஸ்தான் எல்லை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். நிலநடுக்கம் காரணமாக 12 ஆயிரத்து 426 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    முன்னதாக கசகஸ்தான் சுகாதார துறை வெளியிட்ட தகவல்களில் பலத்த காயமுற்ற 44 பேர் உதவி கோரியதாக தெரிவித்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள், வீடியோக்களில் மக்கள் அச்சத்தில் அலறிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    நிலநடுக்கம் காரணமாக சீனாவில் 47 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 78 கட்டடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    • சுரங்கத்தில் மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
    • 380 பேர் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்.

    மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் மாயமாகியுள்ளனர்.

    நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 

    விபத்து நடந்தபோது மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களில் 380 பேர் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.

    இன்னும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நிலக்கரி சுரங்கத்திற்கு பொறுப்பானவர்கள் பொது பாதுகாப்பு அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சீனாவில் சுரங்க விபத்துகள் சகஜம் என்றாலும், சமீப ஆண்டுகளில் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

    • சீனா அரசின் தொழில்துறையின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க நிதி ஒரு முக்கியம் காரணம்.
    • பி.ஒய்.டி-ன் வளர்ச்சிக்கு அதன் அடிப்படை வணிகமான பேட்டரிகள் காரணமாக இருக்கலாம்.

    சீனாவின் பி.ஒய்.டி, முதல் முறையாக உலகின் சிறந்த மின்சார-வாகன உற்பத்தியாளரான எலோன் மஸ்க்கின் டெஸ்லாவை முந்தி முதலிடத்தை பிடித்தது.

    சீனாவை சார்ந்த பி.ஒய்.டி நிறுவனம் முதல் முறையாக உலகின் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகன உற்பத்தியாளரான எலோன் மஸ்கின் டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு சீனா அரசின் தொழில்துறையின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க நிதி ஒரு முக்கியம் காரணம். 

    கடந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்கா குழுமம் 4,84,000 வாகனங்களை வழங்கியுள்ளது, ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ள 473,000 வாகனங்களை விட அதிகமாக இருந்தது. ஆனாலும் பி.ஒய்.டி அதே நேரத்தில் 5,26,000 பேட்டரி வாகன விற்பனையை பதிவு செய்து முதலிடத்தை தக்கவைக்க கொண்டது.

    டெஸ்லா 1.8 மில்லியன் ஆட்டோமொபைல்களை விற்றது. பி.ஒய்.டி 1.58 மில்லியன் மின்சார வாகனங்களை வழங்கியது. இந்த சாதனையானது, மின்சார வாகனத் துறையை மேம்படுத்த உதவுவதில் நிறுவனம் கொண்ட முயற்சி. பி.ஒய்.டி நிறுவனம், நுகர்வோரை சீனாவின் குறைந்த விலை மின்சார வாகனங்களை வாங்க தூண்டியது. 

    நிருபர்களின் கூற்றுப்படி, பி.ஒய்.டி-ன் வளர்ச்சிக்கு அதன் அடிப்படை வணிகமான பேட்டரிகள் காரணமாக இருக்கலாம். அவை மின்சார வாகனத்தின் மிகவும் விலையுயர்ந்த கூறுகளில் ஒன்று. பி.ஒய்.டி-ன் போட்டியாளர்கள் பலர் மூன்றாம் தரப்பு பேட்டரி தயாரிப்பாளர்களை சார்ந்துள்ளனர்.

    ஆனால் பி.ஒய்.டி நிறுவனம் தானே பேட்டரி தயாரிப்பதால் இந்த சாதனை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

    • பிரதமருக்கு எதிரான கருத்துக்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு.
    • மந்திரிகள் மூவரை இடைநீக்கம் செய்வதாக மாலத்தீவு தெரிவித்தது.

    பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு மந்திரிகள் அவதூறு கருத்துக்களை தெரிவித்த சம்பவம் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவில் கசப்பான பக்கங்களாக பதிவாகி உள்ளன. பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மாலத்தீவு மந்திரிகள் மூவரை இடைநீக்கம் செய்வதாக மாலத்தீவு தெரிவித்தது.

    இதனிடையே மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஐந்து நாட்கள் பயணமாக சீனாவுக்கு சென்றிருக்கிறார். இந்த பயணத்தின் போது, மாலத்தீவு மற்றும் சீனா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் அதிபர் முய்சு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார்.

     


    அப்போது பேசிய அவர், "மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை அனுப்ப சீனா முயற்சி எடுக்க வேண்டும். மாலத்தீவின் வளர்ச்சியில் மிக நெருங்கிய நட்பு நாடாக சீனா விளங்குகிறது."

    "மாலத்தீவு வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு திட்டங்களை சீனா தொடங்கியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன் எங்களின் முதன்மை வணிக மையமாக சீனா இருந்தது. இதே நிலை மீண்டும் உருவாக வேண்டும் என விரும்புகிறேன்," என்று தெரிவித்தார். 

    • இந்திய திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் விடுமுறையை கழிக்க அங்கு சென்றனர்
    • சீன பயணத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது

    தெற்கு ஆசியாவில், இந்திய கடலில் உள்ள தீவு நாடு, மாலத்தீவு (Maldives). சொகுசு ஓட்டல்களும் சுற்றுலா விடுதிகளும் நிறைந்த சுமார் 1,192 சிறு தீவுகள் இங்குள்ளன. இந்நாட்டின் வருவாயில் பெரும்பகுதி இந்திய சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.

    இந்திய கிரிக்கெட் மற்றும் திரை பிரபலங்கள் விடுமுறையை கழிக்க, அங்கு சென்று இயற்கை காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

    உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளும், தேனிலவு கொண்டாடுவோர்களும் மாலத்தீவிற்கு குவிகின்றனர்.

    அரசியல் ரீதியாக இந்திய-மாலத்தீவு உறவு நீண்ட காலமாக சுமூகமாக இருந்தது.

    கடந்த 2023ல், அங்கு நடந்த தேர்தலில் அப்போதய அதிபர் இப்ராஹிம் மொஹமத் தோல்வியடைந்து, எதிர்கட்சியை சேர்ந்த முகமத் முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தற்போது 45 வயதாகும் முய்சு, சீன நட்புறவை விரும்புபவர். பதவியேற்றதும் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தின் சிறு குழுவை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டார்.

    சில தினங்களுக்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்று அங்குள்ள இயற்கை காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். இப்பதிவுகளுக்கு எதிராக மாலத்தீவின் 3 அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.

    இந்தியா முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து அந்த மூவரையும் முய்சு இடைநீக்கம் செய்ய வேண்டி வந்தது.

    இந்நிலையில் நேற்று, அதிபர் முய்சு, தனது மனைவி சஜிதா மொஹமத் உடன் சீனாவிற்கு 5-நாள் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

    இந்திய உறவிலிருந்து விலக்கி, மாலத்தீவை தனது மறைமுக கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்பும் சீனாவின் முயற்சியாக இவையனத்தும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    • ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
    • புத்தாண்டடை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு உரை.

    உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    கிரிபேட்டியை தொடர்ந்து முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2024வது ஆண்டில் ஆங்கில புத்தாண்டு இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு பிறந்தது.

    கிரிபேட்டி, நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    வாண வேடிக்கையுடன் ஆஸ்திரேலிய மக்கள் புத்தாண்டை வரவேற்று, பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

    இந்நிலையில், சீனா, வட மற்றும தென் கொரியாவில் இந்திய நேரப்படி சரியாக 8.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    புத்தாண்டடை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு உரை நிகழ்த்தினார்.

    ஜி ஜின் பிங் தனது உரையில், " பிரதமர் தைவானுடன் மீண்டும் ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×