என் மலர்
நீங்கள் தேடியது "national security"
- 'ஆப்பிள் டெய்லி' பத்திரிகை, ஹாங்காங் மற்றும் சீன அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தது.
- ஜிம்மி லாயுடன் பணியாற்றிய மற்ற 6 பத்திரிகையாளர்களுக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலனியாதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
அன்று முதல் ஹாங்காங் சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக உள்ளது. இருப்பினும் அங்கு ஜனநாயகத்துக்கு எதிரான குரல்களை சீனா தொடர்ந்து ஒடுக்கி வருகிறது.
இந்நிலையில் ஹாங்காங்கின் பிரபல ஊடக தொழிலதிபர் ஜிம்மி லாய்க்கு தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஜிம்மி லாய் தொடங்கிய 'ஆப்பிள் டெய்லி' பத்திரிகை, ஹாங்காங் மற்றும் சீன அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தது.
2021-ல் அரசின் அழுத்தங்கள், சொத்துக்கள் முடக்கம் மற்றும் ரெய்டுகள் காரணமாக இந்தப் பத்திரிகை மூடப்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து சதி செய்தல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிடும் வகையில் கட்டுரைகளை வெளியிட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் நீடித்தன.
இந்நிலையில் ஏற்கனவே மோசடி வழக்கில் ஜிம்மி லாய் 5 ஆண்டு 9 மாத தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேலும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜிம்மி லாயுடன் பணியாற்றிய மற்ற 6 பத்திரிகையாளர்களுக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது.
அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
2020 ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜிம்மி லாய்க்கு தற்போது 78 வயது ஆவதால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 20 ஆண்டு தண்டனை ஆயுள் தண்டனைக்கு சமமாகும்.
தாம் சீனாவின் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஓர் அரசியல் கைதி என்று லாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பெரும்பாலும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜிம்மி லாய் உடல்நிலை மோசமாக உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
- நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோனை நடத்துகிறார்.
- பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் தொடங்கியது.
டெல்லி கார் வெடிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோனை நடத்துகிறார்.
முன்னதாக, டெல்லியில் கார் வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
2 நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமைதி உடன்படிக்கை கால கட்டத்தில் கூட, பல முனைகளில் போர் தொடர்கிறது.
- போர் மற்றும் அமைதி என்பது இனியும் இரண்டு தனித்தனி அம்சமாக இருக்க முடியாது.
முசோரி:
உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகவியல் கழகத்தில் நடைபெற்ற 28 வது சிவில் - ராணுவ கூட்டுப்பயிற்சி திட்டத்தை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தேச பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், வருங்கால சவால்களை எதிர்கொள்ளவும் நிர்வாகம், ராணுவம் மேலும் இணைந்து செயல்படுவது அவசியம்.
ராணுவ தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து கொள்வதில், ராணுவம் அல்லாத பல பரிணாமங்கள் இடம் பெற்றுள்ளதால், தேசபாதுகாப்பு என்பது பரந்து விரிந்ததாக மாறியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் நிலவரம் மற்றும் அதேபோன்ற பிற மோதல்கள், வழக்கமான போர் முறைகளிலிருந்து மாறுபட்டு இருப்பதை உலகம் கண்கூடாக காண்கிறது. போர் மற்றும் அமைதி என்பது இனியும் இரண்டு தனித்தனி அம்சமாக இருக்க முடியாது. அமைதி உடன்படிக்கை காலகட்டத்தில் கூட, பல முனைகளில் போர் தொடர்கிறது.
கடந்த சில தசாப்தங்களாக முழு அளவிலான போர் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக மறைமுக மற்றும் தாக்குதல்கள் இல்லா யுத்தங்கள் நடத்தப்படுகின்றன.
தொழில்நுட்பம், வினியோக சங்கிலி, தகவல், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் நிதி நடைமுறைகள் போன்றவை ஆயுதமாக்கப் படுகின்றன.
இத்தகைய ஆயுதம் வரும் காலங்களில் நமக்கு எதிராக பயன்படுத்தப்படக் கூடும். எனவே, இதுபோன்ற பரந்து விரியும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






