என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union cabinet meeting"

    • நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோனை நடத்துகிறார்.
    • பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் தொடங்கியது.

    டெல்லி கார் வெடிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

    இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோனை நடத்துகிறார்.

    முன்னதாக, டெல்லியில் கார் வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    2 நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி, நேரடியாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
    • கார் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

    டெல்லியில் நாளை மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பூடானில் இருந்து நாளை புறப்படும் பிரதமர் மோடி, நேரடியாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

    நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கார் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

    • பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
    • இது வரி முறையில் வெளிப்படைத்தன்மையையும் எளிமையையும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

    கடந்த பிப்ரவரி 13 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது.

    டெல்லியில் இன்று, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மசோதா திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் நேரடி வரி கட்டமைப்பின் அடிப்படையாக இருந்து வரும் 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தை மாற்றும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.

    இந்நிலையில் பைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கி, இந்த மசோதாவின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த புதிய பதிப்பு வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய மசோதா ஆகஸ்ட் 11 ஆம் தேதி மக்களவையில் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும். இது வரி முறையில் வெளிப்படைத்தன்மையையும் எளிமையையும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.  

    • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
    • பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்து அதானி லஞ்ச விவகாரத்தை எழுப்பி, தினமும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

    மேலும் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.

    பாராளுமன்றத்தில் அவைத்தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், காங்கிரஸ்-ஜார்ஜ் சோரோஸ் விவகாரம் தொடர்பாக நேற்று ஏற்பட்ட அமளியால் மாநிலங்களவை கூட்டம் நாள்முழுவதும் ஒத்துவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 1 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அரசின் சில முக்கிய திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளன.
    • மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளன.

    இதுதொடர்பான மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாடாளுமன்றத்ததில் தாக்கலான பின்னர், விரிவான ஆலோசனைக்காக நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் பரிசீலனைக்காக அனுப்பப்படும்.

    மக்களவை, மாநில சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2029 முதல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
    புதுடெல்லி:

    ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றியை உறுதி செய்கிறது. இதனால், மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.



    பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. தற்போதைய மக்களவையின் பதவிகாலம் முடிந்து, புதிய மக்களவை தொடங்குவதோடு, பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளதால் அதையொட்டி, இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க பரிந்துரை விடுக்கப்படும். கேபினட் பரிந்துரையை தொடர்ந்து, தீர்மானமாக ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். இதையடுத்து, ஜனாதிபதி 16-வது மக்களவையை கலைத்து உத்தரவு பிறப்பிப்பார்.

    17-வது மக்களவை அதாவது புதிய அரசு அடுத்த மாதம் 3 ஆம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும். தேர்தல் ஆணையர்கள் ஜனாதிபதியை சந்தித்து, புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அளித்த பிறகு புதிய அரசை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் துவங்கும். 
    ×