என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி கார் வெடிப்பு"
- சாஹிப் என்பவனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
- தற்கொலை படை தாக்குதலை உமர் நபி மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு வரை கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி அன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணை மேற்கொண்டு வருகிறது. கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 6 பேரை கைது செய்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று மேலும் ஒருவனை கைது செய்தனர்.
தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபிக்கு தங்குவதற்கு இடம் கொடுத்ததாக அரியானா மாநிலம் ஃபரிதாபத்தை சேர்ந்த சாஹிப் என்பவனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தற்கொலை படை தாக்குதலை உமர் நபி மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு வரை கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்ததை தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
- 25 இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடைபெறுகிறது.
- சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து தலைநகரம் முழுவதும் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாக்குதல் தொடர்பாக சிக்கிய மருத்துவர்கள் வேலை பார்த்த அரியானா அல்ஃபாலா பல்கலை தலைமை அலுவலகம் உள்ளிட்ட 25 இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடைபெறுகிறது.
டெல்லி தாக்குதல் தொடர்பாக நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- இந்த சம்பவத்தில் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி அன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. பலர் காயம் அடைந்தனர்.
இது சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என என்ஐஏ நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தில் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட காரை அவருக்கு வாங்கி கொடுத்ததாக காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் உமர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், தற்கொலை படை தாக்குதலை சிலர் தவறாக பேசுகிறார்கள், உண்மையில் அது தியாக நடவடிக்கை என உமர் பேசியுள்ளான்.
- ஒன்றை மருந்து கடை உரிமையாளரிடம் சார்ஜ் போட கொடுக்கிறார்.
- 65-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் அவருடைய நடமாட்டம் பதிவாகி இருந்தது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் முகமது நடமாட்டம் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.
இதனை தொடர்ந்து அவர் கடைசி 36 மணி நேரங்களில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்த தகவல்களை போலீசார் மற்றும் புலனாய்வுத்துறையினர் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு அரியானாவில் உள்ள ஒரு கேமராவில் உமர் முகமதுவின் நடமாட்டம் பதிவாகியிருந்தது.
அவர் பணியாற்றிய பல்கலைக்கழகத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மருந்து கடையில் உமர் முகமது 2 செல்போன்களை கைகளில் வைத்துள்ளார். ஒன்றை மருந்து கடை உரிமையாளரிடம் சார்ஜ் போட கொடுக்கிறார். மற்றொன்று கையில் வைத்துள்ளார்.
இந்த காட்சிகளை தொடர்ந்து அவருடைய நடமாட்டங்களை கண்காணிப்பு கேமரா மூலம் சேகரித்தனர். 65-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் அவருடைய நடமாட்டம் பதிவாகி இருந்தது.
குண்டுவெடிப்புக்கு முன்பு அவர் 3 மணி நேரத்திற்கு மேலாக செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் தங்கி உள்ளார். அதில் அவர் பயன்படுத்திய செல்போன்கள் எதுவும் கையில் இல்லை.
மேலும் அங்குள்ள மசூதிக்குள் சென்று முகமூடியை கழற்றி விட்டு தனியாக 15 நிமிடங்கள் இருந்துள்ளார்.
அப்போதும் அவர் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. அவர் கையில் வேறு எதையும் வைத்திருக்கவில்லை. இதன் மூலம் தாக்குதலுக்கு முன்பு உமர் முகமது தான் பயன்படுத்திய 2 செல்போன்களையும் வேறு யாரிடமாவது கொடுத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அவருடைய நெருங்கிய கூட்டாளியான டாக்டர் முசம்மில் ஷகீல் கனாய் கைது செய்யப்பட்ட அதே நாளில் தன்னுடைய செல்போன் எண்கள் இரண்டையும் உமர் முகமது செயலழிக்க வைத்துள்ளார்.
அதற்கு பிறகு அவர் புதிய சிம்கார்டுகளை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
உமர் முகமது ஒரு செல்போனை தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்காகவும் மற்றொன்றை தாக்குதல் பற்றிய தீவிரவாத கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொள்ள பயன்படுத்தி இருக்கலாம்.
அந்த 2 செல்போன்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த செல்போன் கண்டு பிடிக்கப்பட்டால் இந்த திட்டத்தில் உள்ள தீவிரவாத கும்பல் குறித்த தகவல்கள், உமர் முகமதுவுக்கு நிதி உதவி அளித்தவர்கள் யார் என்ற தகவல்களும் வெளிவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- டெல்லியில் நடந்ததை போல கார் வெடிப்புச் சம்பவத்தை 4 இடங்களில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து உள்ளனர்.
- குருகிராம் மற்றும் நுகு உள்ளிட்ட பகுதிகளில் இது வாங்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துபோனது. எனவே அவர்தான் காரை ஓட்டி வந்தாரா? என சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதே சமயம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளில் அவரது உருவம் கண்டறியப்பட்டு, அந்த காரில் அவர் சென்று வந்த இடங்கள் எல்லாம் ஆராயப்பட்டன. இவர்தான் வெடிப்பைச் செய்திருப்பார் என போலீசார் உறுதியாக நம்பினர். இருந்தாலும் டி.என்.ஏ. பரிசோதனையில் அதனை உறுதி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உமர் முகமது ஜம்மு காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்தவர். அங்கு அவருடைய தாயார் மற்றும் சகோதரரிடம் டி.என்.ஏ. மாதிரிகள் பெறப்பட்டன. அவை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
கார் வெடித்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட உமரின் உடல் பாகங்கள் என்று சந்தேகம் கொள்ளப்பட்ட பாகங்களுடன் மேற்கண்ட மாதிரிகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன. இந்த பரிசோதனையில் இரண்டும் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்திப்போனது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டது உமருடைய உடல் பாகங்கள்தான் என கண்டறியப்பட்டது.
இதனால் கார் வெடிப்பை நிகழ்த்தியது அவர்தான் என்பது உறுதியானது. பயங்கரவாதியாக அவர் மாறி இருக்கிறார். இதுபற்றி மேலும் விசாரணை தொடர்கிறது.
இதற்கிடையே டெல்லியில் நடந்ததை போல கார் வெடிப்புச் சம்பவத்தை 4 இடங்களில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து உள்ளனர். இதற்காக உமர் முகமது, முசமில் ஷகீல், ஷாகீத் ஷாகீன் மற்றும் அதீல் அகமது ராதர் ஆகியோர் ரூ.20 லட்சம் நிதி திரட்டி உள்ளனர். இது உமர் முகமதுவிடம் கொடுத்து வைக்கப்பட்டு உள்ளது.
இந்த பணத்தில் ரூ.3 லட்சம் மதிப்புக்கு 2 டன் அமோனியம் நைட்ரேட்டை உரக்கடைகளில் வாங்கி உள்ளனர். குருகிராம் மற்றும் நுகு உள்ளிட்ட பகுதிகளில் இது வாங்கப்பட்டு உள்ளது. பணத்தை வைத்திருப்பது தொடர்பாக உமர் அகமதுவுக்கும், முசமிலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் அமைந்துள்ள உமர் முகமதுவின் வீடு இடிக்கப்பட்டுள்ளது.
- டாக்டர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
- எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்றாக இணைந்து இதனை வேரில் இருந்து பிடுங்கி எறிய வேண்டும்.
கோவை:
பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவையில் வருகிற 19-ந் தேதி தென்னிந்திய இயற்கை விவசாய சம்மேளம் சார்பில் இயற்கை விவசாய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகிற 19-ந்தேதி பிரதமர் மோடி கோவைக்கு வருகிறார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி 5 ஆயிரம் இளம் இயற்கை விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். தென்னிந்தியாவில் பணிபுரியும் 50 இயற்கை விஞ்ஞானிகளை சந்தித்து பேசுகிறார். நாட்டு மாடுகளை ஊக்குவிக்க வேண்டும். பிரதமர் விவசாய நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்கிறார். வேறு எந்த கட்சி நிகழ்ச்சிகளும் கிடையாது.
மருத்துவர்கள் பயங்கரவாதிகளாக செயல்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் இந்திய பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் குஜராத்தில் உள்ள டாக்டர்கள் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம், அவர்கள் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் ரசாயனம் கலந்து பலரை கொல்வதற்கும் சதி திட்டம் தீட்டியுள்ளனர். டாக்டர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
மும்பையில் நடந்தது போன்று டெல்லியில் நடத்த வேண்டும் என்பதற்காக இதை செய்தோம் என தெரிவித்துள்ளனர். எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்றாக இணைந்து இதனை வேரில் இருந்து பிடுங்கி எறிய வேண்டும் என்றார்.
- இந்தியாவின் எதிரி சொத்து காப்பாளர் துறை அடையாளம் கண்டறிந்துள்ளது.
- சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடைமுறைகள் நடந்து வருகிறது.
உலக அளவில் இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் பெங்களூரு புகழ்பெற்று விளங்குகிறது. டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்க செய்த பயங்கரம் நடந்துள்ள நிலையில் பெங்களூருவில் பாகிஸ்தான், சீனா நாட்டினரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 அசையா சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சொத்துகள் எதிரி சொத்து சட்டம் 1968-ன் கீழ் எதிரி சொத்துகளாக கண்டறியப்பட்டு உள்ளன. எதிரி நாடுகளுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்த சொத்து, 'எதிரி சொத்து' என அழைக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை 1968-ம் ஆண்டு எதிரி சொத்து சட்டத்தின் கீழ் எடுக்கப்படுகிறது. தற்போது பெங்களூரு ராஜ்பவன் ரோட்டில் உள்ள இந்த சொத்துகள், எதிரி சொத்துகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதாவது கப்பன் பூங்கா அருகே ராஜ்பவன் சாலையில் வார்டு எண் 78-ல் மொத்தம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 504 சதுர அடி பரப்பளவு கொண்ட சொத்து கண்டறியப்பட்டுள்ளது.
விக்டோரியா சாலையில் சிவில் ஸ்டேசன் பகுதியில் 8 ஆயிரத்து 845 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு அசையா சொத்து உள்ளது. கலாசிபாளையம் 2-வது பிரதான சாலையில் 2 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டு மனை உள்ளது.
இந்த 4 அசையா சொத்துகளும் எதிரி சொத்துக்கள் என இந்தியாவின் எதிரி சொத்து காப்பாளர் துறை அடையாளம் கண்டறிந்துள்ளது.
பெங்களூரு மாநகர மாவட்ட நிர்வாகம் கர்நாடக அரசின் அறிவுறுத்தலின் படி சொத்துகளின் மதிப்பீட்டு பணியை முடித்துள்ளது. அதாவது அரசின் நில மதிப்பீடு, சந்தை நில மதிப்பீடு ஆகிய 2 முறைகளில் சொத்துகளின் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடைமுறைகள் நடந்து வருகிறது.
- டெல்லி கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.
- காரின் டிரைவர் சீட்டில் உமர் அமர்ந்திருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சுமார் 3 மணி நேரமாக செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹுண்டாய் ஐ20 கார் மாலை 6.48 மணியளவில் சிக்னல் அருகே மெதுவாக நகர்த்தப்பட்டு பின்னர் வெடித்து சிதறியது.
இதில், 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கார் வெடிக்கும் முன் அந்த காரின் டிரைவர் சீட்டில் உமர் அமர்ந்திருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது.
அந்த காரை ஓட்டி வந்தது காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
உமர் முகமது ஓர் பயங்கரவாதி என்பதும் அரியானாவில் வெடிகுண்டு வைத்திருந்ததாக கைதான மருத்துவர் ஷகீரின் கூட்டாளி என்பதும் அம்பலமானது.
இந்நிலையில், டெல்லி பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவத்தில், டெல்லி காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்ட வைரலான சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் உமர் உன் நபி செங்கோட்டைக்கு அருகிலுள்ள துர்க்மேன் கேட் மசூதியில் காணப்பட்டுள்ளார்.
இதன் சிசிடிவி காட்சியின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
- பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி டெல்லியில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- வெடி பொருட்களை கைப்பற்றி அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்துள்ளனர்.
புதுடெல்லி:
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட டாக்டர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த டாக்டர்களுக்கு ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் இந்த கும்பல் டெல்லியில் டிசம்பர் 6-ந்தேதி 6 இடங்களில் ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது அம்பலமாகி உள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி டெல்லியில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்க ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூர் அசாத் அழைப்பு விடுத்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி குண்டு வெடிப்பு நிகழ்த்துவதற்காக 5 கட்டங்களாக திட்டங்களை தயாரித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகியவற்றுடன் தொடர்புடைய பயங்கரவாத தொகுதி உருவாக்கம், அரியானாவில் நூஹ் மற்றும் குருகிராமில் இருந்து பெறப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை ஒன்று சேர்ப்பதற்கும், வெடி மருந்துகளை தயாரிக்க மூலப்பொருட்களை வாங்குவதற்கும் திட்டமிடுதல், ஆபத்தான ரசாயன வெடி பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் சாத்தியமான இலக்கு நிர்ணயிக்க இடங்களை உளவு பார்த்தல், இறுதியாக டெல்லியில் 6 முதல் 7 இடங்களில் ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புகளை செயல்படுத்துதல் என 5 கட்டங்களாக இந்த கும்பல் திட்டம் தீட்டி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த ஆகஸ்டு மாதத்திலேயே தாக்குதல்களை நடத்துவது இவர்களின் அசல் திட்டமாக இருந்துள்ளது. இதற்காக செங்கோட்டையை சுற்றி பார்த்து வந்துள்ளனர்.
ஆனால் தீவிர ரோந்து பணியால் அந்த சதிச்செயல் முறியடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் கும்பல் டிசம்பர் 6-ந்தேதி அன்று குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக வெடிபொருட்களை சேமித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் வெடி பொருட்களை கைப்பற்றி அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்துள்ளனர். இந்த ஆத்திரத்தில் டெல்லியில் உமர் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
- டெல்லியில் வெடிக்க வைக்கப்பட்ட காரை உமர் கடந்த 11 நாட்களுக்கு முன்புதான் வாங்கினான்.
- கடந்த மாதம் 29-ந்தேதி காரை வாங்கிய அவன் பரிதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக் கழகத்திற்குள் நிறுத்தி இருந்தான்.
டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சுமார் 3 மணி நேரமாக செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹுண்டாய் ஐ20 கார் மாலை 6.48 மணியளவில் சிக்னல் அருகே மெதுவாக நகர்த்தப்பட்டு வெடித்து சிதறியது. வெடிக்கும் முன் அந்த காரின் டிரைவர் சீட்டில் உமர் அமர்ந்திருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது.
அந்த காரை ஓட்டி வந்தது காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என்பது விசாரணையில் தெரியவந்தது. உமர் முகமது ஓர் தீவிரவாதி என்பதும் அரியானாவில் வெடிகுண்டு வைத்திருந்ததாக கைதான மருத்துவர் ஷகீரின் கூட்டாளி என்பதும் அம்பலமானது.
தீவிரவாதி உமர் முகமது ஜம்மு- காஷ்மீர் புல்வாமில் 1980-ம் ஆண்டு பிறந்துள்ளான். பரிதாபாத்தில் உள்ள அல்ஃபலா மருத்துவ கல்லூரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தான்.
ஜம்மு-காஷ்மீர் அரியானா போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளான டாக்டர் அதில்அகமது ராதர் மற்றும் டாக்டர் முஜம்மில் ஷகீல் ஆகியோரின் நெருங்கிய உதவியாளராக இருந்தான். போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து 2900 கிலோ வெடி பொருட்களை கைப்பற்றியதை அறிந்ததும் பரிதாபாத்தில் இருந்து ஒருவர் தப்பி சென்றான். 2 பேர் கைது செய்யப்பட்டதால் உமர் முகமது இந்த குண்டு வெடிப்பை நடத்த தூண்டியதாக கூறப்படுகிறது.
டெல்லியில் வெடிக்க வைக்கப்பட்ட காரை உமர் கடந்த 11 நாட்களுக்கு முன்புதான் வாங்கினான். கடந்த மாதம் 29-ந்தேதி காரை வாங்கிய அவன் பரிதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக் கழகத்திற்குள் நிறுத்தி இருந்தான். கடந்த 10-ந்தேதி வரை கார் அங்கேயேதான் நின்றது. காரை வாங்கி கொண்டு வந்த போது அந்த காரில் ஆண்கள் 3 பேர் இருந்து உள்ளனர். 10-ந்தேதி உமர் அந்த காரை ஓட்டி சென்று வெடிக்க செய்தார்.
குண்டு வெடிப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு வாகன நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தி விட்டு குண்டு வெடிக்கும் வரை காரை விட்டு கீழே இறங்காமல் காத்திருந்துள்ளான். உமர் முகமது அவனது கூட்டாளிகள் 2 பேர் வருவதற்காக அங்கே காத்திருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனால் கார் குண்டு வெடிப்பில் உமர் முகமது இறந்தாரா? அல்லது தப்பித்தாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது உமர் முகமது தான் என்று டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உமர் முகமது தாயிடம் எடுக்கப்பட்ட மாதிரியும் கார் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட காரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துபோயுள்ளது. குண்டுவெடிப்புக்குப் பிறகு, உமர் முகமது கால் ஸ்டீயரிங் மற்றும் ஆக்ஸிலேட்டருக்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
- குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
- டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி கார் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 'டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்'. அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பின் புதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 11 வினாடிகளே ஓடும் அந்த வீடியோவில் சிக்னலுக்காக வாகனங்கள் நின்று கொண்டிருக்க குண்டு வெடிப்பிற்குள்ளான காரும் நிற்கிறது. சில வினாடிகளில் வாகனங்கள் நகர தொடங்கியதும் கார் வெடிப்புக்குள்ளாகிறது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
- 2 நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் மோடி.
- ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார், காரை ஓட்டி வந்தது ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உள்ளிட்ட பல மருத்தவர்கள் சிக்கினர்.
முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக இன்று காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் கார் வெடிவிபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
2 நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
கார் வெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






