search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cctv footage"

    • வல்லநாடு மெயின் பஜாரில் லாரி வந்தபோது பக்கவாட்டு சுவரில் மோதிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
    • காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு 108 வாகனம் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு கண்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும்.

    இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சாம்பல் ஏற்றி விருதுநகரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதற்காக கண்டெய்னர் லாரி ஒன்று நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. வல்லநாடு மெயின் பஜாரில் லாரி வந்தபோது பக்கவாட்டு சுவரில் மோதிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே பஜாரில் நின்றவர்கள் காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு 108 வாகனம் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ் சாலை ரோந்து போலீசார் வல்லநாடு மெயின் பஜாரில் இருந்த தடுப்பு வேலியை ஓரமாக வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதற்கிடையில் லாரி கவிழ்ந்து விழுந்த காட்சிகள் அருகில் ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி.கேமிராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று காங்கேயத்தில் மாட்டு தீவணம் வாங்கி கொண்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பினார்.
    • கேமராவில் விபத்து சம்பவம் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 60). விவசாயியான இவர் நேற்று காங்கேயத்தில் மாட்டு தீவணம் வாங்கி கொண்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பினார்.அப்போது சிவன்மலை பகுதியில் சென்ற போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் உயிரிழந்தார்.

    இந்நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி., கேமராவில் விபத்து சம்பவம் பதிவாகி தற்போது காங்கேயம் பகுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில் ஸ்கூட்டியில் செல்லும் விவசாயி மீது பின்னால் அதிவேகத்தில் வந்த கார் மோதுவதும், பின்னர் சுமார் 100 அடி தூரத்திற்கு விவசாயியை இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.
    • 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.

    இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.திருமணம் முடிந்து வந்த போது அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அவரது வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் லாரன்ஸ் வீட்டின் உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    சிசிடிவி., காட்சிகள் அடிப்படையில் மங்கலம் போலீசார் திருடர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மர்ம நபர்கள் சொகுசு காரில் வந்து திருடி செல்லும் சிசிடிவி., காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஜெயபாண்டியன் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார்.
    • இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 35½ பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (வயது28). மீனவரான இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார்.

    35½ பவுன் கொள்ளை

    பின்னர் வந்து பார்த்த போது அவரது வீட்டின் பின்பக்க கதவை திறந்து பீரோவில் இருந்த 35½ பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.

    இது குறித்து திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    வாலிபர் கைது

    அதில் திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (32) என்பவர் ஜெயபாண்டியன் வீட்டில் நகையை திருடி சென்றதும், கடந்த மாதம் ஜெயபாண்டியன் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் பிரபாகரன் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 35½ பவுன் தங்க நகைகளை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரூபன் சென்னையில் வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்தார்.
    • சிறிது நேரத்திற்கு பிறகு சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த பணத்தை காணவில்லை.

    கயத்தாறு:

    நெல்லை மாவட்டம் மானூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரூபன்(வயது 42). இவர் மானூரில் தனியார் ஆங்கிலப்பள்ளி வைத்து நடத்தி வருகிறார். ேமலும் சென்னையில் கியாஸ் நிறுவன வினியோகஸ்தராகவும் உள்ளார்.

    ரூ.10 லட்சம்

    ரூபன் சென்னையில் வங்கியில் நகைகளை அடகு வைத்திருந்தார். அதை மீட்பதற்காக ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பணத்தை ஒரு பையில் போட்டு அதை பஸ்சில் பயணிகள் பொருட்கள் வைக்கக்கூடிய இடத்தில் ரூபன் வைத்திருந்தார்.

    அந்த பஸ் இரவு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கரிசல்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் முன் நின்றது. அதில் இருந்த ரூபன் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டலில் டீ சாப்பிட்டார். அப்போது பணம் இருந்த பைைய பஸ்சிலேயே வைத்து விட்டு வந்திருந்தார்.

    பணப்பை திருட்டு

    சிறிது நேரத்திற்கு பிறகு சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. மர்ம நபர் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


    இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பஸ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் வாங்கப்பட்டது.

    அந்த புதிய பஸ்சில் 6 சி.சி.டி.வி.காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனை போலீசார் ஆய்வு செய்து பார்த்தபோது, அதே பஸ்சில் பயணம் செய்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பணப்பையை லாவகமாக எடுத்துக்கொண்டு தப்பிச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    தனிப்படை விரைவு

    அதனைவைத்து பஸ் கண்ட்ரக்டரிடம் இருந்த பயணிகளின் முகவரியை சோதனை செய்தபோது அந்த நபரின் செல்போன் எண் கிடைத்தது. அதனை வைத்து சிக்னல் மூலமாக போலீசார் ஆய்வு செய்தபோது பணப்பையை திருடிக்கொண்டு அந்த வாலிபர் திருவாரூரை நோக்கி தப்பிச்செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை பிடிக்க அங்கு தனிப்படை விரைந்துள்ளது.


    • அய்யப்பன் ராஜபாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் பொன்விழா மைதானத்தில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றார்.
    • சி.சி.டி.வி. யில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்தபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அய்யப்பன். இவர் ராஜபாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் பொன்விழா மைதானத்தில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றார்.

    சம்பவத்தன்று சுமார் 50 வாகனங்களை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அதில் ஒரு மோட்டார் சைக்கிளை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்தபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.அதனை வைத்து போலீசார் 2 வாலிபர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • தலையில் பலத்த காயம் அடைந்த அமிர்தவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • சாலையில் திரும்பிய ஆட்டோ மீது வாலிபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சௌடாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி. இவரது மகன் அமிர்தவாசன்(வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் அமிர்தவாசன் காங்கேயம் - திருப்பூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். நீலக்காட்டுப் புதூர் பிரிவு அருகே சென்றபோது, சாலையில் திரும்பிய ஆட்டோ மீது வாலிபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமிர்தவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது காண்போரை அதிர்ச்சியடைய வைக்கும் விதமாக, ஆட்டோ சாலை பிரிவில் மெதுவாக திரும்புவதும், அப்போது மின்னல் வேகத்தில் வந்த பைக் மோதும் காட்சிகள் அங்குள்ள கடை ஒன்றில் பொருத்தப் பட்டுள்ள சிசிடிவி. கேமிராவில் பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் இந்த காட்சிகள் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

    • திண்டிவனத்தில் கடைகளில் திருட முயன்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லி கொண்டான்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் இவர் திண்டிவனம் காந்தி சிலை அருகே கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றர் இவரது கடையும்,அதன் அருகே பியூட்டி பார்லர் மற்றும்செல்போன் சர்வீஸ் கீழே உள்ள முடி திருத்தகம் ஆகிய கடைகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளனர். இந்த சிசிடிவி காட்சி ஆனது தற்போது வெளியாகி உள்ளது சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். திண்டிவனம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் மேம்பாலம்.கீழ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்பொழுது சந்தேகம் படும்படியான ஒரு நபரை கூப்பிட்டு விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார் இதை எடுத்துஅவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 23) என்பதும் அவர் செல்போன் கம்ப்யூட்டர் சர்வீஸ் ஆகிய கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததை  ஒப்புக் கொண்டார்.மேலும் அவர் கூறுகையில்பாரதியார் தெருவில் உள்ள பர்கர் கடையில் பூட்டை உடைத்து அங்குள்ள பர்கர் மற்றும் தின்பண்டங்களை தின்று அந்த கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் 2000 ரூபாய் பணம் எடுத்ததை ஒப்புக்கொண்டார்.இது எடுத்து போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் பர்கர் கடையில் பூட்டை உடைத்து கடையில் தின்பண்ட ங்களை ஆராய்ந்து தின்று சாவகசமாக திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

    • சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • ஆட்டோ மற்றும் பிக்கப் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    அன்னூர்,

    கோவை நரசீபுரம் ராமதேவி கோவில் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார்.

    இவர் தனது காரில் உறவினர் ரங்கசாமி மற்றும் பழனிச்சாமி ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி சென்று, மீண்டும் அங்கிருந்து கோவை நோக்கி வந்தனர்.

    இந்த காரை சிவக்குமார் இயக்கினார். கார் அன்னூர்-சத்தி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பயணிகள் ஆட்டோ மற்றும் பிக்கப் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பிக்கப் வாகனம் குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை இயக்கி வந்த சிவகுமார் பலத்த காயம் அடைந்தார். மற்ற 2 பேர் லேசான காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவம் குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    சிவக்குமார் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ெசல்லும் மற்ற வாகனங்கள் மீது மோதும் காட்சிகள் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தன. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய அசோகன்(வயது 55) அங்குள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
    • அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளே வந்துள்ளனரா? என்று பார்த்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய அசோகன்(வயது 55) அங்குள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    கடந்த 1-ந்தேதி அசோகன் கர்நாடகா மாநிலம் கைகா அணுமின் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இதனால் அவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கர்நாடகா மாநிலம் சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து சுமார் 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளே வந்துள்ளனரா? என்று பார்த்து வருகின்றனர்.

    சம்பவம் நடந்த குடியிருப்புக்கு வெளி நபர்கள் யாரும் அவ்வளவு எளிதாக உள்ளே வர முடியாது. பாதுகாப்புக்கு ஊழியர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் குடியிருப்பில் உள்ளேயே வசிக்கும் எந்த குடும்பத்தினராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த குடியிருப்புகளில் வசித்து வருபவர்களின் கைரேகை மாதிரிகளை எடுத்து கைரேகை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டாஸ்மாக் கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
    • சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை அடையாளம் கண்டனர். அவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் கடந்த 23-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் 2 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்டவர் இதுவரை அடையாளம் தெரியாததால், மாயமானவர்கள் பட்டிலை கொண்டு அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்ததால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து அதில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரும் உள்ளனரா? என்றும் கொலை செய்யப்பட்ட வாலிபரின் அடையாளங்களோடு யாரேனும் உள்ளனரா? எனவும் சோதனை நடத்தினர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை அடையாளம் கண்டனர். அவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது.
    • காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் செலாம்பாளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது. இதில் வேலுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டிவந்த உடுமலைப்பேட்டை போடி பட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×