search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sexually harassed"

    • வீட்டுக்கு விளையாட அழைத்து சென்று அத்துமீறல்
    • போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

    கோவை,

    கோவை அருகே உள்ள செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து இளம்பெண் அவரது 14 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

    சிறுவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி ஆசிரியை தனது மகனுடன் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று மாணவன் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஆசிரியையின் உறவினராக கட்டிட தொழிலாளி ராம்ராஜ் (வயது 48) என்பவர் மாணவரை விளையாடலாம் வா என அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து ராம்ராஜ், மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி மாணவரை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனால் பயந்த மாணவன் நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறாமல் இருந்தார்.

    அதன் பின்னர் மாணவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது தாய் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அப்போது மாணவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவருக்கு பாலியல் தொல்லை நடந்து இருப்பது தெரிய வந்தது. இதனால் மாணவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து டாக்டர்கள் ஆசிரியையிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர் அதிர்ச்சி யடைந்தார். பின்னர் ஆசிரியை பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 14 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி ராம்ராஜை கைது செய்தனர்.

    பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ராம்ராஜூவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    • தனியார் நிறுவனத்தில் பெண்மணிக்கு மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் வீதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
    • தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு

    பீளமேடு,

    கோவை பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டை சேர்ந்த 40 வயது பெண்மணி, பீளமேடு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

    நான் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலைக்கு சேர்ந்தேன். அப்போது எனக்கு மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் வீதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.

    நான் அந்த நிறுவனத்தில் கடந்த 2021 ஆகஸ்டு மாதம் முதல் 2022 செப்டம்பர் மாதம் வரை வேலை பார்த்தேன். இந்த நிலையில் அவர்கள் எனக்கு கடைசி 4 மாதங்கள் சம்பளம் தரவில்லை.

    எனவே நான் அந்த நிறுவன மேலாளர்கள் சுதாகர், சின்னகாளை ஆகியோரிடம் நிலுவையில் உள்ள சம்பளப்பாக்கியை வழங்கும்படி கேட்டேன். அப்போது அவர்கள் பாலியல் உல்லாசத்துக்கு இணங்கினால்தான் சம்பளப் பாக்கி தருவோம் என்று மிரட்டினர். இதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் என்னை தகாத வார்த்தைகள் பேசி பாலியல் ரீதியாக துன்புறுத்தினர்.

    எனவே போலீசார் இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

    புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன மேலாளர்கள் சுதாகர் மற்றும் சின்ன காளை ஆகிய 2 பேருக்கும் எதிராக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது.
    • சகோதரரின் பராமரிப்பில் உள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்த மாணவி, தற்போது சகோதர ரின் பராமரிப்பில் உள்ளார்.

    சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் கார்த்திகேயன் (வயது 44) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படு கிறது. இதுகுறித்து சிறுமி குடும்பத்தினரிடம் தெரி வித்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசா ரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சிறுமி தனது தந்தையிடம் இது குறித்து தெரிவித்தார்.
    • பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் வீட்டு அருகே இரும்பு கடை வைத்து நடத்தி வரும் பெருமாள் (வயது 40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் தாய்க்கும், அவரது தந்தைக்கும் இடை யே தகராறு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் தாய் தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான நெல்லைக்கு சென்றார். பின்னர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு திரும்பினார்.

    கணவர் மீது கோபத்தில் இருந்த அந்த பெண், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெருமாளின் வீட்டிற்கு சென்று தனது குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.

    அப்போது இரும்பு கடை உரிமையாளர் பெருமாள், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தார்.

    அவர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருப்பு கடை உரிமையாளர் பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வட்டார குழந்தை நல அலுவலர் புகார்
    • தொழிலாளி கைது

    கரூர்,

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே, மலைக்கோவிலுாரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35) கூலி தொழிலாளியான இவர், அதே பகுதியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் எட்டு வயது பள்ளி சிறுவனை மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அரவக்குறிச்சி வட்டார குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் கொடுத்த புகாரின்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து முருகேசன் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
    • செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம், பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி ராக்கப்பன் (வயது 41). இவரின் 2-வது மனைவி ஜெயலட்சுமி, (30). முதல் மனைவியின் மகன் அருண்பாண்டியன் (19)

    இந்த நிலையில் தண்ணீர் பந்தல் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருவரசு (26) ராக்கப்பனுடன் நெருங்கி பழகிவந்தார். அப்போது ஜெயலட்சுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராக்கப்பன்கடந்த 2014 ஏப்ரலில் போன் செய்து திருவரசுவை தன் வீட்டுக்கு வரவழைத்தார். வீட்டுக்கு வந்த அவரை சுத்தியலால் தாக்கியும், முகத்தை தலையணையால் அழுத்தியும் ராக்கப்பன், ஜெயலட்சுமி, அருண்பாண்டின் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து, வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.திருவரசுவைக் காணவில்லை என அவரது தம்பி இளையராஜா அளித்த புகாரின்படி, அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்த போது, இந்த கொலை தெரியவந்தது.கொலை தொடர்பாக 3பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் கனகசபாபதி ஆஜரானார்.இதில் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் 3பேரும் ேகாவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • ஆபாச படங்களை காண்பித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது
    • தம்பதி மீது போக்சோவில் வழக்கு

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், தான் வீட்டில் இல்லாத நேரத்தில், தனது 16 வயது மகளிடம் அருகில் வசிக்கும் எனக்கு தங்கை உறவு முறை உள்ள பெண் செல்போனில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்துள்ளார்.

    பின்னர் தனது மகளை அவளது கணவருடன் (சித்தப்பா முறை) உல்லாசமாக இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியும் உள்ளார். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னையும், உன் அம்மாவையும் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டி உள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்துள்ளது.

    ஆனால் கொலை மிரட்டல் அச்சத்தால் எனது மகள் விஷயத்தை வெளியில் கூறாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து இருந்துள்ளார். இப்போது தான் என் மகள் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து கூறினார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா, சித்தி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த அந்த தம்பதியினர் தலைமறைவாகி விட்டனர். சிறுமிகள், குழந்தைகளுக்கு வெளி நபர்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டு வந்த நிலையில் சித்தப்பா முறையில் இருக்கும் உறவினரும், அவரது மனைவியும் சேர்ந்து துன்புறுத்தியது பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    • கடந்த 20-ந் தேதி திருமண ஆசை காட்டி மாணவியை சென்னைக்கு தனியார் பஸ்சில் கடத்தி சென்றார்.
    • ரெயில் நிலையத்தில் மாணவியுடன் சுற்றிய உட்டாம் பாவூரியை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் மாணவிக்கும், ஆழியாறு பூங்காவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த உட்டாம் பாவூரி (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் கடந்த 20-ந் தேதி திருமண ஆசை காட்டி மாணவியை சென்னைக்கு தனியார் பஸ்சில் கடத்தி சென்றார். மேலும் அவர் பஸ்சில் செல்லும் போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் தந்தை ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.

    ஆழியாறு போலீசார் சென்னை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் மாணவியுடன் சுற்றிய உட்டாம் பாவூரியை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆழியாறு போலீசில் ஒப்படைத்தனர்.

    10-ம் வகுப்பு மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த உட்டாம் பாவூரி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் போதைக்கு அடிமையான தந்தையால் கடந்த 3 ஆண்டுகளாக மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் தனது தந்தை தன்னை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் சித்ரவதை செய்ததாக 14 வயது சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்வபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பீகாரில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்புக்காக நொய்டா வந்த சிறுமியின் குடும்பம் சிஜார்சி எனும் கிராமத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். தினக்கூலி தொழிலாளியான சிறுமியின் தந்தை போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர். பெற்ற மகளை வீட்டில் அடைத்து வைத்து அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கற்பழித்து வந்துள்ளார்.

    அவரது தந்தையிடம் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தப்பித்த சிறுமி உதவிக்காக காவல் நிலையம் வந்தடைந்தார். அங்கு அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தந்தையின் இந்த கொடூர செயல் சிறுமியின் தாய்க்கும் தெரிந்தே நடந்துள்ளது. ஆனால் இது குறித்து வெளியில் தெரியக்கூடாது என அவர் மிரட்டியதால் தாயும், சிறுமியும் இது பற்றி வெளியில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துவிட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
    ×