மாணவனுக்கு பாலியல் தொல்லை

வட்டார குழந்தை நல அலுவலர் புகார் தொழிலாளி கைது
மாணவனுக்கு  பாலியல் தொல்லை
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே, மலைக்கோவிலுாரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35) கூலி தொழிலாளியான இவர், அதே பகுதியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் எட்டு வயது பள்ளி சிறுவனை மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அரவக்குறிச்சி வட்டார குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் கொடுத்த புகாரின்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து முருகேசன் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com