search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் வன்கொடுமை"

    • சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய தனது உறவுக்கார சிறுவனுடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார்.

    இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதை அறிந்த சிறுவனின் தாயார் அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அந்த சிறுவனின் தாயார் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி டேராடூனில் உள்ள வசந்த் விகார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக அந்த பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது அந்த பெண் 8 மாத கர்ப்பமாக இருந்தார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் இது தொடர்பாக டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தண்டனை உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் முறையாகவும், அரிதான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

    • பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது.
    • ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    ராஜஸ்தான் மாநிலம், கோட்புல்லு என்ற நகரில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ராஜேந்திர யாதவ் என்பவர் 25 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர யாதவ், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தன் மீதான வழக்கை திரும்ப பெற கோரி மிரட்டி உள்ளார். வழக்கை திரும்ப பெற முடியாது என்று அப்பெண் உறுதியாக இருந்திருக்கிறார்.

    இதனால் கோபமடைந்த ராஜேந்திர யாதவ் தனது கூட்டாளிகளான மஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகியோருடன் இணைந்து, தனது சகோதரருடன் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டும் அவரையும், அவரது சகோதரரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

    விவரம் அறிந்த காவல்துறையினர், ஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகிய இருவரை கைது செய்யப்பட்டனர். ராஜேந்திர யாதவ் இன்னும் கிடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    இந்நிலையில் காயமடைந்த அப்பெண்ணுக்கு உள்ளூர் மருத்துவமனையில் தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்பெண்ணின் சகோதரருக்கும் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான ராஜேந்திர யாதவை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது. மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை அவரது உயிரை காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். ஏஎஸ்ஐயை சஸ்பெண்ட் செய்வது போதாது, இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

    • கடந்த 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் சந்தீப் லமிச்சனே இடம் பெற்றிருந்தார்.
    • காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

    பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்திய ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் கடந்த 2022-ம் ஆண்டு காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் கூறப்பட்டபோது சந்தீப் லமிச்சனே வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார்.

    பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார்.

    இந்த நிலையில் தான் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. மேலும், வரும் ஜனவரி மாதம் அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து அறிவிக்கபட உள்ளது.

    ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சந்தீப் இதுவரையில் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 112 விக்கெட்டுகளையும், 52 டி20 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

    கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு இவர் இடம் பெற்றார். 2018-ம் ஆண்டில் 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளும், 2019-ம் ஆண்டுகளில் 6 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை. 

    • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள மக்கள் இன்னும் செல்போன் வசதி கூட இல்லாமல் உள்ளனர்.
    • செல்போன் வசதி இருந்தால் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம்-புதுவை சாலையில் காந்தி சிலை அருகில் உள்ள திரு.வி.க. சாலையில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பபள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு கடந்த ஆண்டு ராஜஸ்ரீ, நிவேதா ஆகிய 2 மாணவிகள் பிளஸ்-2 படித்தனர். அவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் எச்சரிக்கை கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி கடிகாரம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கடிகாரத்தில் குளோபல் புரொடக்ஷன் சிஸ்டம் (ஜி.பி.எஸ்.) மற்றும் சிம்கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தை கையில் அணிந்திருந்த போது யாராவது தங்களை நெருங்கி வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றாலோ அல்லது நகைகளை பறிக்க வந்தாலோ இந்த கடிகாரத்தில் பொருத்தப்பட்டுள்ள பட்டனை அழுத்தினால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் செல்லும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

    மேலும் அலாரம் அடிக்கும் வகையிலும் உருவாக்கியுள்ளனர். இந்த அலார சத்தத்தினால் அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து காப்பாற்றும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாணவிகள் ராஜஸ்ரீ, நிவேதா ஆகியோர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறார். அதன்படி நாங்களும் அறிவுப்பூர்வமாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள மக்கள் இன்னும் செல்போன் வசதி கூட இல்லாமல் உள்ளனர். செல்போன் வசதி இருந்தால் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிப்பார்கள். ஆனால், கிராம மக்களிடம் போதிய செல்போன் வசதி இல்லாததால் நாங்கள் புதிதாக இந்த கருவியை கண்டு பிடித்துள்ளோம்.

    எங்களுடைய இந்த கண்டுபிடிப்புக்கு பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா, அறிவியல் ஆசிரியை ஜோசப்பின் ஆகியோர் ஊக்கமளித்தார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தலைமை ஆசிரியை சசிகலா கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் அறிவியல் கண்டு பிடிப்புகளை ஊக்குவிக்கும்படி அறிவித்து உள்ளார். அதன்படி எங்கள் பள்ளி மாணவிகள் அறிவுபூர்வமாக கண்டு பிடிப்பை நிகழ்த்தி உள்ளனர்.

    கடந்த ஆண்டு தமிழகத்தில் 26 ஆயிரம் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 10 புதிய கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் எங்கள் பள்ளி மாணவிகள் கண்டுபிடித்த கைக்கடிகாரமும் இடம் பிடித்துள்ளது. இதற்காக கடந்த 2 மாதத்திற்கு முன்பு இந்த மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கலெக்டர் இந்த கேடயத்தை வழங்கினார்.

    இந்த கண்டுபிடிப்பு தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அறிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவிகளை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை யை கண்டித்து நடைபெற்றது.
    • வானூர் வட்டக் குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பஸ் நிலையம் அருகே மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை யை கண்டித்தும், மணிப்பூரில் பா.ஜ.க. அரசை பதவி விலகக் கோரியும், வானூர் வட்டக் குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வானூர் வட்டச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன், அறிவழகன், மாவட்ட குழு உறுப்பினர் அர்ஜுனன் ஆகியோர் கலந்துகொண்டு மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் கொடுமைகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மார்க் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    • காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி இருந்துள்ளனர்.
    • மாணவி சோர்வாக இருந்ததை நோட்டமிட்ட பள்ளி நிர்வாகம், அதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். அந்த மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி இருந்துள்ளனர்.

    இந்நிலையில் மாணவியை அவளது காதலன் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு பணக்கஷ்டம் இருப்பதாகவும், தனக்கு பணம் கொடுத்து உதவுமாறும் காதலனிடம் மாணவி கேட்டி ருக்கிறார். இதையடுத்து அவர், தனது நண்பர்கள் சிலரை சந்திக்குமாறு கூறி கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

    மாணவியும் காதலன் கட்டாயப்படுத்தியதன் காரணமாக, காதலனின் நண்பர்கள் 5 பேரை சென்று சந்தித்திருக்கிறார். அப்போது அவர்கள் மாணவியை வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனால் அந்த மாணவி உடலளவில் பாதித்திருக்கிறார்.

    அதனுடனேயே பள்ளிக்கு மாணவி சென்று வந்தபடி இருந்திருக்கிறார். மாணவி சோர்வாக இருந்ததை நோட்டமிட்ட பள்ளி நிர்வாகம், அதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளது. ஆனால் மாணவி பள்ளி நிர்வாகத்திடம் முதலில் எதுவும் தெரிவிக்கவில்லை. பின்பு தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்த விவரத்தை தெரிவித்திருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், அதுகுறித்து சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாதிப்புக்குள்ளான மாணவியிடம் சைல்டுலைன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த மாணவி, காதலன் மற்றும் அவரது நண்பர்கள் என 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆகவே அதுபற்றி சைல்டு லைன் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது காதலன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரிடமும், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல் மனம் படைத்த தாய் தனது மகளை பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டார்.
    • பாட்டியிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

    மதுரை:

    மதுரை சம்பக்குளத்தை சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது தாய் அந்த சிறுமியை வளர்க்க முன்வரவில்லை. இதனால் செல்லூரில் உள்ள தந்தை வழி பாட்டி பராமரிப்பில் சிறுமி வளர்ந்து வந்தார்.

    அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு அங்கு வந்த அவரது தாய் தனது மகளை சம்பக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

    அப்போது கல் மனம் படைத்த தாய் தனது மகளை பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டார். இதற்காக தினந்தோறும் இரவு சிறுமிக்கு தெரியாமல் அவருக்கு தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பின் சில காமுகர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அப்போது சிறுமியின் உடலிலும் சிகரெட் சூடு வைத்ததாகவும் தெரிகிறது. பாலியல் பலாத்காரத்தில் மகள் கருவுறாமல் இருப்பதற்காக தாய் மாத்திரைகளையும் கொடுத்துள்ளார். பாலியல் வன்கொடுமையால் சொல்லொண்ணா துயரத்திற்கு உள்ளான அந்த சிறுமி தனது தாயிடம் இருந்து தப்பி பாட்டியிடம் வந்து சேர்ந்தார். அவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி உடனே போலீசில் புகார் செய்ய திட்டமிட்டார். இதையறிந்த விபசார கும்பலை சேர்ந்த புவனேஷ் என்பவன் போலீசில் புகார் செய்தால் சிறுமி மீது ஆசிட்வீசி, கொலை செய்வேன் என்றும், சிறுமியின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளான்.

    ஆனால் சிறுமியின் பாட்டி இந்த விவகாரம் தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 13 வயது சிறுமி விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது உண்மை என தெரியவந்தது. அதற்கு அவரது தாய் மற்றும் சித்தி, பெரியம்மா உள்பட 8 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய், அவரது சித்தி, பெரியம்மா மற்றும் சிறுமியியை பாலியல் பலாத்காரம் செய்த அருண், புவனேஷ், சேகர், மணிகண்டன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.

    உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களையும் கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    பெற்ற மகளையே பணத்துக்காக தாய் விபசாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
    • வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கும்படி முசாபர்நகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அறிவுறுத்தியது.

    முசாபர்நகர்:

    உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்து, இஸ்லாமிய மதத்தினருக்கு இடையே நடந்த இந்த மதக்கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். 

    கலவரத்தின்போது புகானா பகுதியைச் சேர்ந்த 26 வயதான இஸ்லாமிய பெண், 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் 3 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து, குழந்தையை கொலை செய்துவிடுவோம் என மிரட்டி 3 பேர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    பாதிகப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிக்கந்தர், குல்தீப், மகேஷ்வீர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். முசாபர்நகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

    பல ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கு, விசாரணை நடைபெற்று வரும்போதே குல்தீப் உயிரிழந்துவிட்டான். மற்ற இருவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

    இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கும்படி முசாபர்நகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அறிவுறுத்தியது. இதையடுத்து விசாரணை துரிதமாக நடைபெற்றது. வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கந்தர், மகேஷ்வீர் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதி செய்தது. அத்துடன், அவர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    • ஆண்ட்ரியா செரானோ மீது குழந்தை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
    • ஆண்டரியா செரானோவுக்கு பாலியல் குற்வாளி என்ற குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கொல ராடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆண்டரியா செரானோ (வயது31). இவர் கடந்த ஆண்டு 13 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். இதில் ஆண்டரியா செரானோ கர்ப்பம் அடைந்தார்.

    இதையடுத்து ஆண்ட்ரியா செரானோ மீது குழந்தை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இதில் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஆண்ட்ரியா செரானோவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இதுகுறித்து சிறுவனின் தாய் கூறும்போது, என் மகனின் குழந்தை பருவம் பறிக்கப்பட்டதை போல் உணர்கிறேன். இப்போது அவன் தந்தையாக வேண்டும். அவன் பாதிக்கப்பட்டுள்ளான். அதனுடனேயே அவன் வாழ்நாள் முழுவதும் வாழப் போகிறான்.

    இந்த வழக்கில் பாலினம் தலைகீழாக இருந்திருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். இவன் ஒரு ஆணாகவும், அவன் (சிறுவன்) சிறுமியாகவும் இருந்திருந்தால் வித்தியாசமாக இருந்திருக்கும் என்று உணர்கிறேன் என்றார்.

    இந்த வழக்கில் ஆண்டரியா செரானோவுக்கு பாலியல் குற்வாளி என்ற குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    இது தொடர்பாக விசாரணை மே மாதம் நடைபெறுகிறது.

    • பொதுமக்கள் மாணவனும், மாணவியும் மயங்கி நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
    • மாணவனை தாக்கிவிட்டு, மாணவியை பலாத்காரம் செய்து தப்பிச்சென்ற 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே வயதுடைய சிறுமியும் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.

    இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் தினமும் இரவு நேரங்களில் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இந்த விஷயம் இவர்களின் பெற்றோருக்கு தெரியாது.

    அதன்படி நேற்று இரவு 9 மணியளவில், மாணவனும், மாணவியும் கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் அங்கு பேசிக்கொண்டிருந்த மாணவன், மாணவியை திடீரென சுற்றி வளைத்தனர். பின்னர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.

    இதனை மாணவன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் மாணவனை தாக்கி கத்தியால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் மயங்கி விழுந்தான்.

    அதன்பின்னர் 3 பேரும் கூட்டாக சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் மாணவியும் மயக்கமடைந்தார்.

    பின்னர் மாணவன், மாணவியிடம் இருந்த 2 செல்போன்கள், வெள்ளி செயின், கொலுசு மற்றும் தங்க மோதிரத்தை பறித்து தப்பிச் சென்றனர்.

    அவ்வழியே சென்ற பொதுமக்கள் மாணவனும், மாணவியும் மயங்கி நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற விக்கிவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் மாணவனையும், மாணவியையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேலும், தகவலறிந்த டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவன்- மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் மாணவனை தாக்கிவிட்டு, மாணவியை பலாத்காரம் செய்து தப்பிச்சென்ற 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், தீவிர வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். காதலுனுடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, 5 சிறுமிகளை மீட்டனர்.
    • இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் வாத்துப்பண்ணை நடத்திவருகிறார். மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் வாத்து பண்ணை பணிகளை கவனித்து வந்தனர். வாத்துகளை மேய்ப்பதற்காக புதுச்சேரியை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளில் இருந்து சிறுமிகளை வேலைக்கு வரவழைப்பது வழக்கம். இவ்வாறு வாத்து மேய்க்கும் சிறுமிகளை கொத்தடிமை போன்று அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகள் செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக குழந்தைகள் நல காப்பகத்தில் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் வாத்துப் பண்ணைக்கு சென்று, சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை ஆய்வு செய்து, அங்கிருந்த 5 சிறுமிகளை மீட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்கு கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக 2020ஆம் ஆண்டு புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார், உறவினர்கள் பசுபதி, அய்யனார் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கன்னியப்பன் மனைவி சுபாவுக்கு ஆயுள் தண்டனையும், காத்தவராயன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடும், மற்ற 4 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு
    • வீடியோவை பார்த்த பலரும் `கிராமப்புற இந்தியாவில் ஆணாதிக்கம்' என விமர்சித்துவருகின்றனர்.

    பாட்னா:

    பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு கிராம பஞ்சாயத்தில் வழங்கிய வினோதமான தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    5 வயது சிறுமியை ஒரு நபர் சாக்லேட் வாங்கித்தருவதாகக் கூறி அருகிலுள்ள கோழிப்பண்ணைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது வெளியில் தெரியவரவே, உள்ளூர்வாசிகள் சிலர் அந்த நபரை, கிராம பஞ்சாயத்து முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினர். ஆனால் அங்கிருந்த பெரியவர்கள் சிலர் அந்த நபர் மீதான குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தாங்களாகவே ஒரு முடிவெடுத்தனர்.

    அதாவது சிறுமியை ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்றது தவறு என கூறி அந்த நபரை 5 தோப்புக்கரணம் போடுமாறு தீர்ப்பளித்திருக்கின்றனர். அந்த நபரும் அவ்வாறே தோப்புக்கரணம் போட்டிருக்கின்றார். அப்போது அங்கிருந்தவர்களில் யாரோ இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். வீடியோ வைரலாகி, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    வீடியோவை பார்த்த பலரும் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். `கிராமப்புற இந்தியாவில் ஆணாதிக்கம்' எனப் பலரும் விமர்சித்துவருகின்றனர். முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சிலர் குறிப்பிட்டு, இந்த குற்றம் தண்டிக்கப்படாமல் இருக்க மாநில அரசு அனுமதிக்கப்போகிறதா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி. கவுரவ் மங்ளா கூறி உள்ளார்.

    ×