என் மலர்
நீங்கள் தேடியது "துணை நடிகை"
நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்த படத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 20 வயது துணை நடிகை ஒருவர் நடித்து உள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக இவர் மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்தார்.
ரெயில் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கிய துணை நடிகை அங்கிருந்து விழா நடைபெற்ற கல்லூரிக்கு கால் டாக்சி மூலமாக சென்றுள்ளார். அப்போது கால் டாக்ஸி டிரைவர் துணை நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.
இதுபற்றி துணை நடிகை விழா முடிவடைந்ததும், பெரியமேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று பரபரப்பு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் விசாரணையில் கார் டிரைவர் பெயர் கணேச பாண்டியன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகரில் கால் டாக்சிகளில் பயணம் செய்பவர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை பயணிகள் எழுப்பி உள்ளனர்.
- சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால் அவரது தாயும் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்றுவிட்டார்.
- தனது தாயின் தோழி பராமரிப்பில் கடந்த 3ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
போரூர்:
சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் விடுதி அறைக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு கே.கே. நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை வாடிக்கையாளர் ஒருவருக்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த அழைத்து வந்த கே.கே நகரை சேர்ந்த அஞ்சலி, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மா மற்றும் நாகராஜ் உள்ளிட்ட 3பேர் கும்பலை அதிரடியாக கைது செய்தனர்.
சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால் அவரது தாயும் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்றுவிட்டார். இதனால் சிறுமி கே.கே. நகரில் உள்ள தனது தாயின் தோழியான அஞ்சலியின் பராமரிப்பில் கடந்த 3ஆண்டுகளாக இருந்து வருகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அஞ்சலி ஆசைவார்த்தை கூறி சிறுமியை விபச்சாரத்தில் தள்ளி பலருக்கு விருந்தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- போலீசார் விசாரணையில் பரபரப்புதகவல்கள்
- தமிழகம்-கேரளாவில் வழிப்பறியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர்
குழித்துறை :
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு வெட்டுக்காட்டுவிளையைச் சேர்ந்தவர் மெர்லின் ராஜ் (வயது 39). முன்னாள் ராணுவ வீரர். இவர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக, 2016-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
அதன்பிறகு மெர்லின் ராஜ், தனது வாழ்க்கை செலவுகளுக்காக திருட்டு மற்றும் வழிப்பறி சம்ப வங்களில் ஈடுபட்டுள்ளார். 2019-ம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லம் ெரயில்வே ஸ்டேஷனில் முதல்முறையாக நகை திருட்டில் ஈடுபட்டார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த் தாண்டம், திருவட்டார், ஆசாரிப்பள்ளம், நேசமணி நகர், மண்டைக்காடு, இரணியல், கொல்லங்கோடு பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் இறங்கினார்.
இதனால் அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொலை, மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கிலும் சிக்கினார். மேலும் 13 அடிதடி வழக்குகளும் அவர் மீது உள்ளன. இதனை தொடர்ந்து மெர்லின் ராஜை, தமிழகம் மற்றும் கேரள போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதற்கிடையில் அவருடன் மேக்காமண்டபம் பூந்தோப்பை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவனும் கூட்டாளியாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. ஒரு சில இடங்களில் போலீசாரின் வாகன சோதனையின் போது சிக்கிய போதும், ராணுவத்தில் பணியாற்றிய அடையாள அட்டையை காண்பித்து மெர்லின் ராஜ் தப்பி சென்றுள்ளார்.
இந்த நிலையில் மார்த் தாண்டம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன் தலைமையில் போலீசார் திக்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் மெர்லின் ராஜ், மணிகண்டன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் தேடப்படும் கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இருந்து 20 பவுன் நகைகள், கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, மெர்லின்ராஜ் போலீ சாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு வருமானம் எதுவும் இல்லை. இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் வழிப்பறி கொள்ளையில் இறங்கினேன். இந்த வருமானம் மூலம் தேவைக்கு ஏற்ப மதுபானங்கள் தாராள மாக வாங்கினேன்.
கேரள மாநிலம் விழிஞ்சத்தில் போலீசார் வாகன சோதனையில் குடிபோதையில் இருந்த நான் சிக்கினேன். எனது மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இந்த மோட்டார் சைக்கிள், விழிஞ்சம் போலீஸ் நிலைய வளா கத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதனை அதிகாலை வேளை யில் சென்று திருடி வந்தேன். இது தொடர்பாக விழிஞ்ஞம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.
கோவில்பட்டியில் குடிபோதையில் சென்ற போது வாகன சோதனையில் சிக்கினேன். அப்போது ராணுவ அடையாள அட்டை காண்பித்து தப் பித்து விட்டேன். கொள்ளை யடித்த நகை-பணத்தை வைத்து ஏராளமான பெண்கள் மற்றும் துணை நடிகைகளு டன் குற்றாலம் மற்றும் பல்வேறு இடங்க ளுக்கு சென்று உல்லாசம் அனுபவித்தேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 50-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களில் போலீசார் சோதனை நடத்தி வீடியோ பதிவுகளை கைப்பற்றியுள்ளனர்.
- மசாஜ்கள் எல்லாம் பாலியல் ரீதியாகவே நடத்தப்பட்டு இளைஞர்களிடம் பணம் பறிக்கும் வித்தையாகவே மாறி இருக்கிறது
சென்னை:
சென்னையில் மசாஜ் சென்டர்களில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் சம்ப வங்கள் நடைபெற்று வருகிறது.
இதனை கட்டுப்படுத்து வதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக மசாஜ் சென்டர்களில் ரகசியமாக ஆய்வு செய்யும் போலீசார் அது சட்ட விரோதமாக நடைபெறுவதாக தெரிய வந்தால் அதற்கு சீல் வைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னையில் மசாஜ் சென்டர்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களில் போலீசார் சோதனை நடத்தி வீடியோ பதிவுகளை கைப்பற்றியுள்ளனர்.

அதில் சினிமா துணை நடிகைகள், குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த வீடியோக்களில் இடம் பெற்றுள்ள துணை நடிகைகள் பகுதி நேரமாக மசாஜ் சென்டர்களில் மசாஜ் செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆகி யோரும் மசாஜ் சென்டர்களில் பணியாற்றி வாலிபர்களுக்கு எண்ணை தேய்த்து விட்டு மசாஜ் செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வாலிபர்களை மசாஜ் செய்ய அழைத்து குறுஞ்செய்திகளை வாட்ஸ் அப் வழியாகவும் இவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதில் "அழகான பெண்கள் உங்களுக்கு மசாஜ் செய்ய காத்திருக்கிறார்கள். விரைந்து வரவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "சலுகை விலையில் நிறைவான மசாஜ்" என்கிற பெய ரிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்கள்.
இப்படி இளைஞர்களை மயக்கும் வகையில் மசாஜ் செய்யும் துணை நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் இறுதிக் கட்டத்தில் எல்லை மீறி நடந்து வாலிபர்களை மேலும் மயக்கமாக்கி கூடுதல் பணத்தை கறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு "பினிசிங் டச்" என்று பெயர் வைத்துள்ளனர்.
தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் "கை மசாஜ்" முடியும் நேரத்தில் "உதட்டு மசாஜ்" ஆகவும் மாறி விடுகிறது. இதற்கு தனி கட்டணம் என்று கூறி கூடுதல் பணத்தையும் கறந்து விடுகிறார்கள். இப்படி மசாஜ் சென்டர்களில் ஆபாச லீலைகள் அரங்கேறுவதாக எழும் புகாரின் பேரிலும் போலீ சார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது கோடை காலம் என்பதால் மசாஜ் சென்டர்களில் உடல் சூட்டை தணிக்கும் வகையிலான மசாஜ் செய்யப்படுவதாகவும் தகவல்கள் பகிரப்பட்டு வாடிக்கையாளர்கள் வசப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
தயிர் மசாஜ், பழ மசாஜ் என்றும் அதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இது போன்ற மசாஜ்கள் எல்லாம் பாலியல் ரீதியாகவே நடத்தப்பட்டு இளைஞர்களிடம் பணம் பறிக்கும் வித்தையாகவே மாறி இருக்கிறது என்கிற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.
இதையடுத்தே மசாஜ் சென்டர்கள் மீதான போலீசாரின் பார்வை வேறு விதமாக மாறி அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.






