என் மலர்
நீங்கள் தேடியது "Drug Case"
- கடந்த மாதம் 28-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்துக்கும் 29-ந்தேதி நடிகர் கிருஷ்ணாவுக்கும் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
- ஸ்ரீகாந்த் வங்கி கணக்கு விபரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று 2-வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தனர்.
சென்னை:
போதை பொருட்களை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நுங்கம்பாக்கம் லேக் வியூ பகுதியை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்தை கடந்த ஜூன் 23-ந்தேதி சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரது வீட்டில் இருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் போதை பொருள் பயன்படுத்தியதாக மற்றொரு நடிகரான கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்தனர்.
நடிகர் ஸ்ரீகாந்த் அடிக்கடி கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரிடம் அதிகளவில் பணம் கொடுத்து போதை பொருள் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனால் சட்டவிரோத பணம் அதிகளவில் பரிமாற்றம் செய்து இருந்ததும் போலீசார் நடத்திய விசாரணை மூலம் உறுதியானது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக கடந்த மாதம் 28-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்துக்கும் 29-ந்தேதி நடிகர் கிருஷ்ணாவுக்கும் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
அந்த சம்மனை ஏற்று கிருஷ்ணா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அதிகாரி முன்பு நேரில் ஆஜரானார்.
இதற்கிடையே கடந்த 28-ந்தேதி உடல் நிலையை கருத்தில் கொண்டு நேரில் ஆஜராக முடியவில்லை என்று நடிகர் ஸ்ரீகாந்த் தனது வழக்கறிஞர்கள் மூலம் அமலாக்கத்துறைக்கு தெரிவித்திருந்தார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வரும் 11-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்த் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணைக்கு வங்கி கணக்கு விபரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று 2-வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்த சம்மனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை 10 மணிக்கு அமலாக்கத்துறை விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார்.
அவரிடம் எந்தந்த நடிகைகளுக்கு போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது. அதன் மூலம் கிடைத்த பணம் எவ்வளவு என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
- புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
சென்னை:
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்கள் இருவரும் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி ஆனது.
இதையடுத்து, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை முடிந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதன்படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஸ்ரீகாந்த் வரும் 28-ம் தேதியும், கிருஷ்ணா வரும் 29-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.
- சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள் மீதான விசாரணையின்போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது.
விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமினில் வெளியே வந்தனர்.
- போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
- ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளிக்கிறது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர்.
- பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
- நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து, கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, நடிகர் கிருஷ்ணா, கெவினை ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
மருத்துவ பரிசோதனை முடிந்து நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- 2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை பிடிபட்டார்.
- சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் தந்த வாக்குமூலம் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த முயன்றனர்.
ஆனால், கிருஷ்ணா செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். 2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 நாட்களாக தேடி வந்த நிலையில் சென்னையில் பிடிபட்ட நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவை, சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த பரிசோதனையில் ஸ்ரீகிருஷ்ணா கொகைன் பயன்படுத்தியது உறுதியானால் ஸ்ரீகாந்தை போல் ஸ்ரீகிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 5 வருடங்களாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
- கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எலே பிரசாத் வாக்குமூலம் கொடுத்தன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்பாடு உறுதியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், கோகைன் போதைப்பொருள்பயன்பாடு தொடர்பான வழக்கில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 வருடங்களாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் ஸ்ரீகாந்த் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்நிலையில், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
- 5 வருடங்களாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
- கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எலே பிரசாத் வாக்குமூலம் கொடுத்தன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்பாடு உறுதியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், கோகைன் போதைப்பொருள்பயன்பாடு தொடர்பான வழக்கில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதில் கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 வருடங்களாக பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளதாக தெரிகிறது.
காலை முதல் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் இருந்து ஸ்ரீகாந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீகாந்த் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
- தீங்கிரை என்ற படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் மற்றும் பிரசாத் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.
ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் தினசரி மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக எக்ஸ் எம்.எலே பிரசாத் வாக்குமூலம் கொடுக்க அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அரசு மருத்துவமனையில் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் கோகைன் போதைப்பொருள்பயன்பாடு தொடர்பான வழக்கில் மேலும் பல பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தீங்கிரை என்ற படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் மற்றும் பிரசாத் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதில் கழுகு புகழ் நடிகரான ஸ்ரீகிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பிரசாத்திடம் போதைப்பொருளை வாங்கி கடந்த 5 வருடங்களாக பயன்படுத்தி வருவதாக ஸ்ரீகாந்த் விசாரணையில் கூறியுள்ளார்.
பிரசாத் பல பார்டிகளில் கலந்துகொண்டும், பார்ட்டிகள் நடத்தியும் இந்த கோகெயினை பரிமாற்றி உள்ளார். பிரசாத்திற்கு பெங்களூரில் இருந்து போதைப்பொருளை வாங்கி வந்து கொடுப்பேன் என பிரதீப் கூறியுள்ளார். தொடர் விசாரணையில் மேலும் தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ரோஜா கூட்டம் என்ற படத்டின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த்.
- திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
ரோஜா கூட்டம் என்ற படத்டின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதை தொடர்ந்து ஏப்ரல் மனதி, மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் தினசரி மற்றும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்படங்கள் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக வாக்கு மூலம் கொடுக்க அதன் அடிப்படையில் சீகாந்திடம் விசாரணை நடத்தி தற்பொழுது அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- கலப்பின கஞ்சாவுடன் 2 இயக்குநர்களை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
- வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஆலப்புழா ஜிம்கானா'. இந்த படத்தை இயக்கியவர் காலித் ரகுமான்.
கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதில் சமீபத்தில் ஒரு ஒட்டலுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனைக்கு சென்ற போது அங்கிருந்த பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ, மாடியில் இருந்து குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கலப்பின கஞ்சாவுடன் 2 இயக்குநர்களை போலீசார் இன்று அதிகாலை கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'ஆலப்புழா ஜிம்கானா'. இந்த படத்தை இயக்கியவர் காலித் ரகுமான். அதேபோல் மற்றொரு இயக்குநர் அஷ்ரப் ஹம்சா.இவர் தமாஷா, பீமன்டே வழி, சுலைகா மன்சில் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர்கள் கொச்சியில் உள்ள ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபட்டனர்.
இங்கு இன்று அதிகாலை கலால் துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 இயக்குநர்கள் உள்பட 3 பேர் அங்கு இருந்தனர். அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் போலீசார் சோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக விசாரணைக்கு பிறகு 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் போதைப் பொருளை எங்கிருந்து வாங்கினார்கள்? என்பது குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது.
இந்நிலையில் கேரள இயக்குநர் சங்கத்தின் தலைவரான சிபி மலயில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய இரண்டு இயக்குநரான காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரஃப் ஹம்ஸாவை திரைத்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
மேலும் சமீப காலமாக கேரள திரைத்துறையில் அதிகம் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாகி வருவதால் FEFKA திரைச்சங்கள் கடுமையான ஆக்ஷனை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் காலித் ரகுமான், அனுராகா கரிக்கின் வெல்லம், உண்டா, காதல், தள்ளுமாலா போன்ற படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நகைச்சுவை நடிகை பாரதி சிங் மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார்.
- பாரதி சிங் அவரது கணவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மும்பை
மும்பை அந்தேரி பகுதியில் நகைச்சுவை நடிகை பாரதி சிங் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரது வீட்டில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஹார்ஷ் லிம்பாச்சியா மற்றும் அவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த நபரை கைது செய்தனர். இதில் பாரதி சிங்கும் அவரது கணவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் போதைப்பொருள் வழக்கில் நடிகை பாரதி சிங், அவரது கணவர் மற்றும் போதைப்பொருள் சப்ளை செய்தவருக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். சுமார் 1,200 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் ஒரு வாரத்துக்கு முன் தாக்கல் செய்ததாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.






