என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishna"

    • சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
    • புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.

    சென்னை:

    போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அவர்கள் இருவரும் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி ஆனது.

    இதையடுத்து, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை முடிந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதன்படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.

    இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஸ்ரீகாந்த் வரும் 28-ம் தேதியும், கிருஷ்ணா வரும் 29-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
    • 3 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பலருக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.

    இதனை ஏற்று போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பலரிடம் உங்களை கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஒருவரும் 2 சப்- இன்ஸ்பெக்டர்களும் மிரட்டி லட்சக்கணக்கில் வசூல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இவர்கள் 3 பேரும் சேர்ந்து லஞ்சம் பெற்றிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 50 லட்சம் வரை பணம் கைமாறி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    • முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.
    • சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர்.

    இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இம்மனுக்கள் மீதான விசாரணையின்போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    இதை தொடர்ந்து, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது.

    விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்தது.

    இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமினில் வெளியே வந்தனர்.

    • போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
    • ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தை ஜாமின் வழங்கி தீர்ப்பு அளிக்கிறது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். 

    • ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
    • இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    சென்னை:

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. 

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். 

    • ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
    • இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    சென்னை:

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். விரைவில் இம்மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • காந்த், கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
    • கைதானவர்களிடம் போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    சென்னை :

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள கெவினின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
    • மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா தரப்பில் வாதிடப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்தது என கிருஷ்ணா தரப்பும், போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக ஸ்ரீகாந்த் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

    இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • மருத்துவ பரிசோதனையில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாக என கிருஷ்ணா தரப்பு வாதம்.
    • போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக ஸ்ரீகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா தரப்பில் வாதிடப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்தது என கிருஷ்ணா தரப்பும், போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக ஸ்ரீகாந்த் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

    இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

    • இந்தியா முழுவதும் இந்த போதைப் பொருள் கலாச்சசாரம் உள்ளது.
    • போதைப் பொருள் பயன்படுத்திய இருவரை கைது செய்தீர்கள். சரி விற்றவன் எங்கே?

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தினார்கள் என்கிறார்கள். இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா? இந்தியா முழுவதும் இந்த போதைப் பொருள் கலாச்சசாரம் உள்ளது.

    மும்பையில் அதானியின் துறைமுகத்தில் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப் பொருள் கப்பலில் வந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    அந்த கப்பலை திருப்பி அனுப்பினீர்களா? போதைப் பொருளை என்ன செய்தீர்? என்று நான் ஒருவன் தான் கேள்வி கேட்டேன்.

    போதைப் பொருள் பயன்படுத்திய இருவரை கைது செய்தீர்கள். சரி விற்றவன் எங்கே?

    காட்டுக்குள் சந்தனக் கடத்தல் வீரப்பன், யானை தந்தம் கடத்தல், கடத்தல்காரர்கள் என்று கூறுவீர்கள். விற்றவன் காட்டுக்குள் இருந்தான். வாங்கினவன் எங்கு இருந்தான்? அவர்களில் எத்தனை பேரை கைது செய்தீர்கள்?

    கிருஷ்ணாவும், ஸ்ரீகாந்தும்தான் குற்றவாளிகளா? அப்பாவிகள். ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் விற்றவன் அதிமுக நிர்வாகி என்பதால் இதை திருப்புகிறீர்கள். அப்போ, திமுகவிற்கும், போதைப் பொருளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா?

    நீ குற்றவாளி யார் என்று பார்? போதைப் பொருள் எப்படி புழங்குகிறது. அதன் வேரை வெட்டு. இளையும், கிளையையும் வெட்டுகிறீர்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் 3 எழுத்து நடிகர் ஒருவரும், 3 எழுத்து நடிகை ஒருவரும், 4 எழுத்து இசையமைப்பாளர் ஒருவரும் தொடர்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
    • நடிகர் கிருஷ்ணாவும் புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில்தான் தனியாக அடைக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    போதைப்பொருள் வழக்கில் தற்போது சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். கொக்கைன் போன்ற ஹை-டெக் போதைப்பொருளை விற்பனை செய்பவர்களையும் அதை பயன்படுத்துகிறவர்களையும் தற்போது வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். அந்தவகையில் கொக்கைன் போதைப் பொருளை விற்பனை செய்ததாக சேலத்தை சேர்ந்த பிரதீப் குமார், பெங்களூருவை சேர்ந்த ஆப்பிரிக்க நாட்டவரான ஜான் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து, கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தியதாக பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் கொடுத்த தகவல் அடிப்படையில் கழுகு படத்தில் கதாநாயக நடித்த நடிகர் கிருஷ்ணாவும் அவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.

    நடிகர் கிருஷ்ணா பயன்படுத்திய செல்போன் தகவல்கள்தான் அவரை தற்போது சிறையில் தள்ளி இருக்கிறது. நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் இடம் பெற்றுள்ள நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு கிருஷ்ணா கொகைன் போதைப் பொருளை சப்ளை செய்துள்ளது பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளது. போலீசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இதனை அடிப்படையாக கொண்டுதான் தொடங்கியுள்ளது. கிருஷ்ணாவின் வாட்ஸ்-அப் குழுவில் 3 எழுத்து நடிகர் ஒருவரும், 3 எழுத்து நடிகை ஒருவரும், 4 எழுத்து இசையமைப்பாளர் ஒருவரும் தொடர்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தற்போது தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

    நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். தினமும் அவருக்கு காலை பத்திரிகைகள் வழங்கப்படுகிறது. அந்த பத்திரிகைகளில் வரும் செய்திகளை ஸ்ரீகாந்த் உன்னிப்பாக படிக்கிறாராம். நடிகர் கிருஷ்ணா கைதுசெய்யப்பட்ட தகவலை பத்திரிகை செய்தி வாயிலாக தெரிந்து கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா எங்கே அடைக்கப்பட்டுள்ளார்? என்றும், அவரை பார்க்க முடியுமா? என்றும், சிறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அவரை பார்க்க முடியாது என்று சிறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். சிறையில் உள்ள நூலகத்துக்கு சென்று ஸ்ரீகாந்த் புத்தகங்களையும் விரும்பி படிக்கிறாராம். நடிகர் கிருஷ்ணாவும் புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில்தான் தனியாக அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், ஸ்ரீகாந்தை போல நடிகர் கிருஷ்ணா இரவில் தூக்கமில்லாமல் தவிக்கவில்லை. முதல் நாள் இரவிலேயே கிருஷ்ணா நன்றாக படுத்து தூங்கினாராம்.

    • பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இதையடுத்து, கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, நடிகர் கிருஷ்ணா, கெவினை ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    மருத்துவ பரிசோதனை முடிந்து நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ×