search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "krishna"

    • குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும்.
    • அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.

    கிருஷ்ணர் ஆயர்பாடி பெண்கள் வைத்துள்ள வெண்ணையை திருடும்போது வெண்ணை கீழே சிந்தி அதில் அவன் பாதங்கள் பதிந்து வீடு முழுவதும் கண்ணன் வந்து போனதற்கான கால் தடங்கள் இருக்கும்.

    இதை வைத்தே கண்ணன் வெண்ணை திருடியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வார்களாம்.

    இருப்பினும், கோபப்பட மாட்டார்கள்.

    கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும்.

    செல்வம் பொங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    இந்த தாத்பரியத்திற்காகவே நம் முன்னோர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று தங்கள் வீடுகளில் வெண்ணையினால் கண்ணன் பாதங்கள் போடுவதை வழக்கமாக கொண்டனர்.

    கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது.

    இப்படி பாதம் வரைவதில் சைவ வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும்.

    அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.

    அதாவது ஓம் "நமோ நாராயணா" என்ற எட்டு எழுத்து மந்திரமும் "நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

    16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான்.

    அப்போது நாரத முனிவர், அரசிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோர் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

    அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த "ராஸ லீலை'யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.

    "இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல மகிமை வாய்ந்த தெய்வக் குழந்தை கண்ணன்' என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று "திருவடிக் கோலம்' இடப்படுகிறது. அன்று எல்லோர் இல்லத்திலும் ஒரே நேரத்தில் "கிருஷ்ணரின் அருளாட்சி' இருக்கும்.

    அதாவது கண்ணனின் அருட்சக்தி அங்கே கொலு வீற்றிருக்கும்.

    • கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான்.
    • பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீகச் சக்தியால் நிரப்பி விடுவார்.

    ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர்.

    முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர்.

    கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான்.

    சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான்.

    பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, ஆடைகளைத் திருப்பி கொடுத்தான்.

    ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளின் மேல் வைத்திருந்த தீராத அன்பின் காரணமாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வெண்ணையினைத் திருடி ஆசை தீர உண்பார்.

    ஆனால் அவர் உண்மையிலேயே திருடியது தனது பக்தர்களின் மனங்களில் உள்ள கெட்ட குணங்களைத் தான்.

    பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீகச் சக்தியால் நிரப்பி விடுவார்.

    அதன் பயனாக அவர்கள் உவகை மறந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே அதிதீவிர பக்தி பூண்டு, அவரது பாதாரவிந்தத்தையே நினைத்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் எல்லையற்ற பேரானந்தத்தை அடைந்தனர்.

    ஸ்ரீகிருஷ்ணரின் தனிப்பட்ட ஆத்மா, உலக உயிர்களிலெல்லாம் வாசம் செய்கின்றது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.

    • வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள்.
    • இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.

    அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர்.

    வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள்.

    ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.

    அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

    'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

    தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க

    போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

    பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

    இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

    கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.

    வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி மகிழ்வது சிறப்பு.

    • இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.
    • பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார்.

    அரக்க குணம் கொண்ட கம்சனை அழிக்கவும், குருச்சேத்திர போர் மூலம் 100 கவுரவர்களையும் அவர்களுக்கு உதவியவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் கண்ணன் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    தன் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் முடிந்ததும், அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான் கம்சன்.

    அப்போது, 'உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண் குழந்தையால் உன் உயிர் போகும்' என்று ஒரு அசரீரி ஒலித்தது.

    தன் உயிர் போகும் என்ற வார்த்தையைக் கேட்டதும், பாசம் வைத்திருந்த தங்கையின் மீது வாளை வீசும் முடிவுக்கு கம்சன் வந்தான்.

    'கம்சா! தேவகிக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே உனக்கு அழிவு.

    அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்.

    தேவகியை விட்டு விடு!' என்று வாசுதேவர் கூறவே, தேவகியை கொல்லும் எண்ணத்தை கைவிட்டான் கம்சன்.

    உடனே வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து, தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.

    தேவகிக்கு பிறந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கொன்றுவிட்டான் கம்சன்.

    8வது குழந்தையின் கருவை தன் வயிற்றில் சுமந்திருந்தாள் தேவகி.

    இந்த குழந்தையும் தன் அண்ணனின் கையால் இறக்கப்போவதை எண்ணி, கர்ப் பவதியான தேவகி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.

    ஒரு நள்ளிரவு நேரத்தில் தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

    அக்குழந்தையைப் பார்த்ததும் வசு தேவருக்கும், தேவகிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி, மறுகணமே மறைந்து போனது.

    பொழுது விடிந்ததும் கம்சன் வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்பதால் அவர்கள் கலக்கம் கொண்டிருந்தனர்.

    அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக சுய உருகொண்டு பேசத் தொடங்கியது.

    'உங்களது முற்பலனால் நான் உங்கள் மகனாக பிறந்துள்ளேன். என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

    அங்கு வசுதேவரின் நண்பரான நந்தகோபருக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள்.

    யாசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும்'

    என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண குழந்தையாக மாறினார்.

    குழந்தையை மாற்றுவதற்கு தோதாக, சிறையின் வாயில்கள் தானாக திறந்தன. காவலர்கள் மயக்கமுற்றனர்.

    வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார்.

    குழந்தையை மாற்றிக் கொண்டு, பெண் குழந்தையை கொண்டு வந்தார்.

    காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன், பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான்.

    ஆண் குழந்தைதானே பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதை அழித்து விடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை வாளால் வெட்ட ஓங்கினான்.

    ஆனால் அந்தக் குழந்தை மேல் நோக்கி பறந்தது. துர்க்கையாக வடிவெடுத்தது.

    'ஏ! கம்சா! உன்னைக் கொல்லப்போகிறவன், வேறொரு இடத்தில் பத்திரமாக இருக்கிறான். உரிய நேரத்தில் அவன் உன்னை அழிப்பான்' என்று கூறி மறைந்தது.

    அந்த குழந்தைதான் பின்னாளில் பவானி அம்மனாக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது.

    மாயமாய் மறைந்த பெண் குழந்தை சொன்னதைக் கேட்டு கம்சன் மேலும் அதிர்ச்சி அடைந்தான்.

    தனது பணியாட்களை அனுப்பி விசாரித்தான். அப்போது கோகுலத்தில் வளரும் கிருஷ்ணர் தான் தேவகி பெற்ற 8 வது குழந்தை என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கம்சன் தனது வீரர்களை அனுப்பி கிருஷ்ணனை கொல்ல முயன்றான்.

    அந்த அசுரர்கள் அனைவரையும் கிருஷ்ணர் வதம் செய்தார்.

    இளவயதில் பிருந்தா வனத்தில் இருந்த பெண்களின் மனதில் கிருஷ்ணர் இடம் பிடித்தார்.

    இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.

    பிறகு மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிர சேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார்.

    தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார்.

    பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த குருசேத்திரப் போரில், தனது சேனையை கவுரவர்களிடம் கொடுத்து விட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார்.

    இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.

    பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார்.

    அவரது அவதார தினம்தான் உலகம் முழுவதும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

    • நவநீதம் என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம்.
    • அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல, மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு.

    கிருஷ்ண பரமாத்மாவுக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன.

    அதுபற்றி மகாபெரியவர் சொன்ன ஒரு சிறிய விளக்கம்...

    நவநீதம் என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம்.

    'நவ' என்றால் புதுசு என்று அர்த்தம். 'நீதம்' என்றால் எடுக்கப்பட்டது என்று அர்த்தமாகும்.

    புத்தம் புதுசாக அதிகாலை நேரத்தில் பசும்பாலில் உறை ஊற்றி சாயங்காலமே அந்த தயிரை எடுக்கிற வெண்ணெய்தான் நவநீதம் என்று சொல்லப்படுகிறது.

    அதோடு சேரும் கிருஷ்ணன், நவநீத கிருஷ்ணராவார்.

    கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பெயர் வைத்துள்ளனர்.

    அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல, மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு.

    அவனைக் 'கார்வண்ணன்' என்று சொல்வார்கள்.

    மேகம் எத்தனைக்கு எத்தனை கருப்போ அத்தனைக்கு அத்தனை அதிகமாக மழை நீரை கொட்டும்.

    அந்த தண்ணீர் கருப்பாகவா இருக்கிறது? இப்படி பரம பிரேம தாரையைப் பிரவாகமாக கொட்டுகிறவனே கிருஷ்ணன்.

    • விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம்.
    • தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.

    "எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்" என்று

    பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார்.

    விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம்.

    அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.

    வட இந்தியாவில் 'ஜென்மாஷ்டமி' என்று இது அழைக்கப்படுகிறது.

    ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் கம்சனின்

    சிறைச்சாலையில் இருந்த வசுதேவர் தேவகிக்கு மகனாக கிருஷ்ணர் அவதரித்தார்.

    3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும் ,

    8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது நாட்கள் கழிந்தன.

    தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.

    தீராத விளையாட்டுப் பிள்ளையான கிருஷ்ணரின் இளமைப் பருவம் பற்றி கேட்பதற்கே இனிமையாக இருக்கும்.

    நாளரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த கிருஷ்ணர், ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை

    அவிழ்த்து விடுவது... நீர் ஏந்தி வரும் பெண்களின் குடங்களை கல் விட்டு உடைப்பது...

    வெண்ணையை திருடி உண்பது... போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டார்.

    கிருஷ்ணர் இரவு 12 மணிக்கு பிறந்ததை நினைவு கூறும் வகையில் வட இந்தியாவில் இரவு 12 மணி வரையிலும்

    உபவாசம் இருந்து, பஜனை செய்வார்கள்.

    ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் இளமையில் வெண்ணை திருடி உண்டவர் என்பதால் கோகுலாஷ்டமி அன்று

    கண்ணனுக்கு பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை தவறாது நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.

    ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்து திரிந்த கண்ணன், பகல் நேரம் முழுவதும் மாடுகளை நன்றாக மேய்த்து விட்டு

    மாலை நேரத்தில் தான் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அதனால் மாலை நேரம்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய ஏற்ற நேரமாகும்.

    • இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும் போதும், இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது.
    • ஹரா என்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும்.

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

    இந்த மந்திர உச்சரிப்பில் இருந்து உண்டாகும் தெய்வீக அதிர்வானது நமது கிருஷ்ண உணர்வை புத்துயிர்

    பெறச் செய்யும் ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் உண்மையில் கிருஷ்ண உணர்வுள்ள ஜீவன்களாகவோம்.

    ஆனால் பவுதிகத்துடன் நமது தொடர்பின் காரணமாக நினைவிற் கெட்டாத காலத்திலிருந்தும்

    நமது உணர்வானது மாசடைந்துள்ளது.

    நமது கிருஷ்ண உணர்வை உயிர்ப்பிப்பதன் மூலம் பவுதிக இயற்கைக்கு எதிரான மாயை உடனேயே நிறுத்த முடியும்.

    கிருஷ்ண உணர்வு என்பது செயற்கையாக மனதில் திணிக்கப்படும் ஒன்றல்ல, இந்த உணர்வே உயிர்வாழியின் உண்மையான சக்தியாகும்.

    இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும் போதும், இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது.

    ஹரா என்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும்.

    கிருஷ்ண, ராம என்ற வார்த்தைகள் கடவுளையே குறிப்பதாகும்.

    கிருஷ்ண, ராம என்பதன் பொருள் மிக உன்னத ஆனந்தம் என்பதாகும்.

    ஹரா என்பது பகவானின் அதி உன்னத சக்தியை குறிக்கிறது.

    இது பேச்சு வழக்கில் ஹரே என்று மாறி உள்ளது.

    இந்த மந்திரமானது பகவானை அடைய நமக்கு உதவுகிறது.

    ஹரே, கிருஷ்ண, ராம என்ற மூன்று வார்த்தைகள் மஹா மந்திரத்தின் தெய்வீக விதைகளாகும்.

    மந்திர உச்சாடனமானது கட்டுண்ட அத்மாக்களுக்கு பாதுக்கு கொடுப்பதற்காக கடவுளிடமும் அவரது

    உள்ளுர சக்தியான ஹரா (ராதாராணி) விடமும் விடுவிக்கும் ஒரு ஆன்மீக அழைப்பாகும்.

    தாயை நினைத்து கதறும் ஒரு குழந்தையின் அழுகைக்கு சமமானது.

    இந்த மந்திர உச்சாடனம், ஹரா என்ற தாய் ஹரி அல்லது கிருஷ்னர் என்று அழைக்கப்படும்

    உன்னதமான தந்தையின் அருளைப் பெறுவதற்கு பக்தர்களுக்கு உதவுகிறார்.

    ஆகவே ஆன்மீக தன்னுணர்வை அடைவதற்கு

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

    என்ற இந்த மகாமந்திரத்தை உச்சரிப்பதை தவிர, இந்த கலியுகத்தில் வேறு சக்தி வாய்ந்த மந்திரம் ஒன்றுமில்லை.

    தற்போதைய கெட்ட விளைவுகளை முறியடிக்க ஒரே வழி இந்த 6 நாமங்களே, பிறரிப் பெருங்கடலைக் கடக்க

    இப்புனித நாமங்களை தினமும் சொல்லுங்கள்.

    உங்கள் மனம் பக்குவப்படுவதை நீங்கள் உணர்வீர்கள்.


    • கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார்.
    • ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள்.

    கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள். ஆனால் பாமாவோ விஷ்ணு தன்னை மார்பில் சுமந்து இருப்பதாலும் கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும் தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமை யாக்கிக்கொள்ள நினைத்தாள்.

    இதற்காக கண்ணனை துலாபார தராசு தட்டின் ஒரு புறமும் மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாக வில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்தாள்.

    அப்போது தராசு சமமாகியது. கண்ணன், புன் முறுவலுடன் நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந் திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து உண்மையான பக்தியுடன் என்னை சரண் அடைபவருக்கே நான் சொந்தம் என்றார். தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.

    • பாரதப்போரில் வென்றதால் அகந்தையோடும், ஆணவத்துடனும் இருந்தான் அர்ஜுனன்.
    • உன்னைவிட என் மீது அதிகமாக அன்பும், பக்தியும் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

    கிருஷ்ணர் கூட அதிகநேரம் இருப்பவரான அர்ஜுனனுக்கு தான் தான் மிகச்சிறந்த பக்திமான் என்கிற அகந்தை இருந்தது. கிருஷ்ணர் அந்த ஆணவத்தை அர்ஜுனனிடம் இருந்து எப்படி அகற்றினார் என்பதை தான் இந்த கதையில் பார்க்கப்போகிறோம்.

    பாரத போர் நடந்து முடிந்தது. அதில் வெற்றி பஞ்சபாண்டவர்களுக்கு கிடைத்தது. பாரதப்போரில் வென்றதால் அகந்தையோடும், ஆணவத்துடனும் இருந்தான் அர்ஜுனன். நான் வெற்றிபெற்ற பிறகும், இப்போது வரைக்கும் கிருஷ்ணர் என்னுடன் தான் இருக்கிறார். என்னைவிட யாரும் கிருஷ்ணரிடம் அதிக அன்புடனும், பக்தியுடன் யாரும் இருக்கவில்லை என்று நினைத்தார் அர்ஜுனர்.

    இதைபார்த்த கிருஷ்ணர், அர்ஜுனனிடம் அப்படி நீயாகவே முடிவு செய்துவிடக்கூடாது. உன்னைவிட என் மீது அதிகமாக அன்பும், பக்தியும் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதிலும் அர்ஜுனனின் இந்த கர்வத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று எண்ணிய கிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து என்னை அதிக பக்தியுடன் வணங்கி வருபவள் பிங்கலை. அவள் அஸ்தினாபுரத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கிறாள். அவளை நாம் சென்று பார்த்து வரலாம் என்று கூறினார்.

    உடனே கிருஷ்ணர் இப்போது தான் பாரதபோர் முடிந்துள்ளது. இதே தோற்றத்தில் நாம் வெளியில் செல்ல வேண்டாம். அதனால் நான் ஒரு பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறி செல்லலாம் என்றார்.

    சற்று நேரத்தில் அரண்மணையில் இருந்து கிருஷ்ணரும், அர்ஜுனரும் பெண்களாக மாறி வெளியே புறப்பட்டு வந்தனர். அஸ்தினாபுரம் வழியாக சென்று பிங்கலை வீட்டிற்கு சென்றனர்.

    அர்ஜுனரும், கிருஷ்ணரும் பிங்கலையின் வீட்டின் கதவை தட்டினர். அங்கு தெய்வீக ஒளியோட ஒரு மூதாட்டி கதவை திறந்தார். உடனே பெண்களாக உருமாரி கிருஷ்ணரும், அர்ஜுனரும் தாயே... நாங்கள் நெடுந்தூரம் செல்ல வேண்டும். மிகவும் களைப்பாக உள்ளது. சற்று நேரம் இங்கு இளைப்பாறிவிட்டு செல்லலாமா? என்று கேட்டனர்.

    அதற்கு அந்த மூதாட்டி உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டு இருக்கிறேன். பூஜை முடிந்தபிறகு நீங்களும் உணவு அருந்திவிட்டு செல்லுங்கள் என்றார். வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ணரின் விக்கிரகம் இருந்தது. அந்த கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு அருகில் சிறியதாக ஒரு கத்தியும், நடுத்தரமாக ஒரு கத்தியும், மூன்றாவதாக பெரியதாக ஒரு கத்தியும் இருந்தது. மொத்தம் 3 கத்திகள் அந்த கிருஷ்ணர் விக்கிரகத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்தை பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர் தாயே... ஏன் கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு அருகில் 3 கத்திகள் வைக்கப்பட்டுள்ளது. ஏன் கிருஷ்ணர் விக்கிரகத்துடன் 3 கத்துகளையும் வைத்து பூஜைசெய்கிறீர்கள். இந்த கத்திகள் யாருடையது என்று கேட்டார். அதற்கு பிங்கலை இந்த கத்திகள் என்னுடையது தான். வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணருக்கு கொடுமைசெய்த எனது விரோதிகள் மூவரையும் கொல்ல வேண்டும். அதன்பொருட்டுத்தான் இந்த பூஜை.

    உடனே கிருஷ்ணர் விரோதியா? யார் அந்த விரோதிகள் என்று கேட்டார். குசேலன், பாஞ்சாலி, அர்ஜுனன். இந்த மூவரும் தான் அந்த விரோதிகள். இந்த குசேலனை கொல்லை சின்ன கத்தியும், பாஞ்சாலிக்கு நடுத்தர கத்தி, மாவீரன் என்று தன்னைப்பற்றி பிதற்றிக்கொண்டு திரியும் அர்ஜுனனை கொல்லத்தான் இந்த பெரிய கத்தி என்று சொன்னாள் பிங்கலை.

    இதைக்கேட்டதும் பெண் உருவில் வந்த அர்ஜுனனுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. உடனே பெண் உருவில் இருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் அந்த மூவரும் கிருஷ்ணருக்கு அப்படி என்ன தீங்கு செய்தனர் என்று கேட்டார். பிங்கலை அந்த குசேலன் தவிட்டு அவலை என்னுடைய கிருஷ்ணருக்கு கொடுக்கலாமா? கிருஷ்ணர் வெண்ணெய்யை விரும்பி உண்பவன். அந்த அவல் என்னுடைய கிருஷ்ணரின் தாமரை போன்ற இதழை பாதிக்காதா. இந்த புத்தி கூட இல்லாமல் அவலை கிருஷ்ணருக்கு கொடுக்கலாமா? என்று கேட்டாள் பிங்கலை.

    அது சரி... பாஞ்சாலி ஒரு பெண் அவள் எப்படி உங்களுக்கு விரோதியானாள்? என்று கேட்டார் கிருஷ்ணர். ஓ அதுவா.... என்னுடைய கிருஷ்ணரிடம் இருந்து புடவைகளை பெற்றாள். துவாரகையில் இருக்கும் என்னுடைய கிருஷ்ணர் அஸ்தினாபுரத்தில் உள்ள பாஞ்சாலிக்கு புடவைகளை வாரிவாரி கொடுத்தார். அந்த புடவையை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலித்து மயக்கமே போட்டு விழுந்தான். புடவையை இழுத்த துச்சாதனனுக்கே அப்படி என்றால், அதை வாரி வாரி வழங்கிய என்னுடைய கிருஷ்ணருக்கு எப்படி கைவலித்திருக்கும். என்னுடைய கிருஷ்ணரின் கைகளை வலிக்கச்செய்த பாஞ்சாலையை நான் சும்மாவிடுவேனா நான் என்று கோபமாக கூறினாள்.

    இதைக்கேட்ட பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர். அந்த மூன்றாவது கத்தி அர்ஜுனனுக்கு என்று சொன்னீர்களே, கிருஷ்ணரின் பக்தியிலேயே சிறந்தவன் அர்ஜுனன். அர்ஜுனன் மேல் ஏன் இந்த விரோதம்? உடனே பிங்கலை அர்ஜுனனின் பக்தியை நீ தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.

    என் கிருஷ்ணனை தேரோட்ட சொல்வானா? தேரோட்டுவது அவ்வளது சாதாரணமானதல்ல. ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம். ஊரில் என்றாவது ஒரு நால் என் கண்ணில் அகப்படுவான். அப்போது அன்றைக்கு அவனை பார்த்துக்கொள்கிறேன் என்றாள் பிங்கலை கோபமாக.

    இவ்வாறு பிங்கலை சொன்னவுடன், பெண் வேடமிட்டு வந்த அர்ஜுனனுக்கு பதட்டத்தில் வியர்த்து கொட்டியது. இதைப்பார்த்து கிருஷ்ணர் சிரித்துக்கொண்டு பிங்கலையை பார்த்து தாயே குசேலன் அறியாமையில் செய்தான். குசேலனிடம் அவலை தவிர வேறு எந்த ஒரு பொருளும் இல்லை. அவன் கிருஷ்ணரிடம் எந்த ஒரு பொருளையும் எதிர்பார்க்கவில்லை. அவன் கேட்காமலேயே கிருஷ்ணர் தான் அவனுக்கு அளவற்ற செல்வத்தை வழங்கினார். குசேலன் சுயநலமற்றவன் எனவே குசேலனை மன்னித்துவிடுமாறு பிங்கலையிடம் கூறினார் கிருஷ்ணர். இதைக்கேட்டதும் பிங்கலை கிருஷ்ணர் பீடத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியை எடுத்து வீசினார்.

    பெண்வேடமிட்டு வந்திருந்த கிருஷ்ணர் மீண்டும் பாஞ்சாலிக்கு புடவையை வாரி வாரி கொடுத்து கிருஷ்ணரின் கைகள் வலித்தது உண்மைதான். ஆனாலும் ஒரு பெண்ணிற்கு மானம் பெரிதல்லவா, எனவே மானம் காக்க உதவியதால் பாஞ்சாலியையும் மன்னித்துவிடுங்கள் என்று கிருஷ்ணர் கூறினார். இதைக்கேட்டதும் பிங்கலை இரண்டாவது கத்தியையும் தூக்கி வீசிவிட்டார்.

    ஆனால் போரில் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற உலகியல் சுயநலத்திற்காக என்னுடைய கிருஷ்ணரை தேரோட்டச் செய்த அர்ஜுனனை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன். இந்த பெரிய கத்தி அந்த பீடத்திலேயே இருக்கட்டும் என்று சொன்னார் பிங்கலை.

    இதைக்கேட்டதும் பெண் வடிவில் இருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் சுயநலம் பிடித்த அர்ஜுனனை நீங்கள் கொல்வதும் நியாயம் தான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்று கிருஷ்ணர் சொன்னவுடன் அர்ஜுனனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அர்ஜுனனுக்கு பயத்தில் வியர்த்து கொட்டியது.

    இதைப்பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணர், பிங்கலையிடம் அர்ஜுனன், கிருஷ்ணரின் மனதை கவர்ந்ததால் தான் கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினார். நீங்க அர்ஜுனனை கொன்றுவிட்டால் நண்பனை இழந்து கிருஷ்ணர் வாடிவிடுவார் அல்லவா. கிருஷ்ணர் வருத்தப்பட்டால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா என்று சொன்னார் கிருஷ்ணர்.

    அடடா நீங்கள் சொன்ன கோலத்தில் நான் யோசிச்சு பார்க்கவில்லையே. நீ சொன்னதும் நியாயம் தான் என்னுடைய கிருஷ்ணர், உடல் வருத்தமோ, மன வருத்தமோ இல்லாமல் இருந்தால் அதுபோதும் எனக்கு. கிருஷ்ணருக்கு மனவருத்தம் தரக்கூடிய செயலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே பிங்கலை மூன்றாவது கத்தியையும் தூக்கி வீசிவிட்டார்.

    உடனே பெண் வேடத்தில் இருக்கும் அர்ஜுனன், பிங்கலையின் காலில் விழுந்து வணங்கினான். அப்போது அர்ஜுனனின் ஆணவம் அழிந்துபோனது.

    இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிந்துகொண்டோம் என்றால், நம்மில் பலருக்கும் நான் என்ற ஒரு ஆணவமும், என்னால் மட்டும் தான் முடியும் என்கிற கர்வமும் என்னைக்குமே தலைதூக்கிக்கொண்டே இருக்கும். இந்த கர்வமும், ஆணவமும் நம்மிடம் இருந்து நீங்கினால் வாழ்க்கையில் வெற்றி தானாக தேடிவரும். அதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

    • கருணையுடன் இருக்க வேண்டும்.
    • சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிக்க வேண்டும்.

    நேர்மை, நல்லொழுக்கம், பிறர் மனம் புண்படாமல் பேசுதல், அடக்கமாய் இருத்தல் போன்றவை ஆத்ம குணங்கள் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த ஆத்ம குணங்கள் அநேகம். அவற்றில் சில:-

    1. எல்லோரிடமும் பகையில்லாமல் (விரோதம்) இருக்க வேண்டும்.

    2. தனக்குத் தீங்கு செய்தவர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்.

    3. கருணையுடன் இருக்க வேண்டும்.

    4. அகங்கார, மமகாரம் (நான், என்னுடையது) இல்லா மல் இருக்க வேண்டும்.

    5. உடல் மீது ஆசை வைக்கக் கூடாது.

    6. சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிக்க வேண்டும்.

    7. சோதனைகள் வரும்போது சகித்துக் கொள்ள வேண்டும்.

    8. கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்.

    9. ஆத்மாவைத் தவிர மற்றவற்றில் ஆசை இல்லாமல் இருக்க வேண்டும்.

    10. சுத்தமான, சாத்விகமான ஆகாரத்தை உட்கொள்ள வேண்டும்.

    11. புகழ்தல், இகழ்தல் இரண்டையும் ஒன்றாகக் கருத வேண்டும்.

    12. பயப்படாமல் இருக்க வேண்டும். (அச்சம் கூடாது)

    13. மனம் தூய்மையாக இருக்க வேண்டும். நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

    14. பிறர் மனம் துன்புறுத்தாது பேச வேண்டும்.

    15. தெளிந்த உள்ளம் வேண்டும்.

    16. அடக்கமாய் இருக்க வேண்டும்.

    17. ஆடம்பரம் கூடாது.

    18. அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    19. பொறுமையுடன் இருக்க வேண்டும்.

    20. மனம், சரீரம், ஆத்மா, ஆடை, ஆகாரம் எல்லாம் சுத்தமாய் இருக்க வேண்டும்.

    21. எந்த காரியத்தையும் விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும்.

    • திரவுபதிக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
    • சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்‌ஷாபந்தன் கொண்டாடக்கூடாது

    இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ரக்ஷாபந்தன், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாடலாம். ரக்ஷாபந்தன் நாளில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறி, நேசத்தை உறுதி செய்து சகோதரத்துவத்தை கொண்டாடுகிறார்கள்.

    அதன் அடையாளமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசிவிடுவார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் பரிசுப்பொருட்களை கொடுத்து உறுதியளிக்கிறார்கள்.

    மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணரின் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை தடுப்பதற்காக திரெளபதி தனது புடவையை கிழித்து கட்டு போட்டாள். இது கிருஷ்ணரின் மனதை நெகிழச்செய்தது. அன்று முதல் திரெளபதியை தனது சகோதரியாக ஏற்று, எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.

    அதன்படியே கவுரவர்கள் திரௌபதியை துகிலுரிக்க முயன்றபோது அவள் கிருஷ்ணா என குரல் எழுப்ப, அவளது மானத்தை காப்பாற்றினார் கிருஷ்ணர். அதன் நினைவாகவே ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.

    நல்ல நேரம்

    பந்தரகல் எனப்படும் முகூர்த்த நேரத்திலேயே சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் கைகளில் ராக்கி கட்ட வேண்டும். மற்ற நேரங்களில் ராக்கி கட்டுவது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பந்தரகல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி இரவு 9.02 மணிக்கே தொடங்குகிறது. அதனால் இந்த சமயத்தில் மட்டுமே ராக்கி அணிவிக்க வேண்டும்.

    அதேபோல் அக்டோபர் 31-ந்தேதி காலை 6.20 மணிமுதல் 7.50 மணிவரையிலான நேரமும், அதன்பிறகு காலை 11.10  மணிமுதல் மாலை 3.50 மணி வரையிலான நேரமும் ராக்கி அணிவிப்பதற்கான நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது.

    பொதுவாக சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் விழா கொண்டாடக் கூடாது என்பது ஐதீகம். ஒருவேளை இந்த முகூர்த்த நேரத்தில் தங்களின் சகோதரருக்கு ராக்கி அணிவிக்க முடியாதவர்கள் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை 5.30 மணிமுதல் 7.05 மணி வரையிலான நேரத்தில் ராக்கி அணிவிக்கலாம். ஆகஸ்ட் 30-ந் தேதி சகோதரர்களுக்கு ராக்கி அணிவிக்க நினைப்பவர்கள் இரவு 9.05 மணி முதல் 10.48 மணி வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • வடநாட்டில் மூலஸ்தானத்தில் உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பட்டது.
    • தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    ஒருநாள் கிருஷ்ணரை சந்திக்க நாரதர் வருகிறார். அவையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று நாரதருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால் சாம்பன் மட்டும் எழுந்திருக்கவில்லை. இதனால் கோபமடைந்த நாரதர் அதனை வெளிக்காட்டாது சென்றுவிட்டு, பின்னொருநாள் வந்து தனது கலகத்திறமையால் சாம்பனுக்கு கிருஷ்ணனாலேயே சாபம் இட வைத்தார்.

    பின்னர் தன் தவறை உணர்ந்த சாம்பன், நாரதரிடம் மன்னிப்பு கேட்டு வேண்ட, நாரதர், அவனுக்கு சூரிய புராணத்தை உரைத்தார். அதனை கேட்டு அவன் நோய் நீங்கியதாக புராணம் கூறுகிறது. வடநாட்டில் `மூலஸ்தானத்தில்' உள்ள சூரியனின் ஆலயம் சாம்பனால் எழுப்பப்பட்டது என்பர்.

    தமிழ்நாட்டில் ஆடுதுறை அரகில் உள்ள சூரியனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

    திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் `திருக்கண்டியூர்' மற்றும் விழுப்புரம்-முண்டியம்பாக்கம் அருகில் உள்ள`பனையபுரம்' ஆகியன சூரியனை வழிபட ஏற்ற தலங்களாகும்.

    உதயாசலம் (கொனாரக்), முல்தானம், மோகேரா, லக்குண்டி (ஹப்ளி அருகில்) அலம்பூர், ஆரவல்லி (இரண்டும் ஆந்திரா), சிரோரா, ஜயபுரி, உதயபுரி, மார்த்தாண்டபுரம், கேரளாவில் வைக்கம் அருகில் உள்ள `ஆதித்யபுரம், கும்பகோணம்-கஞ்சனூருக்குக்கருகில் உள்ள திருயோகியில் சூரிய கோடீஸ்வரர், மற்றும் `சூரியமூலை' ஆகிய இடங்களும், குடந்தை நாகேஸ்வரன் ஆலயத்தில் உள்ள சூரிய சன்னதி ஆகியவையும் வழிபட ஏற்றதாகும்.

    ×