என் மலர்
நீங்கள் தேடியது "போதைப்பொருள்"
- இந்தியா முழுவதும் இந்த போதைப் பொருள் கலாச்சசாரம் உள்ளது.
- போதைப் பொருள் பயன்படுத்திய இருவரை கைது செய்தீர்கள். சரி விற்றவன் எங்கே?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தினார்கள் என்கிறார்கள். இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லையா? இந்தியா முழுவதும் இந்த போதைப் பொருள் கலாச்சசாரம் உள்ளது.
மும்பையில் அதானியின் துறைமுகத்தில் ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப் பொருள் கப்பலில் வந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
அந்த கப்பலை திருப்பி அனுப்பினீர்களா? போதைப் பொருளை என்ன செய்தீர்? என்று நான் ஒருவன் தான் கேள்வி கேட்டேன்.
போதைப் பொருள் பயன்படுத்திய இருவரை கைது செய்தீர்கள். சரி விற்றவன் எங்கே?
காட்டுக்குள் சந்தனக் கடத்தல் வீரப்பன், யானை தந்தம் கடத்தல், கடத்தல்காரர்கள் என்று கூறுவீர்கள். விற்றவன் காட்டுக்குள் இருந்தான். வாங்கினவன் எங்கு இருந்தான்? அவர்களில் எத்தனை பேரை கைது செய்தீர்கள்?
கிருஷ்ணாவும், ஸ்ரீகாந்தும்தான் குற்றவாளிகளா? அப்பாவிகள். ஸ்ரீகாந்துக்கு போதைப் பொருள் விற்றவன் அதிமுக நிர்வாகி என்பதால் இதை திருப்புகிறீர்கள். அப்போ, திமுகவிற்கும், போதைப் பொருளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா?
நீ குற்றவாளி யார் என்று பார்? போதைப் பொருள் எப்படி புழங்குகிறது. அதன் வேரை வெட்டு. இளையும், கிளையையும் வெட்டுகிறீர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- போதைப்பொருள் விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.
- உதவி தலைமையாசிரியர் இளையபெருமாள் நன்றி கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் இயங்கிவரும் போதைத் தடுப்பு மன்றத்தின் சார்பில், குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, போதைத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் ராஜபாளையம் அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
போதைப்பொருள் விழிப்புணர்வுக் கூட்டம்
சிக்கலான சூழ்நிலைகளில் மாணவிகள் உடனடியாக, 1098, 181, 100, 155260 என்ற புகார் எண்களில் தொடர்புகொண்டு உதவி கேட்பதும் குறித்தும் எடுத்துரைத்தார். கூட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, காவலர் சங்கரேசுவரி ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் இளையபெருமாள் நன்றி கூறினார்.






