என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப்பொருள் விழிப்புணர்வுக் கூட்டம்
    X

    போதைப்பொருள் விழிப்புணர்வுக் கூட்டம்

    • போதைப்பொருள் விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.
    • உதவி தலைமையாசிரியர் இளையபெருமாள் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் இயங்கிவரும் போதைத் தடுப்பு மன்றத்தின் சார்பில், குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமை, போதைத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது. பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் ராஜபாளையம் அனைத்து மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    போதைப்பொருள் விழிப்புணர்வுக் கூட்டம்

    சிக்கலான சூழ்நிலைகளில் மாணவிகள் உடனடியாக, 1098, 181, 100, 155260 என்ற புகார் எண்களில் தொடர்புகொண்டு உதவி கேட்பதும் குறித்தும் எடுத்துரைத்தார். கூட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, காவலர் சங்கரேசுவரி ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் இளையபெருமாள் நன்றி கூறினார்.

    Next Story
    ×