search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drugs"

    • ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    • ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    திருச்சி:

    திருச்சி வயலூர் ரோட்டில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமானுஜம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    பின்னர் போதை பொருள் விற்பனை கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 4 பேர் பிடிபட்டனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் திருச்சி கனரா பேங்க் காலனி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த பூஜித் (வயது 24), ஈரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த ஆல்வின்(23).

    இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகிறார்.

    திருச்சி ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் நகுல் தேவ் (21). இவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் நவீன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

    கைதான போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் செயல்பட்டு வருகிறார்.

    மேலும் கடத்தலுக்கு கோவையை சேர்ந்த ஒருவர் ஏஜென்டாக செயல்பட்டதும் தெரியவந்தது.

    இவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். மேற்கண்ட போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பல்கள் மற்றும் படகுகள் மூலமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்பட்டது.

    கைதான இந்த நபர்கள் பெங்களூரில் இருந்து இந்த போதை பொருளை வாங்கி வந்து திருச்சி மாநகரில் விற்பனை செய்துள்ளனர்.

    • கடந்த வாரம் மியான்மரிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்திய ரூ.1.5 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை அடுத்த மாதவரம் ரோஜா நகரில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் மியான்மரிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்திய ரூ.1.5 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கார்த்திக், வெங்கடேசன் ஆகியோர் கைதானார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாதவரத்தில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த ரூ.16 கோடி மதிப்புள்ள 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக ஹாகுல் ஹமீது, லாரன்ஸ், சரத்குமார், ஜான்சி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்ததாகவும் தெரியவந்தது.

    தமிழகத்திலேயே அதிகபட்ச அளவாக மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • வழக்கமான போலீஸ் சோதனைகளைத் தவிர்ப்பதற்காக அவர்கள் இப்போது எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பயன்படுத்துகின்றனர்.
    • விருந்துக்கு வரும் வடிக்கையாளர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

    புத்தாண்டு நெருங்கி வருவதால், பெங்களூருவில் கஞ்சா விற்பனையாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். காவல்துறையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க, கடத்தல்காரர்கள் நகரத்திற்குள் போதைப்பொருளை கொண்டு செல்வதற்கான வழிமுறையாக ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

    கஞ்சா மற்றும் பிற போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்க உள்ளூர் காவல்துறையினரால் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்ட போதிலும், கடத்தல்காரர்கள் ஒரு புத்திசாலித்தனமான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். வழக்கமான போலீஸ் சோதனைகளைத் தவிர்ப்பதற்காக அவர்கள் இப்போது எக்ஸ்பிரஸ் ரயில்களைப் பயன்படுத்துகின்றனர்.

    ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெறப்பட்ட கஞ்சாவை கடத்தல்காரர்கள் டிராலி பைகளில் மறைத்து, மற்ற சாமான்களுடன் கலந்து நகருக்குள் கொண்டுருவருகின்றனர்.

    சமீபத்திய நடவடிக்கையில், ரயில்வே போலீசார் ரூ.1 கோடி மதிப்புள்ள 86 கிலோ கஞ்சாவை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி, சட்டவிரோத வர்த்தகத்துடன் தொடர்புடைய 8 நபர்களைக் கைது செய்தனர்.

    புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருபவர்களை, குறிப்பாக விருந்துக்கு வருபவர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகம் உள்ள பெங்களூரில் சமீப காலமாக கஞ்சா பயணப்பட்டு அதிகரித்து வருகிறது.

    ஐடி துறையில் வேலை பார்க்கும் படித்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பலர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவது அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, பெங்களூருவுக்குள் கஞ்சா மற்றும் பிற சட்டவிரோதப் பொருட்கள் நுழைவதைத் தடுக்க போலீசார் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளனர். 

    • போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர்.
    • பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை போலீசார் தீ வைத்து அழித்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடைகள், குடோன்கள் உள்பட பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி பதுக்கி வைக்கப்படும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மேலும் வாகன சோதனை நடத்தி வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் இருப்பு வைத்திருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்லடம் போலீஸ் நிலையம் மூலம் ரூ.3.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை போலீசார் தீ வைத்து அழித்தனர்.

    • விஷால் மேஷ்ரம் மீது 2 கொலை உட்பட 27 வழக்குகள் உள்ளது.
    • திரையரங்கிற்கு வந்த போலீசார் முதலில் விஷால் மேஷ்ரமின் காரை பஞ்சராக்கிவிட்டு திரையரங்கிற்குள் நுழைந்தனர்.

    அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5-ந்தேதி 'புஷ்பா 2' திரையரங்குகளில் வெளியானது. ஆனால் அதற்கு முன் வெளியான சிறப்பு காட்சியில் இருந்து சர்ச்சைக்குள்ளானது 'புஷ்பா 2'. கடந்த 4-ந்தேதி வெளியான சிறப்பு காட்சியை காண அல்லு அர்ஜூன் வந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் கூட்டநெரிசலில் மயக்கமடைந்த அப்பெண்ணின் மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே, மும்பை பாந்த்ராவில் உள்ள திரையிரங்கில் 'புஷ்பா 2' படம் ஓடிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென ஸ்பிரே ஒன்றை அடித்தார். இதனால் படத்தை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக படம் பாதிலேயே நிறுத்தப்பட்டது.

    இதனிடையே பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் கைதாகி பின்னர் ஜாமினில் விடுதலையானார். தெலுங்கு சட்டசபையில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பேசிய முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டைகளை முன் வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய அல்லு அர்ஜூன், தான் சட்டத்தை மதிப்பதாகவும், தனது பெயரை கெடுக்க சதி நடப்பதாகவும் கூறினார். இதற்கிடையே ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    இப்படி சர்ச்சை சம்பவங்கள் 'புஷ்பா-2' வெளியானது முதல் நடைபெற்று வரும் நிலையில், படத்தை பார்க்க வந்த போதைப்பொருள் குற்றவாளியை போலீசார் க்ளைமாக்ஸ் காட்சியில் கைது செய்துள்ள சம்பவம் நாக்பூரில் நடைபெற்றுள்ளது.

    போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியான விஷால் மேஷ்ரம் மீது 2 கொலை உட்பட 27 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இவர் தற்போது 'புஷ்பா-2' படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திரையரங்கிற்கு வந்த போலீசார் முதலில் விஷால் மேஷ்ரமின் காரை பஞ்சராக்கிவிட்டு திரையரங்கிற்குள் நுழைந்தனர். அப்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது விஷால் மேஷ்ரமை போலீசார் கைது செய்தனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • உணவு மற்றும் பானங்களில் நொறுக்கப்பட்ட தூக்க மாத்திரைகளையும், போதைப்பொருள்களையும் கலந்து கொடுத்தார்
    • தீயணைப்பு வீரர்கள், லாரி ஓட்டுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் DJக்கள் அந்த 51 பேரில் அடங்குவர்.

    பிரான்சில் தெற்குப் பகுதியில் அமைதியான நகரங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமப்புறங்களில் ஒன்று மசான் கிராமம்.

    ஆனால் இங்கு கண்டதை 10 ஆண்டுகளாக ஒரு பயங்கர ரகசியமும் ஒளிந்திருந்தது. பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வழக்கு அது. டொமினிக் பெலிகாட் என்ற கணவன் கடந்த 10 ஆண்டுகால காலத்தில் சுமார் 51 ஆண்களை வைத்து தனது மனைவி கிசெல் -லை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த வழக்கு அது.

    தற்போது 72 வயதாகும் டொமினிக் பெலிகாட் 72 வயதாகும் தனது முன்னாள் மனைவி கிசெல் -க்கு ஏறக்குறைய 2011 முதல் 2020 வரை 10 ஆண்டுகளாக, அவர் அறியாமலேயே டொமினிக் உணவு மற்றும் பானங்களில் நொறுக்கப்பட்ட தூக்க மாத்திரைகளையும், போதைப்பொருள்களையும் கொடுத்து சுயநினைவை இழக்கச் செய்து இந்த பாலியல் சித்திரவதைகளில் ஈடுபடுத்தியுள்ளார்.

    கிசெல் பெலிகாட்  

     

    போதைப்பொருள் கடுமையான நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தியதால் தனக்கு நேர்வது இன்னதென அறியாமலேயே கிசெல் இருந்துள்ளார்.

    இப்போது தடைசெய்யப்பட்ட வலைத்தளமான Coco.fr மூலம் கிராமத்தின் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள சுமார் 51 ஆண்களை அலுத்துவந்து இந்த சமயங்களில் கிசெல் - ஐ பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.

    2020 ஆம் ஆண்டில் டொமினிக் பெண்களின் பாவாடையின் கீழ் புகைப்படம் எடுப்பதை சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர் பிடித்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

     

    டொமினிக் பெலிகாட் 

     

     

    அப்போது அவரது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை போலீசார் ஆராய்ந்தபோது கிசெல்-க்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்தது.

    கிசெல் மீதான சித்திரவதை மற்றும் பலாத்கார வீடியோக்களை போலீசார் கண்டுபிடித்தனர். டொமினிக் படம்பிடித்த இந்தப் பதிவுகள், விசாரணையின் மையச் சான்றாக மாறியது.

    இதனையடுத்து கிச்செல் வழக்கு பிரான்ஸ் சட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக மாறியது. போதைப்பொருட்கள் தனது வாழ்க்கையில் துண்டு துண்டான நினைவுகளையும் 10 வருட கால வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கிசெல் உண்மையை அறிந்துகொண்ட கிசெல் கூறுகிறார்.

    டொமினிக் - கிசெல் தம்பதிக்கு 3 குழந்தைகளும் உள்ளனர். வழக்குக்கு மத்தியில் இந்த வருடம் டொமினிக்கை கிசெல் விவாகரத்து செய்தார்.

     

    கிச்செல் - ஐ பலாத்காரம் செய்தவர்களில் 27 முதல் 74 வயது ஆண்கள் அடங்குவர். அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வந்த ஆண்கள், தீயணைப்பு வீரர்கள், லாரி ஓட்டுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் DJக்கள்  அந்த 51 பேரில் அடங்குவர்.

    அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தபோதிலும், வீடியோ ஆதாரங்கள் மூலம் அவர்களில் 50 பேரின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் 3 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

     

    முக்கிய குற்றவாளி டொமினிக் பெலிகாட் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். மற்றொரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதற்காகவும், தனது சொந்த மகள் மற்றும் மருமகள்களின் அந்தரங்கமாக படங்களை எடுத்ததற்காகவும் சேர்த்து அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  

     

    • துணை ஜெயிலர், உதவி ஜெயிலர், தலைமைக் காவலர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.
    • சட்டம் ஒழுங்கு சீரழிந்து காவல் துறையினரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பொது இடங்களில் புழக்கத்தில் இருந்து வந்த போதைப் பொருட்களின் நடமாட்டம் தற்போது சிறைச்சாலைகளுக்குள்ளேயும் புகுந்து விட்டதாகவும், சிறைச்சாலைகளுக்குள்ளேயே கைபேசி மூலம் பேச வேண்டியவர்களுடன் பேசி, எதிரிகளை தீர்த்துக்கட்ட திட்டங்கள் தீட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

    பூந்தமல்லி சிறையில் கைதிகள் அறைகளிலிருந்து ஸ்மார்ட் போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், துணை ஜெயிலர், உதவி ஜெயிலர், தலைமைக் காவலர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது. இந்த நிலைமை நீடித்தால், சட்டம் ஒழுங்கு சீரழிந்து காவல் துறையினரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எனவே முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விஷம் அல்லது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
    • சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என அடையாளம் காணப்பட்ட இருவரை போலீஸ் கைது செய்துள்ளது.

    ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சி சீரியல் நிகழ்ச்சியான கிரைம் பேட்ரோல் -இல் நடித்து நடித்து மக்களுக்கு பரீட்சயமான நடிகை சப்னா சிங். இவருக்கு14 வயதில் சாகர் கங்வார் என்ற மகன் இருந்த நிலையில் தற்போது அவர் மர்மான முறையில் உயிரிழந்தார்.

     

    உத்தரப் பிரதேசம் பரேலியில் தனது தாய் மாமா ஓம் பிரகாஷுடன் தங்கியிருந்த 8ஆம் வகுப்பு படித்துவரும் சாகர், கடந்த டிசம்பர் 7ஆம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இசத்நகர் பகுதியில் உள்ள அடலாக்கியா கிராமத்திற்கு அருகே அவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் விஷம் அல்லது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    தனது மகனின் மரணத்துக்கு கேட்டு நடிகை சப்னா சிங் உறவினர்களுடன் பரேலி காவல் நிலையத்தின் முன் நேற்று வரை போராட்டம் நடத்தி வந்த நிலையில் போலீசாரின் வாக்குறுதியை போராட்டத்தை நிறுத்த உடன்பட்டார்.

     

    இந்நிலையில் இன்று [புதன்கிழமை], சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என அடையாளம் காணப்பட்ட இருவரை, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் போலீஸார் கைது செய்தனர். அனுஜும் சன்னியும் சாகருடன் போதைப்பொருள் மற்றும் மது அருந்தியதாக விசாரணையின்போது ஒப்புக்கொண்டனர்.

    அளவுக்கு அதிகமாக அருந்தியதால் சாகர் மயங்கி விழுந்தான் என்றும் பீதியடைந்த அவர்கள் அவனது உடலை வயல்வெளிக்கு இழுத்துச் சென்றுவிட்டனர் என்றும் வாக்குமூலம் அழித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

    • சுமார் 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இந்த விவகாரத்தில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பழுதடைந்த படகு ஒன்றில் இருந்து 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த விவகாரத்தில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ள போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 4,157 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    • மீன் பிடி படகை சுற்றி வளைத்த, கடற்படையினர் படகில் சோதனை செய்தனர்.
    • வெளிநாட்டு கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற போது, இதேபோன்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அந்தமான் கடற்பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அந்தமான் கடற்பகுதியில் இந்திய கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீன்பிடி படகு ஒன்றில், போதைப்பொருட்கள் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.

    அந்த மீன் பிடி படகை சுற்றி வளைத்த, கடற்படையினர் படகில் சோதனை செய்தனர். அப்போது 2 கிலோ எடை கொண்ட சுமார் 3 ஆயிரம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 டன் எடை கொண்ட போதைப்பொருட்களையும் இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

    இந்திய கடற்படை பறிமுதல் செய்த போதைப்பொருட்களில் இதுவே மிக அதிகபட்சம் என தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கடற்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது;-

    "பறிமுதல் செய்யப்பட்டுள்ள 6 டன் போதைப்பொருட்களும் இந்தியா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்காக கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது." என்றார்.

    அந்தமான் நிக்கோபார் தீவை ஒட்டிய கடற்பகுதியில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்படுவது இது முதல் முறையல்ல. 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற போது, இதேபோன்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் குஜராத் கடற்பரப்பில் சுமார் 700 கிலோ போதைப்பொருளை கடற்படை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் பிடிபட்டனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள்கள் விற்பனையை தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துணை ஆணையர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடைமைகளை அதிகாரிகள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது அதில் சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இருப்பதாக தெரியவந்தது.
    • பெண் பயணி இது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. விமான நிலையங்களில் சோதனைகள் தீவிரமாகி உள்ளது.

    இந்த நிலையில், தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் இருந்து பாரீஸ் நகருக்கு டெல்லி வழியாக பயணித்த ஒரு பெண் பயணி, டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டார். அவரது உடைமைகளை அதிகாரிகள் 'ஸ்கேன்' செய்து பார்த்தபோது அதில் சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மோப்பநாயை வரவழைத்து அதனை மோப்பம் பிடிக்கச் செய்தனர். நாய் மோப்பம் பிடித்து, அது போதைப்பொருள் என சுட்டிக்காட்டியது.

    உடைமைகளை திறந்து ஆய்வு செய்ததில், 'ஹைட்ரோபோபிக்' என்கிற உயர்ரக போதைப்பொருள் இருந்தது. மொத்தம் சுமார் 15 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் ஆகும். பெண் பயணி இது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

    ×