என் மலர்
நீங்கள் தேடியது "kerala"
- அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும்
- இந்த முடிவு எதிர்காலத்தில் தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்
கேரளாவில் அரசு சார்பில் இனிமேல் தொடங்கப்படும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு
மதம் சார்ந்த பெயர்கள் வைக்கப்படாது என கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச்சார்பற்றதாக இருப்பதையும், சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை பிரதிபலிப்பதையும் உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு எதிர்காலத்தில் தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தற்போதுள்ள அரசு கல்வி நிறுவனங்களின் பெயர்களைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.
- 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் வேடன் கவனம் பெற்றார்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன், தனது நீண்ட நாள் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை கரம் பிடித்தார்.
செம்புக்காவு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து எளிமையான முறையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. இவரே பின்னணியில் வேடன் ஆனார்.
2020 கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் கவனம் பெற்றார்.
"நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார். தொடர்ந்து சில படங்களிலும் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
'மஞ்ஞும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார். திரைப்படங்களை தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வருகிறார்.
- கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.
- முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நேர்காணலின் டீசரில் மோகன்லால் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நீங்கள் பழைய நேர்காணல்களில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு ஆம் என்று கூறிய பினராயி விஜயன், ரஜினிகாந்தின் ஆக்சன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
- மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்றுதான் உள்ளது.
- ஆங்கிலத்திலும் இந்திய அரசியலமைப்பிலும் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான கேரள சட்டப்பேரவையில் இந்த பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு இன்று நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்றுதான் உள்ளது. ஆனால், ஆங்கிலத்திலும் இந்திய அரசியலமைப்பிலும் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்றே அழைக்க வேண்டும் என அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 3 இன் கீழ் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் பெயர் நடைமுறைக்கு வரும்.
இந்நிலையில், 'கேரளா'வை 'கேரளம்' என்று பெயர் மாற்றுவது தொடர்பாக பிரதமர் மோடி மலையாளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் கேரளா மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இது கேரள மாநில மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. இது நமது சிறந்த கலாச்சாரத்துடனான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான நமது முயற்சிகளின் ஒரு பகுதியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
- மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.
- கேரளாவில் தேர்தல் நெருங்கி வருகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.
பினராயி விஜயனின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது அரசியல் பயணம் மற்றும் தற்போதைய அரசின் நிர்வாகம் குறித்து மோகன்லால் கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.
இந்த நேர்காணலின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
கேரளாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த நேர்காணல் நடைபெறுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது அரசின் ஒரு விளம்பர முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அவர்களையும் அவர் இதேபோல் நேர்காணல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியே காரணம்.
- ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்
கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் கேரளாவிற்கு அளிக்கப்பட்ட அதே முக்கியத்துவம் மேற்கு வங்கத்திற்கு அளிக்கப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது, "மாநிலத்தின் பெயர் 'West Bengal' என்று 'W' எழுத்தில் தொடங்குவதால், தேசிய அளவிலான கூட்டங்கள், தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் மேற்கு வங்க மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எப்போதும் கடைசியாகவே அழைக்கப்படுகின்றனர்.
நானும் கூட்டங்களில் கடைசியாகப் பேசும் வாய்ப்பையே பெறுகிறேன்.
மேற்கு வங்க சட்டமன்றத்தில் மாநிலத்தின் பெயரை Bangla (வங்காளம்) என மாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.
இருப்பினும், மத்திய அரசு அதனை நிலுவையில் வைத்துவிட்டு, கேரளாவின் கோரிக்கையை மட்டும் விரைவாக நிறைவேற்றியிருப்பது வஞ்சகமானது.
கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியின் காரணமாகவே, அம்மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு உடனே சம்மதித்துள்ளது.
பாஜக தேர்தலின் போது மட்டும் 'Bangla' என்ற வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற நேரங்களில் பெங்காலிகளை அவமதிக்கிறது.
ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
- மலையாள மொழியில் 'கேரளம்' என்று அழைக்கப்படுவதை, அதிகாரப்பூர்வ பெயராக மாற்ற வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
- 'கேரளம்' என்பதற்கு "தென்னை மரங்கள் நிறைந்த நிலம்" என்று அர்த்தம்.
'கேரளா'வை 'கேரளம்' என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான கேரள சட்டப்பேரவையில் இந்த பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு இன்று நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்றுதான் உள்ளது. ஆனால், ஆங்கிலத்திலும் இந்திய அரசியலமைப்பிலும் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்றே அழைக்க வேண்டும் என அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 3 இன் கீழ் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் பெயர் நடைமுறைக்கு வரும்.
- வரலாற்று அடையாளத்தையும் சிறப்பாக பிரதிபலிக்கிறது.
- இது மாநிலத்தின் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகிறது.
கேரளாவின் பெயரை அதிகாரப்பூர்வமாக "கேரளம்" என்று மாற்றுவதற்கான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரம்பரிய மலையாளப் பெயரை முறைப்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றம் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றியது. இந்த நிலையில், வரவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக முதலில் 2023 இல் தீர்மானத்தை நிறைவேற்றி பின்னர் ஜூன் 2024 இல் அதை புதுப்பித்து, 'கேரளம்' மாநிலத்தின் மொழியியல் பாரம்பரியத்தையும், வரலாற்று அடையாளத்தையும் சிறப்பாக பிரதிபலிக்கிறது என்று வாதிட்டது.
கடந்த மாதம், கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கு எழுதிய கடிதத்தில், மாநிலத்தை `கேரளம்' என்று மறுபெயரிடுவதற்கான மாநில அரசின் நடவடிக்கையை ஆதரித்தார். மேலும் அந்த கடிதத்தில்," மாநிலத்தின் அசல் பெயர் `கேரளம்' என்றும், ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக அதை கேரளா என்று மாற்றியதாகவும். அவர்களால் செய்யப்பட்ட மாற்றங்கள் சரிசெய்யப்பட்டு உண்மையான பெயர் மீட்டெடுக்கப்படுகிறது. இது மாநிலத்தின் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகிறது," என்று கேரள முதல்வர் கூறினார்.
அதிகாரப்பூர்வ பதிவுகளில் கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை முடிவு அங்கீகரிக்கப்பட்டால், ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்குத் தேவையான அரசியலமைப்பு செயல்முறைத் தொடங்கும், இதில் பிரிவு 3 இன் கீழ் திருத்தங்கள் மற்றும் அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் புதுப்பிப்புகள் உள்ளிட்டவை அடங்கும். முன்மொழியப்பட்ட மாற்றம் குறியீட்டு இயல்புடையது. இதனால் நிர்வாக கட்டமைப்புகள், நிர்வாக வழிமுறைகள் மற்றும் பிராந்திய எல்லைகள் எதுவும் மாறாது.
- ஒரு பூனையைக் கண்ட ஆலன், அதைத் துரத்திக் கொண்டு ஓடியுள்ளான்.
- இறைவன் எங்களுக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தான். அவன் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் முன்னோக்கிச் செல்ல முயல்கிறோம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த ஷெராபுதீன் தனது மனைவி மற்றும் 22 மாதக் குழந்தை (1.8 வயது) ஆலன் ரூமி உடன் வசித்து வந்தார்.
கடந்த வாரம் ஒரு மாலை வேளையில், ஷெராபுதீனின் மனைவி மற்றும் குழந்தையை வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஒரு பூனையைக் கண்ட ஆலன், அதைத் துரத்திக் கொண்டு ஓடியுள்ளான்.
தாய் தன்னை துரத்தி வருவதை கண்ட குழந்தை, அது ஒரு விளையாட்டு என நினைத்து வேகமாக ஓடியபோது, அந்தப் பாதையில் வந்த காரின் அடியில் சிக்கினான்.
காரை ஓட்டி வந்த இந்திய நபர், உடனடியாகக் குழந்தையை தனது காரிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஆலன் ரூமி உயிரிழந்தான்.
குழந்தையை இழந்த துக்கத்திலும் அந்தப் பெற்றோர் காட்டிய மனிதாபிமானம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது எந்தப் புகாரும் அளிக்கப் போவதில்லை என ஷெராபுதீன் தம்பதியினர் முடிவெடுத்தனர். விபத்து ஏற்படுத்தியவரை மன்னிப்பதாக அவர்கள் அதிகாரிகளிடம் எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய ஷெராபுதீன், "எங்கள் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஆனால், தெரியாமல் நடந்த ஒரு விஷயத்திற்காக மற்றொரு குடும்பம் துன்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
இந்தக் குடும்பம் வரும் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் உம்ரா செல்லவும், பின்னர் ஈத் பண்டிகையைக் கொண்டாட இந்தியா வரவும் திட்டமிட்டிருந்தது.
ஈத் முடிந்து மீண்டும் அமீரகம் வந்ததும், நிரந்தரமாக அங்கேயே செட்டில் ஆவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து வந்தனர். ஆனால், ஒரு விபத்து அவர்களின் அனைத்துக் கனவுகளையும் கலைத்துவிட்டது.
"இறைவன் எங்களுக்கு வேறு திட்டங்களை வைத்திருந்தான். அவன் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் முன்னோக்கிச் செல்ல முயல்கிறோம்" என்ற ஷெராபுதீன் கண்ணீருடன் தெரிவித்தார்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவதற்கு முன்பு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 855 ஆக இருந்தது.
- இறுதி வாக்காளர் பட்டியலில் 2 கோடியே 69 லட்சத்து 53 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவதற்கு முன்பு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 855 ஆக இருந்தது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2 கோடியே 69 லட்சத்து 53 ஆயிரத்து 644 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து 8 லட்சத்து 97 ஆயிரத்து 211 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருத்தப்பட்ட பட்டியலில் ஆண் வாக்காளர்கள் கோடியே 31 லட்சத்து 26 ஆயிரத்து 48 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 38 லட்சத்து 27 ஆயிரத்து 319 பேர், திருநங்கைகள் 277 பேர் உள்ளனர்.
- மாட்டிறைச்சியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.
- பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது
சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'.
கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது.
வெளியான சமயத்தில் நாடு முழுவதும் இப்படம் பெரும் பதற்றத்தை இப்படம் ஏற்படுத்தியது.
தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது. காமக்யா நாராயண் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாக உள்ளது.
முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், இந்துப் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி ஊட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
கேரளாவின் உணவு கலாச்சாரத்தில் 'பீப்-பரோட்டா' என்பது அனைத்து மதத்தினரிடையேயும் பிரபலமானது. அங்கு யாரும் யாருக்கும் கட்டாயப்படுத்தி உணவளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி சமூக ஊடகங்களில் கேரள மக்கள் இந்தப் படத்தின் காட்சியை விமர்சித்து வருகின்றனர்.
கேரள சுற்றுலாத் துறை "No Beef With Anyone" (யாருடனும் எங்களுக்குப் பகை இல்லை) என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டரைப் பகிர்ந்துள்ளது.
சிபிஐ(எம்) கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI மற்றும் மாணவர் அமைப்பான SFI ஆகியவை மாநிலம் முழுவதும் 'பீப் திருவிழா' நடத்தித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன.
திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பீப் கறியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.
கேரளாவின் மதச்சார்பற்ற பிம்பத்தைச் சிதைக்கவும், மத வெறுப்பைத் தூண்டவும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கேரளா மத நல்லிணக்கம் மற்றும் சட்ட ஒழுங்கிற்கு முன்மாதிரியான மாநிலம். இத்தகைய பொய்யான பரப்புரைகளை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், "பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது" என்று கூறியுள்ளார்.
மேலும், படத்தின் முதல் பாகத்திற்கு தேசிய விருது வழங்கி பாஜக இத்தகைய படங்களை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், இது கருத்து சுதந்திரம் என்றும், முதல்வர் பினராயி விஜயன் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார்.
கேரளாவின் கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தின் மீது இந்தப் படம் தாக்குதல் நடத்துவதாக பெரும்பான்மையானோர் கருதுகின்றனர்.
இதற்கிடையே இந்த படத்துக்கு வாங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- ஏஐ ரியல்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறான்.
- 12 வயதிலேயே தனக்கு நிகரான ஒரு டிஜிட்டல் குளோன்-ஐ உருவாக்கினான்.
டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ஏஐ தாக்க சர்வதேச உச்சிமாநாடு இன்றுடன் நிறைடைகிறது.
இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நடந்த கண்காட்சியில் பலவேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தின.
இந்தச் சர்வதேச மேடையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ரவுல் ஜான் அஜு என்ற 16 வயது சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.
மாநாட்டில் ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரஸ் உள்ளிட்ட பல தலைவர்களை ரவுல் ஜான் அஜு சந்தித்தான்.

ரவுல் ஜான் அஜு
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளியை சேர்ந்த ரவுல், ஏஐ ரியல்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) செயல்பட்டு வருகிறான்.
இந்த நிறுவனத்தின் கீழ், இந்திய நீதித் துறைக்காக நியாயசாதி என்ற ஏஐ உதவியாளரையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்காக ஜஸ்ட்ஈஸ் என்ற சட்ட உதவிக்கான சாட்பாட்-ஐயும் உருவாக்கி உள்ளான்.
6 வயதிலிருந்தே ஏஐ மீது ஆர்வம் கொண்ட ரவுல், தனது கல்வி தளத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் 'Vbot' என்ற ஒரு ஏஐ-ஐ உருவாக்கினான். மேலும் தனது 12 வயதிலேயே தனக்கு நிகரான ஒரு டிஜிட்டல் குளோன் மற்றும் MeBot என்ற ஹூமனாய்டு ரோபோவை உருவாக்கினான்.
கடந்த ஆண்டு தனது நிறுவனத்தில் தனது தந்தையையே ஒரு ஊழியராக நியமித்து செய்திகளில் இடம்பிடித்தான். பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு ஏஐ குறித்து பயிற்சி அளித்துள்ளான். ஏஐ மாநாட்டுக்கு முன்னதாக கடந்த வாரம் பிரதமர் மோடியை ரவுல் சந்தித்தான்.
மேலும் அண்மையில் வந்தே பாரத் ரெயிலில் கேரள காங்கிரஸ் எம்பி சசி தரூர் ரவுல் உடன் பயணம் செய்தபோது அவனின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து ஊக்குவித்ததும் கவனம் பெற்றது.






