என் மலர்
நீங்கள் தேடியது "பெயர் மாற்றம்"
- பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் ஆகியவை செயல்படும்.
ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ரவி வைத்த கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாணிகைகளின் ராஜ் பவன் என்ற பெயர் லோக் பவன் என்று மாற்றப்பட்டது.
ஆளுநர்கள் ராஜாக்கள் அல்ல என்பதாலும் ஆளுநர் மாளிகை மக்களுக்கான தளம் என்பதாலும் லோக் (மக்கள்) பவன் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
இந்த சூழலில் டெல்லியில் பிரதமர் அலுவலகம் (PMO) செயல்பட உள்ள புதிய கட்டிட வளாகத்திற்கு 'சேவா தீர்த்' என்று பெயரிடப்பட உள்ளது. 'சேவா தீர்த்' என்பது புனிதமான சேவைத்தலம் என்று பொருள்படும்.
கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த வளாகத்தில், பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் ஆகியவை செயல்படும்.
உலகத் தலைவர்களுடனான உயர் மட்ட சந்திப்புகளுக்கான 'இந்தியா ஹவுஸ்' கூட இதில் ஒரு பகுதியாக இருக்கும்.
பிரதமர் மோடியின் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமரின் இல்லம் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் சாலை 'லோக் கல்யாண் மார்க்' என்றும், வரலாற்று சிறப்புமிக்க ராஜ பாதையை 'கர்தவ்ய பாதை' என்றும், மத்திய செயலகம் 'கர்தவ்ய பவன்' என்றும் பெயர் மாற்றப்பட்டது.
- ராசிபுரம் நகர் பிரிவு மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தது.
- முகாமில் 180 மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பட்டணம் ரோடு சாமுண்டி தியேட்டர் பின்புறம் உள்ள ராசிபுரம் நகர் பிரிவு மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் 180 மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம் மின் கோட்ட மின்வாரிய செயற்–பொறியாளர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். நகர தி.மு.க செயலாளர் என்.ஆர்.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாமக்கல் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் முகாமில் கலந்து கொண்டு 95 மின் நுகர்வோர்களுக்கு பெயர் மாற்றம் செய்து உத்தரவு வழங்கினார்.
மீதமுள்ள மின் நுகர்–வோர்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் கோரப்பட்டு நடப்பில் வைக்கப்பட்டுள்ளது. முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த மின் நுகர்–வோர்கள் விரைவாக பெயர் மாற்றம் செய்து தந்த மின்வாரிய அலுவலர்களை பாராட்டினர். முகாமிற்கான ஏற்பாடு–களை ராசிபுரம் கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்–பொறியாளர்கள் மோகன்ராஜ், வெங்கடா–சலம், ரவி, ராமராஜ் மற்றும் பிரிவு அலுவலர்கள், பணியா–ளர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.
- 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் நடைபெறும்
- இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பின்னர் மின் வாரிய சிறப்பு முகாமுக்கு வர வேண்டும்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் எம். ஆர். பத்மகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின் இணைப்பின் உரிமையாளர் தங்களது மின் இணைப்பினை தங்களது பெயரில் மாற்றம் செய்யாமல் அனுபவித்து வரும் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளை பெயர் மாற்றம் செய்து கொள்ள ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 46 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பெயர் மாற்றம் செய்து கொள்ள தேவைப்படும் நுகர்வோர்கள் உரிய ஆவணங்களுடன் இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பின்னர், ஆவண நகல்களுடன் மின் வாரிய சிறப்பு முகாமுக்கு வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெயர் மாற்றம் செய்ய வேண்டிய மின் நுகர்வோர் கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள்:-
கிரையம், பாகப்பிரிவினை, சமரசம், நன்கொடை மூலம் உரிமை கிடைக்க பெற்ற மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய தற்போதைய வரி ரசீது (உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி) உறுதிமொழி படிவம் 4, படிவம் 2, பெயர் மாற்றம் பெற பழைய உரிமையாளரின் ஒப்புதல் (படிவம்2) வழங்கப்படாத பட்சத்தில் வைப்பு தொகை பெற்று பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
வாரிசுதாரர்களால் பயன் பெற்று வரும் மின் இணைப்புகளுக்கு வாரிசுதாரரின் பெயரில் உள்ள தற்போதைய வரி ரசீது, வாரிசு சான்றிதழ், மற்ற வாரிசுதாரர்களிடம் இருந்து தடையில்லாத சான்றிதழ் அல்லது படிவம் 3 வழங்க வேண்டும்.
மின் இணைப்பின் பெயரில் உள்ளவரின் வாரிசுகள் அனைவரின் பெயரிலும் சேர்த்து பெயர் மாற்றம் செய்திட வாரிசு சான்றுடன் இணைய தளம் வழி விண்ணப்பம் பதிவு செய்து, அதன் நகல்களை அலுவலகத்தில் ஒப்படைக்கவும். எவ்வித வகைகளில் தாங்கள் பெயர் மாற்றம் செய்ய வேண்டி உள்ளது என் பதை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையிலான ஆவணங்களுடன் இணைய தளம் மூலம் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் பதிவு செய்து, அதற்குண்டான கட்டணம் செலுத்தியவுடன் 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் செயல்படும் சிறப்பு முகா மில் ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆவணங்களின் நகல்கள் ஒப்படைத்த ஒரு சில மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து தரப்படும்.
பெயர் மாற்றம் செய்ய வேண்டியவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, 46 மின் வினியோக பிரிவு அலுவலகங்களில் நடை பெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளவும். தாங்கள் பதிவு செய்யும் ஆவணங்களின் அடிப்ப டையில் பெயர் மாற்றம் செய்வதால், பதிவு செய்த ஆவணங்களில் முறைகேடுகள் ஏதும் பின்னர் கண்டறியப்பட்டால் மறு அறிவிப்பின்றி பெயர் மாற்றம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும்.
- மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுரங்காபாத்:
மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி அந்த மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.
அதை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும்.
இந்த தகவலை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிஸ் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டிள்ளது
- நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் பாஜக கூட்டணி அரசின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே சர்வதேச விமான நிலையத்தின் பெயரை ஜகத்குரு சந்த்ஸ்ரேஸ்தா துக்காராம் மகாராஜ் புனே சர்வதேச விமான நிலையம் என மாற்ற அம்மாநில பாஜக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற மராட்டிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மராட்டிய வரலாற்றில், 17-வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்துமத துறவியான துக்காராம் பக்தி கவிதைகள் மற்றும் மற்றும் கீர்த்தனைகள் எனப்படும் பக்தி பாடல்களால் நன்கு அறியப்படுபவர் ஆவார்.
எனவே புனே விமான நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டி கவுரவிக்க மராட்டிய அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த பெயர் மாற்றம் பாஜக கூட்டணி அரசின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
- பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி" என்று கல்வித் துறையினர் மாற்றியுள்ளனர்.
- நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதிலிருந்து 'பாஜக' என்று மாற்றுவது ஒன்றுதான் இன்னும் நடக்காமல் இருக்கிறது
1965இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வீரமரணமடைந்தவர் இந்திய ராணுவ வீரர் அப்துல் ஹமீத். போரில் 8 பாகிஸ்தான் பீரங்கிகளை அழித்த அப்துல் ஹமீத் 9வது பீரங்கியை தாக்கும்போது வீரமரணமடைந்தார். பரம் வீர் சகாரா பெற்றவர் இவர்.
உத்தரப் பிரதேசம் காஜிபூர் அருகே ஜகானியன் தாலுகாவின் கீழ் உள்ள தாமுபூர் கிராமத்தை சேர்ந்தவர் இவர். அங்கு இயங்கி வரும் அரசு பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்பு, பள்ளியில் பெயிண்ட் அடித்தபோது, பள்ளியின் பெயரை "பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி" என்று கல்வித் துறையினர் மாற்றியுள்ளனர்.
இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கல்வித் துறை அதிகரிகள், சுவரின் ஹமீத்தின் பெயரை எழுதி அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.
இருப்பினும், ஹமீத்தின் பேரன் ஜமீல் அகமது, இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். "தேசத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்த ஒரு போர் வீரரின் பெயரை அழித்தது மன்னிக்க முடியாத தவறு" என்று அகமது கூறினார்.
மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இன்று (பிப்ரவரி 18) பள்ளியின் பெயர் பிரதான நுழைவாயிலில் 'ஷாஹீத் வீர் அப்துல் ஹமீத் பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி' என்று மாற்றப்பட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சித் தலைவரும் முன்னாள் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ் இந்த விவகாரத்தில் பாஜக தலைமையிலான மாநில அரசை கடுமையாக சாடினார். "நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்கள் மற்றவரை விட குறைவான முக்கியத்துவத்தைப் பெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் அநாகரீகமானது.
இப்போது நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதிலிருந்து 'பாஜக' என்று மாற்றுவது ஒன்றுதான் இன்னும் நடக்காமல் இருக்கிறது என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சுதந்திரம் பெறுவதிலும் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதிலும் எந்தப் பங்கையும் வகிக்காதவர்கள், தியாகிகளின் முக்கியத்துவத்தை எப்படி அறிந்திருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை பா.ஜனதா கட்சி பிரசாரத்தில் களம் இறக்கியது.
நேற்று அவர் கரீம் நகரில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், ‘‘மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கரீம் நகரின் பெயர் கரிபுரம் என மாற்றப்படும், உங்கள் உணர்வுகள் மதிக்கப்படும்’’ என கூறினார்.
யோகி ஆதித்யநாத், கடந்த 2-ந் தேதி ஐதராபாத்தில் பிரசாரம் செய்தபோது, ‘‘ஐதராபாத்தின் பெயரை பாக்ய நகர் என மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பா.ஜனதா கட்சியை ஆட்சி செய்வதற்கு தேர்ந்தெடுங்கள்’’ என்று அழைப்பு விடுத்தது நினைவுகூரத்தக்கது.
தெலுங்கானா மாநில பா.ஜனதா கட்சி தலைவர் டி.ராஜாசிங் லோத், பா.ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தால் அந்த மாநிலத்தில் உள்ள பல நகரங்களின் பெயர்கள், தலைவர்களின் பெயர்களைக் கொண்டு மாற்றப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது. #KarimNagar #Karipuram #BJP #YogiAdityanath
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வங்காளம் 2 ஆக பிரிக்கப்பட்டது. மேற்கு வங்காளம் இந்தியாவுடன் இணைந்தது. கிழக்கு வங்காளம் பின்னர் வங்காளதேசம் என தனி நாடு ஆனது. வங்காளத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், ஆங்கில எழுத்தின்படி மாநிலங்களின் பட்டியலில் கடைசி வரிசையில் இருப்பதை தவிர்க்கவும் மேற்கு வங்காளத்தின் பெயரை மாற்ற அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்தார்.
இதையடுத்து 2011-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தை ‘பச்சிம் பங்கா’ என பெயர் மாற்றம் செய்யக்கோரி மத்திய அரசின் ஒப்புதலுக்கு மம்தா பானர்ஜி அனுப்பினார். ஆனால் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து பெங்காலியில் ‘பங்ளா’ எனவும், ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ எனவும், இந்தியில் ‘பங்கால்’ எனவும் மாற்றக்கோரி மீண்டும் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதுவும் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் பெங்காலி, ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளுக்கும் பொதுவாக ‘பங்ளா’ என்ற பெயர் மாற்றம் செய்து மேற்கு வங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை மத்திய அரசின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்காள அரசு நேற்று அனுப்பியது.






