என் மலர்
நீங்கள் தேடியது "தெலுங்கானா"
- 300 மாணவிகளின் ஆபாச படம் பதிவு.
- கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் மேட்சல் நகரப் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
விடுதியில் உள்ள கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு மாணவிகளின் ஆபாச படம் பதிவு செய்ததாக தகவல் வெளியானது.
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் கல்லூரிக்கு வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த 3 மாதங்களில் விடுதி கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு 300 ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் விடுதி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளது.
கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறது. பிரச்சனை வெளியே போனால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வருகின்றனர்.
ஆபாச படங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக அழிக்க வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள், காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறினர்.
போலீசார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பாக கல்லூரியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யாவை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 30). பட்டதாரி வாலிபரான இவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ முடிவு செய்தார். அதன்படி தனது தலையில் முடி இல்லாததால் விக்கு வைத்துக் கொண்டார். ஆடம்பரமான விலை உயர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு சினிமா நடிகர் நடிகைகள் அரசியல் தலைவர்கள் மற்றும் வணிக பிரபலங்களுடன் செல்பி போட்டோ எடுத்து போல மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
திருமண ஆன்லைன் வலைதளங்களில் இவரது படங்களை பார்த்த இளம் பெண்கள் பலரும் இவரை தொடர்பு கொண்டனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நித்யா இளம் பெண்களை காபி ஷாப் மற்றும் ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் இளம் பெண்களின் அனுதாபத்தை பெறுவதற்காக தனது கையில் உள்ள வெட்டு காயங்களை காண்பித்தார்.
இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களது செல்போன் எண்களை வாங்கி நீண்ட நேரம் பேசி மயக்கினார். வாட்ஸ் அப்பில் பெண்களை கவரக்கூடிய வகையில் தகவல்களை அனுப்பினார்.
இதனை உண்மை என நம்பிய இளம் பெண்கள் நித்யாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமுள்ளதாக அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இளம்பெண்களை ஓட்டலுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். அப்போது தனது செல்போனில் இளம்பெண்களை நிர்வாண வீடியோ எடுத்துள்ளார் .
ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாக இளம் பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். நித்யாவிடம் சிக்கிய இளம் பெண் ஒருவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இளம் பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து கச்சி பவுலி போலீசில் புகார் செய்தனர்.
விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது ஏராளமான இளம் பெண்களின் ஆபாச வீடியோ இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நித்யா மீது இதுவரை 2 பெண்கள் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யாவை கைது செய்தனர்.
- தெலுங்கானாவில் வேலையில்லாத இளைஞர்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது.
- காங்கிரசை விட தெலுங்கானா மக்கள் மோடி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு வாக்குறுதி அளித்தபடி வேலை வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் அந்த மாநிலத்தின் மூத்த தலைவர் மத்திய உள்துறை இணை மந்திரி பண்டி சஞ்சய் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
"பாஜக ஆளும் மாநிலங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் பரவுகிறது என்று பேசும் ராகுல் காந்தி, ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குச் சென்று மாணவர்களுக்கு வாக்குறுதி கொடுக்க முடியுமா. நான் சவால் விடுகிறேன். உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்க ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா?
தெலுங்கானாவில் வேலையில்லாத இளைஞர்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது. முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அரசு கடந்த 7 மாதங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கத் தவறிவிட்டது.
மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு கிசான் சம்மான் நிதியை வெளியிட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தினார்.
தேர்தலின் போது, மாநிலத்தில் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது, தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்து வருவதை எடுத்து க்காட்டுகிறது. காங்கிரசை விட தெலுங்கானா மக்கள் மோடி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், லஷ்மி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் ரெட்டி (வயது 55). இவர் சந்திரசேகர ராவின் பி.ஆர். எஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் ரெட்டி வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஸ்ரீதர் ரெட்டியை கோடாரியால் சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஸ்ரீதர் ரெட்டி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஸ்ரீதர் ரெட்டியின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீதர் ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை கொலை செய்யப்பட்டதற்கு உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டினர். ஆனால் குற்றச்சாட்டிற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 2-ந்தேதி தெலுங்கானா மாநிலம் உருவானது. இதை அந்த மாநில அரசு கொண்டாடி வருகிறது. தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பப்ளிக் கார்டன் பகுதியில் அந்த மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், தேசியக் கொடியை ஏற்றி மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
குறுகிய காலத்தில் தெலுங்கானா மாநிலம், மிக விரைவான, நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளது. கூடுதல் பாசனம், குடிநீர் கிடைப்பதோடு, மக்கள் நலன், தகவல் தொடர்பு மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அனைத்து துறைகளுமே வளர்ச்சி அடைந்துள்ளன. தெலுங்கானா தற்போது இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது.
நிதி விவகாரங்களில் மிக சரியான திட்டமிடல் மூலம் மாநில அரசினால் வருவாய் ஆதாரங்களை உயர்த்த முடிந்தது. 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை, ஆண்டு பொருளாதார வளர்ச்சி என்பது 17.24 சதவீதமாக இருந்தது. இது தெலுங்கானா மாநிலத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக உயர்த்தியது.
கொரோனா பெருந்தொற்று போன்ற பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் கூட மாநில வளர்ச்சியில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. 2014-15-ம் ஆண்டில் தெலுங்கானா உருவானபோது மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்து 849 கோடியாக இருந்தது. 2021-22-ம் ஆண்டில் இது ரூ.11 லட்சத்து 54 ஆயிரத்து 860 கோடியாக உயர்ந்துள்ளது.
அதுபோல 2014-15-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 104 ஆக இருந்த தனிநபர் வருமானம், 2021-22-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து துறைகளுக்கும் 24 மணிநேரமும் தடையற்ற தரமான மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் தெலுங்கானாவாகும். மாநிலம் தொடங்கப்பட்ட போது தெலுங்கானாவில் இருந்த 7,778 மெகாவாட் என்ற நிறுவு திறன் தற்போது 17 ஆயிரத்து 305 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. அதுபோல சூரிய மின்சக்தியையும் 74 மெகாவாட்டில் இருந்து கடந்த 8 ஆண்டுகளில் 4,478 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. இது இந்த மாநிலத்தின் சாதனையாகும்.
பகிரதா திட்டத்தை இயக்கமாக அரசு செயல்படுத்தியதை தொடர்ந்து அனைத்து வீடுகளுக்கும் இன்று பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கடனை குறைப்பதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மக்களிடையே முன்பிருந்த பாகுபாட்டை நீக்கும் வகையில் தலித் மக்களின் மேம்பாட்டை நோக்கிய சமூக சீர்திருத்தத் திட்டமான தலித் பந்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கு அதிகாரங்களை அளிப்பதோடு தன்னிறைவை பெறச் செய்து பொருளாதாரத்தில் அவர்களை வலுப்படுத்தினால், அவர்களை பாகுபாட்டில் இருந்து விடுதலை செய்ய முடியும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது. ஐதராபாத் நகரின் 4 திசைகளிலும் 4 தெலுங்கானா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (டைம்ஸ்) பல்நோக்கு நவீன சிறப்பு ஆஸ்பத்திரிகள் அமைக்கப்பட்டு ஐதராபாத் மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்.
கடந்த 8 ஆண்டுகளில் 1.33 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தெலுங்கானா உருவான பிறகு ஐதராபாத் நகரத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2.32 லட்சம் கோடி முதலீட்டில் தொழில்கள் தொடங்கப்பட்டு 16.49 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.