search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "telungana"

    • 90 லட்சம் குடும்பங்களுக்கு ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
    • அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும்

    தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

    அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்றும், மகாலட்சுமி திட்டத்தின் மூலம் மொத்தம் 40 லட்சம் குடும்பங்கள் இதில் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார்.

    தெலுங்கானாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியை வழங்கும் திட்டத்தையும், ராஜீவ் ஆரோக்யஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டத்தையும் டிசம்பர் 9-ஆம் தேதி காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது.
    • நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள்.

    காணிப்பாக்கம் விநாயகர் மகிமை

    காணிப்பாக்கம் என்று இப்போது அழைக்கப்படும் ஸ்தலம். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் விஹாபுரி கிராமமாக இருந்தது.

    அந்த கிராமத்தில் மூன்று நண்பர்கள் ஒற்றுமையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மூவருமே உடல்குறை உள்ளவர்கள். ஒருவரால் பேச முடியாது, ஒருவர் பார்வையற்றவர், முன்றாமவரால் கேட்க இயலாது.

    அவர்கள் கிணற்றிலிருந்து ஏற்றம் மூலம் நீர் முகந்து வயல்களில் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். செவியற்றவரும் பார்வையற்றவரும் ஏற்றக்காலில் ஏறி நின்று மிதிக்க, ஏற்றம் சுமந்துவரும் நீரை கீழே இருக்கும் பேச்சிழந்தவர் கையால் பற்றி கால்வாயில் ஊற்றுவார்.

    வறட்சியால் கிணற்றில் நீர் வற்றிவிடவே பேச்சிழந்தவர் உள்ளே இறங்கி ஊற்று நீர் கிடைக்குமா என்று பார்க்க மண்வெட்டியால் தோண்டினார். அப்போது மண்வெட்டி பாறை ஒன்றில் மோத அந்தப்பாறையிலிருந்து ரத்தம் பீறிட்டது.

    அதைப்பார்த்த அவர் பயந்து "ஐயோ" என்று அலறினார். கிணற்றுக்கு மேலே நின்றிருந்த பார்வையற்றவருக்கும் இவர் கத்தியது கேட்க இருவரும் உள்ளே எட்டிப்பார்த்தனர். செவியற்றவர் கேட்டார் பார்வையற்றவர் பார்த்தார்.

    கிணற்றிலிருந்து நீருக்கு பதிலாக குருதி பெருகுவதைக்கண்டு இவர்கள் கூச்சலிட வயிலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். நடந்த அதிசயங்களைக்கண்டு அவர்கள் பிரமித்து நின்றார்கள். சில விநாடிகளுக்குப் பிறகு பிரமிப்பிலிருந்து விடுபட்டு கிணற்றுக்குள் இறக்கினர்.

    உள்ளே ஒரு பாறை அமைப்பிலான விநாயகர் சிலையையும் அதன் தலையிலிருந்து ரத்தம் வருவதையும் பார்த்தனர். ஒரு துணி எடுத்து குருதி பெறுகிய இடத்தில் வைத்துக்கட்டினார்கள். பிறகு அந்த சிலையை வெளியே எடுத்து வந்தார்கள்.

    மேலே வந்து விநாயகரை நிறுவி, தற்காலிகக்கோவில் ஒன்றை நிர்மானித்தார்கள். அதன் பிறகு கிராமமக்கள் ஒவ்வொருவரும் அவரை வேண்டிக்கொண்டு உடைத்த தேங்காய்களிலிருந்து, வெளிப்பட்ட நீர் ஒரு காணி பரப்பளவில் பரவிநின்றதாம்.

    அதாவது சுமார் ஒன்றேகால் ஏக்கர்! காணி நிலத்தில் பாரகமானதால் (தெலுங்கில் பாரகம் என்றால் நீர் பாய்தல் என்று பொருள்) இந்ததலம் காணிப்பாரகமாகி பிறகு காணிப்பாக்கம் ஆனது.

    "ஸ்ரீகாணிப்பாக்கம்" வரசித்த விநாயகர் சாட்சியாக, நான் சொல்வதெல்லாம் சத்தியம் என்று எவர் கூறுகிறாரோ, அவருடைய இந்த "சத்தியப்பிரமாணம்" இன்றளவும் ஆந்திர மாநிலம் கிராமப் பஞ்சாயத்துகளில் நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சத்தியத்துக்கு மாறாக எவரேனும் நடத்துகொண்டால், அவர் தொண்ணூறு நாட்களுக்குள்ளேயே விநாயகரால் தண்டிக்கப்படுவார்.

    இதை அனுபவப்பூர்வமாக மக்கள் கண்டிருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து (12) கிலோ மீட்டர் பயணத்தில் காணிப்பாக்கத்தை அடையலாம்.

    சுயம்புவான விநாயகர் கிணற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ளார். சுற்றி என்றும் வற்றாத கிணற்று நீரே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவருக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை அனைத்தும் உண்டு. ஆனால் விசேஷ அலங்காரம் எதுவும் செய்வதில்லை.

    இவ்விநாயகர் ஆண்டுதோறும் அகலமாகப் பெருகி வருவது ஆன்மிக அதிசயமாக விளங்குகிறது. அன்று விநாயகருக்குச் செய்வித்த வெள்ளிக்கவசம் இன்று சிறியதாகவிட்டது. என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

    விநாயகர் வளர்வது போலவே அவரை தரிசிக்க வரும் பக்தர்களும் வளம் பெருக வாழ்கிறார்கள். சாதாரண நாளில் கூட நிரம்பிவழியும் பக்தர் கூட்டம் இதை உண்மை என்று நிரூபிக்கிறது.

    நல்லொழுக்கம் கைவரப்பெறவும் இவர் வரம் அருள்கிறார். ஆமாம்.... இவர் முன் நின்று இனி குடிக்க மாட்டேன், புகைக்க மாட்டேன் சூதுவை நாடமாட்டேன் என்று மனமுருக வேண்டுவோர் அந்தத்தீயப்பழக்கங்களிலிருந்து விடுபடுகிறார்களாம்!

    விநாயகரின் தந்தை சிவபெருமான் திருவானைக்கா என்னும் திருத்தலத்தில் லிங்க வடிவில் தண்ணீருக்குள் இருப்பது போல் ஆந்திர மாநிலம் சித்தூருக்கு 12 கி.மீ. தொலைவில் உள்ள காணிப்பாக்கத்தில் உள்ள (வரசித்தி) காணிப்பாக்கம் விநாயகர் கோவில் மூலவரான பிள்ளையார் முழங்கால் வரை உள்ள தண்ணீருக்குள் இருந்தபடி அருள் தருகிறார்.

    • ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
    • பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்திரசேகர ராவ் விமர்சனம்

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி, ஐதராபாதத்தை சேர்ந்த நந்தகுமார், திருப்பதியை சேர்ந்த சின்மலயா ஜி ஆகியோர் சந்தித்ததாகவும், அப்போது டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி பேரம் பேசியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சைபராபாத் போலீசார் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிக்கொண்டு இருந்த ராமச்சந்திர பாலாஜி, சின்மையாஜி நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் பண்ணை வீட்டில் எம்.எல்.ஏக்களுடன் நடந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்னதாக எம்.எல்.ஏ பைலட் ரோகித் ரெட்டி, ராமச்சந்திர பாரதி ஆகியோரை இடைத்தரகர் நந்தகுமார் கான்பரன்ஸ் மூலம் போனில் இணைத்து உரையாடிய ஆடியோ வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கு இடையே சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரும் சைபராபாத் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பணம் கைமாறியதற்கான ஆதாரம் இல்லாததால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதனை எதிர்த்து போலீசார் ஐதராபாத் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுத்தனர். அப்போது நீதிபதி 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். அதை உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜ.க சார்பில் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரம் சிக்கி உள்ளது. அந்த வீடியோவை பார்த்தால் இந்த நாடு எப்படி உள்ளது.எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக புரியும்.

    இவர்கள் ஆட்சியில் அநியாயம் நடக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களால் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறேன்.

    ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ராஜஸ்தான் முதலமைச்சர்களை மாற்ற பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. இந்த நாட்டை பாஜக சர்வ நாசம் செய்ய முயற்சி செய்து வருகிறது.இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரூபாய் நோட்டின் மதிப்பு குறைந்து விட்டது. இந்த வீடியோ ஆதாரம் குறித்து பெரிய அளவில் விசாரணை நடத்த வேண்டும்.

    குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த 3 மணி நேர வீடியோவை சிறிய அளவில் எடிட் செய்து விரைவில் அனைத்து மாநில ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சுதாகர் ரெட்டி அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். #Seniorleader #Congressleader #SudhakarReddyquits
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சுதாகர் ரெட்டி அக்கட்சியில் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவராக முன்னர் நியமிக்கப்பட்டார்.

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை தலைவராக முன்னர் இவர் பதவி வகித்தார். தெலுங்கானா மாநில சட்டசபையில் மேல்சபை உறுப்பினராகவும் இருந்த இவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும் தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளதாகவும் சுதாகர் ரெட்டி இன்று தெரிவித்துள்ளார்.



    கட்சிக்காக உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வேட்பாளர் தேர்வில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்று தற்போது குற்றம்சாட்டும் சுதாகர் ரெட்டி விரைவில் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரம் செய்யவுள்ள நிலையில் சுதாகர் ரெட்டியின் ராஜினாமா அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் தெலுங்கானா ராஷ்டரிய சமிதியில் இணைந்தது நினைவிருக்கலாம். #Seniorleader #Congressleader #SudhakarReddyquits
    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இதில் பணக்கார வேட்பாளர் யார் எனும் விவரம் வெளியாகியுள்ளது. #Andrapradesh #Richestcandidate #KondaVishweshwarReddy
    ஐதராபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை முழுவதுமாக அறிவித்த நிலையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றன. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளுக்கு சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்கின்றனர்.

    இந்த வரிசையில் தெலுங்கானாவின் சிவெல்லா பகுதியில் போட்டியிடும் கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி,  சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  வேட்பு மனுவுடன் சொத்து விவரம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தார். அதில், அவரது சொத்து மதிப்பு ரூ. 895 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.223 கோடி அசையும் சொத்துக்கள். அப்போலோ மருத்துவமனையின் பங்குதாரரான மனைவி சங்கீதா ரெட்டி பெயரில் ரூ.613 கோடி உள்ளது. மகன்கள் பெயரில் ரூ.20 கோடி உள்ளது என தெரிய வந்துள்ளது.



    மேலும் ரெட்டி மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ.36 கோடியில் அசையா சொத்துக்கள் உள்ளன. இதேபோல் மனைவியின் பெயரில் ரூ.1.81 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன.

    இருப்பினும் இவர்களிடத்தில் சொந்த கார் , பைக் என எந்த வாகனமும் இல்லை என்பது சுவாரஸ்யமான தகவல் ஆகும்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் விஷ்வேஷ்வர் ரெட்டிதான் பணக்கார வேட்பாளர் ஆவார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை விடவும், கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டியின் சொத்து மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. #Andrapradesh #Richestcandidate #KondaVishweshwarReddy

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஐகோர்ட்டு நீதிபதி நாயக் பாலயோகி எம்.பி.தேர்தலில் போட்டியிடுகிறார். #Telanganajudge

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஐகோர்ட்டு நீதிபதி நாயக் பாலயோகி. இவர் திடீரென்று நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.

    அவரது பதவிகாலம் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதி வரை உள்ளது. ஆனால் விருப்ப ஓய்வில் செல்வதாக கூறி ராஜினாமா செய்துள்ளார். அவர் வருகிற 15-ந்தேதி அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜினாமா செய்துள்ள நீதிபதி பாலயோகி வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார். அவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்கட்சி சார்பில் அமலாபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். கிழக்கு கோதாவரி மாவட்டம் மும்மிடிவரத்தை சேர்ந்த பாலயோகி கூறும் போது, தான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையுடன் தொடர்பு கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் அவரிடம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் தேர்தலில் போட்டியிட சீட் தருவதாக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதற்கிடையே அமலாபுரம் தொகுதிக்கு சென்ற பாலயோகி அங்கே தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #Telanganajudge

    தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை போலீசார் கைது செய்தனர். #TelanganaElection #RevanthReddyarrested

    கோதண்கல்:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து அங்கு பிரசார களம் சூடு பிடித்துள்ளது.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் சூறாவளி பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்.

    இன்று மாலை கோதண்கல் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பங்கேற்று பேசுகிறார்.

    கோதண்கல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார்.

     


    இதற்கிடையே கோதண்கல் தொகுதிக்கு வருகை தரும் சந்திரசேகரராவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ரேவந்த் ரெட்டி அறிவித்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ரேவந்த் ரெட்டியை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் அவரது சகோதரர், பாதுகாவலர், வீட்டு காவலாளி ஆகியோரையும் அழைத்து சென்றனர்.

    இதுபற்றி ரேவந்த் ரெட்டி மனைவி கீதா ரெட்டி கூறியதாவது:-

    அதிகாலை 3 மணிக்கு சிலர் எங்களது வீட்டு கதவை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். ஒரு அறையில் நான், கணவர், மகளுடன் தூங்கி கொண்டிருந்தோம். அவர்கள் எனது கணவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? அதுபோன்று எங்களை நடத்துவதா?

    இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.

    சந்திரசேகர ராவ் ஊர் வலத்தையும், பொதுக் கூட்டத்தையும் தடுத்து நிறுத்த ரேவந்த் ரெட்டியும் அவரது ஆதரவாளர்களும் முயற்சி செய்வார்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள்.

    கைது செய்யப்பட்ட ரேவந்த் ரெட்டியை கோதண்கல் தொகுதியில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெத்சேர்லா என்ற இடத்துக்கு கொண்டு சென்றனர். அவரது பாதுகாவலர், வீட்டு காவலாளியை நடு வழியில் விடுவிடுத்தனர். #TelanganaElection #RevanthReddyarrested

    தெலுங்கானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியும், தெலுங்கானா முதல்மந்திரியும் நல்ல திட்டங்களை தலைகீழாக மாற்றிவிட்டதாக விமர்சித்துள்ளார். #RahulGandhi #Modi #Telangana
    ஐதராபாத்:

    காங்கிரஸ் கட்சியின் நிலையை வலுப்படுத்த அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு வழிகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். அதன் ஒருபகுதியாக இன்று தெலுங்கானா மாநிலத்தில், இளைஞர்களின் பெருந்திரள் கூட்டத்தின் நடுவே ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அந்த உரையில், உலக நாடுகள் பலவற்றிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    மோடியும், சந்திர சேகர் ராவும், முன்னேற்ற கனவுகள் குறித்து பேசி வருகிறார்கள் ஆனால், தெலுங்கானாவில் புதிய வரி விதிப்பும், போலீஸ் ராஜ்ஜியமும் மட்டுமே நடப்பதாகவும், பொதுமக்கள் பேச கூட அனுமதிக்கபடுவது இல்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.



    மேலும், தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதற்கு முன்பே மக்களுக்கு இருந்த அனைத்து கனவுகளும் நிறைவேற்றப்படாமல் போனதற்கு முதல்மந்திரியின் குடும்பத்தினரே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே நாடு ஒரே வரி எனும் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அன்றாட உபயோக பொருட்கள் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.



    இதையடுத்து, பிரதமர் மோடியைப் போலவே தெலுங்கானா முதல்மந்திரியும் பொய் வாக்குறுதிகளை மட்டும் அளித்துவருவதாகவும், ஊழல் தலைநகராக தெலுங்கான மாறிவிட்டதற்கு முதல்மந்திரியின் குடும்ப அரசியலே காரணம் எனவும் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

    மேலும், ரபேல் திட்டத்தை தலைகீழாக மாற்றியதன் மூலம், மோடி தனது நண்பர் அனில் அம்பானிக்கு பல லட்சம் கோடிகளை பரிசாக வழங்குகிறார் என்றும், இதேபோல், காங்கிரஸ் அரசால் 38 ஆயிரம் கோடிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தெலுங்கானா நீர்ப்பாசன திட்டத்தை தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கு முதல்மந்திரி மாற்றியுள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். #RahulGandhi #Modi #Telangana
    ×