அமெரிக்க பெண்ணை காதலித்து திருமணம் செய்த தெலுங்கானா சாப்ட்வேர் என்ஜினீயர்

காதல் விவகாரம் குறித்து இருவரும் பெற்றோர்களுக்கு தெரிவித்தனர்விழாவில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க பெண்ணை காதலித்து திருமணம் செய்த தெலுங்கானா சாப்ட்வேர் என்ஜினீயர்
Published on

தெலுங்கானா மாநிலம்,மேட்சல் மாவட்டம்,மோட்கூர் அடுத்த தச்சரம் பகுதியை சேர்ந்தவர் தர்மைய்யா, லலிதா தம்பதி. இவர்களது மகன் சந்தீப் குமார்.

இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல் படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு டெக்ஸாசில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் அவனி எலெனா என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார். சந்தீப் குமார் அவனி எலெனா இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறியது.

தங்களது காதல் விவகாரம் குறித்து இருவரும் பெற்றோர்களுக்கு தெரிவித்தனர். சந்தீப் குமார் காதலுக்கு அவரது பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். மகனின் எதிர்காலத்தை கருதி பின்னர் சம்மதம் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்ப நிகழ்ச்சி மல்காஜ் கிரி அடுத்த காட் கேசரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி சந்தீப் குமார், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மணமக்களுக்கு ஏராளமானோர் பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com