search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "andrapradesh"

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இதில் பணக்கார வேட்பாளர் யார் எனும் விவரம் வெளியாகியுள்ளது. #Andrapradesh #Richestcandidate #KondaVishweshwarReddy
    ஐதராபாத்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. ஏற்கனவே சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை முழுவதுமாக அறிவித்த நிலையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகின்றன. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளுக்கு சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுவுடன் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்கின்றனர்.

    இந்த வரிசையில் தெலுங்கானாவின் சிவெல்லா பகுதியில் போட்டியிடும் கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி,  சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  வேட்பு மனுவுடன் சொத்து விவரம் குறித்த அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தார். அதில், அவரது சொத்து மதிப்பு ரூ. 895 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.223 கோடி அசையும் சொத்துக்கள். அப்போலோ மருத்துவமனையின் பங்குதாரரான மனைவி சங்கீதா ரெட்டி பெயரில் ரூ.613 கோடி உள்ளது. மகன்கள் பெயரில் ரூ.20 கோடி உள்ளது என தெரிய வந்துள்ளது.



    மேலும் ரெட்டி மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ.36 கோடியில் அசையா சொத்துக்கள் உள்ளன. இதேபோல் மனைவியின் பெயரில் ரூ.1.81 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளன.

    இருப்பினும் இவர்களிடத்தில் சொந்த கார் , பைக் என எந்த வாகனமும் இல்லை என்பது சுவாரஸ்யமான தகவல் ஆகும்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் விஷ்வேஷ்வர் ரெட்டிதான் பணக்கார வேட்பாளர் ஆவார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை விடவும், கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டியின் சொத்து மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. #Andrapradesh #Richestcandidate #KondaVishweshwarReddy

    ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் திருமண விழாவிற்கு சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #AndraAccident
    ஐதராபாத்:

    ஆந்திரப்பிரதேச மாநிலம் பேனுகொண்டா மண்டல் மாவட்டத்தில் உள்ளது சத்தாருபள்ளி கிராமம். இந்த பகுதியில் திருமண விழாவிற்கு சென்ற வேன் மீது மினி லாரி ஒன்று வேகமாக மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விசாரணையில், தர்மாவரம் பகுதியில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்க வேன் ஒன்றில் 22 பேர் சென்று கொண்டிருந்தனர். சத்தாருபள்ளி என்ற இடத்தில் வேன் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோதியதில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது. காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக பேனுகொண்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்தது.

    இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த விவரம் தெரிய வரவில்லை. #AndraAccident
    பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியான பண்டாரு தத்தாத்ரேயா மகன் பண்டாரு வைஷ்ணவ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். #BJPMP #BandaruDattatreya
    புதுடெல்லி:

    மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பண்டாரு தத்தாத்ரேயா. பாஜகவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள முஷிராபாத் பகுதியில் இவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவரது மகன் வைஷ்ணவ் (21). மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று இரவு திடீரென வைஷ்ணவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உறவினர்கள் அதே பகுதியில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    வைஷ்ணவ் மிகவும் இள வயதிலேயே மரணமடைந்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டாரு தத்தாத்ரேயா செகந்திராபாத் தொகுதி எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.
    ×