search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன்"

    சேலம் சின்னக்கடை வீதியில் மளிகைக் கடைக்காரர் மகன் கடத்தலில் சி.சி.டி.வி. காமிரா பதிவை வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்  மூலாராம் .இவர் சேலம் சின்னக்கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (வயது 21). இவர் நேற்று கடையில் இருந்தபோது 6 பேர் கும்பல் இவரை காரில் தூக்கிப் போட்டு கடத்தி சென்றது.

    இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் மற்றும் அம்மாபேட்டை போலீசார், ஜயராமை கடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
    போதைப்பொருட்கள் கடத்தல் பிரச்சனையில் ஜெயராம் கடத்தப்பட்டதும்,  அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக  மர்ம கும்பல் ஜெயராமை கடத்தி சென்றுள்ளதும் தெரியவந்தது.

    இதற்கிடையே ஜெயராமை கடத்திச் சென்ற கும்பல் உருவம் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பதிவை  வைத்து தனிப்படை  போலீசார் தீவிரமாக அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    மேலும் தர்மபுரி, ஓசூர் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
    குமாரபாளையம் அருகே கார் மோதி தந்தை- மகன் படுகாயமடைந்ததில் ஆத்தூரை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஓட்டமெத்தை பகுதியை  சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). கட்டிட கூலித் தொழிலாளி. 

    இவர் நேற்று மாலை  மோட்டார்சைக்கிளில் தனது தந்தை லோகவசீகரன், (57), என்பவரை பின்னால்  உட்கார வைத்துக்கொண்டு சேலம்-கோவை புறவழிச்சாலையில் கோட்டைமேடு பிரிவு அருகே கே.பி.டி பெட்ரோல் பங்க் முன்பு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் செந்தில்குமார், லோகவசீகரன் ஆகிய, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று இருவரையும் மீட்டு  குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    விசாரணையில் காரை ஓட்டி வந்தது சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பூபாலன்  (24), என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை  கைது செய்தனர்.
    ×