search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர்"

    பினாயூர், கட்டியாம்பந்தல் மற்றும் நாஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் 178 இருளர் இன மக்களுக்கு ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு பேரிடர் காலங்களில் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க ஊராட்சி ஒன்றியம் தோறும் புதிய குடியிருப்புகள் கட்ட தீர்மானிக்கப்பட்டு 443 வீடுகள் கட்டும் பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த 1-ந் தேதி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையாங்குளம் ஊராட்சியில் சுமார் ரூ.45 லட்சத்து 56 ஆயிரத்து 500 மதிப்பிலான நிலம் ஒதுக்கப்பட்டு, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோட்டநாவல், சடச்சிவாக்கம், ரெட்டமங்கலம், நெல்வேலி, எலப்பாக்கம், நெய்யாடுபாக்கம், மலையாங்குளம், சிறுபினாயூர், தண்டரை, எடையும்புதூர், கிடங்கரை, கிளக்காடி, திருமுக்கூடல், பினாயூர், கட்டியாம்பந்தல் மற்றும் நாஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் 178 இருளர் இன மக்களுக்கு ரூ.8.22 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணையை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியாளர்களுக்கான ஊதியம் நிலுவையின்றி வழங்கிட வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சிறுவாடி ஊராட்சி மன்ற அலுவலத்தில், மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் மோகன் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியாளர்களுக்கான ஊதியம் நிலுவையின்றி வழங்கிட வேண்டும். ஊராட்சி செயலாளர் பதிவேடுகளை சரியாக பதிவு செய்து வரவேண்டும்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து திட்டப்பணிகள் நடைபெறுவதை கண்காணிப்பதுடன், பணிகள் காலதாமதமின்றி செயல்படும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

    குறிப்பாக எந்த ஊராட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான ஊதியம் உரிய காலங்களில் வழங்க வேண்டும். எங்காவது ஊதியம் காலதாமதமாக வழங்குவதாக புகார் வந்தால் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துஉள்ளார்.

    வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ராகுல்நாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நில அளவியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    வண்டலூர்:

    வண்டலூர் வட்டாட்சியர் அலுவலத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் ஒன்றிய துணைத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான ஆராமுதன், துணை வட்டாட்சியர் ராஜாகலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்நது வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ராகுல்நாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நில அளவியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் வருகை தரும்போது அவர்களுக்கு போதுமான இருக்கை அமைத்து கொடுக்க வேண்டும், கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து வட்டாசியர் அலுவலகத்தில், பொதுமக்கள் அளித்த மனுக்களின் நிலை குறித்து வட்டாட்சியர் ஆறுமுகத்திடம் கேட்டறிந்தார். பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுவை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்றார்.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கான 5-ம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் அர்த்தனாரிபாளையம், மாணிக்கம்நத்தம், பரமத்தி, வீரணம்பாளையம், புஞ்சை இடையார் (மேற்கு), வேலூர் பில்லூர்,சீராப்பள்ளி ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டாமாறுதல், வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 103 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். 

    மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவாய் தீர்வாயம் முடிவதற்குள் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது தீர்வு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். 

    இந்நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில், மண்டல துணை தாசில்தார் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
    நாமக்கல்:

    கோடை விடுமுறைக்கு பின்னர் இந்த மாதம்  பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், அதற்கு முன்பாக அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. 

    இதை தொடர்ந்து , நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வி வாகனங்கள் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டன. 

    இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கலந்துகொண்டு வாகனத்தில் பிரேக் சரியாக உள்ளதா? பாதுகாப்பு கருவிகள், அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளனவா? , வாகன படிக்கட்டுகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது ஓட்டுநர்கள் செல்போன் பேசி கொண்டு வாகனம் இயக்கக்கூடாது. மது அருந்த கூடாது என அறிவுறுத்தப்பட்டன.

     மேலும், தீயணைப்புத் துறையினா் மூலம் தீத்தடுப்பு மற்றும் முதலுதவி தொடா்பான நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டன. 

     ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், டிஎஸ்பி சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரி, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிட்டுக்குருவிகள் கூண்டை கலெக்டர் அருண் தம்புராஜ் அமைத்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் சிட்டுக்குருவிகளுக்கான கூண்டினை பொருத்தி ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகள் அமைப்பினரை ஊக்கப்படுத்தினார். அறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளையின் மற்ற செயல்பாடுகளையும் பொறுமையுடன் கேட்டு அறிந்து அதற்கான வாழ்த்துக்களை கலெக்டர் வழங்கினார்.

     இந்நிகழ்ச்சியில் அலுவலக அதிகாரிகள் மற்றும் அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பை சேர்ந்த ராஜசரவணன், பண்டரிநாதன், கார்த்திக், ஜெகன், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
     
    சேலம்:

    சேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்தவர் பாபு என்ற டாக் பாபு. இவரது மனைவி சங்கீதா (வயது 30). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் வெண்பா என்ற பெண் குழந்தை உள்ளது.

    மேலும் சங்கீதா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் பாபு மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமலூர் போலீசார் செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

    இதற்கிடையே சங்கீதாவின் தந்தை மாதையனையும் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு என அழைத்துச் சென்றுள்ளனர் .ஆனால் அவர் குறித்து விசாரித்தபோது அவர் தற்போது எங்கு உள்ளார் என்ற விவரத்தை போலீசார் கூற மறுத்துவிட்டனர்.

    இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சங்கீதா தனது குழந்தையுடன் சேலம் கலெக்டர்  அலுவலகத்திற்கு வந்தார். 

     திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.   அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு போலீஸ் நிலையத்தை வைத்து விசாரணைநடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுத்தலைவர்எஸ்.எஸ்.பழனிமணிக்கம் எம்.பி. தலைமையில் ராமலிங்கம் எம்.பி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேசியதாவது:-

    தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிக்கும் பொருட்டு மாவட்டந்தோறும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் இந்த குழு கூட்டம் நடத்தப்பட்டது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்  உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

    இந்த ஆய்வில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும் விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா,  எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன்ஏ, டி.கே.ஜி.நீலமேகம், அன்பழகன், ஜவாஹிருல்லா, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வேளாண் வளர்ச்சித் திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் மற்றும் கலெக்டர் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினர்.
    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள டி.மேட்டுப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடந்தது.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். வேளாண் உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை மூலம் தெத்தூர், மேட்டுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனிஷ் சேகர் ஆகியோர் வேளாண் இடுபொருட்களை வழங்கினர். 

    சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், பரந்தாமன், செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள் பழனிசாமி முன்னிலை வகித்தனர்.
     
    வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன் வரவேற்றார். துணை இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி, தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி, ஒன்றிய சேர்மன் பஞ்சு, தெத்துர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், மாணவரணி அமைப்பாளர் பிரதாப், துணை சேர்மன் சங்கீதா மணிமாறன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வேளாண்மை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் காய்கறிகள் கண்காட்சி நடந்தது. இதனை தொடர்ந்து பாலமேட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையத்தை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார். 

    மேலும் சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்த படி ஜல்லிக்கட்டுக்கான பிரமாண்ட அரங்கம் அமைப்பதற்கான அலங்காநல்லூர் அருகே வகுத்துமலை அடிவாரத்தில் உள்ள இடத்தை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
    அஞ்சல் துறையில் செயல்படுத்தப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என விருதுநகர் கலெக்டர் அறிவிப்பு.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுகன்ய சம்ரிதி திட்டம்    (செல்வமகள் சேமிப்பு திட்டம்) என்பது  பிரதமர்  மோடி யால் ஜனவரி 22-ந் தேதி 2015-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

    இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

    இந்த திட்டத்தின்படி, 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் கணக்கை தொடங்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம்.

    பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில், பிறப்புச் சான்றிதழுடன் கணக்கை தொடங்கலாம்.

    குறைந்தபட்சமான தொகையாக ரூ. 250 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூ.250இந்த கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250-ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். மொத்தம் 15 ஆண்டுகள் மட்டும் பணம் செலுத்தினால் போதும். 

    தற்பொழுது 7.6  சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது.இந்த கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரிவிலக்கு  அளிக்கப்படுகிறது. கணக்கு ஆரம்பித்த தேதியிலிருந்து 21 வருடம் கழித்து கணக்கு முதிர்வடையும். 

    மேலும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும் போது  அவரது கணக்கிலுள்ள இருப்புத்தொகையிலிருந்து 50 சதவிகித பணத்தை அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக பெற்றுக்கொள்ளலாம்.

    பெண்ணின் திருமணத்திற்கு பிறகு கணக்கு முதிர்வடைவதற்கு முன்பே கணக்கை எந்தவித வட்டி இழப்புமின்றி முடித்து கொள்ளலாம்.இந்த கணக்கை முதிர்வடைவதற்கு முன், கணக்கை முடித்து முன் முதிர்வு தொகையினை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெற்றுக்கொள்ளலாம்.

    எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள்   அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று  செல்வ மகள் திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கி பயன்பெறலாம்.

    ×