search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sparrow"

    • சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
    • சிறந்த படம் வரைந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் உதவிபெறும் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கி மாணவர்களுக்கு சிட்டுக்குருவியின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில்:-

    மனிதனோடு மனிதனாய் குடும்பத்தில் ஒருவராக வாழ்கிற பறவை இனம்தான் இந்த சிட்டுக்குருவி.சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற நம்பிக்கை இன்றும் கிராமமக்களின் மனதில் உள்ளன.

    அதனால் தான், வீடுகளில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் அதை கலைக்க மாட்டார்கள்.அதனால்,இன்றைய கால ங்களில் சிட்டுக்குருவியானது தன் இனப்பெருக்கத்துக்கான வாழ்வியல் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது என்றார்.

    மேலும், மாணவர்கள் சிட்டுக்குருவி வளர்க்க கூண்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மாணவர்கள் சிட்டுக்குருவியின் படத்தை வரைந்து வண்ணம் தீட்டினார். சிறந்த படம் வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    விழாவில் பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் வசந்தா, சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, திவ்யா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.
    • பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை ஜி.ராஜ சரவணன் இந்த சின்னஞ்சிறு குருவியை மீட்டெடுப்போம் எனக் கூறி இலவசமாக சிட்டுக்குருவிக் கூண்டை அனைவருக்கும் வழங்கி வருகிறார்.

    ஆண்டு தோறும் மார்ச் 20 ஆம் தேதி சிட்டுக்குருவி தினமாக உலகம் எங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த இனத்திற்குப் பிறகு இந்த குருவிகள் ஆனது தனது இனத்தை பெருக்கும் கால சூழலுக்கு வருகிறது.

    அதனால் இந்த தேதியை தொடங்கி நம் சிட்டுக்குருவி தினமாக நாம் கடைபிடித்து வருகிறோம்.

    இந்த சின்னஞ்சிறு சிட்டுக்குருவியை மீட்டெடுப்பதற்கான ஒரு முறையை கண்டுபிடித்து அந்த முறையில் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறையே இந்த சின்னஞ்சிறு குருவிக்கு கூடு அமைத்து கொடுக்கும் முறையாகும்.

    இந்த முறையை பயன்படுத்தி கடந்த ஓராண்டாக ஸ்ரீ ஆறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளை மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளுக்கான கூண்டு அமைத்து அதில் அந்த குருவி இனங்கள் குடியேறி தனது இனத்தை பெருக்கிக் கொண்டது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

    நாகப்பட்டினத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ ஆறுவடை தர்ம சிந்தனை அறக்கட்டளை இதன் இயற்கை சார்ந்த விஷயங்களுக்காக ஸ்ரீ அறுபடை பசுமைச் சிறகுகள் என்ற அமைப்பினை செயல்படுத்தி வருகிறோம்.

    இந்த அமைப்பின் மூலமாக சிட்டுக்குருவிகளுக்காக கூண்டு அமைக்கும் முறையயை கடைப்பிடித்து வருகிறோம்.

    இதில் 60% க்கு மேலான கூண்டுகளில் இந்த குருவிகள் குடியேறிய தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உள்ளது.

    தன்னார்வலர்கள் எங்களை அணுகி கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக இந்த சின்னஞ்சிறு குருவிக்கான கூட்டினை பெற்று செல்லலாம். 10 ஆயிரம் கூண்டுகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

    வரும் கோடை காலத்தை மனதில் கொண்டு சிட்டுக்குருவிகளுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வைப்பதற்கு என மண் பாத்திரங்களை கட்டணம் இல்லாமல் வழங்க இருக்கிறோம்.

    இந்த பாத்திரம் வழங்குவதில் மூன்று விதமான உள்நோக்கம் எங்களுடன் உள்ளது ஒன்று பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல். குருவி இனங்கள் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஏதுவாக இந்த பாத்திரங்களை அமைத்தல்.

    அழிந்து வரும் ஒரு தொழிலான மண்பானை செய்யும் தொழிலே ஊக்கப்படுத்துதல் என்ற மூன்று விதமான கருத்துக்களை மனதில் கொண்டு இந்த திட்டத்தினை தொடங்கி இருக்கிறோம்.

    இயற்கை ஆர்வலர்கள் தங்களுக்கு சிட்டுக்குருவிக்கான கூண்டு, பறவைகளுக்கான நீர் வைக்கும் பாத்திரம் தேவையெனில் எங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது முகவரியினை பதிவு செய்து இந்த இரண்டு பொருட்களையும் கட்டணம் இல்லாமல் இலவசமாக பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.

    இந்த சின்னஞ்சிறு குருவினை மீட்டெடுப்போம்.

    • 2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர்:

    பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் தேசிய, சர்வதேச விருது பெற்ற, திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்கள் பார்ப்பதன் வாயிலாக மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.படம் முடிந்ததும், மாணவர்களின் பின்னோட்டம் பெறப்படும். கதைக்களம், கதாநாயகர்கள், கதைக்கரு, தொழில்நுட்ப யுக்திகள் குறித்து ஆசிரியர்களுடன் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்.

    2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.பெரும்பாலான பள்ளிகளில் இத்திரைப்படம் குழந்தைகள் தினம் முதல் திரையிடப்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பகுதி வாரியாக பிரித்து இந்த வார இறுதி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.காணாமல் போன சிட்டுக்குருவியை, இரு குழந்தைகள் தேடும் போது அவர்களின் பயணத்தில் சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள், அனுபவங்கள் குறித்து இப்படம் விளக்குவதாக உள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • உலக உணவு தினத்தினை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகளை மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
    • வ. உ .சி. விலங்கியல் பூங்கா முன்னாள் இயக்குனர் பறவை விலங்கியல் தொடர்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்

    பல்லடம் : 

    பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் அமைந்துள்ள மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் உலக உணவு தினத்தினை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகளை மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கா.வீ. பழனிச்சாமி தலைமை வகித்து இலவசமாக சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்..மகிழ் வனம் செயலாளர் சோமு என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். விழாவில் தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் மாரப்பன், தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம், தனியார் நிறுவன தலைவர் செல்வராஜ், கலங்கல் வனம் ஒருங்கிணைப்பாளர் பாபு, தாவரவியல் நிபுணர் மாணிக்கம், பூங்கா பொருளாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் வ. உ .சி. விலங்கியல் பூங்கா முன்னாள் இயக்குனர் மருத்துவர் கிரிஷ் அசோகன் தனது பறவை விலங்கியல் தொடர்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மகிழ் வனம் பொருளாளர் பூபதி நன்றி கூறினார்.

    கூண்டுகள் பொருத்தும் நிகழ்ச்சியை நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சிக்கு சொந்தமான நாகூர் நுண்ணுயிர் உர கிடங்கில் சிட்டுக்குருவி களுக்கான 25 கூண்டுகள் பொருத்தப்பட்டன. இந்த கூண்டுகள் பொருத்தும் நிகழ்ச்சியை நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகூர் நகர்மன்ற உறுப்பினர் தியாகு செய்திருந்தார்.

    இந்நிகழ்வில் தேசிய பசுமைப் படையின் மாவட்ட தலைவர் முத்தமிழ் ஆனந்தன், நாகூர் சித்திக் , ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பைச் சார்ந்த ராஜசரவணன், பண்டரிநாதன், அழகேசன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிட்டுக்குருவிகள் கூண்டை கலெக்டர் அருண் தம்புராஜ் அமைத்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் சிட்டுக்குருவிகளுக்கான கூண்டினை பொருத்தி ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகள் அமைப்பினரை ஊக்கப்படுத்தினார். அறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளையின் மற்ற செயல்பாடுகளையும் பொறுமையுடன் கேட்டு அறிந்து அதற்கான வாழ்த்துக்களை கலெக்டர் வழங்கினார்.

     இந்நிகழ்ச்சியில் அலுவலக அதிகாரிகள் மற்றும் அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பை சேர்ந்த ராஜசரவணன், பண்டரிநாதன், கார்த்திக், ஜெகன், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சத்தியமங்கலம் அருகே சிட்டுக்குருவி கூடுகட்டி குஞ்சு பொரித்ததால் ஸ்கூட்டரை எடுக்காமல் அப்படியே விட்ட தம்பதி, ‘குஞ்சுகள் பறந்துசெல்லும் வரை ஸ்கூட்டரை எடுக்காமல் காத்திருப்போம்’ என்றனர்.
    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 35), லாரி உரிமையாளர். அவருடைய மனைவி சவீதா (32). ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துவிட்டு தற்போது வீட்டை கவனித்து வருகிறார். இவர்களுக்கு ஓம்ஸ்ரீமன் (7) என்ற ஒரு மகன் உள்ளான். சவீதா ஒரு ஸ்கூட்டர் வைத்துள்ளார்.

    கடந்த மாதம் 27-ந் தேதி ஸ்கூட்டரை வீட்டுக்குள் நிறுத்திவிட்டு மகேந்திரன் குடும்பத்துடன் காரில் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    உறவினர் வீட்டில் இருந்து 29-ந் தேதி வீட்டுக்கு திரும்பினார்கள். காரில் இருந்து இறங்கியதும் சவீதா ஸ்கூட்டரை எடுக்க சென்றார். அப்போது வண்டியின் முன்பகுதியில் பொருட்கள் வைக்கும் பொந்துபோன்ற இடத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. உடனே தன்னுடைய கணவரையும், மகனையும் அழைத்து அதை காண்பித்தார். மகிழ்ச்சி அடைந்த 3 பேரும் கூட்டை கலைக்கவேண்டாம் என்று முடிவு செய்து, ஸ்கூட்டரை அசைக்காமல் அதே இடத்தில் விட்டுவிட்டார்கள்.

    இதற்கிடையே 2 நாட்கள் கழித்து சவீதா கூட்டை பார்த்தபோது, குருவி எங்கோ இரைதேட சென்றிருந்தது. ஆனால் கூட்டுக்குள் 3 முட்டைகள் இருந்தன. இதனால் மேலும் மகிழ்ச்சி அடைந்த சவீதா ஸ்கூட்டரை சிறிது கூட அசைக்காமல் பார்த்துக்கொண்டார். நாள்தோறும் குருவி வருவதும், கூட்டில் முட்டையை அடை காப்பதுமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அழகான 3 குஞ்சுகளை தாய் குருவி பொரித்தது.

    தாய் குருவியையும், குஞ்சு களையும் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்த சவீதா குடும்பத்தார். ‘குஞ்சுகள் பெரியதாகி தாய் குருவி அவைகளை அழைத்துக்கொண்டு பறந்து செல்லும் வரை ஸ்கூட்டரை எடுக்காமல் அப்படியே விட்டுவிடுவோம்’ என்றார்கள்.

    இதற்கிடையே தாய் குருவி இரையுடன் வந்து, தன்னுடைய அலகில் இருந்து குஞ்சுகளின் வாயில் ஊட்டுகிறது. அப்போது மற்றொரு குருவியும் உடன் வருகிறது. அது தந்தை குருவியாக இருக்கலாம். இந்த காட்சிகளை அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து செல்கிறார்கள். 
    ×