search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் புத்தக திருவிழா- கலெக்டர் பேட்டி
    X

    புத்தக திருவிழா நடைபெற உள்ள இடத்தை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    தஞ்சையில் புத்தக திருவிழா- கலெக்டர் பேட்டி

    • இதற்கான இடம் தேர்வு செய்து அதற்கான பணிகளை இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • தஞ்சையில் அடுத்த மாதம் 15-ந் தேதி புத்தக திருவிழா தொடங்குகி 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் அடுத்த மாதம் புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

    இதற்கான இடம் தேர்வு செய்து அதற்கான பணிகளை இன்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரங்குகள் அமைக்கப்படும் இடம்? உள்ளிட்ட பலவற்றை குறித்து கேட்டறிந்தார்.

    இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையில் அடுத்த மாதம் 15-ந் தேதி புத்தக திருவிழா தொடங்குகி 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான புத்தக விற்பனையாளர்கள், வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் கருத்தரங்கு, சொற்பொழிவு, கவியரங்கம் நடைபெறும். 108 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் அனைவருக்கும் அதற்கான பயன்கள் கிடைக்கும். இந்த மாதம் 28 முதல் அடுத்த மாதம் 28-ந் தேதி வரை உழவன் ஆப் மூலம் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×