search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicles"

    • மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.
    • தங்கள் பணி பாதிக்கப்படும் என்ற போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மலை ஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்ததால் பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக கொடைக்கானலுக்கு வந்தனர். மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். இதே போல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்றை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் வாகன நெரிசலால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கொடைக்கானலில் மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் போதிய அளவு போலீசார் பணியில் இல்லாததால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் முக்கிய சாலை சந்திப்புகளில் அடிக்கடி வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்கதையாகி உள்ளது. அப்பகுதியில் உள்ள டாக்சி டிரைவர்கள் தாங்களாகவே முன் வந்து போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். தங்கள் பணி பாதிக்கப்படும் என்ற போதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானலில் போதுமான போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கடை வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகளில் வாகன பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாலைகளில் பிற வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு வாகன நெரிசலும் ஏற்பட்டு வந்தது.

    மேலும் சாலையோர ஆக்கிரமிப்புகளால் பிரச்சனை நீடித்து வந்தது. இந்நிலையில் ஈரோடு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், எஸ்.பி ஆகியோர் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வாரமாக மாநகரின் முக்கிய சாலைகள், கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது சாலைகள் ஆக்கிரமிப்பின்றி விஸ்தாரமாக காட்சியளிக்கிறது. மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகளை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், முக்கிய சாலைகள், கடைவீதி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வாகன பார்க்கிங் வசதி செய்து தரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா கூறியதாவது:-ஈரோடு மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகள் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் கே.என்.கே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் ஓரிரு நாளில் அகற்றப்படும்.

    முக்கியசாலைகள், கடைவீதிகளில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தி செல்வதாக புகார் வந்தது. அந்த இடங்களில் நோ பார்க்கிங் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு போக்குவரத்து விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

    சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க முக்கியமான சாலைகள், கடைவீதிகளில் 3 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரெயில்வே பாலம் பகுதியில் இரட்டை பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய ரெயில்வே பாலத்தில் ஒரு ரெயில்கள் செல்ல வசதியாக மட்டுமே தண்டவாளம் உள்ளது என்பதால் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    புதிதாக பாலம் அமைப்பதற்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேல் தளம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று (28-ந்தேதி) முதல் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை ஒழுகினசேரி பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

    போக்குவரத்து மாற்றிவிடப் பட்டதையடுத்து போக்கு வரத்து போலீசார் ஒழுகினசேரி, புத்தேரி, அப்டா மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வடசேரி பகுதியில் சாலைகள் பேரிகார்டுகளால் மூடப்பட்டுள்ளது. இதுபோல் அப்டா மார்க்கெட் பகுதியில் நெல்லையில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.


    நெல்லையிலிருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து நான்கு வழிசாலை வழியாக திருப்பி விடப்பட்டது. அப்டா மார்க்கெட் நான்கு வழிச்சாலையில் இருந்து புத்தேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி வழியாக வடசேரிக்கு வந்தது. இதேபோல் வடசேரியில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டது. இதனால் வடசேரி அசம்பு ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து வடசேரிக்கு வந்த இருசக்கர வாகனங்கள் ஒழுகினசேரி பாலத்தையொட்டியுள்ள சாலை வழியாக வந்தது.

    களியக்காவிளை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வந்த 4 சக்கர வாகனங்கள் களியங்காட்டில் இருந்து இறச்சகுளம், புத்தேரி, அப்டா மார்க்கெட் வழியாக இயக்கப்பட்டது.

    இதே போல் இங்கிருந்து தக்கலை, திருவனந்தபுரம், களியக்காவிளை, குளச்சல் சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டன. இதனால் அந்த சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்கள் வழக்கமாக வரக்கூடிய நேரத்தை விட சிறிய நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

    இதே போல் மற்ற பஸ்களும் மாற்றுபாதை வழியாக இயக்கப்படுவதால் சிறிய நேரம் தாமதமாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ்கள் புத்தேரி நான்கு வழிசாலை வழியாக திருப்பிடப்பட்டுள்ள நிலையில் நான்கு வழி சாலை இணைக்கும் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் சாலை உள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்களும் பஸ்களும் செல்லும் போது புழுதி காற்றால் புழுதி பறந்து வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. பஸ் போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து ஒழுகினசேரி பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு உள்ளனர். அந்த பகுதியில் மணல் நிரப்பும்பணி, கேபிள் வயர்கள் மாற்றும்பணி, கம்பிகள் கட்டும்பணி உள்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

    • குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது.
    • ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி, தேயிலை செடிகளிலும் பனி படர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல் , மே மாதங்களில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த காலங்களில் கோடை விழாவும் அரசு சார்பில் நடத்தப்படும். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை காலமான கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏற்காடு மலை பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் சு ற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி, தேயிலை செடிகளிலும் பனி படர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

    மேலும் ஏற்காட்டில் தொடரும் பனியால் அருகில் நிற்பவர்களை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடரும் பனிப்பொழிவால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்த படியே செல்கின்றன. ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் ஏற்காட்டில் வசிக்கும் காபி மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் வெளியில் செல்பவர்கள் குளிர் தாங்க முடியாமல் ஸ்வெட்டர், ஜர்கின் அணிந்த படி செல்கிறார்கள். பகல் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    • போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு அதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
    • ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையின் போது தப்பிப்பதற்காக வாகன ஓட்டிகள் சிலர் போலியாக தங்களது மோட்டார் சைக்கிளில் போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு திரிவதாகவும், அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் படியும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறிவந்தனர்.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டு அதனை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அரசு போலீஸ் வாகனங்கள் அல்லாது பிற தனியார் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் போலியாக போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியவர்களை கண்ட றிந்து அதனை கிழித்தனர். இவ்வாறாக 127 வாகனங்களில் இருந்து போலீசாரால் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டது.

    மீண்டும் இதேபோல் போலியாக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    • வாகனஓட்டிகள்-பொதுமக்கள் பரிதவிப்பு
    • வெங்கிட்டாபுரம் பகுதியில் சிக்னல் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

    குனியமுத்தூர்,

    கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோடு பகுதியில் வெங்கிட்டாபுரம் அமைந்து உள்ளது. இது மூன்று ரோடுகள் சந்திக்கும் முக்கியமான பகுதி ஆகும். இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து சிக்னல் இயங்கி வந்தது. அது தற்போது செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு பறந்து செல்கின்றன. மேலும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதையும் பார்க்க முடிகிறது.

    மேலும் வெங்கிட்டாபுரம் சந்திப்பு என்பது தடாகம், காந்திபார்க், மேட்டுப்பாளையம் செல்லும் முக்கிய சாலைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. இங்கு 3 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அங்கு சுமார் 4500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதனால் வெங்கிட்டாபுரம் பகுதியில் காலை-மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. எனவே தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொது மக்கள் நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது.

    இதுகுறித்து வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் தேவையில்லாத இடத்தில் சிக்னல் அமைத்து பயணிகளை 1-2 நிமிடம் காக்க வைக்கின்றனர். ஆனால் இது மிகவும் முக்கியமான பகுதி. தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிட்டாக பறந்து செல்கின்றன.

    அப்படியிருக்கும்போது வெங்கிட்டாபுரம் சாலையில் சிக்னல் இல்லாதது எங்களுக்கு மிகவும் சிரமம் தருகிறது. ஒருசில நேரங்களில் போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் நின்று கொண்டு வாகன போக்குவரத்தை முறைப்படுத்துவர். அந்த நேரம் மட்டும் எங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.

    ஆனால் அவர்கள் பெரும்பாலான நேரங்களில் வெங்கிட்டாபுரம் சிக்னலில் நிற்பது கிடையாது. எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தறிகட்டிய நிலையில் பறக்கின்றன. இதனால் அங்கு சாலையை கடக்க வரும் பொதுமக்கள் அங்கும்-இங்குமாக அலை க்கழிப்படும் காட்சியை பார்க்க முடிகிறது.

    வெங்கிட்டாபுரம் பகுதியில் சிக்னல் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். ஆகவே போக்குவரத்து போலீசார் இதனை கவனத்தில் கொண்டு அந்த பகுதியில் உடனடியாக போக்குவரத்து சிக்னல் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து குரூஸ் பர்னாந்து சிலை வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
    • எனவே நெருக்கடியான பகுதிகளில் முறையான போக்குவரத்து மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியிட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. இதனால் மார்க்கெட் மற்றும் பஸ் நிறுத்தங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    சென்னையில் காவல்துறை சார்பில் தீபாவளி கால நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பஸ் போக்குவரத்து, இருசக்கர வாகன போக்குவரத்துகள் மாற்றம் செய்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதுபோல தூத்துக்குடி யிலும் ஏற்பட்டுள்ள கடுமை யான போக்குவரத்து நெருக்கடியினை கருத்தில் கொண்டு அதனை முறைப்படுத்தும் வகையில் போக்குவரத்துக்களை மாற்றம் செய்து அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து குரூஸ் பர்னாந்து சிலை வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருப்பதால் அது ஒரு வழி பாதையாக இருப்பினும் வாகனங்கள் அனைத்தும் சாலையில் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத நிலை உள்ளது.

    எனவே இந்தப் பகுதி உட்பட நெருக்கடியான பகுதிகளில் முறையான போக்குவரத்து மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியிட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி முள்ளக்காடு பஸ் நிறுத்தத்தை மறைத்து விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளதால் தீபாவளி பண்டிகை தினத்தில் பஸ் நிலையத்திற்கு வந்த பெண்கள் பொதுமக்கள் சாலையில் விபத்து ஏற்படும் வகையில் நின்று பஸ் எதிர் பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பயணத்தை திட்டமிட்டு அரசு பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து இருந்த னர்.
    • விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதையடுத்து தீபாவளியை கொண்டாட சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே தங்களது பயணத்தை திட்டமிட்டு அரசு பஸ்களி லும், ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து இருந்த னர்.

    நேற்று மாலை அரசு பஸ், ஆம்னி பஸ், கார், வேன், மோட்டார் சைக்கிள் என தங்களுக்கு விருப்பமான வாகனங்களில் சென்னை யில் இருந்து புறப்பட்டு விக்கிரவாண்டி வழியாக தென் மாவட்டங்களை நோக்கி சென்றனர். இதனால் நேற்று மாலை 4 மணிக்கு மேல் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்ல ஆரம்பித்தன. விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்பட்டது. தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு கூடுதலாக இரு வழிகள் திறந்து 8 வழிகளில் வாக னங்கள் அனுப்பி வைக்கப் பட்டது. நேற்று மாலையில் இருந்து இரவு 7.30 மணி வரை 35 ஆயிரம் வாகனங்க ளும், நள்ளிரவு கடந்து அதிகாலை 8 மணி வரை 55 ஆயிரம் வாகனங்களும் டோல் பிளாசாவை கடந்து சென்றன. மேலும் அசம்பா விதம் நடக்காத வகையில் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கேம்பலாபாத் பகுதியில் சாலையின் பக்கவாட்டில் தடுப்புச்சுவர் அமைக்காமல் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்து மண்ணை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அள்ளியுள்ளனர்.
    • இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

    தென்திருப்பேரை:

    திருச்செந்தூரில் இருந்து வி.எம்.சத்திரம் வரை தொழில் வழிச்சாலைத் திட்டப்பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    தடுப்புச்சுவர்

    இதற்காக சாலை கள் இருபுறமும் அகலப்படு த்தப்பட்டு, ஒரு புறம் திருச்செந்தூருக்கு பாதை யாத்திரையாக செல்லும் பக்தர்கள் நடந்து செல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் அருகில் தாமிரபரணி ஆறு செல்வதால் ஆங்காங்கே தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள கேம்பலாபாத் பகுதியில் சாலையின் பக்கவாட்டில் தடுப்புச்சுவர் அமைக்காமல் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்து மண்ணை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அள்ளியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தினர்.

    இந்த பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும், மணல் அள்ளுவதற்காக மட்டுமே இந்த பணிகள் நடந்து வருவதாக கூறி மணல் அள்ளிய ஜே.சி.பி. மற்றும் லாரிகளை சிறைபிடித்து தங்கள் ஊருக்குள் நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித்துறை உதவி கோட்டப் பொறியாளர் நிர்மலா மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து இங்கிருந்து அள்ளப்பட்ட மணல் அனைத்தையும் இங்கேயே கொட்டிவிட்டு தடுப்புச்சுவர் முறையாக அமைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பாதுகாப்பு உபகரணங்கள், கோப்புகள் சரஸ்வதி படத்திற்கு முன்பு வைக்கப்பட்டது.
    • அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட தலைமை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது.

    இங்கு தீயணைப்பு வாகனங்கள் அவசர ஊர்திகள் அலங்க ரிக்கப்ப ட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன தீயணைப்புக்கு தேவையான கருவிகள், தலைக்கவசம், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கோப்புகள் சரஸ்வதி தேவி புகைப்படத்திற்கு முன்பு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    இதைப்போல் நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரணியம் உள்ளிட்ட 7 தீயணைப்பு நிலையங்களிலும் நிலை யங்களிலும் ஒரே நேரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தீபார தனை ஏற்றி வழிபட்டனர்.

    பின்பு அனைத்து வாகனங்கள் ஊர்வலமாக சென்றனர் இவ்விழாவில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முகீசன் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.

    • கனரக வாகனங்கள் வந்து செல்வதால் வாகனஓட்டிகள் மீண்டும் அவதியடைந்தனர்.
    • அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நகரில் வந்து சென்ற வாகனங்களுக்கு அபராதம்.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பள்ளி நேரங்களான காலை 8மணி முதல் 10 மணிவரையிலும், மாலை 4மணி முதல் 6மணி வரையிலும் கனரக வாகனங்கள் வந்து செல்ல போக்குவரத்து போலீசார் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இந்நிலையில் போலீசாரின் அறிவிப்பை மீறி நகரில் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் வாகனஓட்டிகள் மீண்டும் அவதியடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் தலைமையில் போலீ சார்வாகனதணிக்கை செய்தனர்.

    அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நகரில் வந்து சென்ற கனரக வாகனங்கள் நிறுத்தி அபராதம் விதித்து ஓட்டுனரை எச்சரித்தனர்.

    • விதிமுறைகளின் படி அனைவருக்கும் பொது வான வகையில் நம்பர் பிளேட்டுகள் இருக்க வேண்டும்.
    • விபத்துக்கள் ஏற்படுத்திவிட்டு தப்புவதை வாகனங்களின் எண்களைக் கொண்டு போலீசாரும், பொது மக்களும் அடையாளம் காண்கின்றனர்.

    ராமநாதபுரம்

    மக்கள் தொகை அதிகரிப்பால் வாகனங்கள் பயன்படுத்துபவர்களும் அதிகரித்து வருகின்றனர். வாகன நெருக்கடி அதிகரித் தாலும் சாலைகளின் அளவு அதிகரிக்க முடியாத நிலை யில் அடிக்கடி விபத்துகளும், இதன் மூலம் பல்வேறு குற்ற செயல்களும் நடைபெறு கிறது.

    இது போன்ற குற்றச்சம்ப வங்கள் விபத்துக்கள் ஏற் படுத்திவிட்டு தப்புவதை வாகனங்களின் எண்களைக் கொண்டு போலீசாரும், பொது மக்களும் அடையா ளம் காண்கின்றனர்.

    வாகன எண்களை நம்பர் பிளேட்டுகளில் எழுதுவ தற்கு ஒவ்வொரு எண் ணிற்கும் இடைவெளி, உய ரம், நிறம் என்ற விதிமுறை கள் உள்ள நிலையில் பல் வேறு தரப்பினரும் தங்கள் இஷ்டமான வடிவங்களில் வாகன பதிவு எண்களை எழுதி வலம் வருகின்றனர்.

    ஹெல்மெட், லைசென்ஸ் போன்ற கண்காணிப்புகளில் காட்டும் ஈடுபாட்டை போலீ சார் முறையற்ற நம்பர் பிளேட்டுகளில் காட்டாத தால் அதிகாரத்தை பொறுத்து கட்சி வண்ணங் களில், மிரட்டல் எழுத்துக் கள் வருவது போன்றும், தங் கள் பதவியையும், வாகன எண்களுக்கு பதில் அரசியல், ஜாதி கட்சி தலைவர்களின் உருவங்களை பொறித்தும், ஆங்கில எழுத்துக்களுக்கு பதில் தமிழில் மாற்றியும் வைத்துள்ளனர். இது போன்ற செயல்களால் முக்கியமான நேரங்களில் நழுவி செல்லும் வாகனங் களை அடையாளம் காண முடிவதில்லை.

    எனவே விதிமுறைகளின் படி அனைவருக்கும் பொது வான வகையில் நம்பர் பிளேட்டுகளில் எண்களை எழுத வாகன உரிமையாளர் களுக்கும், இவற்றை எழுதும் ஸ்டிக்கர் கடைகளுக்கும் அறிவுறுத்துவதுடன் மீறு பவர்களுக்கு அபராதம் விதித்து கண்காணிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

    ×