search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disturbance"

    • முதற்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்.
    • 3 திட்டங்களும் மிக அவசியமான ஒன்றாகும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மக்கள் நலக்கழகம் செயலாளர் பக்கிரி சாமி, இது குறித்து, மாவட்ட கலெக்டர் குலோத்துங்க னுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 'ஸ்வதேஷ் தர்ஷன்' ஆலோசனை க்கூட்டத்தில், காரைக்கால் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்தில், முதற்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்.

    குறிப்பாக இத்திட்ட த்தில் காரைக்கால் வணிகம் பெருகுவதற்கும், காரைக்கால் நகரில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வெளியூர் மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக, வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்தும், காரைக்கால் நகரப்பகுதியில் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்தும் குறிப்பிடப்படவில்லை. மேற்கண்ட 3 திட்டங்களும் மிக அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, காரைக்கால் நகர் பகுதிக்கு வரும் பலர், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலர், மக்கள் நடமாடும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்கு வரத்துக்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க, காரைக்கால் பழைய பஸ் நிலையம் பகுதி, கடந்த பல ஆண்டுகளாக உபயோகம் இன்றி இருப்பதால், அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் இத்திட்டத்தின் கீழ் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுபோல், காரைக்கால் நகரப்பகுதியில் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • தேவகோட்டை புதிய பஸ் நிலையத்தில் அத்துமீறி நுழையும் ஆட்டோக்களால் அரசு பஸ்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
    • பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றி யுள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவை களுக்காக தேவகோட்டை நகருக்கு பஸ் மூலமாக அதிக அளவில் வந்து செல் கின்றனர். பேருந்து நிலையத் தில் போக்குவரத்து நெரிசல் களை குறைப்ப தற்காக கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட நகர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதிய பேருந்து நிலைய நுழைவாயிலில் கடந்த சில மாதங்களாகவே ஆட்டோக் கள் அதிகளவில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடை யூறாகவே செய்து வருகின்ற னர். புதிய பேருந்து நிறுத்தத் தில் நிறுத்தப்படும் நகரப் பேருந்துகள் இதனால் அருகில் உள்ள பேருந்து நிலையம் நுழைவாயில் வழி யாக செல்லும் நிலை ஏற்பட் டது. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

    புதிய பேருந்து நிலையத் தில் நிறுத்தப்படும் ஆட் டோக்களால் போக்கு வரத்து நெரிசல் அதிக அள வில் ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரிய விபத்துக் கள் ஏற்பட வாய்ப்புகள் உள் ளது.

    காவல்துறையினர் அவ் வப்போது இந்த ஆட்டோக் களுக்கு அபராதம் விதிக்கப் பட்டும் மீண்டும் மீண்டும் இதே தவறுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் செய்து வரு கின்றனர். அத்துமீறி பஸ் நிலையத்தில் நுழையும் ஆட் டோக்கல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேரோட்ட பாதைகளுக்கு இடையூறு இன்றி அமைக்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் தற்போது ரூ. 8 ஆயிரத்து 500 கோடியில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு 20 சதவீதம் மத்திய அரசு பங்கும், 20 சதவீதம் மாநில அரசு பங்கும், 60 சதவீத நிதி உதவியுடன் நடைபெறுவ தாக கூறப்பட்டுள்ளது.இதற்காக பல்வேறு இடங்களில் மண் பரிசோ தனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் 21 நிறுத்தங்கள் நிலத்திலும், 6 நிறுத்தங்கள் பூமிக்கடியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதில் மூன்று பெட்டிகள் பொருத்தப் பட்டு 750 முதல் 900 வரை மக்கள் பயணம் செய்யும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த மெட்ரோ ெரயில் திட்டத்தில் பூமிக்கு அடியில் அமைக்கும் போது பல்வேறு பழமையான கட்டிடங்கள் உள்ளது. அதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக யானைக்கல் முதல் பெரியார்நிலையம் பகுதி வரை உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அதே இடத்தில் தான் மெட்ரோ திட்டமும் வருகிறது. ஒரே இடத்தில் இரு வழித்தடங்களால் குழப்பம் ஏற்படுகிறது இதற்கு உரிய விளக்கத்தை அரசு வழங்க வேண்டும்.

    மீனாட்சி அம்மன் கோவில் அருகே திட்டம் வருகிறது என்று கூறுகி றார்கள். மதுரையில் பாரம்பரியமிக்க மாசி வீதிகளில் தேர் வரும் இடத்தில் பூமிக்கு அடியில் அமைக்கும் போது எந்த இடையூறும் இல்லாமல் அமைக்கப்பட வேண்டும்.

    தேரோட்டத்திற்கு எந்த இடையூறு இல்லாமல் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக உரிய பாது காப்பை பார்க்க வேண்டும்.

    மேலும் பூமிக்கு அடியில் அமைக்கும் பொழுது ஏற்கனவே குடிநீர் திட்டப்பணிகள், மின்சார கேபிள் உள்ளிட்ட இணைப்புகளை சரி பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தகவலறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது.
    • அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.

    தருமபுரி:

    சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்ட ஒரு சரக்கு ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ராயக்கோட்டையில் நேற்று நள்ளிரவு வந்தடைந்தது. அந்த ரெயிலில் திடீரென்று என்ஜீனில் ஏற்பட்டது. உடனே ரெயில் என்ஜீன் டிரைவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது. இதன்காரணமாக பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக செல்லக்கூடிய பெங்களூரு-தருமபுரி பாசஞ்சர் ரெயில், பெங்களூரு-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், குர்லா எக்ஸ்பிரஸ், கண்ணனூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரெயில்களும் 3மணி நேரம் தாமதம் ஆனது.

    பெங்களூரு-சேலம் ரெயில்கள் தாமதம் ஆனது. இதனால் கெலமங்கலம் ரெயில் நிலையத்தில் வெளியூருக்கு செல்வதற்காக காத்திருந்த பயணிகள் அங்கு 3 மணிநேரம் ரெயில்கள் ஏதும் வராமல் அடுத்தடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் காத்து இருந்தனர். அப்போது அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.

    • நாகூரில் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த மின்மாற்றியை அகற்ற வேண்டும்
    • நாகூர் பகுதியில் இருந்த இரு மின்மாற்றிகள் ஒரே மின்மாற்றியாக மாற்றி அமைக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்கா அலங்கார வாசலில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக இருந்த மின்மாற்றியை அகற்றி அப்பகுதியை சீர்செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் அங்கு ஆய்வு செய்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், விரைவில் மின்மாற்றி அகற்றப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    ஆனால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களின் காரணமாக அப்பணி நடைபெறவில்லை.

    இதற்கிடையில், சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஷா நவாஸ் எம்.எல்.ஏ இது தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர், தஞ்சாவூரில் இருந்து கூடுதல் திறன் மிக்க புதிய மின்மாற்றியை அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.

    நாகூர் பகுதியில் இருந்த இரு மின்மாற்றிகள் ஒரே மின்மாற்றியாக மாற்றி அமைக்கப்பட்டது.

    மேலும், தர்கா அலங்கார வாசலில் ருந்த மின்மாற்றியும் அகற்றப்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • தோப்புத்துறை சின்னபள்ளிவாசல் தெருவில் பள்ளிவாசலுக்கு பின்புறம் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது.
    • டிரான்ஸ்பார்மர் நெருக்கடியான தெருவில் உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் இடையூறாக உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை சின்னபள்ளிவாசல் தெருவில் பள்ளிவாசலுக்கு அருகில் மின்கம்பமும், அதே பள்ளிவாசலுக்கு பின்புறம் டிரான்ஸ்பார்மரும் அமைந்துள்ளது.

    இந்த மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் நெருக்கடியான தெருவில் உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் இடையூறாக உள்ளது.

    இதனால் அப்பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, அசம்பாவி தத்தை தடுக்கும் பொருட்டு மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மரை மாற்று இடத்தில் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மாடுகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • 16 மாடுகளை அழைத்து செல்வதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் இதுவரை வரவில்லை.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராம நாதசாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக 4 ரத வீதிகள், அக்னி தீர்த்தக் கடற்கரை ஆகிய பகுதிகளில் அதிகமான மாடுகள் சுற்றி திரிகின்றன.

    பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை பறிக்கும் முயற்சியிலும், பக்தர்கள் மீது மோதும் முயற்சியிலும் மாடுகள் ஈடுபடுகின்றன. இதனையடுத்து மாடுகளை அந்த பகுதியில் விடுவதற்கு அனுமதிக்க கூடாது எனவும், உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் கலெக்டரின் உத்தரவின் பேரில் ராமேசுவரம் நகராட்சி நிர்வாகம், நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் ஆணையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கடந்த 9-ந் தேதி முதல் கோவிலை சுற்றி 4 ரத வீதிகளிலும், கடற்கரை பகுதிகளிலும் சுற்றி திரிந்த 22 மாடுகளை பிடித்து கோவிலுக்கு சொந்தமான அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள பிர்லா காட்டேஜ் வளாகத்தில் அடைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் 6 பேர் மட்டும் அபராதம் கட்டி மாடுகளை அழைத்து சென்றனர். மேலும் மாடுகளின் உரிமையாளர்களிடம் மாடுகள் சாலைகளுக்கு வரக்கூடாது என்றும், தனி இடங்களில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நகராட்சி அலுவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.

    இதனை யடுத்து இந்த வளாகத்தில் கடந்த 5 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 16 மாடுகளை அழைத்து செல்வதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் இதுவரை வரவில்லை.

    இந்த மாடுகளுக்கு அன்றாட உணவுப் பொரு ட்கள், தண்ணீர் கொடுத்து பராமரிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. உடனடியாக 16 மாடுகளையும் அபராதம் செலுத்தி உரிமையாளர்கள் அழைத்துச் செ ல்ல வேண்டும். இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் பொது ஏலத்தில் விடும் என்றும் நகராட்சி ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • திருச்சி தீரன் நகரில் தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை.
    • மாணவ-மாணவிகள், முதியவர்கள் மாடுகளுக்கு பயந்து வேறு வழியே சுற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.

    திருச்சி

    திருச்சி-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள வளர்ந்து வரும் பகுதி தீரன் நகர். அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, வாரச்சந்தை என எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் மெயின் ரோட்டில் பொழுது சாய்ந்ததும் வெளியில் மேய்ந்து வரும் மாடுகள் ரோட்டுக்கு வந்து விடுகின்றன.

    இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. பாதசாரிகளும் மாடுகளுக்கு பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான கடைகளும் உள்ளன.

    கடைகளுக்கு வருபவர்களும், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி போன்ற பொருட்களை வாங்கிச் செல்ல முடியவில்லை. மாணவ-மாணவிகள், முதியவர்கள் மாடுகளுக்கு பயந்து வேறு வழியே சுற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.

    மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வெளியே சுற்றி திரிந்தால் அவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை யாரும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இங்கு அபராதம் விதிக்கப்படாவிட்டாலும் மாட்டின் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்துக் கூறி மாடுகளை வீடுகள் அருகிலேயே கட்டி அல்லது தொழுவத்தில் கட்டி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மாடுகள் முட்டி பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக இந்த நடவடிக்கையை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சுங்கச்சாவடியில் ஆட்குறை–ப்பு நடவடிக்கை–க்காக 53 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்றுடன் 16-வது நாளாக சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டம் நீடித்தது.

    பெரம்பலூர்,

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை மற்றும் உளுந்தூர் பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்காக 53 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, அந்த பணியாளர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களும் கடந்த 1-ந்தேதி முதல் திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அவர்கள் போராட்ட களத்தில் பல்வேறு விதமான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் 16-வது நாளாக சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டம் நீடித்தது. அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள், இரண்டு சுங்கச்சாவடிகளிலம் தற்போது என்ன நிலவரம் உள்ளதோ அதன்படியே வாகனங்கள் சென்று வர வேண்டும். நிர்வாகம் புதிய ஆட்களை பணியமர்த்தக்கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது. அவர்கள் அமைதி வழியிலேயே போராட்டத்தை தொடரலாம் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
    • மாடுகளை மீட்டுச் செல்ல அதன் உரிமையாளர்கள் தலா ரூ.2,000 அபராதமாக செலுத்த வேண்டும்.

    திருச்சி

    திருச்சி மாவட்டம் ச.கண்ணனூர் பேரூராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கால்நடைகளை தங்கள் வீடுகளில் கட்டி வைத்து பராமரிக்குமாறு கால்நடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி சார்பில் 3 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் கால்நடைகள் தெருக்களில் சுற்றித் திரிவது வாடிக்கையானது. அதைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் உத்தரவின் பேரில் சமயபுரம் வாரச்சந்தை, புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அனாதையாக சுற்றித்திரிந்த 15-க்கும் மேற்பட்ட மாடுகளை பேரூராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்து பேரூராட்சி திருமண மண்டப பகுதியில் நிறுத்தி வைத்தனர்.

    இந்த மாடுகளை மீட்டுச் செல்ல அதன் உரிமையாளர்கள் தலா ரூ.2,000 அபராதமாக செலுத்த வேண்டும். மீண்டும் இதேபோல் சாலைகளில் சுற்றித்திரிந்து மாடுகள் பிடிபட்டால் ரூ.5,000 அபராதமாக செலுத்திய பிறகே மீட்கலாம். அதற்கு பின்னரும் சாலைகளில் வலம் வந்தால் அந்த மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என செயல் அலுவலர் சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • திருப்பத்தூரில் சாலையில் திரிந்த மாடுகளை பணியாளர்களை கொண்டு பிடித்து அகற்றினர்.
    • பல்வேறு பகுதிகளில் திரியும் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை மதுரை சாலை, சிவகங்கை சாலை, 4 ரோடு, பெரிய கடை வீதி, மூலக்கடை வீதி, அச்சு கட்டு, வானியண் கோவில் தெரு, செட்டிய தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரியும் மாடுகள் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தன.

    இந்த மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தக்கோரி திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட தெருக்கள் வீதிகளில் சுற்றி திரிந்த மாடுகளை பணியாளர்களை கொண்டு மாடுகளை பிடித்து அகற்றினர். இதுபோன்று ஆபத்தை விளைவிக்கும் வகையில் தெருக்களில் உரிமையாளர்கள் மாடுகளை தெருவில் விடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சிதம்பரம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் ஆபாசமாக பேசிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • ஏழுமலை வயது 35 என்பவர் கையில் பெட்ரோல் கேனுடன் நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக திட்டி கொண்டிருந்தார்

    கடலூர்:

    சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் சென்றனர். அப்போது மண் ரோடு பகுதி அருகே அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை வயது 35 என்பவர் கையில் பெட்ரோல் கேனுடன் நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக திட்டி கொண்டிருந்தார். இதேபோல் சிதம்பரம் அருகே சிவபுரி பஸ் நிறுத்தம் அருகில் நடுரோட்டில் வடகிரப்பு மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் இடைவிடாத ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இதனைப் பார்த்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×