search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரோட்ட பாதைகளுக்கு இடையூறு இன்றி அமைக்க வேண்டும்
    X

    தேரோட்ட பாதைகளுக்கு இடையூறு இன்றி அமைக்க வேண்டும்

    • தேரோட்ட பாதைகளுக்கு இடையூறு இன்றி அமைக்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் தற்போது ரூ. 8 ஆயிரத்து 500 கோடியில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு 20 சதவீதம் மத்திய அரசு பங்கும், 20 சதவீதம் மாநில அரசு பங்கும், 60 சதவீத நிதி உதவியுடன் நடைபெறுவ தாக கூறப்பட்டுள்ளது.இதற்காக பல்வேறு இடங்களில் மண் பரிசோ தனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் 21 நிறுத்தங்கள் நிலத்திலும், 6 நிறுத்தங்கள் பூமிக்கடியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதில் மூன்று பெட்டிகள் பொருத்தப் பட்டு 750 முதல் 900 வரை மக்கள் பயணம் செய்யும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த மெட்ரோ ெரயில் திட்டத்தில் பூமிக்கு அடியில் அமைக்கும் போது பல்வேறு பழமையான கட்டிடங்கள் உள்ளது. அதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக யானைக்கல் முதல் பெரியார்நிலையம் பகுதி வரை உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அதே இடத்தில் தான் மெட்ரோ திட்டமும் வருகிறது. ஒரே இடத்தில் இரு வழித்தடங்களால் குழப்பம் ஏற்படுகிறது இதற்கு உரிய விளக்கத்தை அரசு வழங்க வேண்டும்.

    மீனாட்சி அம்மன் கோவில் அருகே திட்டம் வருகிறது என்று கூறுகி றார்கள். மதுரையில் பாரம்பரியமிக்க மாசி வீதிகளில் தேர் வரும் இடத்தில் பூமிக்கு அடியில் அமைக்கும் போது எந்த இடையூறும் இல்லாமல் அமைக்கப்பட வேண்டும்.

    தேரோட்டத்திற்கு எந்த இடையூறு இல்லாமல் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக உரிய பாது காப்பை பார்க்க வேண்டும்.

    மேலும் பூமிக்கு அடியில் அமைக்கும் பொழுது ஏற்கனவே குடிநீர் திட்டப்பணிகள், மின்சார கேபிள் உள்ளிட்ட இணைப்புகளை சரி பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×