பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மாடுகளை ஏலம் விட நடவடிக்கை

பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மாடுகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.16 மாடுகளை அழைத்து செல்வதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் இதுவரை வரவில்லை.
ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் பக்தர்களுக்கு இடையூறாக திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் பக்தர்களுக்கு இடையூறாக திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
Published on

ராமேசுவரம்

ராமேசுவரம் ராம நாதசாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக 4 ரத வீதிகள், அக்னி தீர்த்தக் கடற்கரை ஆகிய பகுதிகளில் அதிகமான மாடுகள் சுற்றி திரிகின்றன.

பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை பறிக்கும் முயற்சியிலும், பக்தர்கள் மீது மோதும் முயற்சியிலும் மாடுகள் ஈடுபடுகின்றன. இதனையடுத்து மாடுகளை அந்த பகுதியில் விடுவதற்கு அனுமதிக்க கூடாது எனவும், உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் கலெக்டரின் உத்தரவின் பேரில் ராமேசுவரம் நகராட்சி நிர்வாகம், நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் ஆணையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கடந்த 9-ந் தேதி முதல் கோவிலை சுற்றி 4 ரத வீதிகளிலும், கடற்கரை பகுதிகளிலும் சுற்றி திரிந்த 22 மாடுகளை பிடித்து கோவிலுக்கு சொந்தமான அக்னி தீர்த்த கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள பிர்லா காட்டேஜ் வளாகத்தில் அடைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் 6 பேர் மட்டும் அபராதம் கட்டி மாடுகளை அழைத்து சென்றனர். மேலும் மாடுகளின் உரிமையாளர்களிடம் மாடுகள் சாலைகளுக்கு வரக்கூடாது என்றும், தனி இடங்களில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நகராட்சி அலுவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.

இதனை யடுத்து இந்த வளாகத்தில் கடந்த 5 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 16 மாடுகளை அழைத்து செல்வதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் இதுவரை வரவில்லை.

இந்த மாடுகளுக்கு அன்றாட உணவுப் பொரு ட்கள், தண்ணீர் கொடுத்து பராமரிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. உடனடியாக 16 மாடுகளையும் அபராதம் செலுத்தி உரிமையாளர்கள் அழைத்துச் செ ல்ல வேண்டும். இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் பொது ஏலத்தில் விடும் என்றும் நகராட்சி ஆணையர் கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com