search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏலம்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.
    • ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி, நல்லூர் மற்றும் மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்ற வழக்கில் பதிவு செய்யப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. அவ்வகையில், 3 போலீஸ் நிலையங்களை சேர்ந்த, 163 வாகனங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 7-ந் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது.ஏலம் கோர விருப்பமுள்ள நபர்கள் ஆதார் கார்டு, வைப்பு தொகை 10 ஆயிரம் ரூபாயை வங்கி வரைவோலையாக தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 6-ந் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் மோட்டார் சைக்கிள் ஏலம் எடுக்க விரும்புவர்கள் வீரபாண்டி, நல்லூர், மங்கலம் போலீஸ் நிலையங்களை அணுகி, ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிடலாம். கூடுதல் விபரங்களுக்கு தெற்கு தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு அணுகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருகிற 21-ந்தேதி நடக்கிறது
    • லம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 42 வாகனங்கள் ஏலம் 21-ந்தேதி காலை 11 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்று காலை 8 மணிக்கு ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். ஒரு வாகனத்தை ஏலம் எடுத்த பிறகு மற்றொரு வாகனத்தை ஏலம் எடுக்க வேண்டும் என்றால் மீண்டும் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.

    நுழைவு கட்டணம் ரூ.10 செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்துக்கு ஏல தொகையுடன் சேர்த்து 18 சதவீத ஜி.எஸ்.டி.யை ஒரு வாரத்துக்குள் செலுத்தி எடுத்துக்கொள்ளலாம். ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தியவர்கள் வாகனத்தை ஏலம் எடுக்கவில்லை என்றால் முன்பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை (நாகர்கோவில்) 04652-220377, தக்கலை-04651-271198, துணை போலீஸ் சூப்பிரண்டை 04651-224833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 70 வருடங்களில் பிக்காசோ பல அரிய படைப்புகளை உருவாக்கினார்
    • சந்திரயான்-3 திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடிகள் செலவானது

    மேற்கத்திய நாடுகளில் கலைப்பிரியர்கள் அதிகம். அதிலும், ஓவியங்களை தேடித்தேடி வாங்கும் செல்வந்தர்களுக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் குறைவே இருக்காது.

    புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை வாங்கி வைத்து கொள்வதை பெருமையாக நினைக்கும் கோடீசுவரர்கள் அதிகம் உள்ளதால், விற்க விரும்புபவர்களிடம் அவற்றை வாங்கி ஏலமுறை மூலம் விற்றுத்தரும் ஏல நிறுவனங்களும் மேலை நாடுகளில் அதிகம்.

    1881ல் ஸ்பெயின் நாட்டின் மலாகா பகுதியில் பிறந்து அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரையோரம் உள்ள பார்சிலோனா நகரில் வளர்ந்தவர் ஓவியர் பாப்லோ பிக்காசோ (Pablo Picasso).

    1904ல் பிரான்ஸ் நாட்டிற்கு குடிபெயர்ந்து, தனது படைப்புகள் மூலம் 20-ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியராக பிக்காசோ திகழ்ந்தார்.

    1973ல் தனது 92-வது வயதில் மறையும் வரை சுமார் 70 வருடங்கள் அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் கலைப்பிரியர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.

    இந்நிலையில், 1968ல், எமிலி ஃபிஷ்ஷர் லாண்டவ் (Emily Fisher Landau) என்பவர் வாங்கி வைத்திருந்த பிக்காஸோ வரைந்த "ஃபெம் அ லா மான்ட்ரே" (Femme a la Montre) எனும் அரிய ஓவியத்தை வேறு ஒருவர் வாங்கியிருந்தார். அது சில தினங்களுக்கு முன் சாத்பீஸ் (Sotheby's) எனும் ஏல நிறுவனத்தின் மூலமாக விற்பனைக்கு வந்தது.

    1932ல் பிக்காஸோ வரைந்த இந்த ஓவியத்திற்கு மேரி தெரேஸ்-வால்டர் (Marie Therese-Walter) எனும் பெண், மாடலாக இருந்தார். மேரி, பிக்காசோவின் நெருக்கமான தோழி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு நீல நிற பின்னணியில் மிக பெரிய சிம்மாசனம் போன்ற இருக்கையில் மேரி அமர்ந்திருப்பதை சித்தரிக்கும் இந்த ஓவியம், ஏலத்திற்கு வரும் முன் சுமார் ரூ.1000 கோடி ($120 மில்லியன்) மதிப்பிடப்பட்டிருந்தது.

    எதிர்பார்த்ததை விட ஏலத்தில், இந்த ஓவியம் சுமார் ரூ.1157 கோடி ($139 மில்லியன்) தொகைக்கு விலை போனது.

    2015ல் கிறிஸ்டீஸ் (Christie's) ஏல நிறுவனம் மூலமாக விற்கப்பட்ட பிக்காசோவின் "லே ஃபெம் டி அல்ஜெர்" (Les Femmes d'Alger) எனும் மற்றொரு ஓவியத்திற்கு ரூ.1500 கோடி ($179 மில்லியன்) தொகை கிடைத்திருந்தது.

    தற்போது அவரது இந்த ஓவியத்திற்கு கிடைத்துள்ளது இரண்டாவது அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

    நிலவின் மேற்பரப்பினை ஆராய்ச்சி செய்ய இந்தியா கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பிய சந்திரயான்-3 (Chandrayaan-3) விண்கலன் திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடிகள் செலவானதை ஒப்பிட்டு, ஒரு ஓவியத்திற்கு இத்தனை பெரும் தொகையா என சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2023க்கான பரிசுத்தொகை ரூ.10 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது
    • கிரிக்கெட் வீராங்கனைகளை கொண்ட 5 அணிகள் தொடரில் பங்கேற்கின்றன

    ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறும் 20-20 ஐபிஎல் (IPL) தொடரை போல், பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை கொண்ட அணிகளுடன் டபிள்யுபிஎல் (WPL) எனும் போட்டித்தொடர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தால் (BCCI) இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மும்பை இண்டியன்ஸ், யு.பி. வாரியர், குஜராத் ஜியன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் என 5 அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கு பெற்றன. முதல் ஏலத்தின் போது ஒவ்வொரு அணிக்கும் ரூ.12 கோடி வழங்கப்பட்டது.

    கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை முதல் தொடர் போட்டிகள் நடைபெற்றன. இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்று மும்பை இண்டியன்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது.

    2023க்கான பரிசுத்தொகை ரூ.10 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    வரும் 2024 வருடத்திற்கான டபிள்யுபிஎல் போட்டித்தொடருக்கு டிசம்பர் 9 அன்று ஏலம் நடைபெற உள்ளது.

    கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் நடைபெறப்போகும் இந்த ஏலத்தில், 5 அணிகளிலும் 30 இடங்கள் போட்டிக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கான 9 இடங்களும் அடங்கும்.

    கடந்த முறை ஏலத்தில் கிடைத்த தொகையில் செலவினங்கள் போக மீதம் உள்ள தொகையும், தங்களிடம் உள்ள வீராங்கனைகளை விடுவிப்பதால் கிடைக்கும் தொகையையும் தவிர, இந்த முறை ஒவ்வொரு அணிக்கும் ரூ.1.5 கோடி அதிக வருவாய் கிடைக்கும்.

    தற்போதைய சாம்பியன்களான மும்பை இண்டியன்ஸ் அணி தங்களிடம் உள்ள தொகையை முழுவதும் பயன்படுத்தி விட்டது.

    இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டிகள், இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரூ என இரு நகரங்களில் மட்டுமே நடைபெற போகின்றன.

    இத்தொடரில் 5 அணிகளும் ஒன்றுடன் ஒன்று இரு முறை போட்டியிடும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் "நாக்-அவுட்" சுற்றுக்கு முன்னேறும்.

    கடந்த அக்டோபர் மாதம், பி.சி.சி.ஐ. (BCCI), 5 அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் வெளியேற்ற விரும்பும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி 60 வீராங்கனைகள் தக்க வைத்து கொள்ளப்பட்டுள்ளனர்; 29 பேர் வெளியேற்றப்பட உள்ளனர்.

    ஒவ்வொரு அணியின் வீராங்கனைகளின் இறுதி பட்டியல், ஏலம் நிறைவடைந்ததும் வெளியாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது.
    • இந்த ஏலத்தில் மக்காசோளம் மற்றும் தேங்காய் கொப்பரை மொத்தம் ரூ.7.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் மக்காச்சோளம் ஏலம் நடைபெற்றது. 264 மூட்டைகளில் 26.379 டன் மக்காசோளம், 56 மூட்டைகளில் 2.04 டன் தேங்காய் கொப்பரை விற்பனைக்கு வந்தது. ஒரு குவிண்டால் மக்காசோளம் அதிகபட்சம் ரூ.2245-க்கும் குறைந்தபட்சம் ரூ.2237-க்கும் விற்பனையானது. தேங்காய் கொப்பரை ஒரு கிலோ அதிகபட்சம் ரூ.87.77-க்கும், குறைந்தபட்சம் ரூ.58.75-க்கும் விற்பனையானது.

    இந்த ஏலத்தில் மக்காசோளம் மற்றும் தேங்காய் கொப்பரை மொத்தம் ரூ.7.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. தேங்காய் கொப்பரை விலை உயர்ந்து வருவதால் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து தரகர் இல்லாமல் விவசாயிகள் விற்பனை செய்து முழு தொகையினை பெறலாம். மேலும் ரூ. 3 லட்சம் வரை பொருளீட்டுக்கடன் கடன் பெறலாமென, ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர் பிரபாவதி தெரிவித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று (செவ்வாய்கிழமை) 229 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 367 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
    • மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரத்து 226- க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் அன்று தேங்காய் பருப்பும், வியாழன் அன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று (செவ்வாய்கிழமை) 229 விவசாயிகள் கலந்து கொண்டு 1 லட்சத்து 36 ஆயிரத்து 367 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்த 12 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 89.89 க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.89 க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரத்து 226- க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர்.
    • ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.

     முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 4 விவசாயிகள் 18 மூட்டைகள் (902 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.74 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.84-க்கும், குறைந்த பட்சமாக ரூ.60-க்கும், சராசரியாக ரூ.60- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் சிக்கல்
    • நடை பாதைகளில் 200-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது உலகப்புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரி மலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படு கிறது.

    குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண் டாட்டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.

    இது தவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரி யில் சீசன் களை கட்டும். கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனை யொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு வசதி யாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் 200-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம்.

    அதன்படி கடந்த 26-ந்தேதி நடந்த கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை முன்பு உள்ள இடத்தில் சபரி மலை அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி தற்காலிக சீசன் கடைகள் ஏலம் விடுவதற்கான தீர்மா னம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பெரும்பாலான கவுன்சி லர்கள் ஆதரவு அளிக்க வில்லை. இதனால் இந்த கூட்டத்தில் சபரிமலை சீசன் கடைகள் ஏலம் விடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்ப டவில்லை. இதனால் தற்போது கன்னியாகுமரியில் தற்காலிக சீசன் கடைகளை ஏலம் விடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. சபரிமலை அய்யப்ப சீசன் தொடங்கு வதற்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடுவதற்கான எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இருப்பி னும் இந்த சீசன் கடைகளை ஏலம் எடுப்ப தற்காக இப்போதே வெளியூர் வியா பாரிகள் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். ஆனால் வெளியூர் வியாபாரி களின் நிலை கேள்விக்குறி யாக தான் உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஏலம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஏலம் நடைபெற்றது. பண்டிகை காரணமாக விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலத்திற்க்கு கொண்டுவரப்பட்டது.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 8.52 குவிண்டால் எடை கொண்ட 2 ஆயிரத்து 635 தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.81-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.25.35-க்கும், சராசரி விலையாக ரூ.26.35-க்கும் விற்பனையானது.

    அதேபோல் 175.05 குவிண்டால் எடை கொண்ட322-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.79-க்கும், சராசரி விலையாக ரூ.84.89-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.16-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.67.99-க்கும், சராசரி விலையாக ரூ.82.89-க்கும் என விற்பனையானது. ஒரே நாளில் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 14 லட்சத்து 26 ஆயிரத்து 752-க்கு விற்பனையானது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 366 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.
    • மொத்தம் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 366 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. இதில், ஆா்.சி.ஹெச். பி.டி. ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 6,500 முதல் ரூ.7,119 வரையிலும், கொட்டு ரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.