search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painting"

    • ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
    • குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும்.

    தங்களுடைய குழந்தைகளின் வருங்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே பெற்றோர்களின் விருப்பமாக இருக்கும். இதன் காரணமாக தங்களின் பொருளாதார நிலையைத் தாண்டியும் செலவு செய்து குழந்தைகளை படிக்க வைப்பார்கள். ஆனால் குழந்தைகளின் ஆளுமைத் திறனை வளர்க்க, ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது என்பதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு, கைவினை மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பிற செயல்பாடுகளிலும் அவர்களுக்குப் போதுமான பயிற்சிகளை வழங்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் சமூகத் திறன்களை மேம்படுத்த முடியும்.

    தன்னம்பிக்கை, குழு மனப்பான்மை விடாமுயற்சி, தலைமைத்துவம், விட்டுக் கொடுத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்ற பண்புகளை வளர்க்க முடியும். ஏட்டுப்பாடங்களால் கற்றுக்கொடுக்க முடியாத வாழ்க்கை பாடங்களை, பல்வேறு கலைகளை கற்றுக்கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

    அந்த வகையில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று நமது முன்னோர்களால் வகுக்கப்பட்டவையே ஆய கலைகள்' நடனம், இசைக்கருவி மீட்டுதல், ஒப்பனை செய்தல், ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் என இதில் 64 வகையான கலைகள் உள்ளன. அவற்றில் இந்த கால வாழ்க்கை முறைக்கு தகுந்த சில கலைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பயனுள்ளதாக அமையும். அதைப் பற்றிய தகவல்கள் இதோ....

     பூ தொடுத்தல்:மலர் அலங்காரம், மலர் வடிவமைப்பு, மலர் ஓவியம் மற்றும் பூக்களால் சிற்பம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களுக்கு அடிப்படையாக இருப்பது பூத்தொடுத்தல் அல்லது பூக்கட்டுதல் ஒன்று போல உள்ள பூக்களை தேர்ந்தெடுத்து, வரிசையாக வைத்து அவற்றை மாலையாக கட்டும் செயலில், வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விஷயங்கள் உள்ளன. இதன்மூலம் கண்களுக்கும். கைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படும்.

     ஓவியம் வரைதல்:

    குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும். ஒருங்கிணைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும் ஓவியக்கலை பயன்படுகிறது. குழந்தைகள் சுதந்திரமாக சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்கவும், தங்களது செயல்பாடுகளை மதிப்பீடு செய்யவும் ஓவியக்கலையின் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

    உதாரணத்துக்கு, ஓர் ஓவியத்துக்கு எந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தெந்த நிறங்களை எவ்வாறு கலக்க வேண்டும். ஓவியத்தில் ஏற்படும் பிழைகளை எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்பனவற்றை குழந்தைகள் சிந்திப்பார்கள். இது அவர்கள் வாழ்க்கையிலும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டறிய உதவும்.

    மண்பாண்டங்கள் செய்தல்:

    களிமண்ணைக் கொண்டு பல்வேறு பொருட்களை வடிவமைக்கும் கலையானது, குழந்தைகளின் படைப்புத்திறனை மேம்படுத்தும். களிமண்ணை பக்குவமாக கையாளும் போதுதான் அதைக் கொண்டு பொருட்களை வடிவமைக்க முடியும். மனதையும், உடலையும் சமநிலையில் வைத்து சிந்திக்க இந்தக் கலை கற்றுக்கொடுக்கிறது. குழந்தைகளின் மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் களிமண்ணுக்கு உண்டு.

    மண்பாண்டங்கள் செய்வதற்கு கற்றுக்கொடுக்கும் வகுப்புகளில் கலந்துகொள்ளும் குழந்தைகள், மிகவும் அமைதியாக வடிவங்களை உருவாக்கிக் கொண்டு இருப்பதை கவனிக்க முடியும். அதேநேரம் அவர்களின் ஆற்றலும், செயலும் வேகமாக இருக்கும். இவ்வாறு சமைத்தல், தையல் நீச்சல், இல்லத்தை தூய்மையாக வைத்திருத்தல் என ஒவ்வொரு கலையும் குழந்தைகளின் ஆளுமைத்திறனை வளர்ப்பதற்கு உதவுகின்றன.

    • தென்மேற்கு பருவமழை காலத்தில் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் களைகட்டும்.
    • உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினரும் வந்து ஆர்வமுடன் குளித்து மகிழ்வர்.

    இங்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சீசன் களைகட்டும். இருப்பினும் தற்பொழுது அருவிகளில் கொட்டும் நீரில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில் குற்றாலம் பகுதிகளில் உணவு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகளவில் உள்ளன. அதில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி உண்டு மகிழ்வர். சுற்றுலா பயணிகளுக்கு தரம் இல்லாத உணவு பொருட்களை சிலர் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி நாக சுப்பிரமணியன் குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் திடீரென ஆய்வுகளை மேற்கொண்டார்.

    அப்போது கெட்டுப்போன வாழைப்பழ சிப்ஸ் 665 கிலோ மற்றும் பேரிச்சம்பழம் 152 கிலோ, செயற்கை கலர் சேர்க்கப்பட்ட அல்வா 420 கிலோ, தடைசெய்யப்பட்ட 35 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை அங்குள்ள 2 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பினாயில் ஊற்றி அவை அழிக்கப்பட்டது. சமையலறை பகுதி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் அதற்கும் அபராதம் ரூ.18 ஆயிரம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

    • அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தத்ரூபமாக வரைந்துள்ளார்.
    • சந்திரயான்-3 போன்ற பல அரிய ஓவியங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் வடதா ராகுல் பட்நாயக் (வயது 35) ஓவியக் கலைஞரான இவர் ஒரு மென்மையான மா இலையில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தத்ரூபமாக வரைந்துள்ளார்.

    அதில் ஒரு பகுதியில் ராமர் மற்றும் சீதை மறுபுறம் அனுமான் உருவங்கள் உள்ளன.

    இது ஒரு புகைப்படம் போல தத்ரூபமாக காட்சியளிக்கிறது. 4 மணி நேரம் உன்னிப்பாக முயற்சி செய்து இந்த படத்தை வரைந்தார். இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

    வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறக்கப்படுவதால் தனது பக்தியை வெளிப்படுத்தும் நோக்கமாக இதனை வரைந்ததாக அவர் கூறியுள்ளார்.

    இவர் அரிசி மற்றும் பறவைகளின் இறகுகளில் ஓவியங்கள் வரைந்துள்ளார். சீனிவாசா திருக்கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம், சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், சந்திரயான்-3 போன்ற பல அரிய ஓவியங்களை ஏற்கனவே வரைந்துள்ளார்.

    • புதுவை தவளகுப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம்.
    • பல்வேறு வகைகளில் தங்களது திறமையை வெளிக்காட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை தவளகுப்பத்தை அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சுமார் 23 வருடங்களாக ஓவியராக பணிபுரிந்து வருகிறார்.

    டிஜிட்டல் வருவதற்கு முன்பு, துணியில் எழுதுவது, சுவரில் வண்ணம் தீட்டுதல், அரசு கட்டிடங்களுக்கு பெயர் எழுதுதல், விழிப்பு ணர்வு ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட பல்வேறு வகை களில் தங்களது திறமையை வெளிக்காட்டினார்.

    இந்த நிலையில் தற்போது டிஜிட்டல் ஆன பிறகு சுவரில் எழுதுதல், பெயர் எழுதுதல் உள்ளிட்ட குறிப்பிட்ட வேலைகள் மட்டுமே வருவதால் 5 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பகுதி நேர ஓவிய பயிற்சி பள்ளி சில ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இவரது ஓவிய கலைத்திறமையை பாராட்டி முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தில் நடந்த ஓவிய அகடாமி நிகழ்ச்சியில் ஓவிய ரத்னா விருதினை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கி சிறப்பித்தார்.

    • தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடந்தது.
    • 50 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

    தஞ்சாவூர்:

    உலக சுற்றுலா தின விழாவின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இன்று புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் ஓவியம் குறித்த செய்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இப்பயிற்சியினை தேசிய விருது பெற்ற தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் சம்பாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அவரது குழுவினர் 50 கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இதில் மரப்பலகை, பருத்தித் துணி, புளியங்கொட்டை பசை கொண்டு பலகை தயாரிக்கும் பணி குறித்தும், தேவையான வரைபடத்தை உருவாக்குதல் எப்படி என்பது குறித்தும், தொடர்ந்து வண்ண கற்கள் பதித்து மாவு வேலைப்பாடு செய்வது குறித்தும், தங்க இதழ் பதித்தல் குறித்தும், நிறைவாக வண்ணம் தீட்டி ஓவியத்தை நிறைவு செய்தல் குறித்தும் படிப்படியாக செய்து காண்பித்தனர்.

    இதில் பங்கேற்றவர்கள் இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் தொடர்ந்து இது போன்ற பயிற்சி முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக இப்பயிற்சியினை இந்திய சுற்றுலா தென் மண்டல உதவி இயக்குனர் பத்மாவதி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுலா அலுவலர் நெல்சன், சுற்றுலா ஆலோசகர் ராஜசேகரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், கணக்கு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கினார்.

    பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, மாணவ- மாணவிகளுக்கு சர்வதேச கலாச்சார ஒற்றுமை குறித்து எடுத்து கூறப்பட்டது.

    இவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர். மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • ஜி20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
    • மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை கும்பகோணத்தில் உள்ள ஸ்தபதிகளால் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    ஜி20 மாநாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த தஞ்சாவூர் ஓவியம் வரையும் கலைஞர் ஒருவர் கலந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டுக்கான தனி அடையாளத்தை பெற்றுத்தந்துள்ளது. இதனை வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை மண்ணுக்கு கிடைத்த பெருமை என அவர் நெகிழ்ந்து வருகிறார்.

    அதன் பற்றிய விவரம் வருமாறு :-

    ஜி20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    மாநாட்டு அரங்கில் கண்காட்சி மற்றும் கலாசார ங்களை பிரதிபலிக்க கூடிய வகையிலான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பண்பாடு மற்றும் கலாசா ரங்களை போற்ற க்கூடிய விதமான பலவேறு அம்சங்கள் இடம் பெற்றிருப்பது பார்வை யாளர்களை கவர்ந்துள்ளது.

    ஏற்கனவே மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை கும்பகோணத்தில் உள்ள ஸ்தபதிகளால் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் முத்தாய்ப்பாக நடராஜர் சிலை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில் கும்பகோணம் காமராஜர் நகரை சேர்ந்த ஓவியர் பன்னீர்செல்வம் (வயது 60 ) ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கே பெருமையளிப்பதாக உள்ளது.

    தஞ்சாவூர் ஓவியம் வரைவதில் பன்னீர்செல்வம் திறமையானவர். இவர் சக்கரபாணி ஆர்ட்ஸ் என்ற பெயரில் தஞ்சாவூர் ஓவியம் செய்து வருகிறார். வறுமையில் இருக்க கூடிய ஆண்கள் மற்றும் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் வரைய கற்றுத்தந்து வாழ்வாதாரம் ஏற்படுத்தி தருவதுடன் கலை பரவுவதற்கு காரணமாகவும் இருந்து வருகிறார்.

    உலகின் பல நாடுகளுக்கு தஞ்சாவூர் ஓவியத்தின் பெருமையை பறைசாற்றி வரும் பன்னீர்செல்வம், கைவினை கலைஞர்களுக்கான உயரிய விருதான சில்ப் குரு விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தென் மாநிலங்களில் தமிழகத்தி லிருந்து ஜி20 மாநாட்டுக்காக அழைக்கப் பட்டிருக்கும் ஒரே கைவினை கலைஞர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் பன்னீர் செல்வம். இதில் நெகிழ்ந்திருக்கும் அவர் இது தஞ்சை மண்ணுக்கு கிடைத்த பெருமை என மகிழ்ச்சியுடன் பேசி வருகிறார்.

    இது குறித்து பன்னீர்செ ல்வம் கூறும்போது ;-

    ``உலகத் தலைவர்கள் பங்கேற்க கூடிய ஜி 20 உச்சி மாநாட்டில் கலைகளுக்கு பெயர் பெற்ற தஞ்சாவூர் மண்ணில் இருந்து, தென்மா நிலங்களில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டுள்ள ஒரே கைவினை கலைஞன் நான் என்பது எனக்கு பெருமிதத்தை தருகிறது. இதனை தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

    இந்நிலையில் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த சிறந்து விளங்க கூடிய ஏழு கைவினை கலைஞர்கள் அழைக்கப்பட்டனர்.

    தென்இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் இருந்து கைவினை கலைஞரான என்னை அழைத்திருக்கிறார்கள். நானும் உதவிக்காக என மகன் மனோஜும் இதில் கலந்து கொண்டுள்ளோம்.

    எனக்கு ஒதுக்கபட்டுள்ள அரங்கில் நம் பாரம்பர்யமான தஞ்சாவூர் ஓவியத்தை காட்சிப் படுத்தியிருப்பதுடன் தஞ்சாவூர் ஓவியம் எப்படி உருவாகிறது என உலகில் இருந்து வந்திருக்க கூடிய தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு செய்து காட்டி வருகிறேன். இதை பார்த்தவர்கள் தமிழகத்தையும், தஞ்சாவூர் மண்ணின் பாரம்ப ர்யத்தையும் புகழ்ந்தனர்.

    தென் மாநிலங்களில் இருந்து நான் ஒருவன் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளது எனக்கு கிடைத்த பெருமை இல்லை. கலைகளுக்கு பெயர் போன வரலாற்று சிறப்பு கொண்ட தஞ்சாவூர் மண்ணுக்கும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெருமை. நம் அரசு பண்பாடு மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் மூலம் கலைகள் வளர்கிறது. நமக்கான அடையாளம் தனித்துடத்துடன் கிடைக்கி றது என்றார்.

    • பல்வேறு போக்குவரத்து காவல்துறை சம்பந்தமான ஓவியங்களை வரைந்தனர்.
    • சிறந்த ஓவியம் வரைந்திருந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    அரசு பள்ளிகளில் சாலை போக்குவரத்து போலீஸ் துறை உள்பட பல்வேறு துறைகள் சார்ந்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

    அதன்படி தஞ்சை மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று சாலை போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் 60 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு போக்குவரத்து சிக்னல், ஒருவழி சாலை, வேகத்தடை, வாகனம் நிறுத்த அனுமதி இல்லை , போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதி என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து காவல்துறை சம்பந்தமான ஓவியங்களை வரைந்தனர்.

    இந்த ஓவிய போட்டியை தஞ்சை நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பார்வையிட்டார்.

    பின்னர் சிறந்த ஓவியம் வரைந்திருந்த மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழங்கி பாராட்டினார்.

    மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சங்கர், போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் , ஓவிய ஆசிரியர் அறிவுச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியானது காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • போட்டியன்று படம் வரைவதற்கு பேப்பர் மட்டும் வழங்கப்படும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நகரங்களின் தூய்மை க்கான மக்கள் இயக்கம் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் ஓவியப் போட்டி வரும் 12-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ளது.

    போட்டிகள் பட்டுக்கோட்டை பண்ணை வயல் சாலையில் உள்ள பான் செக்கர்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடைபெற உள்ளது.

    ஓவியப் போட்டிகள் 5 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.

    இதில் எல்கேஜி முதல் யு.கே.ஜி வரை மரம் நடுதல் என்ற தலைப்பிலும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு என்ற தலைப்பிலும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நீர்நிலைகள் மேம்படுத்துதல் என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்தெடுத்தல் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டிகள், நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. இந்த போட்டிகளை பொறுத்தவரை பென்சில், கிரேயான்ஸ், ஆயில் பேஸ்டல், வாட்டர் கலர், போஸ்டர் கலர், அக்ரிலிக் கலர் வண்ணங்களில் மட்டும் வரையலாம்.

    போட்டியன்று படம் வரையும் பேப்பர் மட்டும் வழங்கப்படும்.

    மற்ற அனைத்து உபகரணங்களும் போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும்.

    ஒவ்வொரு குரூப்பிற்கும் முதல் மூன்று பரிசுகளும், சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்படும்.

    கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

    நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

    முன்பதிவு செய்ய இன்று 9-ம் தேதி கடைசிநாள்.

    இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பட்டுக்கோட்டை மயில்பாளையம் எல்.ஐ.சி.ஆபீஸ் எதிரில் சிவம் ஓவிய வகுப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலு (வயது 53). பெயிண்டர். இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் தங்கி இருந்து பெயிண்ட் அடித்து வருகிறார்.
    • வேலு தான் வேலை செய்யும் வீட்டின் முதல் மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள காக்காபாளையம் கணக்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 53). பெயிண்டர். இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் தங்கி இருந்து பெயிண்ட் அடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வேலு தான் வேலை செய்யும் வீட்டின் முதல் மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வேலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோபுரத்துக்கு வர்ணம் தீட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்டளையினர் முன்வந்துள்ளனர்.
    • திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெறும்.

    அவிநாசி ூ

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த அம்மன் ராஜகோபுரம் பாலாயம் செய்யப்ப ட்டுள்ளது. கோபுரத்துக்கு வர்ணம் தீட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்ட ளையினர் முன்வந்து ள்ளனர்.

    இதனால் அம்மன் ராஜகோபுரத்துக்கு மூங்கில் சாரம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெறும் என செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் தெரிவித்தார்.

    • சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 41 மனமகிழ் மன்றங்கள் உள்ளன.
    • சேலம் சரக காவல்துறை துணை தலைவர் ராஜேஸ்வரி உத்தரவின் படி 41 மனமகிழ் மன்றங்களிலும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் 2000 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் சரகத்தில் உள்ள சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 41 மனமகிழ் மன்றங்கள் உள்ளன. இதில் நலிவுற்ற குழந்தைகளை ஊக்குவிக்கவும், அவர்களை சிறுவயதிலேயே குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கவும் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாக்கவும் காவல் மனமகிழ் மன்றங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

    சேலம் சரக காவல்துறை துணை தலைவர் ராஜேஸ்வரி உத்தரவின் படி 41 மனமகிழ் மன்றங்களிலும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் 2000 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்கள். இந்த தகவலை சேலம் சரக காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×