என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிக்கல்"
- கரூரில் லியோ திரைப்படத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது
- வலைதளத்தை வேண்டுமென்றே முடக்கி வைப்பதாக குற்றச்சாட்டு
கரூர்,
கரூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 7 திரையரங்குகளில், 5 திரையரங்கங்களில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகின்ற 19-ந் தேதி வெளியாக உள்ளது.கரூர் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் கரூர் சினிமாஸ் என்ற இணையதளம் மூலம் ரசிகர்கள் புதிய திரைப்படங்களுக்கு ஆன்லைன் வழியாக புக்கிங் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கான புக்கிங் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் வெளியானது. ஆனால், 10 நிமிடத்திற்குள் வலைத்தளம் முடக்கப்பட்டது. இரவு 10 மணிக்கும், அதைத்தொடர்ந்து 11 மணிக்கும் புக்கிங் ஓபன் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை வெப்சைட் இயங்கவில்லை. மேலும், 19-ந் தேதி வரை படத்திற்கான டிக்கெட் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவித்துள்ளனர்.ரசிகர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும், வேண்டுமென்றே இணையதளத்தை முடக்கி வைத்துவிட்டு, மறைமுகமாக திரையரங்க ஊழியர்கள் டிக்கெட் விற்பனை செய்வதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த பதிவுகள் வைரலாகி வருகிறது.இது தொடர்பாக திரையரங்க நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டபோது, ஒரே நேரத்தில் ஏராளமான நபர்கள் வலைதளத்தை பயன்படுத்துவதால் இவ்வாறு பிரச்சனை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
- நீர் வரத்து அடியோடு நின்றதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர்மட்டம் 47.50 அடியாகும்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரியின் மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாந–கரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு பருவகால–ங்களில் பெய்யும் மழை, மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த 2 மாதமாக கோடை வெயில் சுட்டெரித்ததால் ஏரியின் நீர்மட்டம் வேக–மாக குறைந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு குறை–க்கப்ப–ட்டது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் எப்போது மழை பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தி–ருந்தனர்.
வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதிதான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே கடந்த மாதம் 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்து சேரும். அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரப்படும். ஆனால் மேட்டூர் அணை–யில் இருந்து தண்ணீர் திறந்தும் இதுவரை கீழணைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து 38 அடி வரை நீர்மட்டம் இருக்கும் வரைதான் சென்னை குடிநீர்தே–வைக்கு அனுப்ப முடியும். 38 அடிக்கு கீழ் ஏரியில் சேரும், சகதியுமாக காணப்படுவதால் தண்ணீர் எடுக்க முடியாது. இன்று காலை 22 கனஅடி நீர் மட்டுமே சென்னை மாநகருக்கு அனுப்ப–ப்படு–கிறது. தற்போது நிலவர–ப்படி நீர்மட்டம் 39.75 ஆக உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. இன்னும் ஒரு வாரத்துக்குத்தான் குடிநீர் அனுப்பப்படும் என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்