என் மலர்
நீங்கள் தேடியது "Doctors"
- ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்தியல் படிப்பை படித்தால் அலோபதி சிகிச்சை அளிக்கலாம்
- இதற்கு மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (IMA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளித்து, அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்ற மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (IMA) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சில் ஜூன் 30 அன்று வெளியிட்ட அறிவிப்பில் ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருத்துவத்தில் பயிற்சி பெறுவதற்காக நவீன மருந்தியலில் சான்றிதழ் படிப்பை (CCMP) படிக்க மாநில மருத்துவக் கல்வி மற்றும் மருந்துகள் துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .
அதாவது ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்தியல் படிப்பை படித்தால் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மகாராஷ்டிர அரசியல் தலைவர்கள், பல ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகிறார்கள், அவர்களின் அழுத்தத்தால் இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது என்று இந்திய மருத்துவர்கள் சங்க தலைவர் சந்தோஷ் தெரிவித்தார்.
- சூரிய ஒளியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் பல வழிமுறைகளை கையாளுகின்றனர்.
- சூரிய ஒளியைத் தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார்.
அவர் உச்சி முதல் பாதம் வரை சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்களும் கண்டு கொள்வதில்லை. சீனாவில் சூரிய ஒளியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் பல வழிமுறைகளை கையாளுகின்றனர்.

அதன்படி பெண்கள் அகன்ற விளிம்பு கொண்ட முகமூடிகள், சூரிய பாதுகாப்பு கையுறைகள், குளிர்விக்கும் முகமூடிகள் மற்றும் லேசான UV-எதிர்ப்பு ஹூடிகளைப் (தொப்பி வைத்த சட்டை) பயன்படுத்தி சூரிய ஒளியில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த பெண்ணும் இதனை பின்பற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் மெத்தையில் திரும்பி படுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை சோதித்த டாக்டர்கள் அவருக்கு வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்பட்டு, எலும்புகள் வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதிகப்படியான சூரிய ஒளியைத் தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சூரிய ஒளியை நீண்ட காலமாகத் தவிர்ப்பது எலும்புகள் பலவீனமடைதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உடல் நிறத்திற்காக ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள வேண்டாம் என சீன மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
- அரசு ஆஸ்பத்திரி போதிய கட்டிட வசதி இன்றி செயல்பட்டு வருகிறது.
- ஆஸ்பத்திரியில் ஒரு தலைமை மருத்துவர் மற்றும் 3 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளனர்.
பொன்னேரி:
பழவேற்காட்டை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பழவேற்காடு ஏரி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், 20-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் அரசு ஆஸ்பத்திரி போதிய கட்டிட வசதி இன்றி செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை தரைதளம் ஆங்காங்கே இடிந்தும் அடிக்கடி விஷ பூச்சிகள் உள்ளே செல்வதால் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது. மேலும் இந்த ஆஸ்பத்திரியில் ஒரு தலைமை மருத்துவர் மற்றும் 3 டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளனர்.
நாளுக்கு நாள் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் முறையான சிகிச்சை பெற முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
எனவே பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும்.
ஆஸ்பத்திரியில் காவலாளிகள் இல்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள டச்சுக்காரர்கள் காலத்தில் கட்டிய கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து மரம், செடி, கொடிகள் வளர்ந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் இந்த கட்டிடத்தில் இருந்து பாம்புகள் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து விடுகின்றன என்றனர்.
- ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் இயங்கவில்லை.
- சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த நிலையில் பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் முதியவர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
இந்தநிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் இயங்கவில்லை. இதனால் செல்போன் டார்ச்லைட் உதவியுடன் மருத்துவம் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.
- விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.
கேரளாவில் சிக்கலான அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடிய சம்பவம் நடந்துள்ளது.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி கேரளாவின் காஞ்சங்காடு உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள், 46 வயதுடைய ஒருவரின் பிறப்புறுப்புகளில் சிக்கிய இரும்பு வாஷரை (iron washer) அகற்ற போராடியுள்ளனர். ஆனால் அவரின் நிலை மோசமடைந்தால் மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்த பிறகு, ரிங் கட்டரைப் பயன்படுத்தி வாஷரை பாதிப்பு இல்லாமல் வெற்றிகரமாக அகற்றினர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சங்காடு தீயணைப்புத்துறை அதிகாரி பி.வி. பவித்ரன்,
"இது ஒரு சவாலான, இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையாக இருந்தது. விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.
இது மிகவும் பயமுறுத்தும் காட்சியாக இருந்தது. இரும்புத் வாஷர் அந்தரங்கப் பகுதியைச் சுற்றி இறுக்கமாகப் பொருந்தியிருந்தது, இதனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை" என்றார்.
கடந்த மூன்று வாரமாக பிறப்புறுப்பில் சிக்கிய இரும்பு வாசருடன் அந்த நபர் சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதிக வலி இருந்துள்ளது.
வாசர் எப்படி பிறப்புறுப்பில் சிக்கியது என்பது குறித்து கேட்டபோது, தான் குடிபோதையில் இருந்தபோது யாரோ ஒருவர் அதை தன் மீது மாட்டியாக தெரிவித்துள்ளார். தற்போது வாசர் நீக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அனுமதியோடு மாணவர்கள் விடுதியில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
- போலீசார் 3 பயிற்சி டாக்டர்களை கைது செய்து விசாரித்தனர்.
சென்னை:
சென்னை போலீசில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து போதைப் பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், உளவுப்பிரிவு இணை கமிஷனர் தர்மராஜனின் நேரடி மேற்பார்வையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இந்த தனிப்படை போலீசாரும், கோட்டூர்புரம் போலீசாரும் இணைந்து உயர்ரக கிரீன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆங்கிலோ இந்தியரான சைதாப்பேட்டை சின்னமலை பகுதியைச் சேர்ந்த ரோட்னி ரொட்ரிகோ (வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து1¼ கிலோ கிரீன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சில மாணவர்களுக்கு கிரீன் கஞ்சா விற்றதும், அந்த மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அனுமதியோடு மாணவர்கள் விடுதியில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் பயிற்சி டாக்டர்கள் தருண், ஜெயந்த், சஞ்சய் ரத்தினவேல் ஆகிய 3 பேர் தங்கியிருந்த அறையில் இருந்து கஞ்சா, வலி நிவாரணத்துக்காகவும், போதைக்காகவும் பயன்படுத்தப்படும் 4 கேட்டமைன் போதைப்பொருள் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து போலீசார், 3 பயிற்சி டாக்டர்களையும் கைது செய்து விசாரித்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெறுகிறது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- தொண்டை வலி, தடிப்புகள், வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பொதுவான அறிகுறிகள் இருக்கும்.
- குடிநீரை காய்ச்சி குடிப்பது அவசியம். கைகளில் அழுக்கு படிந்து அதன் மூலம் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
திருப்பூர்:
டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து திருப்பூர்அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-டைபாய்டு காய்ச்சல் பொதுவாக மழைக்காலத்தில் பரவுகிறது. மாசுபட்ட நீர் முக்கிய காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம்.டைபாய்டு காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சோர்வு, அதிக காய்ச்சல், பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, குமட்டல், மயக்கம், தொண்டை வலி, தடிப்புகள், வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பொதுவான அறிகுறிகள் இருக்கும்.இரு நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்கள் டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். கவனிக்காமல் விட்டால் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படலாம். குடிநீரை காய்ச்சி குடிப்பது அவசியம். கைகளில் அழுக்கு படிந்து அதன் மூலம் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றனர்.
- டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் கூறி உள்ளார்.
- வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார்.
உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய உபகரணங்கள் பொது மக்களின் சேவைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும்.
24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை வழங்க டாக்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
மருத்துவமனையில் பாம்பு கடி மற்றும் அவசர கால சிகிச்சைக்கான மருந்துகளின் இருப்பு குறித்தும், விபத்து மற்றும் அவசர கால பிரிவையும் பார்வையிட்டார். வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் பதிவேடு, கர்ப்பிணி பெண்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர்.
- அடையாள அட்டை பெறாத மாற்றுதிறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பள்ளியில் படிக்கும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ சான்று வழங்குவதற்கு வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது. இம்முகாமில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட மாற்று திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர் நகரத்தை சேர்ந்தவர்களுக்கு தஞ்சாவூர் மேம்பாலம் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நாளை (வியாழக்கிழமை ) இந்த முகாம் நடைபெற உள்ளது.
இதேபோல் ஒரத்தநாடு வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 21-ந் தேதி கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ் உலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. கும்பகோணம் வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு வரும் 24-ந் தேதி புனித தூய நடுநிலைப் பள்ளியிலும், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 28-ந் தேதி பள்ளத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தஞ்சாவூர் ஊரகத்தை சேர்ந்தவர்களுக்கு வரும் 31-ந் தேதி வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், திருவிடைமருதூர் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் நடுநிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.
திருவையாறு வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி திருவையாறு சீனிவாசராகவ மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பனந்தாளை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 4-ந் தேதி எஸ்.கே.ஜி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பூதலூரை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி திருக்காட்டுப்பள்ளி சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியிலும், பேராவூரணியை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.
பட்டுக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடுத்த மாதம் 11-ந் தேதியும், அம்மாபேட்டையை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 14-ந் தேதி ரெஜினா சேலி மேல்நிலைப் பள்ளியிலும், திருவோணம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 16-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மதுக்கூரை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பாபநாசம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 18-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளும் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுதிறனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -5, இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்று திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை , ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களுடன் நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முத்துப்பேட்டை வட்டாரத்தில் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
- நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஹிர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்தில் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
இதில் 15 மருத்துவ பணியிடங்கள் உள்ளன.
தற்போது 4 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிகிச்உசை பெறுவதற்கு காத்திருக்கும் சூழல் உள்ளது.
எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறுநீர் வெளியேறாதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும்.
- தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.
திருப்பூர் :
வெய்யிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- அதிக வெப்ப காலங்களில் சிறுநீர்த் தொற்று உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். வயதானவர்களுக்கு வெயிலால் உடல் பலவீனமாகி 'ஹீட் ஸ்ட்ரோக்' எனும் வெப்பத்தாக்கு நோய் வரலாம்.கோடைக் காலத்தில் வியர்வைச் சுரக்காதது, சுரந்தும் ஆவியாகாதது, 'ஹைபோதலமஸ்' சரியாக வேலை செய்யாமல் இருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் அதிகம்.நடுத்தர வயதினருக்கு சிறுநீரகப் பிரச்னைகளும், குழந்தைகளுக்கு தொண்டையில் பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.வெப்பம் அதிகமுள்ள காலங்களில் அதிக வியர்வை மற்றும் அளவுக்கதிகமாக சிறுநீர் வெளியேறாதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும்.அதை தவிர்க்க இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற இயற்கை பானங்கள், தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.
கோடைக்காலத்தில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அல்சர் பிரச்னைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவு, காய்கறி, பருப்பு வகைகள் நீர்ச்சத்து நிறைந்த பழவகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.குறிப்பாக, வழக்கமாக குடிக்கும் அளவை விட சற்று அதிகமாக நீர் அருந்த வேண்டும். சூரிய ஒளியில் உள்ள புறஊதாக் கதிர்களால் கோடைக்காலங்களில் சருமத்தில் அரிப்பு ஏற்படும்.எனவே பகலில் வெளியே செல்லும்போது முகம் மற்றும் கைகளை துணிகளால் மூடியபடி செல்வது நல்லது. தலைக்கு தொப்பி அணிவது குடை பயன்படுத்துவது நல்லது.வயதானவர்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். குழந்தைகள் மதியவேளையில் விளையாடுவதை தவிர்த்து மாலையில் விளையாடலாம்.பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. அடர் நிறத்திலான ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும்.ஐஸ் வாட்டர் குடிப்பது, உடலுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.ஐஸ் வாட்டர் குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு, பதவி உயர்வை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வருவாரா? என முன்னாள் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
- இதற்கான அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என்றார்.
மதுரை
திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பிரமுகருமான டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-
நாட்டின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தரமான மருத்துவ சிகிச்சையை குறைந்த செலவில் பெறபலரும் தமிழகத்திற்கு வருகிறார்கள்.
நமது மாநிலம் சுகாதாரத் துறையில் முன்னணி மாநில மாக திகழ்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு பலரது பாராட்டையும் பெற்று தந்தார். தமிழக மக்களுக்கும் குறைந்த கட்ட ணத்தில் தரமான சிகிச்சை கிடைக்க அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
ஆனால் தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தங்கள் ஊதிய, பதவி உயர்வுக்காக தொடர்ந்து போராட வைக்கப்படுகிறார்கள். இது நியாயமா? தற்போதுள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடித்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5, 9, 11, 12 ஆண்டு கள் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று கடந்த 2009-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் கருணா நிதி ஆட்சியின்போது அர சாணை பிறப்பிக்கப்பட்டது.
மத்திய அரசு மருத்து வர்கள் 4, 9, 13, 20 ஆண்டுகள் கழித்து ஊதிய, பதவி உயர்வு பெறுகின்றனர். அவர்க ளுக்கு 7-வது ஊதிய குழுவில் 14-வது ஆண்டில் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் அடிப்படை ஊதியமாக பெறுகிறார்கள். மத்தியஅரசு மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் குறைந்தது 15 அல்லது 20 ஆண்டுகள் கழித்து பெறுகின்ற நிலை உள்ளது. இதன் காரணமாக மாநில அரசு மருத்துவர் ரூ.86 ஆயிரம் மட்டுமே அடிப்படை ஊதியமாக பெறுகிறார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இதுதொடர்பாக சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர், எனது கோரிக்கைக்கு ஆவண செய்யப்படும் என பதில் அளித்தார். ஆனால் கொரோனா காரணமாக காலதாமதமானது. கடந்த 2009-ம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னையில் மருத்துவர்கள் உண்ணா விரத போராட்டம் நடத்தி னர்.
அப்போது மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சி அமைந்தவு டன் கோரிக்கை நிறைவேற் றப்படும் என உறுதி அளித்தார். தி.மு.க. ஆட்சி அமைத்து 1½ வருடம் ஆகியும் மருத்துவர்களின் நியாயமான ஊதிய, பதவி உயர்வு நிறைவேற்றப்படவில்லை. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






