search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "homeopathy"

    • ராமநாதபுரத்தில் சிறப்பு ஓமியோபதி மருத்துவ முகாம் நடந்தது.
    • ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு ஆயிர வைசிய மகா ஜன சபை மற்றும் ஆரோக்கியா ஓமியோ கேர் மருத்துவமனை இணைந்து இலவச சிறப்பு ஓமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆயிர வைசிய மகாஜன சங்க பொதுச் செயலாளர்கள் ஜெயக்குமார், நாகராஜன், தலைவர் ஜெயராமன், தொழிலாளர்கள் சசிகுமார் செந்தில்குமார் ஆகியோர் மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் வித்யா தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர்.

    குறைவான செலவில் ஏழைகள் நலம் பேணும் மருத்துவமாக திகழும் ஓமியோபதி மருத்துவத்தால் ஒற்றை தலைவலி, ஆஸ்துமா, குடற்புண், மூட்டுவலி, மார்பக கட்டிகளை குணமாக்கலாம்.
    நாளை(ஏப்ரல் 10-ந்தேதி) உலக ஓமியோபதி தினம்.

    ஓமியோபதி மருத்துவத்தை கண்டுபிடித்த டாக்டர் சாமுவேல் ஹனிமன் பிறந்த தினத்தை உலக ஓமியோபதி மருத்துவ தினமாக மருத்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். ஓமியோபதி மருத்துவத்தில் குணப்படுத்தபட்டு வரும் நோய்கள், ஆராய்ச்சி கட்டுரைகளை கருத்தரங்குகளில் சமர்பிக்கின்றனர். நமது தமிழகம் சார்பில் வெண்புள்ளி, சேபிரியாஸில், முகவாதம் குறித்த மருத்துவ ஆராய்ச்சி கருத்துக்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

    குறைவான செலவில் ஏழைகள் நலம் பேணும் மருத்துவமாக திகழும் ஓமியோபதி மருத்துவத்தால் ஒற்றை தலைவலி, ஆஸ்துமா, குடற்புண், மூட்டுவலி, மார்பக கட்டிகளை குணமாக்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நோயும் மிக விரைவாக குணமாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது. அதே சமயத்தில் பக்கவிளைவுகள் பற்றிய கவலையும் மக்களிடையே இருக்கிறது. அனைத்து நோய்களும் நிரந்தரமாக குணமாக வேண்டும் என்ற ஆதங்கமும் உள்ளது.

    இந்த சிந்தனைதான் ஓமியோபதி மருத்துவத்தை கண்டுபிடிக்க டாக்டர் சாமுவேல் ஹனிமனை தூண்டியது. டாக்டர் சாமுவேல் ஹனிமன் ஜெர்மனி நாட்டு ஆங்கில மருத்துவர், முதுகலை பட்டம் பெற்றவர். அந்தக்காலத்தில் நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. நச்சுதன்மை அதிகம் இருப்பதாக கருதினார். அப்போது மலேரியா காய்ச்சல் பல இடங்களில் அதிகமாக இருந்தது.

    மலேரியாவை குணப்படுத்த சின்கோனா மரத்திலிருந்து மருந்து தயாரித்து உபயோகப்படுத்தி வந்தனர். சின்கோனா பட்டைடைய உட்கொண்டால் மலேரியா காய்ச்சல் போல குளிர் காய்ச்சல் வரும் என்று கருத்தை புத்தகங்கள் மூலம் அறிந்தார். இக்கருத்தை அவரால் ஒத்து கொள்ள முடியவில்லை. இதனை எப்படி சோதிப்பது என்று தவித்தார். பிறகு தனக்கு தானே சின்கோனா பட்டையின் சாறை குடித்தார்! குளிர்காய்ச்சல் வந்தது. மருந்தை நிறுத்தியவுடன் நின்றுவிட்டது!

    ஒரு நோயை எதிர்மறை மருத்துவ குறிகள் மட்டுமே குணப்படுத்தும் என்று நிலவி வந்த கருத்துக்கு முற்றுபுள்ளி வைத்தார்.டாக்டர் சாமுவேல் ஹனிமன். ஒத்த மருத்துவ குறிகளும் குணப்படுத்தும் என்ற உண்மையை உலகத்திற்கு எடுத்துரைத்தார். அதுவே ஓமியோபதி மருத்துவமாக மலர்ந்தது.அக்காலங்களில் தட்டமை, காலரா, தைராய்டு நோய்களால் பாதிக்கப்பட்டார்கள். ஓமியோபதி மருத்துவ சிகிச்சையால் பலனடைந்தனர். இதனால் ஓமியோபதி மருத்துவம் புகழடைந்தது.

    ஒத்த மருத்துவ குறிகளே நோய்களை நிரந்தரமாக குணமாக்கும் என்ற கருத்தை வெளியிட்டார். பக்கவிளைவுகள் இல்லாத மூல பொருட்களை குறைத்து வீரியப்படுத்தி மருந்துகள் தயாரித்தார். ஓமியோபதி புகழ் இங்கிலாந்து, ஐரோப்பியா நாடுகள், அமெரிக்கா, ஜப்பான் என்று பரவி புகழின் உச்சியை அடைந்தது. பல ஆங்கில மருத்துவர்கள் டாக்டர் சாமுவேல் ஹனிமனின் சீடர்கள் ஆவர்.

    அமெரிக்காவில் கை கால்களில் ஏற்படும் சரும நோய்களுக்கு ‘வார்ட்ஸ்’ எனப்படும் மருந்து பலருக்கு குணம் கொடுத்தது. மக்கள் ஓமியோபதி மருத்துவர்களை “தூ டாக்டர்” என்று அழைத்து வந்தனர். இந்த மருத்துவ பலனே ஓமியோபதி மருத்துவம் சரும நோய்களுக்கு சிறந்தது என்று பெருமை தேடி தந்தது. அதோடு மட்டுமல்லாமல் அறுவை சிகிச்சையில்லாமல் கட்டிகளை குணப்படுத்தலாம் என்ற மருத்துவ கருத்தையும் மருத்துவர்களுக்கே புரிய வைத்தது.

    இதனை மையமான கருத்துகளுள் உடலில் ஏற்படும் பல்வேறு கட்டிகளுக்கு தீர்வு காண அடிகோலியது. தற்போது தைராய்டு கட்டிகள், கருமுட்டைப்பை கட்டிகள், கருப்பை கட்டிகள், மார்பக கட்டிகள் என குணமாவதை ஆதார பூர்வமாக மருத்துவர்கள் வெளியிட விதை விதைத்து எனலாம். இந்திய அரசும், மாநில அரசுகளும் சட்டரீதியான அந்தஸ்து, படிப்பு என அங்கீகாரம் அளித்தன.

    ஓமியோபதி மருத்துவத்தின் தனி சிறப்பே ஒரு நோயை நிரந்தரமாக குணப்படுத்துவதுதான். பக்கவிளைவும் இருக்க ஒரு நோயால் பாதிக்கப்பட்ட மருந்து குறிகள் ஒத்த மருந்து குறிகள் கொண்ட மருந்துகளை அளித்து குணப்படுத்தலாம். நவீன மருத்துவத்தில் எதிர்மறை மருத்துவ குறிகள் கொண்ட மருந்துகள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    தற்காலிக நிவாரணம் விரைவாக உடனடியாக கிடைக்கும். மூலப்பொருள்களின் அளவை கட்டியும் குறித்தும் “டோஸ்களாக ஏண்டிபயாடிக்ஸ் மற்றும் வேதியியல் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. நோய் கிருமிகளை அழிக்கின்றன. உடல் இயக்கங்களையும் வலி போன்ற நிவாரணங்களும் உடனுக்குடன் கிடைக்கிறது. நோய்களுக்கு தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கிறது. தொடர்ந்து எடுக்கும் போது நஞ்சு தன்மையும் உடலில் விளைகிறது. சுயமான நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது.

    ஒரு நோய் நிரந்தரமாக குணம் பெற ஒத்த நோய் குறிகள் கொண்ட மருந்துகளை வீரியப்படுத்தி அளிக்க வேண்டும். இம்முறை தான் ஓமியோபதி மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘முள்ளை முள்ளால் எடுப்பது, வைரத்தை வைரத்தால் எடுப்பது’ என்ற தத்துவ பொன்மொழிகள் ஹோமியோபதி மருந்தின் செயலாக்கத்திற்கு மிகவும் பொருந்தும்.

    அதுவும் மூலப்பொருள்களாக கொடுத்தால் பக்க விளைவுகள் ஏற்படுத்தும், வீரியப்படுத்தும் முறையில் மருந்துகளின் மூலப்பொருளை படிப்படியாக குறைத்து அளிக்க வேண்டும். மருந்தின் சக்தி நுண்ணிய அளவில் பலம் கொண்டதாக இருக்கும். இவை நரம்புகளில் ஊடுருவி நோய் எதிர்ப்பு திறனை வளர்க்கும். ஒவ்வொரு மருத்துவத்திற்கும் ஒரு தனிசிறப்பு உண்டு. நோய்களை பகுத்தறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். அப்போதுதான் பல நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியத்தை பெற முடியும்.

    டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம், தலைவர், தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில்.
    இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி படிப்பில் முறைகேட்டை தடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. #Homeopathy #LokSabha
    புதுடெல்லி:

    இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி படிப்பில் முறைகேடுகளை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும் ஓமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    2 மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இது தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இதன் மீதான விவாதத்துக்கு மத்திய ஆயுஷ் துறை இணை மந்திரி ஸ்ரீபாத நாயக் பதில் அளித்து பேசுகையில், “இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு, ஓமியோபதி மருத்துவ கல்லூரி தொடங்கியவர்கள், புதிய ஓமியோபதி படிப்புகளை தொடங்கியவர்கள், மாணவர் எண்ணிக்கையை உயர்த்தியவர்கள், ஓராண்டுக்குள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும், இல்லாவிட்டால், அவர்கள் அளிக்கும் பட்டம், அங்கீகரிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்தார். #Homeopathy #LokSabha #tamilnews 
    ×