என் மலர்
நீங்கள் தேடியது "ganja"
- தனியார் இரும்பு கம்பெனியில் பல ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வருகிறார்.
- போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 280 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே ஒடிசாவில் இருந்து ெரயிலில் கொண்டு வரப்பட்டு கஞ்சா விற்பனை செய்த தனியார் கம்பெனி ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட னர்.
கரிக்கலாம்பாக்கம் தனியார் இரும்பு கம்பெனி யில் வேலை பார்த்து வருபவர் ரமேஷ் மாலிக் (வயது 46).ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கரிக்கலாம்பாக்கம் தனியார் இரும்பு கம்பெனியில் பல ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா சென்றிருந்த ரமேஷ் மாலிக் அங்கிருந்து ஒரு கிலோ கஞ்சாவை ரயில் மூலம் கொண்டு வந்து முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்த பிரதாப் (25) என்பவரிடம் கொடுத்து பல மடங்கு விலைக்கு விற்பனை செய்ய கொடுத்துள்ளார்.
பிரதாப் அவரது நண்பர்கள் வில்லியனூர் காவிரி நகரை சேர்ந்த கரண் (26), தினேஷ் ஆகிய 3 பேரும் ரமேஷ் மாலிக் கொண்டு வந்து கொடுக்கும் கஞ்சாவை வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர்.
குறிப்பாக சிறுவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளனர். நேற்று வில்லியனூர் காவிரி நகரில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ரமேஷ் மாலிக், பிரதாப், கரண், தினேஷ் ஆகிய 4 பேரையும் வில்லிய னூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 280 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் தலைமையிலான போலீசார் சுரண்டை சிவகுருநாத புரத்தை அடுத்த புதிய காய்கனி மார்க்கெட் பகுதியில் மெயின்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
- அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
சுரண்டை:
சுரண்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று மாலை அவரது மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் தலைமையிலான போலீசார் சுரண்டை சிவகுருநாத புரத்தை அடுத்த புதிய காய்கனி மார்க்கெட் பகுதியில் மெயின்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.அப்போது 5 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களது மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தனர். அப்போது அதில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது. சுமார் 650 கிராம் எடை கொண்ட அந்த கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 5 வாலிபர்களையும் போலீஸ் நிலையத்திற்கு பிடித்து ச்சென்று நடத்திய விசாரணை யில், சுரண்டையை சேர்ந்த மாரிசெல்வம்(24), கவுதம்(23), தங்கராஜ்(28), கோகுல்(20), காளிராஜ்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்த்ததால் பரபரப்பு
- சாதாரண உடையில் சென்ற போலீசார் அந்த இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டை 4 பக்கமும் சுற்றி வளைத்தனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோ வில் பகுதி பொம்மையா ர்பாளையம் அருகே பிரபல தனியார் ஓட்டல் உள்ளது.
இந்த ஓட்டலின் குறுகிய பாதை வழியே சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கும் வாலிபர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி அடிக்கடி வந்து செல்வதாக ஆரோவில் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியை கண்காணித்தனர். சாதாரண உடையில் சென்ற போலீசார் அந்த இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டை 4 பக்கமும் சுற்றி வளைத்தனர்.
அப்போது அந்த இளை ஞர்கள் கஞ்சாவை எடை மெஷினில் வைத்து எடை பிரித்து கொண்டிருந்தனர். வீட்டின் அறையில் இருந்த 4 இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 3/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை எடை போடும் இயந்திரம், அவர்கள் வைத்திருந்த 6 செல்போன், அவர்களது பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி எல்லைப்பி ள்ளைசாவடி 100 அடி சாலையை சேர்ந்த தீபக் (வயது 29), ரெட்டியார்பா ளையம் தேவா நகர் ஆல்பட்ராஜ் (28), காமராஜர் சாலை நேரு நகர் வெங்க டேசன் வயது (31), புதுவை சக்தி நகர் மணிகண்டன் என்ற ராஜேஸ் (32) ஆகிய 4 பேர் என்பதும் கடந்த பல மாதங்களாக ஆள் நடமாட்டம் இல்லாத இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பதாக கூறி அங்கு தங்கியிருந்ததும் தெரியவந்தது.
அதோடு இவர்கள் வாடகை வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகளையும் வளர்த்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் சென்னை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி அதனை தரம் பிரித்து புதுவை, ஆரோவில், காலாப்பட்டு, வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் இந்த நெட்வொர்க்கில் உள்ள சென்னை,ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கஞ்சா விற்பனை யாளர்கள் குறித்த விவரங்க ளையும் சேகரித்து வருகின்றனர். மேலும் தோட்டத்தின் பின்பக்கம் இருந்த கஞ்சா செடிகளையும் அதை எப்படி விளைவித்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிறைக்காவலர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனை நடத்தினர்.
- ஒரு மரத்தின் கீழ் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் செல்போன் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது.
செங்குன்றம்:
நெற்குன்றத்தை சேர்ந்தவர் செல்வா என்கிற வெள்ளைசெல்வா. கடந்த 2 மாதத்துக்கு முன்பு கஞ்சா கடத்தல் வழக்கில் இவரை கோயம்பேடு போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் உள்ள செல்வாவை சந்திக்க அவரது தங்கை மீனாலட்சுமி வந்தார். அவர் அண்ணனுக்கு கொடுப்பதற்காக ஜீன்ஸ்பேண்ட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்திருந்தார்.
அப்போது ஜீன்ஸ்பேண்ட்டை பரிசோதித்த போது அதில் உள்ள பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அண்ணன் செல்வாவுக்கு கொடுக்க கஞ்சாவை மறைத்து எடுத்து வந்ததாக மீனாலட்சுமி தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
புழல் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள பகுதியில் நேற்று இரவு சிறைக்காவலர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு மரத்தின் கீழ் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் செல்போன் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த செல்போனை பயன்படுத்திய கைதி யார்? ஜெயிலுக்குள் செல்போன் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் பட்டர்புரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர்.
களக்காடு:
நாங்குநேரி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் பட்டர்புரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி விசாரணை நடத்தினர்.
இதில் அவர் தெற்கு வள்ளியூர் அருகே உள்ள மேல கடம்பன்குளத்தை சேர்ந்த முத்துராஜ் மகன் பாலசூர்யா (வயது 20) என்பதும், தப்பி ஓடியது நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற செல்லையா மகன் அருள்நம்பி (23) என்பதும், இருவரும் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாலசூர்யாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.400 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருள்நம்பியை தேடி வருகின்றனர்.
- சந்தேகமடைந்த தலைமை காவலர், 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- சோதனையில் வீட்டில் 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
நெல்லை:
பாளை காவல் நிலைய தலைமை காவலர் பெக்கின் அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டி ந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த தலைமை காவலர், 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் சந்திப்பு சிந்துபூந்துரை கீழத்தெருவை சேர்ந்த பாஸ்கர் (வயது 25) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் கஞ்சா பதுக்கி விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்கள் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அங்கிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடமாநில தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
- வாடகை ஆட்டோவில் வந்த 2 வட மாநில வாலிபர்ளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அருள்புரம், சின்னக்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், அந்தப் பொருட்கள் விற்பனை அந்தப் பகுதிகளில் ஜோராக நடைபெற்று வருகிறது. பலமுறை போலீசார் நடவடிக்கை எடுத்தும் இதனை முழுமையாக தடுக்க முடியவில்லை .
இந்தநிலையில் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை சோதனை சாவடியில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது வாடகை ஆட்டோவில் வந்த 2 வட மாநில வாலிபர்ளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்ட போது அவர்கள் வைத்திருந்த பேக்கில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்யம் பத்ரா என்பவரது மகன் பிஸ்வாம்பர் பத்ரா(23) மற்றும் ஹோட்டாக்கர்மி என்பவரது மகன் ரஞ்சன் கர்மி(31) என தெரியவந்தது.
2 பேரும் திருப்பூர் அருகே உள்ள இடுவம்பாளையம் பகுதியில் தங்கி கஞ்சா விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- 4.50 கிலோ கஞ்சா, 2மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனையை முற்றிலுமாக தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் அனுப்பர்பாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகப்படும்படியாக வந்த 2பேரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த கருப்பையா (வயது 41), மங்களம் இடுவம்பாளையத்தை சேர்ந்த தணிகைவேல் (30) என்பதும் தெரியவந்தது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அருள்புரத்தில் பதுக்கி வைத்து திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.50 கிலோ கஞ்சா, 2மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
- வாகன சோதனையில் அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் குமணன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 20 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த நந்தகுமார் (24), சரண் (22), வசந்த் (22) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- யோகராஜ் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கஞ்சா, செல்போன்கள், மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய பகுதியில் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் நகரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்த தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 7-வது தெருவை சேர்ந்த யோகராஜ் (வயது 34), கே.டி.சி.நகர் ஹவுசிங்போர்டு ராம்குமார் (26) ரஹமத்துல்லாபுரம் அப்துல்கலாம்( 25) சுல்தான் அலாவுதீன்( 24) ஆகிய 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா, மற்றும் ரூ.2,800 பணம், அவர்கள் பயன்படுத்திய 4 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.