என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா கைது"

    • ராஜேசா ஒரு கிரானைட் கம்பெனியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • கஞ்சா கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அச்ச மங்கலத்தில், 100-க்கும் மேற்பட்ட கிரானைட் கம்பெனிகள் உள்ளன. இங்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கிரானைட் கற்களை அறுத்து, பாலிஷ் செய்து விற்பனை நடந்து வருகிறது.

    கிரானைட் கம்பெனிகளில் பெரும்பாலும், வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களை வேலைக்கு அழைத்து வரும் ஏஜென்டாக பீகார் மாநிலம், ஜாம்ஷெட்பூர், வாரிஸ் நகரை சேர்ந்த ராஜேசா (வயது31), என்பவர் இருந்துள்ளார்.

    கடந்த வாரம் பர்கூர் அருகே 4 கிலோ கஞ்சா கடத்த முயன்ற மகேஷ் குமார் (25), மதன்குமார் (23), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராஜேசா, கஞ்சா கடத்துவதில் மூளையாக செயல்பட்டதும், கிரானைட் கம்பெனிகளுக்கு ஆட்களை அழைத்து வரும்போது, கஞ்சாவை கிலோ கணக்கில் கடத்தி வருவதும் தெரிந்தது.

    அச்சமங்கலத்தில் ராஜேசா ஒரு கிரானைட் கம்பெனியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனையிட்ட போது அவரது பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, கஞ்சா கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.

    • வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிய வந்தது,
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சரகம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள உப்பளப் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நகர தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் சிப்காட் போலீசார் இணைந்து இது குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது உப்பளப்பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்க்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.

    தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அங்கு தங்கி இருந்து வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிய வந்தது,

    இதனைத் தொடர்ந்து பீகார் மாநிலம் பரியப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷ்சாக் (28), முனனா தேவன் (29 ), சதீஷ்குமார் (19), சமஸ்டிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிஜிஅலி பஸ்வான் (29) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 80 கிராம் கஞ்சா, கஞ்சாவை புகைக்கும் இரண்டு பைப், 40 பாக்கெட் ஸ்வாகத் போதை புகையிலை மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வெளியே விழுந்து கிடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மங்களூரு:

    மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவில் இருந்து குடகு மாவட்டம் மடிகேரி வழியாக தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூருக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் மடிகேரியை தாண்டி சுள்ளியா அருகே தேவரகொல்லி பகுதியில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் இருந்த 3 பேரும் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டனர். அப்போது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வெளியே விழுந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள், மடிகேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புத்தூரை சேர்ந்த பஸ்ருதீன், முஸ்தாக், ஜாபீர் என்பதும், அவர்கள் பிரியப்பட்டணாவில் இருந்து புத்தூருக்கு கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    • கடலில் குதித்த கடற்படையினர் 34 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அத்தியாவசிய சமையல் பொருட்கள், மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், பீடி இலைகள் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்களை கண்காணிக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் மண்டபம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 56 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்கள் அதிகாரிகளின் வருகையை முன்கூட்டியே அறிந்து கொண்டு தப்பிச்சென்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் 304 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் இலங்கை கடற்படையால் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இலங்கை வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உடுத்துறை கடற்பகுதியில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது தமிழகத்திலிருந்து கடல் வழியாக கஞ்சா பண்டல்களுடன் வந்த படகை கண்டதும் இலங்கை கடற்படையினர் அந்த படகை நெருங்கினர். இதையடுத்து இலங்கை கடற்படையினரை கண்டதும் படகில் இருந்த வாலிபர் கஞ்சா பண்டல்களை கடலில் வீசினார். இருந்த போதிலும் உடனடியாக கடலில் குதித்த கடற்படையினர் 34 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.

    மேலும் அந்த பைபர் படகை சுற்றிவளைத்து அதில் இருந்த வாலிபரை கைது செய்தனர். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 304 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி எனவும், கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

    போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வாலிபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் கஞ்சா போதை பொருளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனைக்கு பின் விடுதலை ஆனவர் என்று கூறப்படுகிறது.

    • கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
    • கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனை அடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மாணிக்காபுரம் ரோடு அம்மாபாளையம் பிரிவில் சந்தேகப்படும் படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது .

    இதையடுத்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, சிறிய அளவிலான கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாபு மகன் பார்த்திபன்(வயது28) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 1 கிலோ பறிமுதல்
    • வாகன சோதனையில் சிக்கினர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ரெட்டைகுளம் பகுதிகளில் கஞ்சா விற்பதாக அரக்கோ ணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனி வேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள புதர் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் காஞ்சீபு ரம் மாவட்டம் சுங்குவார்சத் திரம் பகுதியை சேர்ந்த ஜாகீர் என்கிற ஜாகீர் உசேன் (வயது 20), அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் பகுதியை சேர்ந்த சாருன் பாலசந்திரன் (20) என்பதும், இவர்கள் கஞ்சா விற்க முற்பட்டதும் விசார ணையில் தெரியவந்தது. இத னையடுத்து அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். ஜாகீர் உசேன் மீது ஆந்திர மாநிலத்தில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் இருப்பது விசாரனையில் தெரிய வந்தது.

    • மரத்தில் பரண் அமைத்து போதையில் மிதப்பு
    • 3 கிலோ கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்

    திருப்பத்துார்:

    திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே கும்மிடிகாம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஞானமூர்த்தி (வயது25), மோட்டூரை சேர்ந்த சிவகுமார் மகன் பூந்தமிழன்(21) இவர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்தில் நண்பர்களாகினர்.

    நாளைடைவில் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர்கள், கஞ்சா அடிக்க தினமும் அதிகவிலை கொடுத்து வாங்குவதை விட வீட்டுக்குள் செடி வளர்த்து புகைக்க முடிவு செய்தனர்.

    ஞானமூர்த்தி நாரியூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, வீட்டின் அருகே எருக்கஞ்செடிக்கு நடுவில் கஞ்சா செடி வளர்த்தார்.

    வளர்க்கும் கஞ்சாவை ரகசியமாக புகைக்க, ஊரை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்ற அவர்கள், அங்கு உயரமான மரத்தின் மீது பரண் அமைத்தனர்.

    தினமும் இங்கு வந்து பரண்மீது ஏறி கஞ்சா புகைத்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

    தகவல் அறிந்த கந்திலி போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா செடி வளர்த்தது தெரிந்தது.

    இதனையடுத்து போலீசார் ஞானமூர்த்தி, பூந்தமிழனை கைது செய்தனர். அவர்கள் வளர்த்த 3 கிலோ கஞ்சா செடியை பறிமுதல் செய்து அழித்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • 150 கிராம் பாக்கெட்டுகள் பறிமுதல்

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பல்லாவரம் அம்மன் கோவில் அருகே, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த குமார் ( வயது 22), நவாப் (19), சக்திவேல் (23) என்பதும், அவர்கள் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெ.ஜெ.நகர் போலீசாரால் தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • ஆன்லைனில் கஞ்சா வாங்கி பயன்படுத்தியது மட்டுமில்லாமல் விற்பனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை:

    மெத்தம்பெட்டமைன் மற்றும் மேஜிக் காளானை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அலிகான் துக்ளக், சேது ஷாயி, முகமது ரியாஸ் அலி, பைசல் அகமது உள்ளிட்ட 4 பேரிடமும் இரண்டாவது நாளாக திருமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2019-ம் ஆண்டு நடிகர் மன்சூலின் அலிகான் இயக்கத்தில் உருவான படத்தில் அலிகான் துக்ளக் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனிடையே கடந்த மாதம் 3-ந்தேதி போலீசாரால் கைதுசெய்யப்பட்ட கார்த்திகேயன் என்பவரிடம் இருந்து ஆன்லைனில் கஞ்சா வாங்கி பயன்படுத்தியது மட்டுமில்லாமல் விற்பனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்றும் மேஜிக் காளான், மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை அலிகான் துக்ளக் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே ஜெ.ஜெ.நகர் போலீசாரால் தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் ஆன்லைனில் கஞ்சா பயன்படுத்தி வந்ததோடு அதிக விலைக்கு விற்பனைக்கு செய்து வந்ததாக தெரியவந்தது.

    இதனிடையே கைதானவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அலிகான் துக்ளக் கஞ்சா பயன்படுத்தி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைதானவர்களிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. 

    • கொலை வெறி கும்பல் அங்கிருந்து எந்த வித பதட்டமும் இல்லாமல் தப்பி சென்று விட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    புது வண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). இவர் வாடகை வீட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தை பெங்களூரில் தனியாக வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே வினோத்குமார் அமர்ந்து இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திடீரென வினோத்தை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி செல்ல முயன்றார். ஆனாலும் சுற்றி வளைத்த கும்பல் வினோத்குமாரை சரமாரியாக வெட்டினர்.

    இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். எனினும் கொலை வெறி அடங்காத கும்பல் வினோத்குமாரின் முகத்தை வெட்டி சிதைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே வினோத்குமார் பலியானார். அவரது முகமே தெரியாக அளவுக்கு சிதைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் கொலை வெறி கும்பல் அங்கிருந்து எந்த வித பதட்டமும் இல்லாமல் தப்பி சென்று விட்டனர்.

    தகவல் அறிந்ததும் மீன்பிடி துறைமுக போலீசார் விரைந்து வந்து வினோத் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கஞ்சா விற்பனையை போலீசுக்கு காட்டி கொடுத்ததால் வினோத்குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன் (19), முத்து (19), கோகுல் (20), சுனில் (20), அபினேஷ் (19), எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த யுவராஜ் (20), நரேஷ் குமார் (20), தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (21) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

    கடந்த 2 நாட்கள் முன்பு நரேஷ் குமார், ரித்திக் ரோஷன், கோகுல் ஆகியோர் அதே பகுதியில் கஞ்சா விற்று உள்ளனர். இது பற்றி வினோத் குமார் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நரேஷ் குமார், வினோத்குமாரிடம் ஏன் எங்களை போலீசிடம் காட்டிக் கொடுக்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது வினோத் குமார் இங்கு எல்லாம் அமர்ந்து மது அருந்தக்கூடாது என்றும் கூறி கண்டித்து உள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த நரேஷ் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து வினோத் குமாரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது தெரிந்தது. கைதான ரித்திக் ரோஷன், கோகுல், யுவராஜ், நரேஷ் குமார் ஆகிய 4 பேர் மீது கஞ்சா உள்பட அடிதடி வழக்குகள் உள்ளன. புதுவண்ணார்ப்பேட்டையில் பொங்கல் விடுமுறை நாளில் தொடர்ந்து 2 கொலைகள் அடுத்தடுத்து நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 1 கிலோ சிக்கியது
    • மேலும் ஒருவரை பிடிக்க தீவிரம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஜோலார்பேட்டை ரெயில்வே மைதானம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதில் ஒரு வாலிபர் மட்டும் பிடிபட்டார். மற்றொரு வாலிபர் தப்பி ஓடி விட்டார்.

    இதனையெடுத்து பிடிபட்ட வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியை குணா என்கிற குணசேகரன் (வயது 29) என்பதும், தப்பி ஓடிய வாலிபர் அதே பகுதி சேர்ந்த வினோத் (29) என்பதும் தெரியவந்தது.இவர்கள் இருவரும் விற்பனை செய்ய ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் குணா என்கிற குணசேகரனை கைது செய்து அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய வினோத்தை தேடி வருகின்றனர்.

    ×