search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
    X

    கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

    • 1 கிலோ பறிமுதல்
    • வாகன சோதனையில் சிக்கினர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ரெட்டைகுளம் பகுதிகளில் கஞ்சா விற்பதாக அரக்கோ ணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனி வேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள புதர் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் காஞ்சீபு ரம் மாவட்டம் சுங்குவார்சத் திரம் பகுதியை சேர்ந்த ஜாகீர் என்கிற ஜாகீர் உசேன் (வயது 20), அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் பகுதியை சேர்ந்த சாருன் பாலசந்திரன் (20) என்பதும், இவர்கள் கஞ்சா விற்க முற்பட்டதும் விசார ணையில் தெரியவந்தது. இத னையடுத்து அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். ஜாகீர் உசேன் மீது ஆந்திர மாநிலத்தில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் இருப்பது விசாரனையில் தெரிய வந்தது.

    Next Story
    ×