search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cannabis arrest"

    • கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
    • கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனை அடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மாணிக்காபுரம் ரோடு அம்மாபாளையம் பிரிவில் சந்தேகப்படும் படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது .

    இதையடுத்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, சிறிய அளவிலான கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாபு மகன் பார்த்திபன்(வயது28) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கஞ்சா விற்ற 2 என்ஜீனியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    ராமாபுரம் பூத்தப்பேடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திலீபன், பிரசாத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கைதா இருவரும் கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கல்லூரி மாணவர்கள், மென்பொருள் நிறுவன ஊழியர்களை குறி வைத்து அவர்களிடம் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    ×