search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cannabis smuggling"

    • ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அதில் 2.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரையில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரசாத் ஆலோசனையின் பேரில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    சம்பவத்தன்று மதியம் பைபாஸ் ரோடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். வ.உ.சி. ரெயில்வே பாலத்தில் ஆட்டோ வந்தது. அதில் ஒரு பெண் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.

    அதில் 2.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் கரிமேடு, அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த பூபதி மனைவி அழகம்மாள் (46), களத்துபொட்டல், நேரு நகர் உதயகுமார் (36) என்பது தெரிய வந்தது.

    அழகம்மாளின் கணவர் பூபதி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு இவருக்கு களத்துப்பொட்டல் உதயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்து, மாநகரம் முழுவதும் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும்எ கைது செய்தனர்.

    • சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே நெடுமானூர் பகுதியில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தினர். அப்போது அவர்கள், தாங்கள் வைத்திருந்த கஞ்சாவை கீழே போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த நவீன், ரசிகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • சங்கராபுரம் அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு பகுதியில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் வடபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிங்காரம் மகன் குமார்(வயது42), புதுப்பாலப்பட்டு கிராமம் பாண்டியன் மகன் வல்லரசு(21), ஆனந்தன் மகன் அருண்(21) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    • 7 கிலோ பறிமுதல்
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    ரெயிலில் அடிக்கடி கஞ்சா கடத்தப்படுகிறது. இதனால் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரு ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் விரைவு வண்டியில் உள்ள பொதுப் பெட்டியில் சோதனை செய்தனர். இதில் ஒரிசா மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் பூபதி பூஷன் மகாகுட் (வயது 23) மற்றும் கார்த்திக் போய் ( 20) சந்தேகத்தின் பேரில் இவர்களது பையில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஜோலார்பேட்டை போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    முக்கிய குற்றவாளி ஷேக் யாசீன், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாகவும், கொரோனா ஊரடங்கால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கடந்த ஒரு வருடமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
    ஐதராபாத்:

    ஆந்திரா மாநிலத்தில் சமீப காலமாக கஞ்சா உள்பட போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் 4 நாட்களுக்கு முன்னதாக, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை ஆந்திரா மாநில போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில், ஆந்திரா மாநிலம், ஐதராபாத் எல்லை அருகே உள்ள பொடுப்பால் பகுதியில் மும்பைக்கு கடத்த இருந்த சுமார் 1,240 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதுகுறித்து ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் பக்வத் கூறியதாவது:-

    தடை செய்யப்பட்ட கஞ்சா பொருள் ஆந்திராவின் சில்லேரு பகுதியில் இருந்து ஐதராபாத் வழியாக மும்பைக்கு கடத்தப்பட இருந்தது. ரச்சகொண்டா போலீசார் எடுத்த துரித நடவடிக்கையால், 1,240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனுடன், இரண்டு கார், ஒரு சரக்கு வாகனம், இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.5,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், கஞ்சா கடத்த முயன்றவர்களில் ஐதராபாத்தை சேர்ந்த டி.சந்தோஷ், வாசுதேவா ரெட்டி, பொண்ணம் ராஜேஷ்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான ஷேக் யாசீன் மற்றும் இரண்டு பேர் தலைமறைவாகி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    தலைமறைவான முக்கிய குற்றவாளி ஷேக் யாசீன், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்ததாகவும், கொரோனா ஊரடங்கால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, கடந்த ஒரு வருடமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கஞ்சா விற்ற 2 என்ஜீனியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    ராமாபுரம் பூத்தப்பேடு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திலீபன், பிரசாத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கைதா இருவரும் கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கல்லூரி மாணவர்கள், மென்பொருள் நிறுவன ஊழியர்களை குறி வைத்து அவர்களிடம் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி 3 வாலிபர்கள் இருந்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் குருவாயூரை சேர்ந்த சரத் (வயது 24), கோகுல் (24) மற்றும் ரஞ்சித் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கூறும்போது,

    தமிழ்நாட்டில் இருந்து கஞ்சாவை கடத்தி இங்குள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு விற்பனை செய்ய இருந்ததாக கூறினர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மதிப்பு ரூ.15 லட்சம் என்று போலீசார் கூறினர். #tamilnews
    ஆந்திராவில் இருந்து கோவைக்கு காரில் 110 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவைக்கு ஒரு கும்பல் காரில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கொடிசியா சாலையில் வாகன சோதனை நடத்தினர்.

    அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 110 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

    காரில் இருந்த பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரை மாவட்டம் முத்துபட்டி பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 46), சக்திவேல்(49), திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த கார் டிரைவர் அசோக்(31) என்பது தெரிய வந்தது.

    ஈஸ்வரி, சக்திவேல் மீது மதுரையில் கஞ்சா வழக்குகள் உள்ளன. இவர்கள் சமீப காலமாக ஆந்திராவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா மூட்டைகளை வாங்கி காரில் கடத்தி வந்து கோவையில் புரோக்கர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து லட்சக் கணக்கில் சம்பாதித்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர்களிடம் கஞ்சா மூட்டைகளை வாங்கிய புரோக்கர்கள் பற்றிய விவரங்கள் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து புரோக்கர்களான கோவை சிங்காநல்லூரை சேர்ந்த முகமது ரபிக்(23), கோகுல் கண்ணன்(23), ஆவாரம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் பாபு(24), பிரவீன்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் கஞ்சாவை வாங்கி சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களிடம் இருந்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மொபட், செல்போன், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்த முத்துலட்சுமி, சக்திவேல், முஜிபர் ரகுமான் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    திருமழிசை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் 1½ கிலோ கஞ்சா கடத்திய சிறுவனை கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    திருமழிசை அருகே வெள்ளவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற சிறுவனை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 1½ கிலோ கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் அவனது பெயர் யுவராஜ் (வயது 16). திருமழிசையை அடுத்த பிராயம்பேட்டையை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து யுவராஜை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×