என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "new year celebration"
- வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள நிகழ்வு தற்போது புதுவையிலும் 10 ஆண்டுகளாக நடக்கிறது.
- 150 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் பயன்படுத்தப்பட்டன.
புதுச்சேரி:
புதுவை நட்சத்திர ஓட்டல்களில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய முறையில் கேக் தயாரிக்கும் பணி நட்சத்திர ஓட்டல்களில் தொடங்கியது. பழ வகைகளை மதுபானங்களில் ஊற்றி ஊறல் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
150 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இதனுடன் 25 லிட்டர் மதுபானங்களும் கலந்து ஊற வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வடன் பங்கேற்றனர்.
வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்வு தற்போது புதுவையிலும் 10 ஆண்டுகளாக நடக்கிறது.
- அக்கரை, பனையூர், கானாத்தூர், நீலாங்கரை, திருவான்மியூர் பகுதிகளில் சாலை முழுக்க வாகனங்கள் நின்றன.
- சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் பழைய மகாபலிபுரம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சென்னை:
ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக கடந்த 31-ந்தேதி இரவு சென்னையைச் சேர்ந்த பலர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள், விடுதிகள், மாமல்லபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு சென்றனர். அவர்கள் புத்தாண்டை கொண்டாடி விட்டு அங்கேயே தங்கினார்கள்.
புதுச்சேரி, மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களுக்கு நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட சென்றவர்கள் நேற்று மதியத்துக்கு பிறகு கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்னை திரும்பினார்கள்.
இதனால் நேற்று மாலை முதல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதே நேரத்தில் நேற்று பகலில் சென்னையைச் சேர்ந்த பெரும்பாலானோர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். அவர்களும் மாலையில் வீடு திரும்ப தொடங்கினார்கள். இதனால் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்களும் கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமானோர் பயணித்தன.
இதனால் ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானாத்தூரில் இருந்து பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்கநல்லூருக்கு செல்ல சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் ஆனது. இரவு 7 மணிக்கு பிறகு ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் வாகன ஓட்டிகள் திணறினார்கள்.
அக்கரை, பனையூர், கானாத்தூர், நீலாங்கரை, திருவான்மியூர் பகுதிகளில் சாலை முழுக்க வாகனங்கள் நின்றன. இதேபோல் சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் பழைய மகாபலிபுரம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் நிறுத்தப்பட்டிருந்தாலும் ஒரே நேரத்தில் வந்த வாகனங்களால் போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதையடுத்து அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசா ருக்கு உதவினார்கள்.
இது போன்ற பண்டிகை நாட்களில் போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காமராஜர் சாலையில் திரண்டு பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள்.
- அண்ணாசதுக்கம் பகுதியில் சுமார் 75 ஆயிரம் பேரும் மெரினா பகுதியில் 25 ஆயிரம் பேரும் திரண்டு இருந்தனர்.
சென்னை:
சென்னை மெரினாவில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட பல்லாயிரக்கணக்கில் திரளுவார்கள். இந்த ஆண்டு பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கருதி கடற்கரை மணலில் இறங்க பொதுமக்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் காமராஜர் சாலையில் திரண்டு பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். ஆனாலும் கடற்கரை மணலில் கால்பதிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்துள்ளார்கள்.
அந்த ஆதங்கத்தை தீர்க்கும் வகையில் நேற்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் திரள தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் பல மடங்கு அதிகரித்தது.
அண்ணா சதுக்கம், மெரினா காவல் சரகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அண்ணா சதுக்கம் பகுதியில் உதவி கமிஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் ஆகியோரும் மெரினா பகுதியில் தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.
அண்ணாசதுக்கம் பகுதியில் சுமார் 75 ஆயிரம் பேரும் மெரினா பகுதியில் 25 ஆயிரம் பேரும் திரண்டு இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பல குழந்தைகள் காணாமல் போனது. இதனால் பெற்றோர்கள் தவித்தனர்.
ஒரு குடும்பத்தில் பேத்தி காணாமல் போனது. அதை தேடி சென்ற பேரனையும், பாட்டியையும் காணவில்லை. இப்படி மொத்தம் 30 பேர் காணாமல் போனார்கள். அவர்களை போலீசார் தேடி கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் கண்ணீரில் தவித்தவர்கள் ஆனந்த கண்ணீருடன் வீடுகளுக்கு திரும்பினார்கள்.
- புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எல்க்ட்ரீசியன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- கைதான விக்ரம், மோகன்குமார் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கை கொலை வழக்கமாக மாற்றி போலீசார் பதிவு செய்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ஊராட்சி பூமிநாய்க்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 26). எலக்ட்ரீசியன் . இவர் வீடுகளுக்கு ஓயரிங் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஊரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் முன்பு ரேடியோ செட் ஒலிபெருக்கி அமைத்து பாடல் ஒலிபரப்பு செய்து, மதுபோதையில் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பட்டாசு வெடித்தும் சத்தம் போட்டு ஆரவாரம் செய்தனர்.
அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு வந்தனர். நள்ளிரவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். ஒலிபெருக்கி மூலம் சத்தம் அதிகமாக வைப்பதால் வீட்டில் இருக்கும் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு அசவுகரியாக இருக்கும். எனவே அமைதியாக கொண்டாடுங்கள் என சொல்லி விட்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
போலீசார், சென்றதும் சிறிது நேரத்திலேயே மீண்டும் ஸ்பீக்கரில் சத்தம் அதிகமாக வைத்து சினிமா பாடல் ஒலிப்பரப்பு செய்து மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் அங்கு வந்து, ஸ்பீக்கர், ரேடியோ செட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது அங்கு ஏராளமான மோட்டார்சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் நள்ளிரவில் அவர்கள் மது போதையில் பைக்ரேஷிசில் ஈடுபடக்கூடும் என கருதி சந்தேகத்தின் அடிப்படையில் மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதில் ஸ்ரீதர் மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார், அங்கிருந்து சென்றதும் இது தொடர்பாக ஸ்ரீதர் தரப்பினருக்கும், அய்யம்பெரும்மாம்பட்டி, பழையூர் பகுதியை சேர்ந்த ராமன் மகன் விக்ரம் (26) தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது விக்ரம் தரப்பினர் சுற்றி வளைத்து ஸ்ரீதரை தாக்கினர். மேலும் விக்ரம் நண்பர் செட்டு மகன் மோகன்குமார் (23) என்பவர் கீழே கிடந்த கட்டையை எடுத்து ஸ்ரீதர் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் ஸ்ரீதர் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. ஊர்மக்கள் அங்கு கூடி சண்டையை விலக்கி விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஸ்ரீதரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, விக்ரம், மோகன்குமார் ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே தலையில் பலமாக தாக்கியதால் ஸ்ரீதருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து கைதான விக்ரம், மோகன்குமார் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கை கொலை வழக்கமாக மாற்றி போலீசார் பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், லிப்தீஷ், மற்றொரு கார்த்திக், கோகுல் ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எல்க்ட்ரீசியன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- தமிழகம் முழுதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளிலும் புத்தாண்டிற்காக கூடுதலாக சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டன.
- சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 மடங்கு சரக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
சென்னை:
தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை பல மடங்கு விற்பது வழக்கம். தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றின் போது எதிர்பார்ப்பதை விட மது விற்பனை அதிகரிக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதையடுத்து விற்பனை சற்று சரிந்தது. உயர், நடுத்தரம், குறைந்த ரகம் மதுபானங்கள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டதால் குறைந்த ரக மது பிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது நடுத்தர ரக மது பிரியர்களும் குறைந்த ரக மதுபானங்களுக்கு மாறியதால் கடைகளில் எப்போதும் தட்டுப்பாடாக உள்ளது.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் வார இறுதி நாளில் வந்ததால் இந்த வருடம் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்துள்ளது. 31-ந் தேதி (சனிக்கிழமை) மாலையில் இருந்தே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
தமிழகம் முழுதும் உள்ள 5,300 டாஸ்மாக் கடைகளிலும் புத்தாண்டிற்காக கூடுதலாக சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டன.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 மடங்கு சரக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பீர், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், ஒயின் உள்ளிட்ட அனைத்து மது வகைகளும் குவிக்கப்பட்டன.
தற்போது ஒரு சில இடங்களில் பார்கள் இல்லாததால் சரக்கு பாட்டில்களை வாங்கி வெளியில் வந்து குடித்தனர். ஒருசிலர் டாஸ்மாக் கடை முன்பே குடித்தனர். பார்கள் உள்ள கடைகளில் இரவு 11 மணி வரை கூட்டம் நிரம்பி வழிந்தது.
இரவு 10 மணிக்கு கடை மூடப்பட்டதால் மது பிரியர்கள் திண்டாடினார்கள். ஆனாலும் ஒரு சில இடங்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் கிடைத்தன.
புத்தாண்டு உற்சாகத்தில் பலர் கூடுதல் விலையை பெரிதாக எண்ணாமல் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மது அருந்துவதற்காக மொத்தமாகவும் கடைகளில் வாங்கி சென்றனர்.
சென்னையில் போலீஸ் கெடுபிடி இந்த ஆண்டு கடுமையாக இருந்ததால் மதுபானங்களை அங்கு குடிப்பதற்கு பதிலாக வாங்கி சென்றனர்.
இதனால் கடந்த ஆண்டை விட புத்தாண்டு விற்பனை அதிகரித்துள்ளது. 31 மற்றும் 1-ந்தேதி 2 நாட்களும் சேர்த்து சுமார் ரூ.1000 கோடிக்கு மது விற்பனை ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 31-ந்தேதி மட்டும் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களிலும் கடந்த காலத்தை விட மது விற்பனை அதிகரித்துள்ளது.
அனுமதி இல்லாமல் பல இடங்களில் பார்களும் நடந்தன. நேற்று புதிய ஆண்டிலும் மது பிரியர்கள் வழக்கம் போல் கடைகளிலும், வீடுகளிலும் தங்கள் நண்பர்களோடு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ணை வீடுகள், ரிசார்ட், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட அனைத்திலும் புத்தாண்டு மது விற்பனை அமோகமாக இருந்தன.
- மோட்டார் வாகன விதிகளை மீறியதாக மொத்தம் ரூ.26 லட்சத்து 28 ஆயிரம் வசூலிக்கப்பட்டன.
- போலீசாரின் தீவிர நடவடிக்கையால் புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய விபத்து, உயிர் இழப்பு குறைந்துள்ளது.
சென்னை:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின்போது சாலை விபத்து, உயிர் இழப்பை தவிர்க்க சென்னையில் முக்கிய இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
நகரம் முழுவதும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து-உயிர் இழப்பில்லா கொண்டாட்டமாக புத்தாண்டு கொண்டாட்டம் இருக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன் அடிப்படையில் 31-ந்தேதி மாலையில் இருந்து 1-ந்தேதி இரவு வரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது இருசக்கர மற்றும் கார் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுபோதையில் சிக்கியவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி ரூ.25 லட்சத்து 20 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டன.
இது தவிர மோட்டார்சைக்கிளில் 3 பேர் பயணம் செய்து 62 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ரூ.1000-மும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 46 பேருக்கு தலா ரூ.1000-மும் அபராதம் விதிக்கப்பட்டன.
மோட்டார் வாகன விதிகளை மீறியதாக மொத்தம் ரூ.26 லட்சத்து 28 ஆயிரம் வசூலிக்கப்பட்டன. போலீசாரின் தீவிர நடவடிக்கையால் புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய விபத்து, உயிர் இழப்பு குறைந்துள்ளது.
இதையடுத்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், கூடுதல் கமிஷனர் கபில்குமார், சரட்கார், பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னையில் 360 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
கடந்த காலத்தை ஒப்பிடும் போது இந்த வருடம் ஒரே ஒரு உயிரிழப்பு நடந்துள்ளது. சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் சராசரியாக ரூ.10 லட்சத்திற்கும் குறையாமல் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
- திருவனந்தபுரத்தில் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் மட்டும் ரூ.1.12 கோடிக்கு மதுவிற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மது பிரியர்கள் அதிகம். பண்டிகை காலங்களில் இங்கு மது விற்பனை அமோகமாக இருக்கும்.
குறிப்பாக ஓணப்பண்டிகையின் போது இங்கு அதிக அளவில் மது விற்பனை நடைபெறும். தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களிலும் மது விற்பனை களை கட்டும். அந்த வகையில் இந்த புத்தாண்டு தினத்திலும் கேரளா முழுவதும் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.
கேரளாவில் மதுபான விற்பனை அரசின் பெவ்கோ நிறுவனம் மூலம் நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பெவ்கோ சார்பில் 266 கடைகள் உள்ளன.
இந்த கடைகள் மூலம் நேற்று முன்தினம் 31-ந்தேதி மட்டும் சுமார் ரூ.107 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் சராசரியாக ரூ.10 லட்சத்திற்கும் குறையாமல் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் மட்டும் ரூ.1.12 கோடிக்கு மதுவிற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.
இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, இந்த ஆண்டு கள்ளச்சந்தையில் மது விற்பனையை அரசு கண்காணித்து தடை செய்தது. இதன்காரணமாகவே அரசு கடைகளில் மதுவிற்பனை அதிகமாக நடைபெற்றது. இந்த ஆண்டு பண்டிகை காலங்களில் மட்டும் சுமார் ரூ.690 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதன்மூலம் அரசுக்கு ரூ.600 கோடி அளவுக்கு வரிவருவாய் கிடைக்கும், என்றனர்.
- கொண்டாட்டம் முடிந்து ஊர் திரும்பிய பலர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
- படுகாயம் அடைந்தவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
புத்தாண்டு பிறக்கும் உற்சாகத்தில் நள்ளிரவில் மது போதையில் இளைஞர்கள் தாறுமாறாக மோட்டார் சைக்கிளில் நகர சாலைகளில் வலம் வந்தனர். சிலர் அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்தனர்.
இந்த நிலையில் கொண்டாட்டம் முடிந்து ஊர் திரும்பிய பலர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அந்த வகையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் 28 பேரும், கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் 21 பேரும், கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 8 பேரும் சிகிச்சை பெற்றனர். இதை தவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பலர் சிகிச்சை பெற்றனர்.
புதுவையில் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை முறையாக பொருத்தி, ஒலி பெருக்கி அமைத்து, போக்குவரத்து போலீசார் இருந்த இடத்தில் இருந்த படியே அனைத்து சந்திப்புகளையும் கண்காணிக்க முடியும்.
சிறிய மாநிலமான புதுவையில் இவற்றுக்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் ஏனோ அவை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
- ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.
ஈரோடு:
2023-ம் ஆண்டு புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதற்காக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அதிகரித்தது.
இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் வந்திருந்தனர். சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் புத்தாண்டு பிறந்ததும் குடியிருந்த பொதுமக்கள் உற்சாகம் மிகுதியில் ஹேப்பி நியூ இயர் என்று விண்ணை தொடும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் டவுன் டி.எஸ்.பி.ஆனந்த குமார் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து போலீசார் கண்காணி த்தனர்.
அப்போது சில இளைஞர்கள் மது அருந்து கொண்டு உற்சாகமிகுதியில் கத்திக்கொண்டு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு போலீசார் இவ்வாறு மது அருந்தி செல்வது தவறு என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இன்னும் சில இளைஞர்கள் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததால் அவர்களது வாகனங்களை வாங்கிக் கொண்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து பின்னர் அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைத்தனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.
ஈரோடு காளைமாட்டு சிலை, ரெயில் நிலையம், பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், மணிக்கூண்டு ஜி.எச். ரவுண்டானா , மக்கள் அதிக கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புத்தாண்டையொட்டி இன்று அதிகாலையிலேயே கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மக்கள் புத்தாடைகள் அணிந்து சாமியை வழிபட்டனர்.
புத்தாண்டையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக பயணிகள் கூட்டம் அலை மோதி காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமை களை தீவிர பரிசோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதித்தனர்.
மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனையும் செய்தனர். மேலும் ரெயிலில் வந்த பயணிகள் உடைமை களையும் பரிசோதனை செய்தனர்.
கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி,கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை என மாவட்ட முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.