என் மலர்
நீங்கள் தேடியது "பக்தர்கள்"
- கோவில் குளத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளன.
- கழிவு நீர் கோவில் குளத்தில் கலக்கவும் வாய்ப்பு உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னரால் கட்டப்பட்டது.
இதன் கருவறையில் சுயம்பு வடிவாக தோன்றிய சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். மேலும் கோவில் முன்பு உள்ள ஆனந்த புஷ்கரணி என்னும் திருக்குளத்தில் சிவபெருமான் எழுந்தருளி பார்வதி தேவியின் சாபத்தை நீக்கி அகத்திய மாமுனிவருக்கு காட்சியளித்ததாக புராணங்கள் கூறுகிறது.
பார்வதி தேவி நீராடிய இந்த ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் இதுவரை தண்ணீர் வற்றியதில்லை என்பது மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த கோவில் குளத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. கடந்த ஆண்டு சிவனடியார்கள் சிலர் தாமாக முன்வந்து தங்கள் சொந்த பணத்தில் குளத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பினர்.
இந்த நிலையில் பொன்னேரி நகராட்சி அதிகாரிகள் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தை சுற்றிலும் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக அதன் அருகிலேயே ஜே.சி.பி.எந்திரம் மூலம் நீளமாக பள்ளம் தோண்டி உள்ளனர்.
கோவில் குளம் அருகே கழிவு நீர்கால்வாய் அமைக்க பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பள்ளம் தோண்டியபோது எந்திரத்தின் அதிர்வின் காரணமாக குளத்தைச் சுற்றி சில இடங்களில் கட்டமைக்கப்பட்ட கருங்கற்கள் விலகி உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கோவில் குளத்தை சுற்றி கழிவுநீர் கால்வாய் அமைத்தால் அதன் புனிதம் கெட்டுவிடும். இந்த நீர்நிலைப் பகுதிகளில் எந்த ஒரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது. கழிவு நீர் கோவில் குளத்தில் கலக்கவும் வாய்ப்பு உள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோவில் முன்பாக கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், குளத்தைச் சுற்றி தோண்டிய பள்ளத்தை மூடாமலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகிறார்கள். வழிபாட்டு தலத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் கழிவு நீர் கால்வாய் கட்டுவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.
- கடந்த 23 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்தது.
- மலைக்கோவிலில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகபெருமானின் 3ம் படைவீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது தைப்பூசமாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பால், பன்னீர், பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆட்டம், பாட்டத்துடன் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த 10 நாளில் சுமார் 9 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 23 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்தது.
இதில் கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 34 லட்சத்து 92 ஆயிரத்து 776 மற்றும் 587 கிராம் தங்கம், 21,235 கிராம் வெள்ளி, 1153 வெளிநாட்டு கரன்சி கிடைத்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மலைக்கோவிலில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
- நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
- சுமார் 4மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாக, சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது முக்கிய பிரபலங்கள், அரசியல் கட்சியினர், சினிமா நடிகர்கள், நடிகைகள் என ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
- இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் கோவில் வளாகத்தில் நடந்தது.
- வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக சுற்றுலா தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் இருந்து ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரண்டனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் கோவில் வளாகத்தில் நடந்தது. கோவில் சார்பில் பதிவு செய்யப்பட்ட மணமக்களுக்கு அரசு சார்பில் சீர்வரிசையுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதனால் கூட்டம் அலைமோதியது.
வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30-க்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
- கடந்த 14-ம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் சுமார் 3.50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
- மவுனி அமாவாசையான இன்று கும்பமேளாவில் 5 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடினர்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை என மொத்தம் 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளா நிகழ்ச்சியில் இதுவரை 19 கோடிக்கும் அதிகமானோர் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். கடந்த 14-ம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் சுமார் 3.50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
இதற்கிடையே, மவுனி அமாவாசையான இன்று கும்பமேளாவில் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மவுனி அமாவாசையான இன்று மட்டும் மகா கும்பமேளாவில் 5.7 கோடி பக்தர்கள் புனித நீராடினர் என உத்தர பிரதேச
அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் பிப்ரவரி 3 (வசந்த பஞ்சமி), பிப்ரவரி 12 (மாகி பவுர்ணமி), பிப்ரவரி 26 (சிவராத்திரி) ஆகிய முக்கிய தினங்களிலும் புனித நீராடுவோர் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கும்பமேளாவில் இதுவரை புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது.
- அதிகபட்சமாக மகர சங்கராந்தி பண்டிகையின்போது 3.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும்.
கும்பமேளாவை முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கும்பமேளாவில் இன்று மதியம் 12 மணி நிலவரப்படி புனித நீராட வந்த பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது.
இன்று மட்டும் மதியம் 12 மணிக்குள் 30 லட்சம் பேர் சங்கமத்தில் நீராடினர்.
அதிகபட்சமாக மகர சங்கராந்தி பண்டிகையின்போது சுமார் 3.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
1.7 கோடிக்கும் அதிகமானோர் பவுஷ் பூர்ணிமா விழாவில் பங்கேற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றாலும் பிரயாக்ராஜ் நகரத்தில் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் இல்லை.
பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் தொடர்ந்து வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் முக்கிய விழா நாட்களில் மட்டுமே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என தெரிவித்தது.
- புதர் மண்டி கிடந்ததால் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை கூட யாரும் அறியவில்லை.
- சித்தர்கள் தவம் இருக்கும் இடமாக இருப்பதால் இங்கு சத்தமின்றி அமைதியுடன் வணங்கி செல்கிறோம்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறியில் பிரசித்திபெற்ற சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் குழந்தைப்பேறு, தொழிலில் அபிவிருத்தி அளிக்கும் பரிகார தலமாக திகழ்கிறது.
தனது சாபம் நீங்குவதற்காக சந்திரன் சிவபெருமானை வழிபட்டது, மிருக சீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது போன்ற பல்வேறு சிறப்புகளை இந்த கோவில் கொண்டுள்ளது. இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் இங்கு சமீபத்தில் அதிசய தீர்த்தக்கிணறு வெளிப்பட்டு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது. கோவிலின் தென்மூலை பகுதி பல ஆண்டுகாலமாக புதர் மண்டி காணப்பட்டது. அந்த பகுதி பெரியவர்கள் யாரும் அங்கு சென்றதில்லை. கோவிலின் ஒரு பக்கச்சுவர் மட்டும் அதில் தென்பட்டிருந்தது. பல ஆண்டுகளாகவே சிறு குழந்தைகள் கூட அந்த பகுதிக்கு செல்ல பயப்படுவார்களாம்.
புதர் மண்டி கிடந்ததால் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை கூட யாரும் அறியவில்லை. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் திருப்பணி வேலைகளுக்காக அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. அப்போது அந்த புதருக்குள் அதிசய தீர்த்தக்கிணறு இருப்பதை கண்டு அப்பகுதியினர் அதிசயித்தனர். தீர்த்த கிணறின் மேல்பக்க சுவரின் 4 முனிவர்கள் காவல் காப்பது போன்ற சிற்பம் காணப்பட்டது.
இந்த சூழலில் அங்கு நின்ற பக்தர் ஒருவர் மூலமாக அருள்வாக்கு வந்தது. அந்த அதிசய தீர்த்த குளத்தின் உள்ளே சுமார் 400 அடி ஆழத்தில் முசுகுந்த முனிவர் எனும் சித்தரும், 200 அடி ஆழத்தில் அவரது சீடர் நாதமுனி சித்தரும் தவம் இருப்பதாகவும், அவர்களது தவத்திற்கு சீடர்கள் 4 முனிவர்கள் காவலாக இருப்பதாகவும் அருள்வாக்கு வெளிப்பட்டது. இதை கேட்டு பக்தர்கள் மெய்சிலிர்த்து போயினர்.
இது தொடர்பாக பக்தர்கள் சிலர் கூறியதாவது:-
இந்த கோவில் அருகே ஏற்கனவே ஒரு கிணறு உள்ளது. தற்போது புதிதாக துலங்கி உள்ள இந்த கிணற்றில் சித்தர்கள் தவம் இருப்பது குறித்து அருள்வாக்காக கிடைத்த தகவல் அதிசயிக்கத்தக்கதாகும். இந்த கிணறு வெளிப்பட்ட பின்னர் கோவில் திருப்பணிகள் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன.
மேலும் இங்குள்ள இறைவன் சந்திரமவுலீஸ்வரருக்கு தற்போது இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த கோவிலின் பின்பக்கம் சித்தர் ஐக்கியமான சித்தர் பீடம் அமைந்திருப்பது இன்னும் சிறப்பக இருக்கிறது.
இந்த அதிசய தீர்த்த கிணற்றில் சித்தர்கள் வாசம் செய்வதால் இந்த கிணற்றை வணங்கி வருகிறோம். சித்தர்கள் தவம் இருக்கும் இடமாக இருப்பதால் இங்கு சத்தமின்றி அமைதியுடன் வணங்கி செல்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த கோவில் அர்ச்சகர் பரமேஸ்வர குருக்கள் கூறுகையில், எனக்கு விவரம் தெரிந்தவரை இந்த இடத்தில் இப்படியொரு அதிசய தீர்த்த கிணற்றை நான் பார்த்ததில்லை. இப்போது இந்த கிணறு வெளிப்பட்ட பின்னர் ஆச்சரியப்படும் அளவுக்கு பல்வேறு விசயங்கள் நடக்கின்றன. இதை சந்திரபுஷ்கரணை தீர்த்தம் என்று அழைக்கிறோம். தற்போது திருப்பணி வேலைகள் நடப்பதால் இந்த கிணற்றை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு உள்ளது என்றார்.
முசிறி நகரம் 10-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன்னன் முசுகுந்தனால் ஆளப்பட்டது. இந்த நகரின் ஆரம்பகால பெயர் "முசுகுந்தபுரி". இதுவே மருவி பின்னர் முசிறி என்று ஆனது. முசுகுந்த மன்னனே சித்தராகி கோவில் தீர்த்த கிணற்றில் ஐக்கியம் ஆகி தவத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது.
இதனிடையே புதிதாக துலங்கி உள்ள அதிசய தீர்த்த கிணற்றை பக்தர்கள் பக்தியுடன் சென்று பார்த்த வண்ணம் உள்ளனர். முசிறி மட்டுமின்றி அக்கம் பக்கத்து கிராமத்தினர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பலரும் கோவிலுக்கு வர தொடங்கி உள்ளனர்.
- திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
- அமைச்சர் சேகர்பாபு சபரிமலையில் நேரடியாக சென்று மகரஜோதி தரிசனத்தை ரசித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் மாலையணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி வரை நடைபெற்றது.
மகர விளக்கு பூஜை கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி தொடங்கியது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
இந்நிலையில், பந்தளம் அரண்மனையில் இருந்து இன்று மாலை சபரிமலையை வந்தடைந்த திருவாபரணபெட்டியில் இருந்த திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் சரணகோஷம் முழங்க கண்டுகளித்தனர்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மகரவிளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி காலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சபரிமலையில் நேரடியாக சென்று மகரஜோதி தரிசனத்தை ரசித்தார்.
- திருவிழா காலங்களில் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
- பக்தர்கள் வருகையால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
திருச்செந்தூர்:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) உலகம் முழுவதும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். சிலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து கடல் மற்றும் நாழிகிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் நின்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. அவர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணதிர தரிசனம் செய்தனர்.
இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டு திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டது. 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பின்னர், அலங்கார தீபாராதனைக்கு பிறகு சுவாமி நடராஜர், மாணிக்கவாசகர் பெருமான் ஆகியோர் தனித்தனி தங்க சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள் பிராகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கழி படைத்து வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
பக்தர்கள் வருகையால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருச்செந்தூர் நகர எல்லையில் இருந்து கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகியது. போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் சிரமப்பட்டனர். போக்குவரத்து நெருக்கடியால் திருச்செந்தூர் சன்னதி தெரு, பட்டர் குளம் தெரு, அக்ரகாரம், ரதவீதிதளில் உள்ள பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கோ அல்லது அத்தியாவசிய தேவைக்கோ வெளியே வரமுடியாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோவிலுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் ராணிமகராஜபுரத்தில் உள்ளது. திருவிழா காலங்களில் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். எனவே வரும் காலங்களில் அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்:
வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று தியாகராஜ சாமி பாத தரிசனம் நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் தியாகராஜ சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பதஞ்சலி, வியக்ரபாத முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாத தரிசனமும், தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மனுடன் வீதியுலா வந்து சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது. இவ்விழாவில் கோவிலின் வெளிப்புறத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத தரிசனம் செய்து வருகின்றனர்.
பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் வரை பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
- சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு தோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கலுக்கு முன்பாக பாதயாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
சில பக்தர்கள் சர்ப்பகாவடி எடுத்து வந்து வழிபாடு செய்வர். தற்போது சர்ப்பகாவடி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம் வரை பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது பொங்கல் திருநாள் நெருங்குவதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
- வருகிற 14-ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடக்கவிருக்கும் நிலையில் சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்து தற்போது மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடக்கவிருக்கும் நிலையில் சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எரிமேலியில் பேட்டை துள்ளி காட்டுப் பாதை வழியாக பெருவழிப்பாதையிலும், பம்பையில் குளித்து விட்டு சன்னிதானம் செல்லும் சிறு வழிப் பாதை வழியாகவும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலை நிரம்பி வழிகிறது. பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடந்து முடிந்த மண்டல சீசனில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர். மண்டல சீசனில் 41 நாட்களில் மொத்த வருமானம் ரூ.297 கோடியே 6 லட்சத்து 67 ஆயிரத்து 679 ஆகும். கடந்த ஆண்டை விட கூடுதலாக 4 லட்சத்து 7 ஆயிரத்து 309 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்த நிலையில், மண்டல சீசனில் கடந்த ஆண்டை விட ரூ.82 கோடியே 23 லட்சத்து 79 ஆயிரத்து 781 கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerala | Heavy rush of devotees at Sabarimala Temple
— ANI (@ANI) January 7, 2025
(Visuals source: Public Relations Department, Kerala ) pic.twitter.com/eMzkWuC6QX