என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி"

    • 50 வயதை கடந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.
    • ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மாநிலத்தில் 50 வயதை கடந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.

    இதனை தொடர்ந்து இதற்கு தடையாக இருந்த ஒரு சில விதிகள் புதுச்சேரி அரசால் திருத்தப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 50 வயது நிறைவடைந்த 323 மீனவர்களுக்கு இந்த ஆண்டு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

    மேலும் மீன்வளத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் மீனவர் இறந்துவிட்டால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதே போல் 2025-26-ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வீதம் விடுபட்ட 328 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.19 லட்சத்து 68 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரணம் மீனவர்கள் வங்கி கணக்கில் இன்று செலுத்தப்படுகிறது.

    • பாலத்தின் சாலை சேதமடைந்துள்ளதால் பராமரிப்பு பணிக்காக சாலையின் நடுவே தடுப்புக்கட்டை வைக்கப்பட்டு உள்ளது.
    • மேம்பாலத்தில் சுற்றுலா வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    புதுச்சேரி:

    விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் புதுச்சேரி திருவண்டார் கோவில் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் சாலை சேதமடைந்துள்ளதால் பராமரிப்பு பணிக்காக சாலையின் நடுவே தடுப்புக்கட்டை வைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக கோவை நோக்கி நள்ளிரவு 12 மணியளவில் சுற்றுலா வேன் சென்றது.

    திருவண்டார் கோவில் மேம்பாலத்தில் வந்த போது திடீரென சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதியது. இதில் மேம்பாலத்தில் சுற்றுலா வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 2 சிறுவர்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • முதல்முறையாக தவெக தேர்தலை சந்திக்கிறது.

    தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதனையொட்டி தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுளையும் ஒருங்கிணைக்க, அம்மாநிலத்திற்கென புதியதாக நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது.

    இந்தக் குழு பற்றிய விவரம் வருமாறு

    1. திரு. A. சையத் முகமது காசிம்

    2. திரு.K.புதியவன்

    3. திரு. V.சாமிநாதன் Ex MLA

    4. திரு. K.A.U.அசனா Ex. MLA

    5. திரு. பெரியசாமி Ex.MLA

    6. திரு. VJ.சந்திரன் Ril, 10,

    7. திரு. AG.வலந்தன

    8. திரு. R. நிரேஷ் குமார்

    9. திரு. V.ராமு

    10. திரு. N.மணிபாலன்

    11. திரு. V.பிரதீபன்

    12. திரு.S.பிரபு

    13. திரு. 5.ராஜசேகர்

    14. திரு. N.சந்திரசேகரன்

    15. திருமதி. M.K.சத்யா

    16. திரு. K.செந்தில் குமார்

    17. திரு. N.வசந்தராஜா

    18. திரு. M.சரவணன்

    19. திரு. A.சந்திரபாலன்

    20. திரு. B.யூசப்

    21. திரு. P.வேல்முருகன்

    22. திரு. N.விஜி

    23. திரு. T.சுகுமார்

    24. திரு. K.பாரதிதாசன்

    25. திரு.S.பிரான்சிஸ்

    26. திரு. 1.கிளார் பேட்ரிக்

    27. திரு. M.மணிகண்டன்

    28. திரு. G.குமரவேல்

    29. திரு. B.பாலாசுதாகர்

    30. திரு. M.பிரிஜேஷ்

    எனது உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி, பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழக நிர்வாகிகள். தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நேரத்தில் உங்களுடன் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நமது தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தல் ஆணையம் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தை ஒதுக்கியிருப்பதை அனைவரும் அறிவீர்கள். தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கும் அதே விசில் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியிருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்!" என்று தெரிவித்துள்ளார்.

    • சந்தேகமடைந்த துர்காதேவி, பணி ஆணையை எடுத்துக் கொண்டு புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தார்.
    • போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விஜயராஜை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் துர்காதேவி (வயது42). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 2015-ம் ஆண்டு துர்காதேவியுடன் படித்த பண்ருட்டியை சேர்ந்த தேவி என்பவர் உறவினர் விஜயராஜ் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் புதுச்சேரியில் அரசு அதிகாரிகள் நிறையபேர் தனக்கு தெரியும் எனவே கல்வித்துறையில் ஆசிரியை பணி வாங்கி தருகிறேன் என துர்காதேவியுடம் கூறியுள்ளார்.

    தொடர்ந்து 2018-ம் ஆண்டு அவரது வீட்டுக்கு சென்ற விஜய்ராஜ், புதுச்சேரி கல்வித்துறையில் ஆசியை பணி வாங்கி தருவதாக கூறி ரூ.4½ லட்சத்தை வாங்கி சென்றார். பின்னர் சில மாதங்களில் அவர் பணி ஆணையை கொடுத்துள்ளார்.

    இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு வேலை போடபோகிறார்கள் எனக்கூறி மேலும் ரூ.88 ஆயிரம் வாங்கினார். பின்னர் ஆர்டர் தற்காலிமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது, விரைவில் வந்துவிடும் என விஜய்ராஜ் கூறியுள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த துர்காதேவி, பணி ஆணையை எடுத்துக் கொண்டு புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தார்.

    அப்போது அது போலியானது என தெரிய வந்தது. அதன்பிறகே அவர் பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். பின்னர் அவர் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விஜயராஜை தேடி வருகின்றனர்.

    • அமித்ஷா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
    • காரைக்கால் பா.ஜ.க கிளை கமிட்டி நிர்வாகி ஒருவர் இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் காரைக்காலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார்.

    பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை 14-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நட்சத்திர விடுதியில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வருகிறார்.

    காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் காலை 11 மணியளவில் அமித்ஷா வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து பாரதியார் சாலை மற்றும் திருநள்ளாறு சாலை வழியாக சென்று, நகராட்சி திடலில் மதியம் 11.30 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் காரைக்கால் பா.ஜ.க கிளை கமிட்டி நிர்வாகி ஒருவர் இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார்.

    பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 4 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு செல்கின்றார். அமித் ஷாவின் வருகையையொட்டி சாலை முழுவதும் பா.ஜ.க-வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக புதுச்சேரியில் இருந்து 350 போலீசார் வர உள்ளனர். மேலும் 7 பட்டாலியன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

    6 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டம் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக காரைக்கால் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். செண்டை மேளம், தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மேலும், அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி இடங்களில் கொடி, தோரணங்கள் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு விழா கோலம்போல காட்சியளிக்கிறது.

    மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி மாநில பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் காரைக்காலிலேயே முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • மத்திய பாஜக அரசை கண்டித்து 9 இடங்களில் சாலை மறியல் போராட்டம்.
    • போராட்டத்தை ஒட்டி தனியார் பேருந்து, ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    மத்திய பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்திய தொழிற்சங்கத்தினர், போக்குவரத்து, வங்கி ஊழியர் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது.

    புதுவையில் பேருந்து, ஆட்டோ இயக்கப்படாத நிலையில் மத்திய பாஜக அரசை கண்டித்து 9 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரியில் பொது வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி தனியார் பேருந்து, ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    • கடற்கரைச் சாலையில் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய "நட்சத்திரம் நகர்கிறது' என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.

    புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும்.

    இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது. விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவுக்கான லோகோ வெளியிடப்பட்டது

    இதனை சட்டசபையில் உள்ள தனது அறையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். அப்போது, விருது பெறும் இயக்குநர்களின் பெயர் பட்டியலை அவர் வெளியிட்டார்.

    2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிதர்தண்டா டபுள் எக்ஸ், 2025-ம் ஆண்டுக்கான சிறந்த திரைபடத்துக்கான விருது தினேஷ் செல்வராஜ் இயக்கிய கடல்கன்னி ஆகிய தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன், அரசு செயலர் முகமது அஹசன் அபித், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

    நாளை வியாழக்கிழமை மாலை கடற்கரைச் சாலையில் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு புதுவை அரசின் சார்பில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் திரைப்பட இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் விருது வழங்கப்பட உள்ளது.

    விழாவில் திரைப்பட நடிகைகள் ரேவதி, சுனைனா, திரைப்பட இயக்குநர்கள், பா.ரஞ்சித், தினேஷ் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய "நட்சத்திரம் நகர்கிறது' என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.

    சர்வதேச திரைப்பட விழாவையொட்டி புதுவை அலையான்ஸ் பிரான்சிஸ் அரங்கில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாள்களும் சர்வதேச திரைப்படங்கள் நாளுக்கு 2 திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன.

    குறிஞ்சி நகரில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் நாளுக்கு 3 திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன.

    மொத்த 12 தமிழ் திரைப்படங்கள் உள்பட 45 திரைபடங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்படங்களைக் காண விரும்புபவர்கள் புதுவை பிலிம் பெஸ்டிவெல் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

    • தமிழ் மக்களின் குலதெய்வ வழிபாடுபோல கேரள மக்கள் முத்தப்பன் திருவிழாவை நடத்தினர்.
    • கேரள மக்கள் முத்தப்பனிடம் தங்களது கோரிக்கைகளை காதில் கூறி அருள்வாக்கு பெற்றனர்.

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பரசின்னி கடவு முத்தப்பன் கோவில் உள்ளது.

    இங்கு சிவனே முத்தப்பனாக உள்ளார். சிவனும் சக்தியும் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து, மாந்திரீக நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்கின்றனர்.

    கண்ணூர் புதுச்சேரியின் மாகி பிராந்தியம் அருகில் உள்ளது. இதனால், மாகி மக்களும் முத்தப்பன் கோவிலுக்கு சென்று வழிபடுவர். உள்ளூர் பாரம்பரியத்தின்படி புதுச்சேரி வாழ் மலையாள மக்கள் கடந்த 7 ஆண்டு களாக முத்தப்பனுக்கு விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.

    இந்த முறை 8-வது ஆண்டாக லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பூங்காவில் முத்தப்பன் விழா நடந்தது. தமிழ் மக்களின் குலதெய்வ வழிபாடுபோல கேரள மக்கள் முத்தப்பன் திருவிழாவை நடத்தினர்.

    இறுதிநாளில் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து சிவன், சக்தி பள்ளிவேட்டை ஆடி குதித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி செண்டை மேளம் முழங்க நடைபெற்றது.

    கேரள மக்கள் முத்தப்பனிடம் தங்களது கோரிக்கைகளை காதில் கூறி அருள்வாக்கு பெற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முத்தப்பனிடம் காதில் தனது வேண்டுதலை சொல்ல அதற்கு முத்தப்பன் அருள்வாக்கு கூறினார்.

    தங்கள் வேண்டுதல் நிறைவேற விழாவில் பக்தர்கள் முத்தப்பனுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு, பச்சைப்பயறு, மீன், கருவாடு போன்றவற்றோடு நீண்ட கத்தி மற்றும் தென்னங்கள ஆகியவற்றை கொடுத்து வழிபட்டனர்.

    • புதுச்சேரியில் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க வேண்டும்.
    • மது மீதான வரியை அதிகரித்தால், அரசின் வருவாய் கூடுவதோடு, மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்படுவது குறையும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தனியார் நடத்திய நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரி மாநிலம் கல்வி, சுகாதார துறைகளில் முன்னோடியாக உள்ளது. சிறிய மாநிலம், மக்கள்தொகை குறைவாக இருந்தாலும் இங்கு ஏராளமான கல்லி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன.

    இருந்தாலும் திறன் மேம்பாட்டு துறையில் பின்தங்கி இருக்கிறது. அரபிந்தோ ஆசிரமத்தில் உற்பத்தியாகும் அகர்பத்தியை தவிர வேறு எந்த உற்பத்தியும் இல்லை.

    புதுச்சேரியில் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க வேண்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைவாய்ப்பினை ஏற்படுத்து பவர்களாக புதுச்சேரி இளைஞர்கள் மாற வேண்டும். மத்திய அரசின் வருவாயை பெரிதும் சார்ந்து நிற்கிறோம்.

    இதில் பெரும்பாலும் அரசின் ஊழியர் சம்பளம் பென்ஷனுக்கு செலவிடப்படுகிறது. எனவே புதுச்சேரியின் வருவாய் உயர்த்தப்பட வேண்டும். இலவசங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, மது வகைகள் மீதான வரி குறைப்பு ஆகியன தேவையற்றவை.

    மது மீதான வரியை அதிகரித்தால், அரசின் வருவாய் கூடுவதோடு, மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்படுவது குறையும். இதனால் அரசின் மருத்துவ செலவுகள் ஒரு பக்கம் குறையும்.

    ஆளுநரும், முதலமைச்சரும் மோதலின்றி பணியாற்ற வேண்டும் என்றால் இருவருக்கும் மக்கள் நலம் என்ற ஒற்றை குறிக்கோள் இருக்க வேண்டும். அப்போது தான் மோதல் ஏற்படாது. ஆளுநர், முதலமைச்சர் மோதலால் மக்கள் பணம் தான் வீணடிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது.
    • முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு உயர்த்தப்பட்ட ரூ.2500 திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    புதுவையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2500 உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி, சிவப்பு குடும்ப அட்டைதாரர்களான சுமார் 70 ஆயிரம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.
    • வருகிற 15-ந் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மறுநாள் 16-ந்தேதி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி வருகிற 16-ந்தேதி அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருவது உறுதியாகி உள்ளது. டெல்லியில் இருந்த வருகிற 15-ந் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மறுநாள் 16-ந்தேதி விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வருகிறார்.

    பின்னர் விமான நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.

    பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழா ஏற்பாடு தொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.

    2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பிரதமரின் வருகையின்போது அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    • புதுச்சேரியில் 657 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி
    • தமிழ்நாட்டில் ஜன.20-ல் தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது

    15-வது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் பிப்ரவரி 12 தொடங்கும் என சபாநாயகர் ஆர். செல்வம் அறிவித்துள்ளார்.

    சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி கோரும் துணை மானியக் கோரிக்கைகளும் இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். 

    மேலும் புதுச்சேரியில் 657 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் ஜன.20-ல் தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×