search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speaker"

    • காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த நிலையில் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

    ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அவர் அனுப்பி வைத்ததுடன், இ-மெயில் மூலமும் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.

    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சபாநாயகர் அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி எங்கள் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து உள்ளதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக பறித்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:

    காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதம் முறைப்படி இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

    இணைய வழியில் கடிதம் அனுப்பியதோடு தொலைபேசியிலும் விஜயதாரணி என்னிடம் பேசினார்.

    விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

    • கவர்னருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
    • சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை, பழைய வைத்தியநாதன் சாலையில் பா.ஜனதா கட்சியின் வடசென்னை பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையை பொறுத்தவரை பாதயாத்திரையை வேறுவிதமாக நடத்த இருக் கிறோம். செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. சட்டசபையில் தமிழ்தாய் வாழ்த்தை முழுமையாக வாசிக்க வேண்டும்.

    கருணாநிதியால் வெட்டப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது. ஜி.எஸ்.டி.கொண்டு வரப்பட்டதற்கு பின்பு தான் தமிழகத்தின் வரி வளர்ச்சி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சபாநாயகர் அப்பாவு தி.மு.க. உறுப்பினர் போல் நடந்து கொண்டார். நாதி ராம் கோட்சேவுக்கும் அப்பாவுக்கும் தொடர்பு இருக்கலாம். கவர்னருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை.


    ஆளுநருக்காக எழுதி கொடுத்த உரையில் 10 பொய்களை சுட்டிக்காட்டி உள்ளோம். சபாநாயகர் அப்பாவு தி.மு.க.வை விட மோசமாக உள்ளார்.

    சென்னை வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கவில்லை என்று கூறி தி.மு.க.வை கவர்னர் பாராட்ட வேண்டும் என்றால் எப்படி பாராட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைத் தலைவரும் வடசென்னை பொறுப்பாளருமான பால்கனகராஜ், பாராளுமன்ற இணை அமைப்பாளர் பிரசாத், பாராளுமன்ற பொறுப்பாளர் பெப்சி சிவா, மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், கபிலன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் மற்றும் பாராளுமன்ற பிரிவு பொறுப்பாளர் சி.பி.நவீன், ஆர்.கே.நகர் சட்டமன்ற அமைப்பாளர் எஸ்.ஆர்.செந்தில், பாஸ்கோ மாணிக்கம், சிவகுமார், திருவொற்றியூர் சட்டமன்ற அமைப்பாளர் ஜெய் கணேஷ், திருமுருகன், ராயபுரம் சட்டமன்ற அமைப்பாளர் வன்னிய ராஜன், இணை அமைப்பாளர் விஜயகுமார், பொருளாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுவாணி அணையில் இருந்து 73 எம்.எல்.டி. தண்ணீர் வரவேண்டும் ஆனால் 38 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வருவதாகவும் கூறினார்.
    • பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சிறுவாணி அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கோவை மாநகர மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை இருப்பதாகவும் சிறுவாணி அணையில் இருந்து 73 எம்.எல்.டி. தண்ணீர் வரவேண்டும் ஆனால் 38 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வருவதாகவும் கூறினார்.

    இதன் காரணமாக 25 நாட்களுக்கு ஒரு முறை தான் கோவை மாநகர மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதாக தெரிவித்த அவர், கேரள அரசுடன் கலந்தாலோசித்து தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதேபோல், கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையில் வெள்ளலூரில் 62.61 ஏக்க நிலப்பரப்பில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 சதவீதம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுவாணி அணையில் இருந்து குறைவாகவே கேரளா அரசு தண்ணீர் தருவதாகவும், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளதாகவும், சிறுவாணி அணையில் இருந்து உரிய நீரை பெற அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதோடு, கோவை மாநகர மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிக்காக இணைப்பு சாலைகளை அகலப்படுத்த வேண்டிய தேவை உள்ளதால், அந்தப் பணிகளை முடித்த பிறகு இந்த ஆண்டிலேயே பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் துணைத்தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது மரபாகும்.
    • எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாருக்கு எனது அருகே முன் வரிசையில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் 4 முறை உங்களிடம் (சபாநாயகர்) சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பலமுறை நேரிலும் வலியுறுத்தியுள்ளோம்.

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் துணை தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது மரபாகும். எனவே எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாருக்கு எனது அருகே முன் வரிசையில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறும்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உங்களிடம் (சபாநாயகர்) தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அதற்கு நீங்களும் பதில் சொல்லி வருகிறீர்கள்.

    முன்னாள் சபாநாயகர் தனபாலு தீர்ப்பை சுட்டிக்காட்டி நீங்களும் பதில் கூறி உள்ளீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து ஆவண செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்
    • 125 பேர் ஆதரவும், 112 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது

    பீகார் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து இருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியிலிருந்து திடீரென விலகி, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

    இன்று நிதிஷ் குமாரின் ஆட்சி மீதான நம்பிக்கை குறித்து முடிவாக உள்ள நிலையில், முன்னதாக சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரி (Awadh Bihari Choudhary) மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிர்த்து 112 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    இதனையடுத்து தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுத்ரி பதவி விலகினார்.

    • மத்திய பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
    • முதல் மந்திரியாக மோகன் யாதவ் பதவி ஏற்றார்.

    போபால்:

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த மாதம் 7-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, மத்திய பிரதேச மாநில முதல் மந்திரியாக மோகன் யாதவ் தேர்வானார். தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.

    இந்நிலையில், மத்திய பிரதேசம் சட்டசபையில் சபாநாயகராக முன்னாள் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
    • அப்போது, சபாநாயகர் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கையின் அருகில் உள்ள துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில், தான் விதிப்படியே செயல்பட்டு வருவதாக தொடர்ந்து கூறி வந்துள்ளார். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போதும், அ.தி.மு.க. துணைத் தலைவர் இருக்கை விவகாரம் எதிரொலித்தது.

    இந்நிலையில் 3 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக தங்களிடம் இதுவரை 10 முறை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. (எந்தெந்த நாட்களில் கடிதம் கொடுக்கப்பட்டது என்பதையும் தெரிவித்தார்).

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளது. இதுபோன்ற ஆவணங்களை எல்லாம் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள். 2 நாட்களுக்கு முன்பும் கூட அது தொடர்பான நகல்களை நாங்கள் உங்களிடம் வழங்கி இருக்கிறோம்.

    இருப்பினும் எதற்காக நீங்கள் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கி தர மறுக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியவில்லை. இது எங்களுக்கு வேதனை அளிக்கும் விஷயமாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து சபா நாயகர் அப்பாவு, துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து கூறியதாவது:-

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருக்குதான் குறிப்பிட்ட இடத்தில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும் என்கிற விதி உள்ளது. துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அது போன்ற எந்த விதியும் இல்லை. இதற்கு முன்பு இருக்கை விவகாரம் தொடர்பாக எனக்கு முன்பு இருந்த சபாநாயகர் எடுத்த முடிவைத்தான் நானும் எடுத்துள்ளேன்.

    துணைத் தலைவராக, கொறடாவாக நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்களோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இருக்கை விவகாரத்தை பொறுத்தவரை யாரும் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அது எனது அதிகாரத்துக்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் மரபுப்படியும், விதிப்படியும் நான் செயல்பட்டு வருகிறேன். அது போன்றே தொடர்ந்து செயல்படுவேன். விதிப்படியும், சட்டப்படியும் நான் இந்த அவையை நடத்தி வருகிறேன். ஒரு சின்னத்தில் போட்டியிட்டு அதற்கு எதிராக வாக்களித்த 11 பேர் மீது அப்போதைய சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நீங்கள்தான் (எடப்பாடி பழனிசாமி) உங்கள் அருகில் இடம் ஒதுக்கி கொடுத்தீர்கள். நான் கொடுக்கவில்லை.

    என்னைப் பொறுத்தவரையில் யாருடைய மனமும் கோணாத வகையில் இந்த அவையை நேர்மையுடன் நான் நடத்தி வருகிறேன்.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி எழுந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக மீண்டும் பேசினார். ஆனால் அவரது மைக் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவர் பேசியது எதுவும் வெளியில் கேட்கவில்லை.

    இந்த நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிராக எழுந்து சத்தமாக பேசினார். அவரது பேச்சுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எழுந்து ஏதோ பேசினார். அதுவும் வெளியில் கேட்கவில்லை. இப்படி ஒரே நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியனும் பேசிக் கொண்டே இருந்ததால் அவையில் கடுமையான கூச்சல்-குழப்பம் நிலவியது.

    இதைத் தொடர்ந்து சபா நாயகர் அப்பாவு அனைவரும் தங்களது இருக்கையில் அமருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரின் நட வடிக்கை ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என்று கூறி கோஷம் எழுப்பிய படியே தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து சென்று சபாநாயகரின் இருக்கை முன்பு திரண்டனர். அப்போது அ.தி.மு.க. துணை கொறடா ரவி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் சிலர் தரையில் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சபாநாயகர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து நீங்களே வெளியில் செல்கிறீர்களா? அல்லது வெளியேற்றவா? என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்தபடியும், சபாநாயகர் இருக்கையை சுற்றி நின்ற படியும் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து சபைக் காவலர்கள் மூலமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சபை காவலர்கள் சட்டசபை அரங்கினுள் வந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை குண்டு கட்டாக வெளியேற்றினர்.

    அப்போதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதால் சபையில் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்படும் போது, உங்கள் அரசியலை சபைக்குள் செய்ய வேண்டாம். வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    • அமெரிக்காவின் கடன், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி சுமார் ரூ. 2,71,36,50,08,00,00,000.00
    • ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக மெக்கார்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது

    அமெரிக்காவில் செனட் சபையும், பிரதிநிதிகள் சபையும் மக்களுக்கான சட்டங்களை இயற்றுகிறது. இதன் உறுப்பினர்கள் மக்களின் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இரு கட்சி ஜனநாயக முறையை கொண்டுள்ள அமெரிக்க ஜனநாயகத்தில் குடியரசு (Republic) கட்சியும், ஜனநாயக (Democratic) கட்சியும் இரு பெரும் கட்சிகள்.

    அமெரிக்காவின் கடன், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி சுமார் ரூ. 271365008,00,00,000.00 ($32.6 ட்ரில்லியன்) எனும் அளவில் இருந்தது. அந்நாட்டில் மத்திய அரசாங்கத்தின் செலவுகளுக்கு கூட பணம் இல்லாத நிலையில், செலவினங்களுக்கான உச்சவரம்பை உயர்த்தினால்தான் அரசாங்கம் இயங்கும் எனும் நிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து திவால் நிலையிலிருந்து அமெரிக்காவை காக்க செலவினங்களுக்கான உச்ச வரம்பை உயர்த்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆளும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது குடியரசு கட்சியின் ஒப்புதலும் தேவைப்பட்டதால், நீண்ட விவாதங்களுக்கு பிறகு சில தினங்களுக்கு முன் இதற்கான சம்மதம் பெறப்பட்டது.

    இந்த விவாதங்களின் போது குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy), தொடர்ந்து ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக அவர் சார்ந்திருக்கும் குடியரசு கட்சியில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனால் அவருக்கெதிராக அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியே பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் 216 வாக்குகளுடன் தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    234 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சபாநாயகருக்கு எதிராக அவர் சார்ந்த கட்சியினரே வாக்களித்து அவரை வெளியேற்றி இருப்பது அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.
    • விவசாயிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்.

    நெல்லை:

    நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகம் இருக்கும் வரையில் தமிழக மக்களுக்காக கருணாநிதி செய்த பணிகள் பேசப்படும்.

    நெல்லை மத்திய மாவட்ட அலுவலகத்தில் சென்னை கடற்கரையில் அண்ணாவின் அருகில் கலைஞர் துயில் கொள்ளும் நினைவகம் போன்று மாதிரி நினைவகம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது. நெல்லை மாவட்டத்தை, வறட்சி மாவட்டமாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கலெக்டர் மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுகிறார்.
    • செந்தில் பாலாஜி பதவியில் நீடிக்க கூடாது என்று கவர்னர் கூறுவதற்கு எந்த சட்டமும் இல்லை.

    நாகர்கோவில்:

    அழகப்புரம் பகுதியில் இருந்து ராதாபுரம் கால்வாய் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுகிறார். அவர் தனக்கு வேண்டிய யாரையும் அமைச்சராக்கலாம். முதலமைச்சரின் முடிவிற்குள் யாரும் தலையிடக்கூடாது என்பது மரபு. யாருக்கு எந்த துறை கொடுக்க வேண்டும் என்பதும் முதலமைச்சரின் விருப்பம்.

    செந்தில் பாலாஜி பதவியில் நீடிக்க கூடாது என்று கவர்னர் கூறுவதற்கு எந்த சட்டமும் இல்லை. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்கவில்லை. முதலமைச்சரின் உரிமையில் கவர்னர் தலையிடுவதை தவிர்த்திருக்கலாம். மதசார்புடைய நாடு என்று கவர்னர் பல இடங்களில் கூறுவது ஏற்புடையது இல்லை. கவர்னர் சட்டப்படி சட்ட ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்.

    முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அமைச்சரவையில் எந்த இலாகாவும் இல்லாமல் இருந்து காலமானார் என்பது முன்னாள் முதலமைச்சருக்கு தெரியும் என்று நம்புகிறேன். தமிழகத்தின் கோவிலாக இருக்கும் தலைமை செயலகத்திற்குள் நுழைந்து, அமலாக்கத்துறை ஜனநாயக மாண்பை மீறி விட்டார்கள். பாராளுமன்றத்தை போன்று உயர் மதிப்பு, தமிழக சட்டப்பேரவைக்கும், தலைமை செயலகத்திற்கும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது.
    • தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்கக்கூடாது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதி பாசன விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு இன்று முதல் வரும் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் பாசனத்திற்கு அழகப்பபுரம் அருகே நிலப்பாறை திருமூலநகர் கால்வாயில் இருந்து 150 கன அடி தண்ணீரை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார்.

    இதன் மூலம் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரத்து 987 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பயன்பெறும். 52 குளங்கள் மூலம் மறைமுகமாக 1013 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தனது அமைச்சரவைக்கு யார்-யாருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக முதலமைச்சருக்கு தான் உள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை கவர்னர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை தவிர்த்திருக்க வேண்டும். முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. சட்டம் அதைத்தான் சொல்கிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நீதிமன்ற காவல், வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்சர் பதவியில் இருக்க கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்கக்கூடாது. தொடர்ந்து, கவர்னர் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டசபை வளாகத்திற்குள் விதிகளை மீறி செல்பி எடுப்பவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படும் என உ.பி. சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. நேற்று உ.பி., சட்டசபையில் மாநில பட்ஜெட் தாக்கலானது. அப்போது எம்.எல்.ஏக்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், சபாநாயகர் சதீஷ் மஹானா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    சட்டசபைக்குள் எம்.எல்.ஏக்கள் செல்பி எடுத்தாலோ, புகைப்படம் எடுத்தாலோ மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்படும். 
    சட்டசபை கூட்டத்தொடர் சமயத்தின்போது, சட்டசபை வளாகத்தில் தனிப்பட்ட கேமராவை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது.

    ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. 

    மீறுவோரின் மொபைல் போனை அவை காவலர்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    ×